BK Murli 9 December 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:








    BK Murli 9 December 2016 Tamil

    09.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! உங்களது முகம் சதா குஷியாக இருக்க வேண்டும், வார்த்தைகளில் தைரியம் மற்றும் உற்சாகமிருக்க வேண்டும், அப்போது உங்களது விசயங்கள் பிரபாவத்தை தாக்கம் ஏற்படுத்தும்.

     

    கேள்வி:

    எந்த மனிதனாலும் செய்ய முடியாத எந்த ஒரு காரியம் அல்லது கடமை தந்தையினுடையது?

     

    பதில்:

    உலகில் அமைதியை ஏற்படுத்துவது அல்லது பதீத உலகை பாவனமாக ஆக்குவது – இந்த கடமை தந்தையினுடையது மட்டுமே ! எந்த மனிதனும் உலகில் அமைதி ஏற்படுத்த முடியாது. அமைதி மாநாடு போன்றவைகளை நடத்துகின்றனர், அமைதி பரிசு வழங்குகின்றனர், ஆனால் அமைதி ஏற்பட வேண்டுமெனில் முதலில் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையின் மூலம் தான் அமைதி மற்றும் ஆஸ்தி கிடைக்கும். தந்தை வந்து அம்மாதிரியான தூய உலகை ஸ்தாபனை செய்கிறார், அங்கு அமைதி நிலவியிருக்கும்.

     

    பாட்டு:

    நீங்கள் தான் தாய், தந்தை ........

     

    ஓம்சாந்தி.

    குழந்தைகள் யாருடைய மகிமையைக் கேட்டீர்கள்? பிரம்மாவினுடையதா? அல்லது சரஸ்வதியினுடையதா? அல்லது சிவனுடையதா? உங்களைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறம் போது பிறகு மற்றவர்களது மகிமையை எப்படிப் பாட முடியும்! பிராமணர்கள் குடுமி போன்றவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களையும் விட உயர்ந்தவர் சிவபாபா அல்லவா! அவரைத் தவிர வேறு யாருடைய மகிமையும் கிடையாது. இப்போது பலருக்கு அமைதி பரிசு வழங்குகின்றனர். இந்த உலகின் செய்திகளையும் கேட்க வேண்டும். புது உலகின் செய்திகள் உங்களது புத்தியில் இருக்கிறது. இப்போது நாம் புது உலகிற்குச் செல்கிறோம். ஆக ஒருவரின் மகிமையைத் தவிர வேறு யாருடையதும் கிடையாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நான் தான் பதீதமான உங்களை பாவனம் ஆக்கக் கூடியவன் என்று தந்தை கூறுகின்றார். நான் இல்லையெனில், நீங்கள் பிராமணர்களும் கிடையாது. பிராமணர்களாகிய நீங்கள் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், தந்தையிடமிருந்து ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறீர்கள். சூத்திரர்கள் ஆஸ்தியடைய முடியாது. ஆக பலி என்பது ஒரே ஒரு தந்தையினுடையது ஆகும். பிராமணர்கள் ஆன்மீக சேவாதாரிகள் என்று பாடப்படலாம். தேவி தேவதைகளுக்கும் மகிமை இருக்கிறது. ஆனால் சிவபாபா இல்லையெனில், இவருக்கும் மகிமை எங்கிருந்து வரும்! எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்று பாடவும் செய்கிறீர்கள். ஆஸ்தியும் அவரிடமிருந்து தான் கிடைக்கிறது. எனக்கு எந்த அமைதி பரிசும் கிடைப்பது கிடையாது என்று பாபா கூறுகின்றார். நான் எந்த பலனையும் எதிர்பாரத சேவாதாரி ஆவேன். எனக்கு என்ன மெடல் கொடுப்பீர்கள்? எனக்கு ஏதாவது மெடல் கொடுப்பீர்களா! நான் பரிசு வாங்கி என்ன செய்யப் போகிறேன்? சிலர் தங்கம் போன்றவைகளினால் மெடல் செய்து கொடுக்கின்றனர் அல்லது செய்தித்தாட்களில் பிரசுரிக்கின்றனர். எனக்கு என்ன செய்வீர்கள்? குழந்தைகளே! நான் தந்தை ஆவேன். பதீதமானவர்களை பாவனம் ஆக்குவது தான் தந்தையின் கடமையாகும். நாடகப்படி நான் அனைவருக்கும் முக்தி, ஜீவன்முக்தி கொடுக்க வேண்டும். விநாடியில் ஜீவன்முக்தி? எவ்வாறு ஜனகரின் பெயர் அனுஜனக் ஆக மாறி விட்டது! அதே போன்று இங்கும் பெயர் இருக்கிறது. சிலருக்கு லெட்சுமி என்று பெயர் இருக்கிறது, இப்போது அவர் ஜீவன்பந்தனத்தில் இருக்கிறார், இப்போது நீங்கள் உண்மையான லெட்சுமியாக, உண்மையான நாராயணராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாரதத்தில் தான் இப்படிப்பட்ட பெயர்கள் பலருக்கும் இருக்கின்றன. மற்ற தர்மத்தினர்களிடத்தில் இப்படிப்பட்ட பெயர்களைக் கேட்க முடியாது. பாரதத்தில் ஏன் வைக்கின்றனர்? ஏனெனில், அது பெரியவர்களின் நினைவுச் சின்னமாகும். இல்லையெனில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதைப் பார்க்கிறீர்கள்! இங்கு லெட்சுமி நாராயணன் என்ற பெயருடையவர் கோயிலுக்குச் சென்று சத்யுக லெட்சுமி நாராயணனின் முன் தலை வணங்குகிறார், பூஜை செய்கிறார். அவர்களை ஸ்ரீலெட்சுமி, ஸ்ரீநாராயணன் என்று கூறலாம். தன்னை ஸ்ரீ என்று கூறிக் கொள்ள முடியாது. பதீதமானவர்கள் சிரேஷ்டமாக எப்படி ஆக முடியும்? நாம் விகாரிகள், பதீதமானவர்கள் என்று அவர்கள் கூறிக் கொள்கின்றனர், இவர்கள் விகாரமற்றவர்கள், பாவனமானவர்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் கடந்த காலத்திலிருந்து சென்றிருக்கின்றனர். இந்த அனைத்து விசயங்களையும் வேறு யாரும் அறியவில்லை. தந்தை வந்து உங்களுக்குப் புரிய வைக்கின்றார், மேலும் ஒவ்வொரு விதத்திலும் கட்டளையிடுகின்றார். விராட ரூபத்தின் சித்திரமும் அவசியம் இருக்க வேண்டும். தேவதைகளும் கடைசியில் வந்து சூத்திரர்களாக ஆகின்றனர். பல வகைகள் இருக்கிறது அல்லவா! வேறு யாரும் இவ்வாறு விராட ரூபம் உருவாக்கவில்லை. 84 பிறவிகளும் நீங்கள் தான் எடுக்கிறீர்கள். பூஜைக்குரியவர்களாக, பூஜாரிகளாக நீங்கள் தான் ஆகிறீர்கள். இவ்வளவு பூஜாரிகளுக்கு பூஜைக்குரியவர்களும் அந்த அளவிற்கு அதிகம் இருக்க வேண்டும் அல்லவா! ஆக எவ்வளவு சித்திரங்களை அமர்ந்து உருவாக்கியிருக்கின்றனர்! ஹனுமானையும் பூஜிய ரூபத்தில் உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஆக விராட ரூபத்தின் சித்திரமும் அவசியமானது. கணக்கு வேண்டும் அல்லவா! எதன் அடிப்படையில் நாம் 84 பிறவிகள் எடுக்கிறோம்! மேலே குடுமியும் அவசியம் காண்பிக்க வேண்டும். விஷ்ணுவின் ரூபமும் சரியானதே, ஏனெனில் இல்லற மார்க்கம் அல்லவா! பிராமணர்களின் குடுமியைப் பற்றியும் தெளிவாக்கிக் கூற வேண்டும். சித்திரங்கள் மிகவும் பெரிதாக உருவாக்க வேண்டும், அதில் வாசகங்களும் வந்து விட வேண்டும். நீங்கள் மிக எளிதாக புரிய வைக்க முடியும். உண்மையில் பாபாவிற்கு எந்த பரிசும் கிடைப்பது கிடையாது. நீங்கள் தான் பரிசு அடைகிறீர்கள். தூய்மை, அமைதி மற்றும் சுகத்தின் இராஜ்யத்தை நீங்கள் தான் ஸ்தாபனை செய்கிறீர்கள். நாம் இதை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் கூற முடியும். நாம் இவ்வளவு சேவை செய்கிறோம், அதற்கான பரிசு உலக இராஜ்யம் நமக்குக் கிடைக்கிறது. புரிந்து கொள்வதற்கு எவ்வளவு நல்ல விசயமாகும்! மற்றபடி இங்கு யாருக்கும் அமைதிப் பரிசு எப்படி கொடுக்க முடியும்? நாம் ஸ்ரீமத் மூலம் 2500 ஆண்டுகளுக்கு தூய்மை, அமைதி, சுகத்தை ஸ்தாபனை செய்கிறோம் என்று நீங்கள் எழுத முடியும். ஆனால் குழந்தைகளுக்கு அந்த அளவிற்கு போதை ஏற்படவில்லை. யாருக்கு போதை அதிகரிக்கும்? சிவபாபாவிற்கா என்ன யாருக்கு முழு போதை ஏற்பட்டிருக்கிறதோ அவர்கள் அந்த போதையுடனேயே புரிய வைப்பார்கள். முதலில் பிரம்மாவிற்கு போதை ஏற்பட்டது, அதனால் தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். நீங்களும் அந்த அளவிற்கு முயற்சி செய்து இவ்வாறு ஆக வேண்டும். நமக்கு தந்தையிடமிருந்து கல்வி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று இந்த பாபாவும் கூறுகின்றார். நீங்களும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். நாம் முயற்சியாளர்களாக இருக்கிறோம். பாவனம் ஆக்குவது எனது கடமை, இதில் எனக்கு என்ன மகிமை செய்வீர்கள்? என்று சிவபாபா கூறுகின்றார். எனக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்? எனது கடமையை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இன்றைய நாட்களில் பலருக்கு அமைதிப் பரிசு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. உங்களால் அமைதியை ஸ்தாபனை செய்ய முடியுமா என்ன? என்று நீங்கள் வழி காண்பிக்க முடியும். அமைதியை ஸ்தாபனை செய்பவர் ஒரே ஒரு தந்தையாவார். முதலில் தேவையானது தூய்மையாகும். அமைதி சாந்திதாமத்தில், சுகதாமத்தில் இருக்கிறது. நிராகார உலகில் அல்லது சாகார சொர்க்கத்தில் இருக்கிறது. இதையும் புரிய வைக்க வேண்டும். அமைதியை ஸ்தாபனை செய்யக் கூடியவர் யார்? வாருங்கள், வந்து பாவன உலகை ஸ்தாபனை செய்யுங்கள் என்று நீங்கள் தான் அழைத்தீர்கள். இவ்வாறு புரிய வைப்பது யார்? இருவரும் சேர்ந்து இருக்கின்றனர் அல்லவா! இருவரின் பெயரையும் பயன்படுத்தினாலும் சரி, அல்லது ஒருவரின் பெயரைப் பயன்படுத்தினாலும் சரியே ! குழந்தை சக்கரவர்த்தி, வயோதிகர் அமைச்சர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஞானச் சிந்தனை செய்வது யார்? சிவபாபா செய்வாரா? அல்லது பிரம்மாவா? இருவரும் சேர்ந்தே இருக்கின்றனர் அல்லவா! இந்த விசயங்களை பகவான் மற்றும் பகவானின் உதவியாளர்கள் மட்டுமே அறிவர். சித்திரங்கள் உருவாக்குவதற்கும், புரிய வைப்பதற்கும் நமக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருப்பது யார்? என்பது உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. நாம் என்ன ஆன்மீக சேவை செய்து கொண்டிருக்கிறோமோ அதுவும் நாடக்கபடியே. கற்ப்பவர் மற்றும் கல்வியைக் கற்பிப்பவர் ஒருபோதும் மறைந்திருக்க முடியாது. ஆம் ! அவசியம் புயல்கள் வரும். இந்த 5 விகாரங்கள் தான் தொந்தரவு செய்கின்றன. இராவண இராஜ்யத்தில் புத்தி தவறான காரியங்களைத் தான் செய்விக்கிறது, ஏனெனில் புத்தி பூட்டப்பட்டிருக்கிறது. மாயை அனைவருக்கும் பூட்டு போட்டு விட்டது. ஞானம் என்ற மூன்றாவது கண் இப்போது கிடைத்திருக்கிறது. பாரதவாசிகளாகிய நீங்கள் என்ன ஆகிவிட்டீர்கள்? என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இந்த பிரம்மாவும் நான் எப்படி இருந்தேன்? பிறகு 84 பிறவிகள் எடுத்த பின்பு என்ன ஆகிறேன்? என்பதை இந்த பிரம்மாவும் புரிந்திருக்கிறார். பாரதத்தில் 84 பிறவிகள் என்று இந்த லெட்சுமி நாராயணரைத் தான் கூற முடியும். தந்தையும் இங்கு தான் வருகின்றார். சிவஜெயந்தியும் பாரதத்தில் தான் ஏற்படுகிறது. நான் பதீத சரீரத்தில் பிரவேசமாகி பதீத உலகில் தான் வருகிறேன் என்று பாபா கூறுகின்றார். நம்பர் ஒன் பாவனமாக இருந்தவர், பிறகு அவரே நம்பர் ஒன் பதீதமாகி விடுகிறார். இந்த நேரத்தில் அனைவரும் பதீதம் அல்லவா! சேவாதாரிகளின் புத்தில் முழு நாளும் இதே ஞானம் தான் இருக்கும். தந்தை கூறுகின்றார் - இல்லறத்தில் இருந்து கொண்டே ஒன்று தூய்மையாக இருங்கள், அடுத்து பாபாவை நினைவு செய்யுங்கள். சத்சங்கமும் காலை மற்றும் மாலையில் நடைபெறும். பகல் பொழுதில் காரிய விவகாரங்களில் இருப்பர், பக்தி செய்வர். சிலர் சிலரை பூஜிக்கின்றனர், சிலர் வேறு யாரையோ பூஜிக்கின்றனர். பதி தான் உனக்கு எல்லாமே என்று மனைவிக்கும் கூறுகின்றனர் எனில், பிறகு மனைவி வேறு யாரையும் பூஜை செய்யக் கூடாது. பதி தான் ஈஸ்வரன், குரு என்று நினைக்கின்றனர். ஆனால் இது விகாரத்திற்காக கூறப்படுவது கிடையாது. பதிகளுக்கெல்லாம் பதி, குருக்களுக்கெல்லாம் குரு ஒரே ஒரு நிராகார பரம்பிதா பரமாத்மா ஆவார். நீங்கள் அனைவரும் நாயகிகள். ஒரே ஒருவர் தான் நாயகன் ! இதையே அவர்கள் பதி (கணவன்) என்று நினைத்து விட்டனர். உண்மையில் தந்தை வந்து தாய்மார்களின் பதவியை உயர்வானதாக ஆக்குகின்றார். முதலில் லெட்சுமி, பிறகு நாராயணர் என்று தான் கூறப்படுகிறது. ஆக லெட்சுமியின் மதிப்பு உயர்வாகி விடுகிறது. ஆக சொர்க்கத்திற்கு எஜமானர் ஆவதற்கான போதை எவ்வளவு இருக்க வேண்டும்! கல்பத்திற்கு முன்பும் சிவஜெயந்தி கொண்டாடப்பட்டது. பாபா வந்திருந்தார், சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருந்தார். தந்தை வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். நாம் இராஜ்யமும் அடைகிறோம், பிறகு பழைய உலகம் விநாசமும் ஆக வேண்டும். வேறு யாருடைய புத்தியிலும் இந்த விசயங்கள் இருக்கவே முடியாது. புத்தியில் இந்த விசயங்கள் அனைத்தும் தாரணையானால் அதிஷ்டசாலிகளாக இருப்பீர்கள். தைரியம் மற்றும் ஆர்வம் இருக்க வேண்டும். இதற்கு பேசுவதற்கான பயிற்சி செய்ய வேண்டும், வழக்கறிஞர்களும் பயிற்சி செய்யும் போது நன்றாக வந்து விடுகின்றனர். வரிசைக்கிரமம் இருக்கவே செய்கிறது. முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம் என்று இருக்கவே செய்கிறது. குழந்தைகளின் மனநிலையும் இவ்வாறு இருக்கிறது. குழந்தைகள் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். இனிமை மற்றும் தெளிவான வார்த்தைகளில் பேசும் போது பிரபாவம் (தாக்கம்) ஏற்படும். ஆக அமைதியை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார், அவரைத் தான் அழைக்கின்றனர். எனக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்? என்று தந்தை கேட்கின்றார். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு பரிசு கொடுக்கிறேன். நீங்கள் உண்மையில் அமைதி, சுகம் ஸ்தாபனை செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் குப்தமாக (மறைவாக) இருக்கிறீர்கள். நாளடைவில் பிரபாவம் ஏற்படும். பி.குமாரிகள் மிகப் பெரிய அதிசயம் செய்கின்றனர் என்று நினைக்கவும் செய்கின்றனர். நாளுக்கு நாள் விழிப்படைந்து கொண்டே செல்வர். யாரிடத்திலாவது செல்வம் அதிகமாக இருந்தால் நல்ல நல்ல மார்பில்ஸ் மூலம் கட்டிடத்தைக் கட்டுகின்றனர். நீங்களும் அதிகம் கற்றுக் கொண்டே செல்வீர்கள், பிறகு இந்த சித்திரம் போன்றவைகளும் கம்பீரமாக ஆகிக் கொண்டே செல்லும். ஒவ்வொரு விசயத்திற்கும் நேரம் தேவைப்படுகிறது. இது மிகப் பெரிய தேர்வாகும். தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக வேண்டும். அவ்வளவு தான், வேறு யாருடனும் நம்முடைய தொடர்பு கிடையாது. தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக எப்படி ஆவது? என்ற யுக்தியை தந்தை வந்து கூறுகின்றார். மன்மனாபவ என்று கீதையிலும் இருக்கிறது. ஆனால் இதன் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. இப்போது தந்தை எதிரில் வந்து புரிய வைக்கின்றார். அரை கல்பம் பக்தி, அரை கல்பம் ஞானம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். சத்யுகம், திரேதாவில் பக்தி இருக்காது. பகலில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருக்கும் அல்லவா! இப்போது இரவாகும். இது முதலில் எவ்வளவு நன்றாக இருந்தது? பிரம்மா ஆவதற்கு 5 ஆண்டுகள் ஆகிறது. 84 பிறவிகள் எடுக்கிறார் அல்லவா! நாம் தான் தேவதைகளாக ஆகிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இதை புத்தியில் நல்ல முறையில் நினைவு செய்ய வேண்டும். சிருஷ்டிச் சக்கரம் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த லெட்சுமி நாராயணரின் சித்திரத்தைப் பார்த்து மிகுந்த குஷியடைய வேண்டும். இது இலட்சியமாகும். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கு இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணர் சத்யுகத்தில் இளவரசராக இருந்தார். அங்கு கீதை கூற வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பெரிய தவறாகும்! இந்த தவறை தந்தையைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. இதையும் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். மற்ற அனைவரும் விஷக் கடலில் மூழ்கிக் கொண்டே இருக்கின்றனர். பலரை மாயை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி விடுகிறது. கீழே விழுந்து விடாதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இல்லையெனில் அதிகம் பட்சாதாபப்பட வேண்டியிருக்கும். பட்சாதாபப்படக் கூடாது என்பதற்காகத் தான் புரிய வைக்கின்றார். சிலருக்கு மிகுந்த ஆவேசம் வருகிறது, உடனேயே ஏற்றுக் கொள்கின்றனர். பாபா, முன்பே திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டது. இப்போது என்ன செய்வது? என்று சிலர் எழுதுகின்றனர். நீங்கள் அதிசயம் செய்து காண்பியுங்கள் என்று பாபா கூறுகின்றார். அவர்களுக்கு முன் கூட்டியே கூறிவிடுங்கள். நீங்கள் பதியின் கட்டளைப்படி நடக்க வேண்டும். நான் தூய்மையாக இருப்பேன் என்று நீங்கள் உத்திரவாதம் அளிக்க வேண்டியிருக்கும். முன் கூட்டியே எழுதி விடுங்கள், நான் என்ன கூறுவேனோ அதைக் கேட்க வேண்டும். எழுதி வாங்கிக் கொள்ளுங்கள், பிறகு பிரச்சனை இருக்காது. கன்னிகைகள் எழுதி வாங்க முடியாது. நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். கன்னிகைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நல்லது.

     

    நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று பாபா கேட்கிறார். ஹே பதீத பாவனரே வந்து பாவனனே ஆக்குங்கள் என்று கூறுகிறீர்கள், எனக்கு இது தான் தொழிலா? தந்தை குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார். பாபா, நாம் பதீதமாக ஆகிவிட்டோம், வந்து பாவனம் ஆக்குங்கள் என்று நீங்கள் அழைக்கிறீர்கள். பாபா மாற்றான் தேசத்திற்கு வருகின்றார். இது பதீத உலகம் அல்லவா! நான் இவரிடத்தில் பிரவேசம் ஆகி, பாவனம் ஆக்க வேண்டும். பிறகு இவர் வந்து பாவன சரீரத்தை எடுத்துக் கொள்வார். எனது அதிஷ்டத்தில் இதுவும் கிடையாது. நான் பதீத சரீரத்தில் தான் வர வேண்டியிருக்கிறது. இந்த ஞானம் கேட்டு பலருக்கு மிகுந்த குஷி ஏற்படுகிறது. இது எவ்வளவு உயர்ந்த ஞானம்! ஆக முயற்சியும் முழுமையாகச் செய்ய வேண்டும். நல்ல முயற்சியாளர்களின் பாபா மகிமை செய்கின்றார். மனிதர்கள் போதையில் இருக்கின்றனர். நாம் சொர்க்கத்தில் அமந்திருப்பதாக நினைக்கின்றனர். இங்கு பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தந்தை என்ன சாப்பிடக் கொடுத்தாலும், குடிக்கக் கொடுத்தாலும், எங்கு அமரச் செய்தாலும் சரியே ! ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். நல்லது.

     

    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

     

    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும், பிரம்மா பாபாவைப் பின்பற்ற வேண்டும். பிரம்மா பாபாவைப் போன்று உயர்ந்த முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வரிய போதையில் இருக்க வேண்டும்.

     

    2) தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக வேண்டும், வேறு எந்த விசயமாக இருந்தாலும் அலட்சியப்படுத்தி விட வேண்டும். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.

     

    வரதானம்:

    குழந்தை மற்றும் எஜமான் என்ற நினைவின் மூலம் அனைத்து பொகிஷங்களுக்கும் அதிகாரி, பிராப்தி நிறைந்தவர் ஆகுக.

     

    நான் தந்தையின் அனைத்து பொக்கிஷங்களுக்கும் அதிகாரி மற்றும் குழந்தை, இயற்கையான யோகி, இயற்கையான சுய இராஜ்ய அதிகாரியாக இருக்கிறேன். இந்த நினைவின் மூலம் அனைத்து பொக்கிஷங்களும் நிறைந்தவர் ஆகுங்கள். எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன் என்ற பாட்டை சதா பாடிக் கொண்டே இருங்கள். இழந்தேன்-அடைந்தேன், இழந்தேன்-அடைந்தேன் என்ற விளையாட்டு விளையாடாதீர்கள். அடைந்து கொண்டிருக்கிறேன், அடைந்து கொண்டிருக்கிறேன் என்பது அதிகாரிக்கான வார்த்தை கிடையாது. யார் சம்பன்ன தந்தையின் குழந்தையோ, கடலின் குழந்தையோ அவர்கள் வேலைக்காரனுக்குச் சமமாக முயற்சி செய்ய முடியாது.

     

    சுலோகன்:

    யோக பலத்தின் மூலம் கர்ம போகத்தின் மீது வெற்றி அடைவது தான் சிரேஷ்ட முயற்சி ஆகும்.

     

    ***ஓம் சாந்தி***