BK Murli 23 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 23 July 2017 Tamil

    23.07.2017  காலை முரளி     ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,  ரிவைஸ்:          28.04.1982           மதுபன்

    அனைத்தையும் தியாகம் செய்தவரின அடையாளங்கள்


    பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து மகாதியாகி, சர்வம்ச (அனைத்தையும்) தியாகி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்தெந்தக் குழந்தைகள் இந்த மகான் பாக்கியத்தை பிராப்தி செய்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் அருகில் வந்து சேர்ந்து விட்டார்கள் - அந்த மாதிரி அருகாமையிலிருக்கும் அதாவது சமமான, சிரேஷ்ட, சர்வம்ச தியாகி குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். சர்வம்ச தியாகி குழந்தைகளின் விசேஷம் என்ன, அந்த விசேஷத்தின் ஆதாரத்தின் அருகில் இருப்பவர்களாக மற்றும் சமமாக ஆகிறார்கள்? பௌதீக உடல் மூலமாகவும் (பிரம்மா) கடைசி வார்த்தைகளில் மூன்று விசேஷங்களைக் கூறினோம்:



    (1) எண்ணத்தில் எப்பொழுதும் உடலற்ற (நிராகார்) நிலையிலிருந்து உடலில் (சாகார்) வருபவர், எப்பொழுதும் அனைத்திலிருந்தும் விலகிய மற்றும் தந்தையின் பிரியமான ஆத்மாக்கள்.



    (2) வார்த்தையில் எப்பொழுதும் அகங்காரமற்ற நிலை அதாவது எப்பொழுதும் ஆன்மீக இனிமைத் தன்மை மற்றும் பணிவு.



    (3) காரியத்தில் ஒவ்வொரு கர்ம இந்திரியம் மூலமாக விகாரமற்ற (நிர்விகாரி) நிலை அதாவது தூய்மையின் தனித்தன்மை உள்ளவர்.



    அப்படி ஒவ்வொரு கர்ம இந்திரியம் மூலமாக மகாதானி மற்றும் வரதானி அதாவது பெரும் வள்ளல் மற்றும் வரமளிப்பவர். நெற்றி மூலமாக அனைவருக்கும் சுய சொரூபத்தின் நினைவூட்டக் கூடிய வரதானி மற்றும் மகாதானி. கண்களினால் ஆன்மீக திருஷ்டி மூலம் அனைவருக்கும் சுய தேசம் அதாவது ஜீவன் முக்தி. தன்னுடைய இராஜ்யத்தின் தரிசனம் செய்விப்பது மேலும் வழி காண்பிப்பதற்காக திருஷ்டி மூலம் இஷாரா (சைகை) காண்பிப்பது. இது தான் நம்முடைய உண்மையான வீடு மற்றும் இராஜ்யம் என்று ஆத்மாக்கள் உணரும் அளவிற்கு அனுபவம் செய்விப்பதற்கான வரதானம் கொடுப்பது, வீட்டிற்கான வழி, இராஜ்யத்தை அடைவதற்கான வழி கிடைத்து விட்டது என்று அந்த மாதிரி மகா தானம் மற்றும் வரதானம் பெற்று மகிழ்ச்சி அடைந்து விட வேண்டும். வாய் மூலமாக படைப்பவர் மற்றும் படைப்பின் விஸ்தாரத்தை தெளிவாகத் தெரிந்து தன்னை படைப்பவரின் முதல் படைப்பு சிரேஷ்ட பிராமணனிலிருந்து தேவதை ஆவதற்கான வரதானத்தைப் பெற்று விடட்டும். அதே போல் கைகள் மூலமாக எப்பொழுதும் சகஜயோகி, கர்மயோகி ஆவதற்கான வரதானம் கொடுக்கும் சிரேஷ்ட பலனை, பிராப்தி செய்வதற்கான வரதானத்தைப் பெறுபவர்களாக ஆக்குபவர். தாமரை போன்ற கால் பாதங்கள மூலமாக ஒவ்வொரு அடியிலும் தந்தையை பின்பற்றி நடந்து ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு வருமானத்தை சேமிக்கக்கூடிய வரம் பெற்றவர்கள். அந்த மாதிரி ஒவ்வொரு கர்ம இந்திரியம் மூலமாக விசேஷ அனுபவம் செய்விக்கும் வரம் பெற்றவர் அதாவது விகாரமற்ற வாழ்க்கை. இந்த மூன்று விசேஷங்கள சர்வம்ச தியாகியிடம் எப்பொழுதும் தெளிவாகத் தென்படும். சர்வம்ச தியாகி ஆத்மா ஏதேனும் ஒரு விகாரத்தின் அம்சத்தின் வசமாகி எந்த ஒரு தவறான காரியமும் செய்ய மாட்டார். விகாரங்களின் ராயல் அம்ச ரூபத்தைப் பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். பெரிய ரூபத்தில் விகாரங்கள் அகன்று ராயல் ரூபத்தில், அம்ச மாத்திர ரூபத்தில் இருந்து விடுகின்றன. கூறியது நினைவு இருக்கிறது தான் இல்லையா? பிராமணர்களின் மொழியும் ராயல் ஆகிவிட்டது. அதைப் பற்றிய விஸ்தாரமோ மிக நீளமானது. நான் தான் யதார்த்தமாக இருக்கிறேன், மேலும் நான் தான் சரியாக இருக்கிறேன் என்று தன்னை நிரூபிப்பதற்கான ராயல் மொழியின் வார்த்தைகளும் மிக அதிகமாக இருக்கின்றன. தன்னுடைய பலஹீனத்தை மறைத்து மற்றவர்களின் பலவீனத்தை நிரூபிக்கும் மற்றும் தெளிவு படுத்துவதற்கான விஸ்தாரம் செய்வது ஆகிய இவற்றிற்கும் மிக அதிக ராயல் வார்த்தைகள் இருக்கின்றன. இதுவும் பெரிய அகராதி, அது உண்மையானது அல்ல. ஆனால் தன்னை நிரூபிப்பதற்காக மற்றும் தன்னுடைய பலகீனங்களை மறைப்பதற்கான மனம் சொல்லும் வழிப்படி கூறும் வார்த்தைகள், அந்த விஸ்தாரத்தை நீங்கள் அனைவரும் நன்றாகத் தெரிந்திருக்கிறீர்கள். எந்த ஒரு விகாரத்தின் அம்ச மாத்திரம் கூட சர்வம்ச தியாகியின் பேச்சில் இருக்காது. அப்படி எண்ணம், சொல், செயல், சம்பந்தம் தொடர்பில் எப்பொழுதும் விகாரங்களின் அம்ச மாத்திரமும் இல்லாத நிலை – இதைத்தான் சர்வம்ச தியாகி என்று கூறுவது. சர்வ அம்சத்தின் தியாகம்.



    சர்வம்ச தியாகிகள் எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்யும் விசேஷம் உள்ளவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் வள்ளலின் குழந்தைகள் வள்ளல் ஆகி, அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர் செய்தால், இந்த மாதிரி சூழ்நிலை, வாயுமண்டலம் இருந்தால் நான் செய்வேன் என்று அப்படியில்லை. மற்றவர்களின் உதவியைப் பெற்று தன்னுடைய நன்மைக்கான காரியம் செய்பவர் அதாவது பெற்று பிறகு கொடுப்பவர், உதவியைப் பெற்றார் பிறகு கொடுத்தார், பெறுவது மற்றும் கொடுப்பது சேர்ந்தே இருந்தது. ஆனால் சர்வம்ச தியாகி, அவரே மாஸ்டர் வள்ளல் ஆகி சூழ்நிலைகளையும் மாற்றம் செய்வதற்கு, பலகீனமானவரை சக்திசாலி ஆக்குவதற்கு, வாயுமண்டலம் மற்றும் உள் உணர்வை தன்னுடைய சக்திகள் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு எப்பொழுதும் தன்னை நன்மை செய்வதற்கு பொறுப்பாளர் என்று புரிந்து ஒவ்வொரு விஷயத்திலும் சகயோகம் மற்றும் சக்தியின் மகாதானம் மற்றும் வரதானம் கொடுப்பதற்கான எண்ணத்தை வைப்பார்கள். இது இருந்தால் இதைச் செய்வேன் என்றிருக்க மாட்டார்கள். மாஸ்டர் வள்ளல் ஆகி பரிவர்த்தனை செய்வதற்கு சுபபாவனையோடு சக்திகளை காரியத்தில் ஈடுபடுத்த அதாவது கொடுப்பதின் காரியத்தை செய்து கொண்டே இருப்பார்கள். நான் கொடுக்க வேண்டும், நான் செய்ய வேண்டும், நான் மாற வேண்டும், அப்படி முதலில் செய்பவர் அர்ஜுனன் அதாவது வள்ளல் தன்னைமயின் விசேஷம் இருக்கும்.



    சர்வம்ச தியாகி என்றால் எப்பொழுதும் குண சொரூபமானவர். குண சொரூபமானவரின் பொருள் குணம் நிறைந்தவராக ஆவது மற்றும் அனைவரிடமுமுள்ள குணத்தைப் பார்ப்பது. ஒருவேளை அவரே குண சொரூபமானவர் என்றால், அவருடைய பார்வை மற்றும் உள் உணர்வு அந்த மாதிரி குணம் நிரம்பியதாகி விடும். அதன் காரணமாக அவருடைய பார்வை, உள் உணர்வு அனைவரில் இருக்கும் குணம் தான் தென்படும். அவகுணத்தைப் பார்த்தாலும், புரிந்து கொண்டாலும், பிறருடைய அவகுணத்தை புத்தி மூலம் கிரகிக்க மாட்டார் அதாவது புத்தியில் வைக்க மாட்டார். அந்த மாதிரி புனித அன்னப் பறவையாக இருப்பார். கூழாங்கல் என்று தெரிந்தும் பொறுக்க மாட்டார். இன்னும் அதிகமாக அந்த ஆத்மாவின் அவ குணத்தை அகற்றுவதற்காக, அந்த ஆத்மாவையும் குணவானாக ஆக்குவதில் சகயோகியாக இருப்பார். ஏனென்றால் மாஸ்டர் வள்ளலின் சம்ஸ்காரம் இருக்கும்.



    சர்வம்ச தியாகி எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு சிரேஷ்ட காரியத்தின் சேவையின் வெற்றியின் காரியத்தில், பிராமண ஆத்மாக்களின் முன்னேற்றத்தின் காரியத்தில், பலஹீனமான மற்றும் வீணான சூழ்நிலையை சரி செய்யும் காரியத்தில் பொறுப்பான ஆத்மா என்று புரிந்து கொள்வார்கள். சேவையில் தடை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் சம்பந்தம் தொடர்பில் ஏதாவது வரிசைக்கிரமமான (பலஹீன) ஆத்மாக்களின் காரணமாக கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது என்றால், சர்வம்ச தியாகி தன்னை எல்லைக்குக்கப்பாற்பட்ட ஆதார மூர்த்தி என்று நினைத்து நாலா புறங்களிலுமுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணும் பொறுப்பு தன்னுடையது என்று நினைப்பார்கள். அந்த மாதிரி எல்லைக்கப்பாற்பட்ட முன்னேற்றத்தின் ஆதார மூர்த்தி என்று தன்னை நினைப்பார்கள் மற்றும் அனுபவம் செய்வார்கள். இதுவோ இந்த இடத்தின் விஷயம், இந்த சகோதரன், சகோதரியின் தனிப்பட்ட விஷயம் என்று நினைக்க மாட்டார். இது என்னுடைய குடும்பம். நான் நன்மை செய்யும் பொறுப்பிலிருக்கும் ஆத்மா. உலகிற்கு நன்மை செய்பவர் என்ற பட்டம் கிடைத்திருக்கிறதேயன்றி தனக்கு நன்மை செய்பவர் மற்றும் தன்னுடைய சென்டருக்கு நன்மை செய்பவர் என்றல்ல. மற்றவர்களின் பலவீனம் என்றால் தன்னுடைய குடும்பத்தின் பலவீனம் என்று அப்படி எல்லைக்கப்பாற்பட்ட பொறுப்புள்ள ஆத்மா என்று புரிந்து கொள்வார்கள். நான், எனது என்பது இல்லை. கருவியாக மட்டும் இருக்கிறேன் அதாவது உலக நன்மைக்கு ஆதார மூர்த்தி எல்லைக்கப்பாற்பட்ட காரியத்தின் ஆதார மூர்த்தி.



    சர்வம்சதியாகி எப்பொழுதும் ஒரு ரசனையில், ஒரு வழி, ஒரே குடும்பத்தின் காரியம் என்று அந்த மாதிரி எப்பொழுதும் ஒரே நினைவில், நம்பர் ஒன் ஆத்மாவாக இருப்பார்.



    சர்வம்சதியாகி எப்பொழுதும் தன்னை பிரத்யக்ஷ பலனின் பிராப்தியினை அடைந்த ஆத்மாவாக, பிராப்தியினை அடைந்த ஆத்மாவாக அனுபவம் செய்வார்கள். அதாவது சர்வம்ச தியாகி ஆத்மா எப்பொழுதும் அனைத்து பிரத்யக்ஷ் பலன்களால் (பழங்களால்) நிரம்பிய நெடிய மரத்திற்குச் சமமாக இருப்பார்கள். எப்பொழுதும் பலன் சொரூபமாக இருப்பார். எனவே எல்லைக்குட்பட்ட காரியத்தின், எல்லைக்குட்பட்ட பலன் அடைவதின் அற்பகால ஆசையிலிருந்து விடுபட்டு, ஆசையென்றால் என்னவென்று தெரியாத நிலையில் இருப்பார். எப்பொழுதும் பிரத்யக்க்ஷ பழத்தை அருந்தும் நிரந்தர ஆரோக்கியமானவராக இருப்பார். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார். எந்த விதமான மனதின் நோயும் இருக்காது. எப்பொழுதும் மன்மனாபவ ஆக இருப்பார். அந்த மாதிரி சர்வம்ச தியாகியாக ஆகியிருக்கிறீர்களா? மூன்று விசேஷங்களையும் எதிரில் வைத்து நான் எந்த மாதிரியான தியாகி என்று தன்னிடமே கேளுங்கள். எதுவரை வந்து சேர்ந்திருக்கிறேன்? எத்தனை படிகளை ஏறிவந்து தந்தைக்கு சமமான இலக்கை வந்தடைந்திருக்கிறேன்? முற்றுப்புள்ளி வரை வந்து சேர்ந்திருக்கிறீர்களா அல்லது இப்பொழுது சில புள்ளி வரை வந்து சேர்ந்திருக்கிறீர்களா? ஏழு பாடங்களில் எத்தனை பாடங்களைப் படித்திருக்கிறீர்கள்? ஏழு நாள் பாடங்களில் கடைசி நாள் பாடத்தில் போக் வைப்பது வருகிறது. எனவே இப்போது பாப்தாதாவும் போக் (நைவேத்யம்) வைக்கட்டுமா? நீங்கள் அனைவரும் ஒவ்வொரு குருவாரம் (வியாழக்கிழமை) அன்று போக் வைக்கிறீர்கள். ஆனால் பாப்தாதாவோ மகா போக் வைப்பார் இல்லையா? எப்படி சந்தேஷி சகோதரிகள் சூட்சும வதனத்திற்கு போக் எடுத்து வருகிறார்கள் என்றால், பாப்தாதா போக் எங்கே எடுத்துச் செல்வார்? முதலில் தன்னை போக்கில் சமர்ப்பணம் செய்யுங்கள். போக்கையும் தந்தையின் எதிரில் சமர்ப்பணம் செய்கிறீர்கள் இல்லையா? இப்பொழுது தன்னை எப்பொழுதும் பிரத்யக்க்ஷ பலன் சொரூபமாக்கி சமர்ப்பணம் செய்யுங்கள் அப்பொழுது தான் மகா போக் ஆகும். தன்னைத் தானே சம்பன்னமாக்கி அர்ப்பணம் செய்யுங்கள். ஸ்தூல போகை மட்டும் வைக்காதீர்கள். சம்பன்ன ஆத்மாவாகி தன்னை சமர்ப்பணம் செய்யுங்கள். புரிந்ததா - வேறு என்ன செய்ய வேண்டும் புரிநது கொண்டீர்களா?



    நல்லது. மற்றபடி இன்னும் ஒரு முறை சந்திப்பது இருக்கிறது. உடல் மூலமாக சந்திப்பதற்கு இந்த ரூபம், வடிவத்தில் சந்திப்பதற்கு இன்று கடைசி நேரம். நிகழ்ச்சிப்படியோ இன்று சாகார சந்திப்பிற்கான நிறைவு விழா. பிறகு நடக்கும் விஷயங்களைப் பிறகு பார்க்கலாம். அதிகப்படியான ஒரு தந்தையின் சுங்க வரியும் (லாபம்) கிடைத்து விடும். ஆனால் இந்த முழு சந்திப்பு மூலம் சார ரூபத்தில் நீங்கள் உங்களுக்காக என்ன அடைந்தீர்கள்? கேட்க மட்டும் செய்தீர்களா? அல்லது உள்ளே நிரப்பி சொரூபத்தில் கொண்டு வந்தீர்களா? இந்த சந்திப்பு கொண்டாட்டத்தின் சீஸன் எந்த சீஸனைக் கொண்டு வரும்? இந்த சீஸனின் பழமாக எது உருவாகும்? சீஸனின் பழத்திற்கு மகத்துவம் இருக்கிறது இல்லையா? அப்படி இந்த சீஸனின் பழமாக என்ன உருவானது? பாப்தாதா கிடைத்தார் அதுவோ இருந்தது, ஆனால் கிடைப்பது என்றால் சமமாக ஆவது. எனவே எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும் என்ற திட எண்ணத்தின் பழத்தை பாப்தாதாவிற்கு காண்பிப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி பழத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? தன்னை தயார் செய்திருக்கிறீர்களா? அல்லது இப்பொழுது கேட்க மட்டும் செய்தீர்கள், இன்னும் தயாராக வேண்டுமா? சந்திக்க மட்டும் வேண்டுமா? அல்லது சமமாக வேண்டுமா? எப்படி சந்திப்பதற்காக மிகவும் ஊக்கம் உற்சாகத்தோடு ஓடி ஓடி வந்து சேருகிறீர்கள், அதேபோல் (பாபா) சமமாக ஆக வேண்டும் என்பதற்காகவும் பறந்து வருகிறீர்களா? வந்து போகும் சாதனங்களால் சிரமத்தை அனுபவிக்கவில்லையே? ஆனால் பறக்கும் கலையில் செல்வதில் எந்தக் கஷ்டமும் கிடையாது. எல்லைக்குட்பட்ட கிளைகளை உருவாக்கி, கிளைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டீர்கள், ஹே, பறக்கும் பறவைகளே! கிளைகளை விடுங்கள். தங்கக் கிளைகளையும் விடுங்கள். சீதையை பொன் மான் தான் சோக வனத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த என்னுடைய, என்னுடையது, என்னுடைய பெயர், என்னுடைய மரியாதை, என்னுடைய மதிப்பு, என்னுடைய சென்டர் இவை அனைத்தும் தங்க கிளைகள். எல்லைக்கப்பாற்பட்ட அதிகாரத்தை விட்டுவிட்டு எல்லைக்குட்பட்ட அதிகாரத்தில் வந்து விடுகிறீர்கள். என்னுடைய அதிகாரம் இது, இது என்னுடைய காரியம் - இந்த அனைத்திலிருந்தும் பறக்கும் பறவை ஆகுங்கள். இந்த எல்லைக்குட்பட்ட ஆதாரங்களை விடுங்கள் என்று கதறிக் கொண்டிருக்கும் கிளியோ இல்லையே! நீங்கள்விடுவதில்லை, மேலும் விடுவியுங்கள்! என்று கதறுகிறீர்கள். அந்த மாதிரி கிளியாக ஆகாதீர்கள். விடுங்கள் மற்றும் பறங்கள். விட்டால் தானே விடுபடுவீர்கள் இல்லையா? பாப்தாதா இறக்கை கொடுத்து விட்டார். இறக்கைகளின் வேலை பறப்பதா அல்லது அமர்ந்திருப்பதா? எனவே பறக்கும் பறவை ஆகுங்கள். அதாவது பறக்கும் கலையில் எப்பொழுதும் பறந்து கொண்டே இருங்கள். புரிந்ததா? - இதைத் தான் சீஸனின் பழம் கொடுப்பது என்று கூறுவது நல்லது.



    அப்படி எப்பொழுதும் பித்யக்க்ஷ பலன் நிரம்பிய, சம்பூர்ண சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தந்தைக்கு சமமான நிராகாரி, நிர் அகங்காரி நிர்விகாரி ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்திலும் விகாரத்தின் அம்சத்தை தொடாத, அந்த மாதிரி சர்வம்ச தியாகி, எப்பொழுதும் பறக்கும் கலையில் பறக்கும் பறவைகளுக்கு, அந்த மாதிரி தந்தைக்கு சமமான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு:

    மாஸ்டர் சர்வ சக்திவானின் நிலை மூலம் வீணானவை என்ற குப்பையை அகற்றுங்கள். எப்பொழுதும் தன்னை மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மா என்று நினைக்கிறீர்களா? சர்வ சக்திவான் என்றால் சக்திசாலியானவர். யார் சக்திசாலியானவரோ அவர் வீணானவை என்ற குப்பையை அகற்றி விடுவார். மாஸ்டர் சர்வ சக்திவான் என்றால், வீணானவையின் பெயர் அடையாளம் இல்லாதவர். நான் வீணானவற்றை முடிக்கும் சக்திசாலியானவன் என்ற இலட்சியத்தை எப்பொழுதும் வையுங்கள். எப்படி சூரியனின் வேலை குப்பையை பஸ்மம் ஆக்குவது, இருளை அகற்றுவது, வெளிச்சம் கொடுப்பது. இதே முறையில் மாஸ்டர் ஞான சூரியன் என்றால் வீணானவை என்ற குப்பையை அகற்றுபவர், அதாவது இருளை அகற்றுபவர். ஒருவேளை பிரபாவத்தில் வந்து விடுகிறீர்கள் என்றால், பலகீனமானவர் ஆனீர்கள். தந்தை சர்வ சக்திவான் மற்றும் குழந்தைகள் பலகீனமானவர்கள் என்ற இதை கேட்பதற்ககே நன்றாக இல்லை. என்ன ஆனாலும் சரி, நான் மாஸ்டர் சர்வ சசக்திவான் என்ற நினைவு எப்பொழுதும் இருக்கட்டும். நான் தனியாக என்ன செய்ய முடியும் என்று அப்படி நினைக்காதீர்கள். ஒருவர் கூட அனேகர்களை மாற்ற முடியும். எனவே தானும் சக்திசாலி ஆகுங்கள். மேலும் மற்றவர்களையும் ஆக்குங்கள். எப்பொழுது ஒரு சிறிய தீபம் இருளை அகற்ற முடியும் என்றால், நீங்கள் என்ன செய்ய முடியாது? எனவே சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்ற இலட்சியத்தை எப்பொழுதும் வையுங்கள். உலகை மாற்றுபவர் ஆவதற்கு முன்பு சேவை நிலையத்தின் சூழ்நிலையை மாற்றம் செய்து சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்குங்கள்.



    தம்பதிகளுடன் பாப்தாதாவின் சந்திப்பு:

    அனைவரும் குடும்பத்தில் இருந்து கொண்டே குடும்பத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்டு மற்றும் எப்பொழுதும் தந்தைக்குப் பிரியமானவராக இருக்கிறீர்களா? ஏதாவது குடும்ப பந்தனத்தில் கட்டப்பட்டு இருக்க வில்லையே? சமுதாயத்தின் பந்தனத்தில், சம்பந்தத்தில் கட்டப்பட்டவரை பந்தனம் நிறைந்த ஆத்மா என்று கூறுவோம். எனவே எந்த பந்தனமும் இருக்க வேண்டாம். மனதின் பந்தனமும் இருக்க வேண்டாம். மனதில் எனக்கு குடும்ப உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் வரவே வேண்டாம். குடும்ப உறவில் இருந்து கொண்டே ஆன்மீக சம்பந்தத்தின் நினைவு இருக்க வேண்டும். ஏதோ காரணமாக குடும்ப சம்பந்ததில் இருக்கீறீர்கள். ஆனால் ஆன்மீக மற்றும் பரலோக சம்பந்தம் நினைவில் இருக்கட்டும். எப்பொழுதும் தாமரை மலர் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். தண்ணீர் மற்றும் சேற்றின் தொடர்பில் வந்தாலும் எப்பொழுதும் வலகியிருப்பவராகவும், அன்பானவராகவும் இருங்கள். சேவையின் காரணமாக தொடர்பில் இருக்கிறோம். தேகத்தின் சம்பந்தத்தில் இல்லை, சேவையின் சம்பந்தத்தில் இருக்கிறோம், குடும்பத்தில் உறவின் காரணமாக இருக்கவில்லை, சேவையின் காரணமாக இருக்கிறீர்கள். அது வீடு இல்லை. சேவை ஸ்தானம். சேவை ஸ்தானம் என்று புரிந்து கொள்வதினால் எப்பொழுதும் சேவையின் நினைவு இருக்கும். நல்லது.



    வரதானம்:

    விகாரங்கள் என்ற பாம்புகளை கழுத்தில் மாலை ஆக்கிவிடும் உண்மையான தபஸ்வி ஆகுக.



    இந்த விகாரங்கள் மனிதர்களை பொறுத்தவரை விஷம் நிறைந்த பாம்புகள். ஆனால் யோகி தபஸ்வி ஆத்மாக்கள் உங்களுக்கு அது கழுத்தின் மாலையாகி விடுகிறது. எனவே பிராமணர்கள் உங்களுடைய மற்றும் பிரம்மா பாபாவின் நினைவுச் சின்னமான அசரீரி தபஸ்வி சங்கர் சொரூபத்தில் பாம்பின் மாலையை கழுத்தில் காண்பித்திருக்கிறார்கள். உங்களுக்கோ பாம்பு குஷியில் நடனம் ஆடுவதற்கான மேடை ஆகிவிடுகிறது. இந்த அடிமையின் அடையாளத்தை காண்பித்திருக்கிறார்கள். ஆத்மாவின் நிலை தான் மேடை. எனவே விகாரங்களின் மீது எப்பொழுது இந்த அளவு வெற்றியடைவீர்களோ அப்பொழுது தான் உண்மையான தபஸ்வி என்று கூறுவோம்.



    சுலோகன்:

    பழைய உலகம் மற்றும் சம்ஸ்காரங்களிலிருந்து இறப்பது தான் உடலில் உயிரோடு இருந்து கொண்டே இறப்பது ஆகும்.



    ***OM SHANTI***