BK Murli 18 June 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 18 June 2017 Tamil

    18.06.2017     காலை முரளி,  ஓம் சாந்தி    அவ்யக்த பாப்தாதா,  ரிவைஸ் 11.04.1982,   மதுபன்

    வீணானதை தியாகம் செய்து சக்திசாலி ஆகுங்கள்.


    இன்று பாப்தாதா தன்னுடைய அனைத்து பாவங்களையும் வென்ற, அதாவது பாவக்காரியங்களை (சன்னியாசம்) துறந்து விட்ட ஆத்மாக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். பிராமண ஆத்மா ஆவது என்றால், சிரேஷ்ட காரியம் செய்வது மற்றும் பாவக்காரியங்களை சன்னியாசம் செய்வது. ஒவ்வொரு பிராமண குழந்தையும் பிராமணன் ஆன உடனேயே நாம் அனைவரும் இப்பொழுது பாவ காரியங்களை விட்டு விட்டு நல்ல காரியங்களை செய்பவர்களாகி விட்டோம் என்ற சிரேஷ்ட எண்ணத்தை வைத்தீர்கள், நல்ல காரியங்கள் செய்யும் ஆத்மாவை சிரேஷ்ட பிராமண ஆத்மா என்று கூறுவது. அப்படி எண்ணமே பாவங்களை வென்றவர் ஆவதற்கானது இதே இலட்சியத்தை நீங்கள் அனைவரும் வைத்தீர்கள் தான் இல்லையா? இதே இலட்சியத்தை எதிரில் வைத்து சிரேஷ்ட இலட்சணத்தை தனக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே பாவகாரியங்களை சன்னியாசம் செய்து பாவங்களை வென்றவர் ஆகியிருக்கிறேனா என்று தன்னைத் தானே கேளுங்கள். எப்படி உலகத்தில் கூட உயர்ந்த இராஜ குலத்தைச் சேர்ந்த ஆத்மா எந்த சாதாரண நடத்தையும் செய்ய முடியாது. எப்படி எல்லைக்குட்பட்ட வைஷ்ணவர்கள் எந்த ஒரு கீழ்த்தரமான பொருளையும் உட் கொள்ள முடியாது. அதே போல் பாவங்களை வென்ற விஷ்ணு வம்சத்தைச் சேர்ந்தவர் பாவக்காரியம் மற்றும் தீய எண்ணங்கள் என்ற கீழ்த்தரமான காரியம் மற்றும் எண்ணத்தை வைக்க முடியாது. இவை பிராமண ஜென்மத்தின் கணக்குப்படி தடை செய்யப்பட்டவை. அந்த மாதிரி பிராமணர்களுக்காக மற்றும் தனக்காக என்ன என்ன தடை செய்யப்பட்டவை என்பதை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்களா? அனைவரும் தெரிந்தும் இருக்கிறீர்கள், ஏற்றுக் கொண்டும் இருக்கிறீர்கள் ஆனால் வரிசைக் கிரமமாக நடந்து கொள்கிறீர்கள். அந்த மாதிரிக் குழந்தைகளைப் பார்த்து நீங்கள் கூறும் அந்த சிரிப்பூட்டும் கதை நினைவில் வருகிறது. சொல்லிக் கொண்டும் இருக்கிறார் மற்றும் செய்து கொண்டும் இருக்கிறார். இதை என்னவென்று கூறுவது? இது பிராமண ஆத்மாக்களைப் பொருத்த வரை உயர்ந்ததாக இருக்குமா? சிரேஷ்டமானது எது? நல்ல காரியமா? சாதாரண காரியமா? எப்பொழுது பிராமணன் சாதாரண காரியமே செய்ய முடியாது என்றால் பாவக்காரியங்களின் விஷயமே இல்லை. பாவங்களை வென்றவர் என்றால் பாவக்காரியம் மற்றும் தீய எண்ணங்களை தியாகம் செய்தவர் கர்ம இந்திரியங்களின் ஆதாரத்தினால் காரியம் செய்யாமல் இருக்க முடியாது. தேகத்தின் சம்மந்தம் கர்ம இந்திரியங்களுடன் இருக்கிறது. மற்றும் கர்ம இந்திரியங்களின் சம்மந்தம் காரியத்துடன் இருக்கிறது. இது தேகம் மற்றும் தேகத்தின் சம்மந்தத்தின் தியாகத்தின் விசயத்தை பேசிக் கொண்டிருக்கிறோம். கர்ம இந்திரியங்களுக்கு காரியத்துடன் என்ன சம்மந்தம் இருக்கிறதோ அந்தக் காரியத்தின் கணக்குப்படி பாவக்காரியத்தின் தியாகம். பாவக் காரியத்தின் தியாகம் இன்றி நல்ல காரியம் செய்பவராகவும் பாவங்களை வென்றவராகவும் ஆக முடியாது. பாவக்காரியத்தின் இலக்கணத்தை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? எந்த ஒரு விகாரத்தின் அம்சமாத்திரம் வசமாகி காரியம் செய்வது என்றால் பாவக்காரியம் செய்வது விகாரங்களின் சூட்சும சொரூபம் மற்றும் ராயல் சொரூபங்களை மிக நன்றாக தெரிந்திருக்கிறீர்கள். இதன் மேல் பிராமணர்களின் ராயல் ரூபத்தின் விகாரத்தின் சொரூபம் என்ன என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். ஒருவேளை ராயல் ரூபத்தில் விகாரம் இருக்கிறது மற்றும் சூட்சும அம்சமாத்திரத்தில் இருக்கிறது என்றால் அந்த மாதிரி ஆத்மா எப்பொழுது நல்ல காரியம் செய்பவராக ஆக முடியாது.



    நல்ல காரியம் செய்தேனா அல்லது வீணான காரியம் செய்தேனா அல்லது ஏதாவது பாவக்காரியமும் செய்தேனா என்று அமிர்தவேளையில் தொடங்கி ஒவ்வொரு காரியத்தையும் சோதனை செய்யுங்கள் நல்ல காரியம் என்றால், ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் காரியம் செய்வது. ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் செய்யப்பட்ட காரியம் இயல்பாகவே நல்ல கர்மம் அதாவது புண்ணிக் கணக்கில் சேமிப்பாகிறது. அப்படி காரியம் மற்றும் பாவக்காரியத்தை சோதனை செய்வதற்கான விதி சுலபமானது. இந்த விதிப்படி எப்பொழுதும் சோதனை செய்து கொண்டே இருங்கள். அமிர்தவேளையில் எழும் காரியத்திலிருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு காரியத்திற்காக ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. எழுவது எப்படி, உட்காருவது எப்படி என்று அனைத்தும் கூறப்பட்டிருக்கிறது தான் இல்லையா? ஒருவேளை அந்த மாதிரி எழவில்லை என்றால் அமிர்தவேளையிலிருந்து சிரேஷ்டகாரியத்தின் சிரேஷ்ட பிராப்தியை உருவாக்க முடியாது. அதாவது வீணானவை மற்றும் பாவக்காரியத்தின் தியாகி ஆக முடியாது. அப்படி இந்த சம்மந்தத்தையும் தியாகம் செய்ய வேண்டும். வீணானவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். சிலர் நானோ எந்த பாவமோ செய்யவில்லையே என்று நினைக்கிறார்கள். எந்த தவறும் செய்யவில்லையே? அந்த மாதிரி தவறான எந்த வார்த்தையும் பேசவில்லையே என்று நினைக்கிறார்கள். ஆனால் அதாவது சிரேஷ்ட பாக்கியம் நிறைந்தவராக ஆக விடாது. ஒருவேளை பாவக்காரியம் செய்யவில்லை ஆனால் வீணான காரியமும் செய்தீர்கள் என்றால், தற்சமயத்திற்கும் மற்றும் எதிர்காலத்திற்கும் சேமிப்போ ஆகவில்லையே சிரேஷ்ட காரியம் செய்வதினால் தற்சமயத்திலும் சிரேஷ்ட காரியத்தின் உடனடி பலனாக குஷி மற்றும் சக்தியின் அனுபவம் ஆகும். தனக்காகவும் உடனடி பலன் கிடைத்து விடுகிறது மேலும் மற்றவர்களும் உயர்ந்த காரியங்கள் செய்யும் ஆத்மாக்களைப் பார்த்து முயற்சி செய்வதின் ஊக்கம் உற்சாகத்தில் வருகிறார்கள். நாமும் அந்த மாதிரி ஆக முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படி தனக்காக உடனடிப் பலன் மேலும் மற்றவர்களின் சேவை. இரட்டை சேமிப்பு ஆகிவிட்டது. மேலும் தற்சமயத்தின் கணக்குப்படி எதிர்காலத்திற்கோ சேமிப்போ ஆகிவிடுகிறது. இந்த கணக்குப்படி பாருங்கள் ஒருவேளை வீணான அதாவது சாதாரண காரியம், பேச்சு, நேரம் இதன் தியாகமும் செய்து எப்பொழுதும் சக்திசாலியாக, எப்பொழுதும் ஆன்மீக அதாவது பலமடங்கு பாக்கியம் நிறைந்தவராக ஆகுங்கள். எனவே, வீணானவை மற்றும் சாதாரண விசயங்கள் மீது கவனம் செலுத்துங்கள். இதன் இலட்சியத்தையும் தியாகம் செய்ய வேண்டும், ஏனென்றால், நீங்கள் அனைத்து பிராமண ஆத்மாக்களுக்கும் உலக மேடையில் கதாநாயக, கதாநாயகி பாத்திரம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி கதாநாயக பாத்திரம் ஏற்று செய்யும் ஆத்மாக்களின் ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வார்த்தை, ஒவ்வொரு காரியமும் வைரத்தை விட அதிக மதிப்புள்ளது. ஒருவேளை ஒரு எண்ணம் கூட வீணானதாக இருந்தது என்றால், வைரத்தை இழந்தது மாதிரி , ஒருவேளை மிகவும் விலை மதிப்புள்ள வைரம் கீழே விழுந்து விட்டது என்றால், காணாமல் போய்விட்டது என்றால், ஏதோ இழந்து விட்டோம் என்று யோசிப்பார் இல்லையா? அப்படி ஒரு வைரத்தின் விசயம் இல்லை. அனேக வைரங்களின் விலை ஒரு வினாடி ஆகும். இந்தக் கணக்கின் படி யோசியுங்கள். சாதாரண ரூபத்தில் அமர்ந்து கொண்டே சாதாரண விசயங்கள் பேசிப் பேசியே நேரத்தை கழித்து விட்டீர்கள் என்று அப்படி இருக்க வேண்டாம். பிறகு என்ன கூறுகிறார்கள், சும்மா அப்படியே பேசிக் கெண்டிருந்தோம், உட்கார்ந்திருந்தோம் மேலும் எந்தக் கெட்ட காரியமும் செய்யவில்லையே. இந்த மாதிரியே இருந்து வந்தோம். இந்த மாதிரி செய்து செய்து எவ்வளவு காலம் கடந்து விட்டது. பொதுவாக அப்படியே இருந்தது என்பதல்ல, ஆனால் வைரம் மாதிரி இருந்தது. எனவே தன்னுடைய மதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஜட விக்ரகங்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் கூட அந்த அளவு மதிப்பு இருக்கிறது. இன்று வரை அதை ஒரு வரதான ரூபம் என்று நம்புகிறார்கள். ஒரு நொடியின் காட்சி கொடுத்து விடு என்று தான் பக்தர்களும் கூறுகிறார்கள். அப்படி தரிசனம் நேரத்தின் மதிப்பு, வரதானம் எண்ணத்தின் மதிப்பு உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு, இன்று கூட இரண்டு வார்த்தைகள் கேட்பதற்காக துடிக்கிறார்கள். உங்களுடைய பார்வையின் மதிப்பாக இன்று கூட பார்வையால் நன்மை செய்யுங்கள் என்று அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் உங்களுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் மதிப்பு இருக்கிறது. தந்தையுடன் சேர்த்து உங்களுடைய சிரேஷ்ட காரியத்தை வர்ணனை செய்து மனம் குதூகலம் அடைகிறார்கள். அப்படி உங்களுடைய ஒவ்வொரு வினாடி ஒவ்வொரு எண்ணமும் விலை மதிக்க முடியாதது. எனவே தன்னுடைய மதிப்பைத் தெரிந்து வீணானது, தீயது மற்றும் பாவக் காரியங்களை தியாகம் செய்யுங்கள். அப்படி இன்று தியாகத்தின் பாடத்தில் என்ன உறுதி செய்தீர்கள்? அப்படியே தான் இருந்து வந்தோம் என்ற அலட்சியத்தின் வார்த்தையின் தியாகம். எப்படி இன்றைய நாட்களில் நடைமுறை பழக்க பேச்சு என்று கூறுகிறார்கள் அதே போல் இதுவும் பிராமணர்களின் நடைமுறை பழக்க பேச்சு ஆகிவிட்டது. இந்த மொழியை விட்டு விடுங்கள். ஒவ்வொரு வினாடியும் ஆன்மீகமாக இருக்கட்டும். ஒவ்வொரு எண்ணமும் உலகியல் அற்றதாக அதாவது விலைமதிக்க முடியாததாக இருக்கட்டும். ஒவ்வொரு எண்ணமும் உலகியல் அற்றதாக அதாவது விலை மதிக்க முடியாததாக இருக்கட்டும். தற்சமயம் மற்றும் எதிர்காலத்திற்கான இரட்டை பலன் அடைபவர்கள் எப்படி சில நேரம் ஒன்றில் இரண்டு பழங்கள் சேர்ந்தே இருக்கும். அப்படி பார்த்திருப்பீர்கள். அப்படி சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுக்கு எப்பொழுதும் இரட்டை பலன் அதாவது இரட்டை பிராப்தி, எதிர்காலத்திற்கு முன்பு தற்சமயம் பிராப்தி இருக்கிறது. மேலும் தற்சமயத்தின் ஆதாரத்தில் எதிர்காலத்தில் பிராப்தி இருக்கிறது. அப்படி ஒன்றை அல்ல, இரட்டை பழங்களை சாப்பிடுங்கள். புரிந்ததா? நல்லது.



    எப்பொழுதும் பாவங்களை வென்ற, மதிப்புள்ளவராகி ஒவ்வொரு வினாடியையும் விலை மதிப்பற்றதாக ஆக்கும் சேவையில் ஈடுபடுத்தக் கூடிய இரட்டை கதாநாயக ஆத்மாக்களுக்கு, இரட்டை பழம் அருந்தும், வீணானது மற்றும் சாதாரணத்தை மஹா தியாகம் செய்த, எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக சிரேஷ்ட எண்ணம் மற்றும் காரியம் செய்யக் கூடிய மஹா - மஹா பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு

    1. நிரம்பிய ஆத்மாக்களின் முகம் மூலமாக சேவை: அனைவரும் கடலின் அருகில் இருக்கக் கூடியவர்கள், எப்பொழுதும் கடலின் பொக்கிஷங்களை தனக்குள் நிரப்பிக் கொண்டே இருக்கிறீர்களா? கடலின் ஆழத்தில் எவ்வளவு பொக்கிஷங்கள் இருக்கின்றன. அப்படி கடலின் கரையில் இருப்பவர்கள், அருகில் இருப்பவர்கள் அனைத்து பொக்கிஷங்களின் அதிபதி ஆகிவிட்டார்கள். பொதுவாகவே யாருக்காவது ஏதாவது பொக்கிஷம் கிடைக்கிறது என்றால், குஷியில் வந்து விடுவார். திடீரென்று யாருக்காவது ஏதாவது பணம், செல்வம் கிடைத்து விட்டது என்றால் போதை ஏறிவிடும். குழந்தைகள் உங்களுக்கு அந்த மாதிரி செல்வம் கிடைத்திருக்கிறது. அதை யாரும் பறிக்கவும் முடியாது. கொள்ளை அடிக்கவும் முடியாது. 21 தலை முறைக்கும் எப்பொழுதும் செல்வந்தர்களாக இருப்பீர்கள். அனைத்து பொக்கிஷங்களின் சாவி பாபா பாபா என்று கூறினீர்கள், களஞ்சியம் திறந்தது. அப்படி சாவியும் கிடைத்து விட்டது, களஞ்சியமும் கிடைத்துவிட்டது நிரந்தர அனைத்து செல்வங்கள் நிறைந்தவர்களாக ஆகிவிட்டீர்கள். அந்த மாதிரி நிறைந்த, அனைத்து செல்வங்களும் நிரம்பிய ஆத்மாக்களின் முகத்தில் குஷியின் ஜொலிப்பு இருக்கும் அவருடைய குஷியைப் பார்த்து இவருக்கு என்ன கிடைத்தது என்று தெரியவில்லை என்று அனைவரும் கூறுவார்கள். அதைத் தெரிந்து கொள்ள இச்சை இருக்கும். எனவே இயல்பாகவே அவர்களுக்கு சேவை நடந்து விடும்.



    2. மாயாவை வென்றவர் ஆவதற்காக சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள் எப்பொழுதும் தன்னை சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக அனுபவம் செய்கிறீர்களா? நான் புண்ணிய ஆத்மா, உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமண ஆத்மா, சிரேஷ்ட, ஆத்மா மஹான் ஆத்மா என்று அப்படி தன்னை சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக அனுபவம் செய்கிறீர்களா? எங்காவது அமர வேண்டியதிருக்கிறது என்றால் இருக்கை வேண்டும் இல்லையா? சங்கமயுகத்தில் தந்தை சிரேஷ்ட சுயமரியாதை என்ற இருக்கையைக் கொடுத்திருக்கிறார். அதிலேயே அமர்ந்திருங்கள். இருக்கை அல்லது ஆசனம் தான் நினைவில் இருக்க வேண்டும். எனவே நான் ஒவ்வொரு அடியிலும் புண்ணியம் செய்யும் புண்ணிய ஆத்மா என்ற நினைவு எப்பொழுதும் இருக்கட்டும். நான் மகான் எண்ணம், மகான் பேச்சு, மகான் காரியம் செய்யும் மகான் ஆத்மா, ஒரு பொழுதும் தன்னை சாதாரணமானவர் என்று நினைக்காதீர்கள். யாருடையவனாகி விட்டேன் மற்றும் என்னவாகி விட்டேன்?இதே நினைவு என்ற இருக்கையில் அமர்ந்து இருங்கள். இந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஒருபோதும் மாயா வர முடியாது. தைரியம் வைக்க முடியாது. ஆத்மாவின் இருக்கை சுயமரியாதை என்ற இருக்கை, அதில் அமருபவர்கள் சுலபமாகவே மாயாவை வென்றவர்கள் ஆகிவிடுகிறார்கள்.



    3. அனைத்து சம்மந்தங்களையும் ஒருவருடன் இணைத்து பந்தனத்திலிருந்து விடுபட்ட யோக சொரூபமானவர்கள் ஆகுங்கள். எப்பொழுதும் தன்னை பந்தனத்திலிருந்து விடுபட்ட ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? சுதந்திரமாகி விட்டீர்களா அல்லது இன்னும் ஏதாவது பந்தனம் இருந்து விட்டதா? பந்தனத்திலிருந்து விடுபட்டவரின் அடையாளம் எப்பொழுதும் யோக சொரூபமானவர். யோக சொரூபம் இல்லையென்றால் அவசியம் பந்தனம் இருக்கிறது. எப்பொழுது தந்தையினுடையவர் ஆகிவிட்டீர்கள் என்றால் தந்தையைத் தவிர வேறு என்ன நினைவு வரும்? எப்பொழுதும் பிரியமான பொருள் மற்றும் நல்ல பொருள் நினைவு வருகிறது இல்லையா. அப்படி தந்தையை விட சிரேஷ்ட பொருள் அல்லது நபர் யாராவது இருக்கிறார்களா? எப்பொழுது தந்தையைத் தவிர வேறு யாரும் சிரேஷ்டமானவர் இல்லை என்று புத்தியில் தெளிவாகி விடுகிறது என்றால் சகஜயோகி ஆகிவிடுகிறார். சுலபமாக பந்தனத்திலிருந்து விடுபட்டவராகவும் ஆகிவிடுகிறார். கஷ்டப்பட வேண்டியதிருக்காது. அனைத்து சம்மந்தமும் தந்தையுடன் இணைந்து விட்டது. என்னுடையது என்னுடைய என்ற அனைத்தும் முடிவடைந்தது இதைத் தான் அனைத்து சம்மந்தங்களும் ஒருவருடன் என்று கூறுவது.



    4. நெருக்கமான ஆத்மாக்களின் அடையாளம் – சமமானவர்கள் எப்பொழுதும் தன்னை நெருக்கமான ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? நெருக்கமான ஆத்மாக்களின் அடையாளம் சமமானவர்கள். யார் யாருடைய நெருக்கத்தில் இருப்பாரோ, அவர் மேல் இன்னொருவருடன் இருப்பதின் பாதிப்பு இயல்பாகவே ஏற்படும். அப்படி தந்தையின் சமீபம் என்றால் தந்தைக்குச் சமம் எது தந்தையின் குணமோ அது குழந்தைகளின் குணம், எது தந்தையின் கடமையோ அது குழந்தைகளின் கடமை. எப்படி தந்தை எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்பவர் அதே போல் குழந்தைகளும் உலகிற்கு நன்மை செய்பவர். எனவே என்ன என்ன காரியம் செய்கிறேனோ என்ன என்ன வார்த்தைகள் பேசுகிறேனோ அது தந்தைக்கு சமமானதாக இருக்கிறதா என்று ஒவ்வொரு நேரமும் சோதனை செய்யுங்கள். எப்படி தந்தை எப்பொழுதும் சம்பன்னமாக இருக்கிறார், சர்வசக்திவானாக இருக்கிறார் அதே போலவே குழந்தைகளும் மாஸ்டர் ஆகி விடுவார்கள். எந்த ஒரு குணத்தின், சக்தியின் குறைவு இருக்காது. சம்பன்னமாக இருக்கிறார்கள் என்றால் ஆடாமல், அசையாமல் உறுதியாக இருப்பார்கள்.



    5. சேவைக்காக அங்கு இங்கு ஓடுவது கூட மன மகிழ்ச்சிக்கான சாதனம். அனைவரும் தன்னை ஒவ்வொரு அடியில் நினைவு மற்றும் சேவை மூலமாக பலமடங்கு வருமானத்தை சேமிக்கக் கூடிய பல மடங்கு பாக்கியம் நிறைந்தவர் என்று நினைக்கிறீர்களா? வருமானம் செய்வதற்கு எவ்வளவு சுலபமான வழி கிடைத்திருக்கிறது. சௌகரியமாக அமர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் வருமானத்தை சேமிப்பு செய்து கொண்டே இருங்கள். மன சக்தி மூலம் மிகுந்த வருமானம் செய்ய முடியும், ஆனால் இடை இடையே சேவையின் சாதனங்களில் அங்கு இங்கு ஓட வேண்டியதிருக்கிறது, அதுவோ மனமகிழ்ச்சிக்கான பொழுது போக்கு. பொதுவாக வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால், மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அந்த மாதிரி சம்பாதிப்பதற்கான வழி அதிகம் இருக்கிறது, ஒரு நொடியில் பல மடங்கு சேமிப்பாகி விடுகிறது. நினைவு செய்தார் மற்றும் ஒரு பூஜ்யம் அதிகரித்துவிட்டது எனவே சுலபமான அழியாத வருமானம் செய்வதிலேயே பிஸியாகி இருங்கள். பஞ்சாப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அன்பு நினைவுகளைக் கொடுத்துக் கொண்டே பாப்தாதா கூறினார். பஞ்சாப்பைச் சேர்ந்த சேவாதாரி குழந்தைகளுக்கு சேவையில் இருக்கும் ஊக்கம் உற்சாகத்திற்காக பாராட்டுக்கள்! எவ்வளவு சேவையோ அந்த அளவு அதிகம் வெண்ணெய் சாப்பிடுபவர்கள் ஆவீர்கள். இந்த மேளாவோ (பெரிய சேவை நிகழ்ச்சி) எல்லைக்கப்பாற்பட்ட சேவை ஆகும். மேளா என்றால் ஆத்மாக்களை பாபாவுடன் சந்திக்க வைப்பதற்கு பொறுப்பாளர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட சேவை, அளவற்ற ஊக்கம் வைத்து சேவை செய்தீர்கள். மேலும் எப்பொழுதும் அந்த மாதிரி ஊக்கம் உற்சாகத்தில் இருந்து கொண்டே முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். மிக நல்ல பழைய பாலனை பெற்ற குழந்தைகள் பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள் என்று பாப்தாதா தெரிந்திருக்கிறார். ழைய குழந்தைகளின் பாக்கியத்தையோ இதுவரையிலும் சாஸ்திரங்களிலும் மகிமை பாடுகிறார்கள். மேலும் சைத்தன்யத்தில் புதுப் புது குழந்தைகள் யார் வருகிறார்களோ அவர்களும் அவர்களைப் பற்றி வர்ணனை செய்கிறார்கள். அப்படி பதமாபதி ஆவதற்கான வாய்ப்பை எடுக்கக் கூடிய சேவாதாரி குழந்தைகளுக்கு பல மடங்கு அன்பு நினைவுகள் நல்லது.



    வரதானம் :

    மனம் புத்தியால் எந்த ஒரு தீயதையும் தொடாத சம்பூர்ண வைஷ்ணவன் மற்றும் வெற்றி தபஸ்வி ஆகுக !



    தூய்மையின் தனித் தன்மை மற்றும் ராயல் தன்மை உள்ளவர்கள் மனம் புத்தியால் எந்த ஒரு தீயதையும் தொட முடியாது. எப்படி பிராமண வாழ்க்கையில் உடற்கவர்ச்சி மற்றும் உடலைத் தொடுவது தூய்மையின்மையோ அதே போல் மனம், புத்தியில் எந்த ஒரு விகாரத்தின் எண்ண அளவில் கவர்ச்சி மற்றும் தொடுவது தூய்மையின்மை ஆகும். எனவே எந்த ஒரு தீயதையும் எண்ணத்தில் கூட தொடாமல் இருப்பது என்பது தான் சம்பூர்ண வைஷ்ணவன் மற்றும் வெற்றி நிறைந்த தபஸ்வியின் அடையாளம்.



    சுலோகன் :

    மனதின் உளைச்சலை முடித்துவிட்டு தற்சமயத்தையும் எதிர்காலத்தையும் ஒளிமயமானதாக ஆக்குங்கள்.


    ***OM SHANTI***