BK Murli 11 April 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 11 April 2017 Tamil

    11.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு கிடைத்துள்ள குஷியை அனைவருக்கும் வழங்க வேண்டும். நீங்கள் சுகம் சாந்தியை பகிர்ந்தளிக்கும் தொழிலை செய்ய வேண்டும்.



    கேள்வி:

    குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த எல்லையில்லாத நாடகத்தின் ஒவ்வொரு காட்சி கூட மிகவுமே பிடித்தமானது - ஏன்?



    பதில்:

    ஏனெனில் சுயம் படைப்பு கர்த்தாவிற்கு இந்த நாடகம் பிடித்துள்ளது. படைப்பவருக்கு பிடித்துள்ளது என்றால், குழந்தைகளுக்கும் அவசியம் பிடித்திருக்கும். நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதிருப்தி அடைய முடியாது. இந்த துக்கம் மற்றும் சுகத்தின் நாடகம் மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதில் வெற்றி, தோல்வியின் விளையாட்டு நடந்துகொண்டே இருக்கிறது. இதை மோசமானது என்று கூற முடியாது. பகலும் நல்லது பின் இரவும் நல்லதே.. இந்த நாடகத்தில் என்னவெல்லாம் பாகம் கிடைத்துள்ளதோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்று நடிப்பவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பார்கள். இந்த எல்லையில்லாத நாடகத்தின் ஞானத்தை நினைவு செய்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புத்தி நிரம்பியதாக இருக்கும்.



    பாடல்:

    நமது தீர்த்தம் தனிப்பட்டதாகும்.. .. ..



    ஓம் சாந்தி.

    உண்மையில் பள்ளிக் கூடத்தில் பாடல் ஒன்றும் பாடப்படுவது இல்லை. இது பாட சாலை ஆகும். இருப்பினும் இங்கு பாடல் ஏன் பாடப்படுகிறது? சத்யுகத்தில் இந்த பாடல்கள் பாடப்படுவதில்லை. இப்பொழுது நாம் சங்கமத்தில் அமர்ந்துள்ளோம். எனவே பக்தி மற்றும் கீதங்கள் ஆகியவற்றை எடுத்து அதன் பொருளைப் புரிய வைக்கிறார். மனிதர்கள் பொருள் புரியாமல் இருக்கிறார்கள். நாம் இப்பொழுது இங்கும் இல்லை, அங்கும் இல்லை, நடுவில் அமர்ந்துள்ளோம். எனவே சிறிது இதன் ஆதாரம் எடுக்கிறோம். குழந்தைகளுக்கு ஞானம் மற்றும் பக்தியின் ரகசியம் புரிய வைக்கப்பட்டுள்ளது. இச்சமயம் நீங்கள் வருங்காலத்திற்காக ஞானத்தைக் கேட்டு கொண்டிருக்கிறீர்கள். வருங்காலத்திற்காக முயற்சி செய்து ஏதாவது பிராப்தியை அமைத்துக் கொள்வது போல அப்பேர்ப்பட்ட மனிதர்கள் யாரும் கிடையாது. நீங்கள் வருங்கால புது உலகத்திற்காக முயற்சி செய்கிறீர்கள். மனிதர்கள் அடுத்த பிறவிக்காக தானம், புண்ணியம் ஆகியவை செய்கிறார்கள். அது பக்தி ஆகும். இது ஞானம் ஆகும். ஒரு சிலர் ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்றும் கூறுகிறார்கள். சந்நியாசிகளினுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம், உங்களுடையது எல்லையில்லாத வைராக்கியம்! அவர்கள் வீடு வாசல் மீது வைராக்கிய மூட்டுகிறார்கள், உலகத்தின் மீது அல்ல. இது தமோபிரதானமான, பட்டுப்போன நிலையிருக்கும் சிருஷ்டி ஆகும். இது அழியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது. ஏனெனில், கல்பத்தின் ஆயுளை மிகவும் நீண்டதாக அமைத்து விட்டுள்ளார்கள். இப்பொழுது தந்தை வந்து புரியவைக்கிறார். இந்த விஷயம் முற்றிலுமே சரியானதாகும் என்று புத்தியும் கூறுகிறது. முக்கியமான விஷயமே தூய்மையினுடையது ஆகும். இதற்காக அவர்கள் வீடு வாசலை விடுகிறார்கள். நீங்கள் முழு பழைய உலகத்தை புத்தி மூலமாக மறந்து விடுகிறீர்கள். தூய்மையான உலகத்திற்குச் செல்வதற்காக தூய்மையாக ஆகிறீர்கள். உங்களுடைய யாத்திரை புத்தியினுடையது ஆகும். கர்ம இந்திரியங்கள் மூலமாக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. உங்களுடையது உடல் மூலமாக எதுவும் நடப்பதில்லை. இப்பொழுது நாம் ஆன்மீகத் தந்தையிடம் செல்கிறோம். அந்த ஸ்தூல யாத்திரைகள் அநேகம் உள்ளன. ஒரு சமயம் ஒரு இடத்திற்குச் செல்வார்கள். இன்னொரு சமயம் இன்னொரு இடத்திற்குச் செல்வார்கள். உங்களுடைய புத்தி ஒரே ஒரு பக்கம் தான் உள்ளது. இதற்கு (அவ்யபிசாரி) கலப்படமற்ற பக்தி என்று கூறினாலும் சரி தான். நீங்கள் ஒருவரை நினைவு செய்கிறீர்கள். அவர்கள் செய்வது அனேகருடைய பக்தி (வ்யபிசாரி) கலப்படமுடையது ஆகும். அநேகரை நினைவு செய்கிறார்கள். உங்களுடையது கலப்படமற்ற ஆன்மீக யாத்திரை ஆகும். இதன் மூலம் நாம் மீண்டும் நம் வீட்டிற்கு செல்கிறோம். அவர்கள் நிர்வாணதாமத்தை வீடு என்று கூட நினைப்பதில்லை. நிர்வாணத்திற்கு கடந்து சென்றார் என்று கூறுகிறார்கள். அந்த உலகில் ஆத்மாக்களாகிய நாம் பாபா கூட இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது பாபா நம்மை அங்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். நாம் அனைவரும் இறைவனின் ரூபம் ஆவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வளவு சாஸ்திரங்கள் ஆகியவை படிக்கிறார்கள். இங்கு உங்களுக்கு அவை எதுவும் கற்பிக்கப்படுவதில்லை, உங்களை இந்த கர்ம காண்டத்திலிருந்து கூட சந்நியாசம் செய்விக்கப்படுகிறது. இவை எல்லாமே பக்தியின் கர்ம காண்டங்கள் ஆகும். எப்படி இறைவனின் கதி, வழி தனிப்பட்டதாகும். முதன் முதலில் உங்களுக்கு அல்ஃப் - தந்தையைப் பற்றி கற்பிக்கிறார். தந்தை சுயம் தானே தரகராக ஆகி வருகிறார். பாடவும் செய்கிறார்கள். ஆனால் புரியாமல் உள்ளார்கள். உங்களுக்கு ஒன்றும் பக்தி மீது வெறுப்பு கிடையாது. யார் மீதும் வெறுப்பு வருவதில்லை. ஏனெனில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். ஆம், இந்த பழைய சீ சீ உலகத்தை விட வேண்டும், திரும்ப செல்ல வேண்டும் என்பதை அவசியம் புரிய வைக்க வேண்டும். பக்தியில் இருக்கும் பொழுது, பக்தி மீது அன்பு இருந்தது. பாடல்கள் ஆகியவை கேட்கும் பொழுது ஆனந்தமாக இருந்தது. இப்பொழுது அவை எதற்கும் உதவாதவையாக இருந்தது என்பதை புரிந்துள்ளோம். கேட்பதால் ஒன்றும் பரவாயில்லை. ஆனால் இது கூட பக்தியின் செயல்கள் ஆகும் என்பதை அறிந்துள்ளோம். இப்பொழுது நம்முடைய புத்தியோகம் அவற்றிலிருந்து விடுபட்டு ஞானத்துடன் இணைந்து விட்டுள்ளது. ஞானம் மற்றும் பக்தி இரண்டையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். மனிதர்களுக்கு ஞானம் கிடைக்காத வரை பக்தியையே மிகவும் நல்லது என்று நினைக்கிறார்கள். நாம் பிறவிதோறும் பக்தி செய்தபடியே வந்தோம். பக்தி மீது சிநேகம் அதிகரித்து விட்டது. இது துக்கம் சுகம், வெற்றி தோல்வியினால் அமைக்கப்பட்ட நாடகம் ஆகும் என்பது இப்பொழுது நம்முடைய புத்தியில் இருக்கிறது. எனவே அவர்கள் மீது கருணை ஏற்படுகிறது. ஏன் அவர்கள் கூட பாபாவின் ஆஸ்தியை பெற்று விடும் வகையில் அவர்களுக்கு கூட படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் கிடைத்து விட வேண்டும். எந்த குஷி நமக்கு கிடைத்துள்ளதோ, அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். வெளிநாடு செல்லும் சிந்தி ஜாதியினர் குறிப்பிட்ட இந்த இடத்தில் வியாபாரம் நன்றாக நடக்கிறது என்பதை பார்க்கும் பொழுது அந்த இடத்திற்கு செல்லுங்கள், அங்கு சம்பாத்தியம் மிக நன்றாக ஆகும் என்று தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கும் கூட ஆலோசனை அளிக்கிறார்கள்.



    இந்த இராவண இராஜ்யத்தில் துக்கமே துக்கம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஞானம் என்பது என்ன பொருள் என்று மனிதர்களுக்கு தெரியாது. இந்த ஞானத்தினாலே சுய இராஜ்யம் கிடைக்கிறது என்பது சாது சந்நியாசிகளுக்கு கூட தெரியாது. இந்த ஞானத்தினால் என்ன பிராப்தி ஆகிறது என்று கேட்கிறார்கள். சாந்தி மற்றும் சுகம் இரண்டுமே கிடைக்கும். அது கூட அவினாஷியானது என்று எழுதப்படுகிறது. யாருக்காவது சுகம் சாந்தியின் வியாபாரம் செய்ய தெரிந்து விடுகிறது என்றால் அதிலேயே ஈடுபட்டு விடுகிறார்கள். ஆம். உலகாயத சேவை கூட சிறிது காலத்திற்கு செய்ய வேண்டிவருகிறது. சத்சங்கத்தின் நேரம் கூட காலை மற்றும் மாலையில் இருக்கும். தாய்மார்களுக்கு வீட்டினுடைய பந்தனம் இருக்கும். எனவே அவர்களுக்காக பகலினுடைய நேரம் வைக்கப்படுகிறது. அதிகாலை நேரம் எல்லாவற்றையும் விட நல்லது ஆகும். புத்துணர்வுடன் கூடிய மனமாக (ஃப்ரெஷ் மைண்டு) இருக்கும். எதை கேட்கிறீர்களோ அதை பின் தாரணை செய்து அசை போட வேண்டும். நிராகார பரமாத்மா கூட படிப்பிப்பதற்கு வருகிறார் என்பது உலகத்தில் யாருக்குமே தெரியாது. உங்களுக்கு இராஜயோகத்தை கற்பித்து நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறேன் என்று பகவான் கூறுகிறார். இந்த யோகம் மிகவுமே பிரசித்தமானது. மனிதர்கள் அழியக் கூடிய பணத்தால் தானம், புண்ணியம் செய்யும் பொழுது, இராஜாவின் வீட்டில் நல்ல ஜென்மம் எடுக்கிறார்கள். இங்கு நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் 21 ஜென்மங்களுக்காக வேண்டி எல்லாவற்றையும் தானம் செய்கிறீர்கள். பிறகு எந்த ஒரு பதவியை அடைவதற்காகவும் முயற்சி செய்ய வேண்டி இருக்காது. பதவி நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. இப்பொழுது நீங்கள் தங்களது ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெற்று கொண்டு இருக்கிறீர்கள். எனவே நல்ல முறையில் படியுங்கள். பின் பிறவிதோறும் இராஜா ஆகுங்கள் என்று பாபா கூறுகிறார். முதல் பிறவி உயர்ந்ததாகவே கிடைக்கும். பிரஜைகளுக்கு கூட உயர்ந்தது கிடைக்கிறது. இராஜ்யத்தில் தாசர் தாசிகள் ஆகியோர் எல்லாமே வேண்டும். எந்த அளவு படிப்பீர்களோ, மகாதானி ஆவீர்களோ, அந்த அளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள். பாபா கூட மகாதானி ஆவார். அனைவரையும் செல்வந்தராக ஆக்கி விடுகிறார். சுகம் மற்றும் சாந்தியின் ஆஸ்தி வழங்குகிறார். முதன் முதலில் சுகத்தில் தான் வருகிறார்கள். கிறித்துவர்களுக்காக கூட முதன் முதலில் காட்டில் இருந்தார்கள். இலைகளாலான ஆடையை அணிந்து கொண்டிருந்தார்கள். விகாரத்தின் பார்வை இருக்கவில்லை என்று கூறுகிறார்கள். எல்லோரும் சுகமாக இருந்தார்கள். ஏனெனில் முதல் நேரத்தில் சதோபிரதானமாக, பிறகு ரஜோ, அதன் பிறகு தமோவில் வருகிறார்கள். அவர்களுடைய பாகம் தனி. மேலும் நம்முடைய பாகம் தனி. யார் இந்த தர்மத்தினரோ அவர்களுடையது தான் நாற்று நடப்படுகிறது. நீங்கள் சம்பூர்ணமாக ஆகி விடும் பொழுது இவர்கள் நம்முடைய தர்மத்தினரா, இல்லையா என்பதை சட்டென்று தெரிந்து கொண்டு விடுவீர்கள்.



    தந்தை புதிய உலகத்தை படைக்கும் பொழுது பாரதத்திற்கு தான் ஆஸ்தி கிடைத்திருந்தது. பிறகு மறைந்து போய் விட்டது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் எல்லோருக்கும் புரிய வைக்கிறீர்கள். நாடகப்படி ஆஸ்தி பெற வேண்டியும் உள்ளது. பின்னர் இழக்க வேண்டியும் உள்ளது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இச்சமயத்தில் நாம் ஆஸ்தி இழந்து விட்டுள்ளோம். இப்பொழுது மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறோம். இலட்சுமி நாராயணரினுடைய இராஜ்யத்தைப் பற்றி யாருக்குமே தெரியாது. எனவே இலட்சுமி நாராயணருக்கு இந்த இராஜ்யம் எப்பொழுது மற்றும் எப்படி கிடைத்தது என்று கேட்கப்படுகிறது. எப்படி அவர்கள் கிருஷ்ணரை முன்னால் வைத்து இலட்சுமி நாராயணரை காணாமல் செய்து விட்டார்கள். நாம் பிறகு இலட்சுமி நாராயணரை முன்னால் வைத்து கிருஷ்ணரை காணாமல் செய்து விடுகிறோம். இலட்சுமி நாராயணர் இருப்பதே சத்யுகத்தினுடையவர்களாக ! நாராயணவாச - நாராயணர் கூறுகிறார் என்று ஆக முடியாது. நான் வருவதே சங்கமத்தில் என்று தந்தை கூறுகிறார். இலட்சுமி நாராயணர் அவசியம் முந்தைய பிறவியில் சங்கமத்தில் தான் இராஜ்யம் பெற்றிருந்தார்கள். இலட்சுமி நாராயணர் தான் 84 பிறவிகள் அனுபவித்து இப்பொழுது கடைசி பிறவியில் இருக்கிறார்கள். இலட்சுமி நாராயணருக்குக் கூட இராஜ்யம் அளிப்பவர் அவசியம் யாராவது இருப்பார்கள் அல்லவா? எனவே பகவான் தான் அளித்திருந்தார். இச்சமயம் நீங்கள் முற்றிலுமே ஏழைகள் ! பிறகு இளவரசர் ஆகி விடுகிறீர்கள். இளவரசருக்கு அவசியம் இராஜா, மகாராஜாவிடம் தான் பிறப்பு ஏற்படும். இதுவரைக்கும் கூட பிரஜைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கக் கூடிய ஒரு சில நல்ல நல்ல இராஜாக்கள் இருக்கிறார்கள். நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் மூலம் நாம் இராஜ்ய பாக்கியத்தை அடைகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். நமக்கு இந்த நிச்சயம் இருக்கிறது. ஏனெனில், இது அனாதி நாடகமாகும். வெற்றி தோல்வியின் விளையாட்டு ஆகும். எது நடக்கிறதோ அது சரியானதே. படைப்பு கர்த்தாவிற்கு இந்த நாடகம் பிடித்ததாக இருக்காதா என்ன? அவசியம் பிடித்திருக்கும். எனவே படைப்புகர்த்தாவின் குழந்தைகளுக்கும் பிடித்திருக்கும். நாம் யாரையுமே வெறுக்க முடியாது. பக்தியினுடையதும் நாடகத்தில் பாகம் உள்ளது என்பதைப் புரிந்துள்ளோம். முழு நாடகம் நன்றாக உள்ளது. கெட்ட நாடகம் என்று ஏன் கூறுவார்கள்? நாடகத்தின் இரகசியம் புத்தியில் இருக்கிறது. அதை உங்களுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது பக்தியின் பாகம் முடிவடைகிறது. இப்பொழுது முயற்சி செய்து தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இவர்கள் எல்லோரும் அசுர சம்பிரதாயத்தினர் என்று தந்தை கூறுகிறார். இதில் வெறுப்பின் விஷயமே கிடையாது. ஈசுவரிய சம்பிரதாயம் மற்றும் அசுர சம்பிரதாயத்தினுடைய நாடகமே ஆகும். அவர்கள் ஒன்றும் தங்களை துக்கமுடையவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்களா என்ன? பக்தி செய்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் ஒரு நாள் பகவான் வந்து பக்தியின் பலனை அளிப்பார் என்று நினைக்கிறார்கள். வீட்டில் அமர்ந்தபடியே ஏதாவதொரு ரூபத்தில் பகவான் வந்து சந்திப்பார். மேலும் சந்நியாசிகள் நாங்களாகவே நிர்வாண தாமம் சென்று விடுவோம் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய முயற்சியினாலே தத்துவத்துடன் யோகம் கொள்கிறார்கள். மேலும் அதோடு இரண்டற கலந்து போய் விடுவோம் என்றும் நினைக்கிறார்கள். உலகத்தில் அநேக வழிகள் உள்ளன. பாபா வந்து ஒரு வழியினராக ஆக்குகிறார். இந்த நாடகம் அனாதியாக அமைக்கப்பட்டுள்ளது என்று புரிய வைக்கிறார். மிகவுமே அழகான நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் துக்கம் சுகத்தின் பாகம் பொருந்தி உள்ளது. அதைப் பார்த்து மிகுந்த குஷி ஏற்படுகிறது. இந்த எல்லையில்லாத நாடகம் மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் விருப்பமானதாகவே இருக்க வேண்டும். பகலும் நல்லது பிறகு இரவும் நல்லது. நாடகம் அல்லவா? இப்பொழுது இரவு முடியப் போகிறது. நாம் பகலில் சென்று உயர்ந்த பதவியை அடைய வேண்டும். ஏன் அதிருப்திப் பட வேண்டும்? நாடகத்தில் என்ன பாகம் கிடைத்துள்ளதோ அதை நடித்தே ஆக வேண்டும். மிகவும் நல்ல நாடகமாகும். இதை மோசம் என்று கூற முடியாது. இந்த நாடகம் ஒரு பொழுதும் முடிந்து போவதே இல்லை. மிகவும் முதல் தரமான நாடகமாகும். இதனை அறிந்து கொள்வதால் புத்தி நிரம்பியதாக ஆகி விட்டுள்ளது. எப்படி தந்தை ஞானம் நிறைந்தவரோ அதே போல குழந்தைகளும் ஞானம் நிறைந்தவர்கள் ஆவார்கள். எவ்வளவு காலம் சுகம், எவ்வளவு காலம் துக்கம் அடைய வேண்டி உள்ளது என்பதைக் கூட நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள். அதனால் தான் ஆஹா ! பிரபு, உங்களது லீலையே லீலை என்று கூறுகிறார்கள். பிரபுவின் படைப்பு அவசியம் நன்றாகத் தான் இருக்கும். அதை மோசமானது என்று யார் கூறுவார்கள்? நாடகத்தில் என்ன பாகம் கிடைத்துள்ளதோ, அதை நடித்தே ஆக வேண்டும். இந்த நாடகம் ஒரு பொழுதும் முடியப் போவதே இல்லை. இதை அறிந்து கொள்வதால் ஆனந்தமே ஆனந்தம் ஏற்படுகிறது. பக்தியில் சத்யுக இராஜ்யம் பற்றி தெரிந்தே இருக்காது. சத்யுக இராஜ்யத்தில் பின் பக்தி தெரிந்தே இருக்காது. பக்தியில் கூட எவ்வளவு அழகான பாடல்கள் பாடுகிறார்கள். ஹே பிரபு ! உனது லீலை விசித்திரமானது என்று ! இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். வேறு யாருக்குமே இந்த லீலை பற்றி தெரியவே தெரியாது. பாபாவிடமிருந்து நமக்கு எவ்வளவு ஆஸ்தி கிடைக்கிறது. நாள் முழுவதும் புத்தியில் சிந்தனை செய்ய வேண்டும். எப்பேர்ப்பட்ட அதிசயமான நாடகமாகும். இதனுடைய விளக்கம் அதிசயமானதாகும். தந்தையின் லீலை எவ்வளவு நன்றாக உள்ளது. நீங்கள் இந்த எல்லையில்லாத நாடகத்தை அறிந்துள்ளீர்கள். பிறகு என்ன பதவி கிடைக்கிறதோ அதையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். மனிதர்கள் நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள் அல்லவா? அங்கு பல்வேறு விதமான நாடகங்கள் இருக்கும். இது ஒரே ஒரு நாடகம் ஆகும். இந்த நாடகத்தை அறிந்து கொள்வதால் நாம் உலகிற்கு அதிபதி ஆகி விடுகிறோம். எவ்வளவு அதிசயமான விஷயங்கள் ஆகும். தந்தை மூலமாக நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். இந்த விஷயங்களில் சிந்தனை செய்ய வேண்டி உள்ளது. இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே 2-3 மணி நேரம் ஒதுக்கி, அந்த நாடகத்தைப் பார்த்து வருகிறார்கள். அது கூட யாரிடமாவது கேட்கப் படுகிறதா என்ன? புத்தியில் பதிந்து விடுகிறது. அதே போல இதுவும் எல்லையில்லாத நாடகமாகும். இதை ஏன் மறக்க வேண்டும். இந்த சக்கரத்தின் நினைவு முற்றிலுமே எளிதானது. இது வேறு யாருக்குமே தெரியாது. நீங்கள் புத்தி மூலமாக அறிந்துள்ளீர்கள் மற்றும் பிறகு திவ்ய திருஷ்டியால் பார்க்கவும் செய்கிறீர்கள். இனி முன்னால் போகப் போக இன்னுமே நிறைய காட்சிகளைப் பார்ப்பீர்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. தந்தைக்குச் சமானமாக மகாதானி ஆக வேண்டும். அனைவருக்கும் சுகம் சாந்தியின் ஆஸ்தியை வழங்க வேண்டும். ஞானத்தை தாரணை செய்து பிறகு அசை போட வேண்டும்.



    2. எல்லையில்லாத நாடகத்தைப் பார்த்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பிரபுவின் லீலை மற்றும் இந்த நாடகம் எவ்வளவு விசித்திரமானதாகும் என்பதை நினைவு செய்து ஆனந்தமாக இருக்க வேண்டும்.



    வரதானம்:

    சிநேகத்தின் சக்தி மூலம் உழைப்பிலிருந்து விடுபட்டு விடும் பரமாத்ம சிநேகி ஆவீர்களாக.



    சிநேகத்தின் சக்தி உழைப்பை சுலபமாக ஆக்கி விடுகிறது. எங்கு (முஹப்பத்) அன்பு உள்ளதோ அங்கு (மெஹ்னத்) கடின முயற்சி தேவையில்லை. உழைப்பு கேளிக்கையாக ஆகி விடுகிறது. பல்வேறு பந்தனங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் ஆத்மாக்கள் கடின உழைப்பு செய்கிறார்கள். ஆனால் பரமாத்ம சிநேகி ஆத்மாக்கள் சுலபமாகவே கடின உழைப்பிலிருந்து விடுபட்டவர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த சிநேகத்தின் வரதானம் எப்பொழுதும் நினைவில் இருந்தது என்றால், எவ்வளவு பெரிய நிலைமையாக இருந்தாலும் சரி, அன்பினால் சிநேகத்தினால் நிலைமை எந்த ஒரு மலை கூட பரிவர்த்தனை (மாற்றம்) ஆகி, தண்ணீரைப் போல லேசாக ஆகி விடுகிறது.



    சுலோகன்:

    சதா நிர்விக்கினமாக (தடையற்று) இருப்பது, மேலும் மற்றவர்களையும் நிர்விக்கினமாக ஆக்குவது - இதுவே (யதார்த்தமான) சரியான சேவை ஆகும்.



    ***OM SHANTI***