BK Murli 27 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 27 July 2017 Tamil

    27.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! தந்தையினுடையவராய் ஆனதன் மூலம் நீங்கள் சோழியளவு கூட செலவு கூட இல்லாமல் ஒரு வினாடியில் ஜீவன்முக்தியின் அதிகாரத்தை அடைகிறீர்கள், நிச்சயம் (நம்பிக்கை) உண்டானது, ஆஸ்தியும் கிடைத்தது.



    கேள்வி:

    கூர்மையான புத்தியுள்ள குழந்தைகளின் கடமை என்ன?



    பதில்:

    உண்மையான யாத்திரை செய்வது மற்றும் செய்விப்பது, இதுவே கூர்மையான புத்தியுள்ள குழந்தைகளின் கடமையாகும். உண்மையான யாத்திரை மன்மனாபவ என்பதாகும். இந்த யாத்திரையின் மூலம் மற்ற (அடி) கஷ்டங்களிலிருந்து தப்பித்து விடுவீர்கள். எப்படி தந்தை நன்மை செய்பவரோ அது போல கூர்மையான புத்தியுள்ள குழந்தைகள் தந்தைக்குச் சமமாக நன்மை செய்பவர்களாக இருப்பார்கள்.



    கேள்வி:

    தந்தை அனைவரின் காதுகளிலும் சொல்ல வேண்டிய எந்த ஒரு விசயத்தை சொல்கிறார்?



    பதில்:

    பாபா சொல்லியிருக்கிறார் - குழந்தைகளே நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள், எந்த தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. தேகதாரிகளை நினைவு செய்தீர்கள் என்றால் தேக அபிமானி ஆகிவிடுவீர்கள். ஆகையால் தேகதாரிகள் அனைவரும் இறந்து விட்டனர், நாம் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என எப்போதும் புரிந்து கொள்ளுங்கள், இந்த விஷயங்களையே அனைவரின் காதுகளிலும் கூறிக் கொண்டே இருங்கள்.



    பாடல்:

    அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்தேன். . .



    ஓம் சாந்தி.

    குழந்தைகளின் அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கு ஏதும் செலவு ஏற்படுகிறதா என்ன? தாய் தந்தையிடம் குழந்தை வந்தது, குழந்தைகளுக்கு ஆஸ்தியை அடைவதில் செலவு எதுவும் ஆனதா என்ன? பிறக்கும் போதே தந்தையின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. இன்னாரின் வாரிசு பிறந்திருக்கிறது என செய்தித்தாளில் கூட போடுகின்றனர் அல்லவா. குழந்தைக்கு செலவு எதுவும் ஆனதா என்ன? இல்லை. பிறவி எடுத்தது, அதற்கு செலவு எதுவும் ஆகவில்லை. சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர், ஆனால் குழந்தை இல்லை. தத்தெடுக்கின்றனர். இதற்கு குழந்தை செலவு செய்ததா என்ன? எதுவும் இல்லை. இங்கும் கூட ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என பாடப்படுகிறது. உலகினர் ஜீவன்முக்தியின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. உலகின் எஜமானாக ஜீவன்முக்தி தேவதைகள் இருந்தனர் என்பதை இப்போது அறிந்து கொண்டீர்கள். பாரதத்தில் தான் ஜீவன்முக்தி ஏற்படுகிறது. தந்தையினுடையவராக ஆவதில் ஏதாவது செலவு ஆகியதா? என இப்போது தந்தை கேட்கிறார். பாபா நான் உங்களுடையவன், அவ்வளவுதான். ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது என பாடவும் படுகிறது. தந்தையின் அறிமுகம் மட்டும் கிடைத்தது, அதற்காக யுக்திகளை கூறிக் கொண்டிருக்கிறார். பரலௌகிக பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன உறவு என சொல்லுங்கள். பரமபிதா. . . அவர் தந்தையாவார். என்னுடையவர்களாக ஆவதில் ஏதாவது செலவு ஆனதா? என பாபா கேட்கிறார். எதுவும் இல்லை. என்னுடையவர்களாக மட்டும் ஆகுங்கள், எந்த செலவும் கிடையாது. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி. செலவின் விசயமே என்பதே இல்லை. குழந்தை வந்தது, என்ன செலவு ஆனது? நீங்கள் தந்தையினுடையவர்களாக ஆகிறீர்கள், என்ன செலவு ஆனது? நான் ஆத்மா என்பது மட்டும் புத்தியில் நிச்சயம் ஏற்பட்டது. தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது என புரிந்து கொள்கிறோம். தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. நிச்சயத்தின் விசயம் அல்லவா. ஒரு பைசா கூட செலவு செய்யாதீர்கள். நினைவின் மூலமே நீங்கள் வைரத்திற்குச் சமமாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் ஜீவன் முக்தியை அடையலாம் என நாம் எழுதியும் போடுகிறோம். ஒரு சோழி கூட செலவாகாமல் உங்களுக்கு இராஜ்யம் கிடைத்து விடும். நீங்கள் எவ்வளவு அடி வாங்குகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் யாத்திரைகள் செல்வதன் மூலம் மனிதர்கள் நிறைய கஷ்டமடைகின்றனர். அதில் வழிகாட்டி களும் (கைடு) இருப்பார்கள், அல்லது யாராவது மத சம்மந்தப்பட்டவரும் நஷ்டமடைய வைப்பார். பணமும் நிறைய செலவு செய்கின்றனர். எதுவும் கிடைப்பதில்லை. தந்தை நிறையவே புரிய வைக்கிறார், ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் புத்தியில் பதியாது. ஏதாவது யுக்தி செய்து துன்பத்தில் இருப்பவர்களை மீட்க வேண்டும். வெறுமனே தந்தையின் முரளியை கேட்டு பிறகு சென்று சொல்வதில் பெரிய விசயம் ஏதுமில்லை. பிறருக்கு என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். இரயிலில் யாத்திரை போக செல்கிறீர்கள். என்ன யுக்தி செய்யலாம், யோசிக்க வேண்டும் பாபா சொல்லக் கூடிய யுக்தியை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. பிறருக்கு அன்புடன் புரிய வைக்க வேண்டும், பதீத-பாவனரான ஞானக்கடலுடன் உங்களுக்கு என்ன உறவு? பாபா, இந்த தொழிலில் நான் ஈடுபட்டுள்ளேன் என்று இதுவரை பாபாவுக்கு செய்தியை எழுதவில்லை. இன்ன இன்னாரிடம் கேட்டேன், அவர் என்ன சொல்கிறார் என எதையும் பாபாவுக்கு செய்தி கொடுப்பதில்லை. இந்த புதிரை விடுவித்து பாபாவிடமிருந்து நீங்கள் ஒரு வினாடியில் ஜீவன் முக்தி அடையலாம் என விளக்கமளியுங்கள். பாபா முதல் தரமான விஷயத்தை கூறுகிறார் - பிளாஸ்டிக்கினால் ஆன சிறிய கார்டு அச்சிடுங்கள். நல்ல போஸ்ட் கார்டு இருக்க வேண்டும், எங்கு வேண்டுமானாலும் அனுப்பும்படியாக இருக்க வேண்டும். தீர்த்த யாத்திரைகளில் ஏமாற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றனர். பிறவி பிறவிகளாக (அடி) ஏமாற்றம் துக்கம் அடைவதிலிருந்து விடுபட வேண்டுமாயின் இந்த புதிரை விடுவியுங்கள் என நீங்கள் எழுதிப் போடவும் முடியும். இந்த புதிரை விடுவிப்பதன் மூலம் ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை அடைய முடியும். பாபா வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கிறார். புத்திசாலியான குழந்தையாக இருந்தால் நல்ல விதமாக எழுதிக் கொண்டு வருவார் மற்றும் அச்சிட்டு அனுப்புவார். பெரிய நகரங்களில் வேலை எளிதாக முடியும். மிகவும் அழகான பிளாஸ்டிக் கார்டில் திரிமூர்த்தியின் படத்தைப் போடலாம், போடாமலும் இருக்கலாம். பாபா மிக நல்ல யுக்திகளை கூறுகிறார். ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது. இதனை வெறுமனே பாடியபடி இருக்கின்றனர், யாருக்கும் தெரியாது. அஷ்டாவக்ர கீதையில் இருக்கவே செய்கிறது, ஆனால் அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியாது. கட்டுக்கதைகள் ஆகும். நீங்கள் நடைமுறையில் புரிய வைப்பதற்காக அமர்ந்திருக்கிறீர்கள், வேறு யாருக்கும் அறிவில்லை. ஒரு இறைத்தந்தையே புத்திசாலியாக இருக்கிறார். மற்ற அனைவரையும் இராவணன் புத்தியற்றவர்களாக ஆக்கி விட்டான். தூய்மையானவர்கள் புத்திசாலிகள் எனவும் தூய்மையற்றவர்கள் புத்தியற்றவர்கள் எனவும் சொல்லப்படுகின்றனர். இந்த எல்லைக்கப்பாற்பட்ட விசயம் யாருக்கும் தெரியாது, இது மிகவும் சுலபமானதே ஆகும். ஆம் நம்முடைய தந்தை என மட்டும் சொல்வார்கள். தந்தையிடமிருந்து கண்டிப்பாக செலவின்றி குழந்தைக்கு ஆஸ்தி கிடைக்க வேண்டும். குழந்தை பிறக்கிறது மற்றும் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. லௌகிக தந்தையிடமிருந்து குழந்தைக்கு ஜீவன் பந்தனத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இந்த ஒரு தந்தைதான் பதித பாவனர் (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்) என சொல்லப்படுகிறார். இங்கே இருப்பதே இராவணனின் அசுர இராஜ்யம் ஆகும். இவர் இறைத்தந்தை ஆவார், சொர்க்கத்தின் இறைத்தந்தை என சொல்லவும் செய்கின்றனர் அல்லவா. ஆக அவரிடமிருந்தே சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும். புதிய உலகம் சொர்க்கம் என சொல்லப்படுகிறது. பழைய உலகத்தின் வினாசம் முன்னால் நின்றிருக்கிறது. எந்த அளவு நேரம் ஆகிக் கொண்டே போகுமோ அந்த அளவு மனிதர்களுக்கு வினாசம் பற்றிய நம்பிக்கை வந்தபடி இருக்கும். மனிதர்களுக்கு உள்ளத்திலும் (நம்பிக்கை) வரவும் செய்கிறது. நாளையே சண்டை மூளக்கூடும் என புரிந்து கொள்கின்றனர். மரணம் முன்னால் நின்றிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்கின்றனர். நாங்கள் பிரஜாபிதா பிரம்மா குமார், குமாரிகள் என நீங்களும் சொல்கிறீர்கள். சிவபாபாவின் குழந்தைகளாகத்தான் இருக்கிறோம், ஆஸ்திக்கு உரிமையாளர்களாக ஆகி விடுகின்றோம். தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யுங்கள். கார்டிலும் கூட இந்த வார்த்தைகளைப் போட வேண்டும். இந்த ஒரு புதிரை மட்டும் விடுவித்து விட்டால் ஒரு வினாடியில் ஒரு சோழி கூட செலவின்றி ஜீவன் முக்தி கிடைத்து விடும். தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்ய வேண்டும். அவ்வளவுதான் சொர்க்கத்தின் எஜமானாக ஆகிவிடுவீர்கள் அல்லவா. சொர்க்கத்தில் கூட வரிசைக்கிரமான பதவிகள் உள்ளன அல்லவா. நாம் என்ன செய்ய வேண்டும் என ஞானத்தின் மூலம் தாமாகவே புரிந்து கொள்வார்கள். இங்கே பணம் முதலானவற்றின் அவசியம் எதுவும் கிடையாது. தந்தை குழந்தைகளுக்கு எப்போதும் சொல்கிறார் – கேட்டு பெறுவதை விட இறப்பதே மேல். தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைந்து விட்டீர்கள், பிறகு ஏன் கேட்கிறீர்கள். தாய் தந்தை இருவருமே ஒரு ஆண் குழந்தை வாரிசாக இருக்கட்டும் என விரும்புகின்றனர். நீங்கள் இப்போது பாபாவின் குழந்தைகள் அல்லவா. அனைவருமே தந்தை என சொல்கிறீர்கள் அல்லவா. தந்தை ஆத்மாக்களுடன் பேசுகிறார். அட, நீங்கள் என்னுடைய ஆண் குழந்தைகள் (பையன்கள்) அல்லவா, பிறகு என்னையும் ஆஸ்தியையும் ஏன் நினவு செய்வதில்லை? இந்த பையன்களுடன் (ஆத்மாக்களுடன்) பேசுகிறேன் - பிரம்மாவின் உடல் மூலம். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். இல்லாவிட்டால் பிரம்மாவின் வீட்டிற்கு எப்படி வரமுடியும்? பிரம்மா குமார், குமாரிகளுக்கு தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. சொர்க்கத்தைப் படைப்பவர் பிரம்மா அல்ல. உங்களின் குரு பிரம்மா ஏதும் கிடையாது. சத்குரு ஒரே ஒருவர்தான். இந்த பிரம்மாவும் அவரிடம் கற்கிறார். கற்றுக் கொண்டு அவர் சென்றுவிட்டால் நாம் சிம்மாசனத்தில் அமர்வோம் என்பதல்ல. இல்லை, அப்படி நடக்காது, சத்குரு ஒரே ஒருவர்தான் ஆவார். நாம் அனைவரும் அவரிடம் கற்றுக் கொண்டு சத்கதியை அடைகிறோம். குழந்தைகள் நிறைய சேவை செய்ய முடியும். நிறைய வாய்ப்புகள் உள்ளன. கோவில்கள் முதலானவற்றிற்கும் சென்று இந்த கார்டு எடுத்துச் சென்று புரிய வைக்க முடியும். யாராவது காரியம் செய்து காட்டுங்களேன். பாபா சொல்லும் யுக்தி மிகவும் சுலபமாகும். பாபா சோதித்தபடி இருப்பார். பாபா இரயிலில் நாங்கள் 10-20 பேர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டோம் என எங்கிருந்து செய்தி வருகிறது பார்ப்போம். ஒருவரிடம் கேள்வி கேட்டால் 10 பேர் அதை கவனிப்பார்கள். வீட்டில் அமர்ந்து ஒருவருக்கு புரிய வைப்பது ஏதும் பெரிய விஷயம் அல்ல.



    தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். சிறிய குழந்தைக்கு புத்தியில் இருக்காது. இளைஞனாக ஆகும்போது புத்தியில் இருக்கும். உங்களுடைய கர்மேந்திரியங்கள் பெரியதாக உள்ளன. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறது. பாபா நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுக்கிறார். மனிதர்கள் பாவம் வெளியில் நிறைய துக்கம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களை எப்படி விடுவிக்கலாம்? இதில் நிறைய யுக்திகள் தேவை. பாபா நாங்கள் உங்களுடையவர்களாக ஆகி விட்டோம் என நிறைய பெண் குழந்தைகள் வீட்டில் அமர்ந்தபடி எழுதுகின்றனர். எப்போதும் பார்த்ததில்லை, சந்தித்ததும் இல்லை. பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என எழுதுகின்றனர். உங்களிடமிருந்து நான் ஆஸ்தியை பெற்றுக் கொண்டுதான் இருப்பேன். அடிகளையும் வாங்கியபடிதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகள் நிறைய பேருக்கும் முன்னால் செல்ல முடியும். நீங்கள் அடி வாங்குவதில்லை என்றாலும் இந்த சேவையை செய்வதில்லை. பாபா சொன்னதையும் கூட கேட்டும் கேளாதவராக ஆகி விடுகின்றனர். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் கார்டு அச்சிடலாம். வேலை செய்பவர்களின் புத்தி சிந்திக்க வேண்டும். பாபா எதுவும் அதிகமாக வேலை கொடுப்பதில்லை. அந்த உலகத்தின் அரசாங்கத்தினுடையது வினாசத்திற்காக எவ்வளவு பெரிய பஞ்சாயத்துகள் உள்ளன. உங்களிடம் அழிவற்ற பதவியை அடைவதற்கு எவ்வளவு நல்ல யுக்திகள் உள்ளன. பக்தி மார்க்கத்தில் நிறைய செலவு செய்கின்றனர், நீங்கள் பாருங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். எந்த செலவும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் நிறைய செலவுகள் ஆகின்றன, நீங்கள் ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை அடைகிறீர்கள். புத்திசாலி குழந்தைகள் பாபாவுக்கு கார்டு அச்சடித்து காட்டட்டும். நாம் எவ்வளவு சுலபமாக பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் எவ்வளவு துக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். எவ்வளவு பேர் பாதியிலேயே திரும்பி வருகின்றனர். ஏழைகள் பாவம் மிகவும் அலைகின்றனர். அவர்கள் மீது இரக்கம் ஏற்படுகிறது. நீங்கள் இறைத்தந்தையின் குழந்தைகள் எனும்போது நீங்கள் சொர்க்கத்தில் வர வேண்டும். இங்கே நீங்கள் நரகத்தில் ஏன் கிடக்கிறீர்கள்? இதனை யாராவது சொல்லக் கூடியவர்கள் தேவை. அல்லாவின் வீட்டிற்குச் செல்வதற்காக அல்லாவை நினைவு செய்யுங்கள் என நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். அங்கிருந்துதான் நீங்கள் வந்தீர்கள். இப்போது தந்தையை நினைவு செய்யுங்கள். ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை. கன்னியாஸ்திரீகளுக்குத்தான் புரிய வைக்க வேண்டியுள்ளது. நீங்கள் இறைவனை நினைவு செய்ய வேண்டும். சரீரம் விடுபடவே போகிறது. நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டும். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சிவபாபா சொல்கிறார். எந்த தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். தேகதாரிகள் அனைவரும் இறந்து விட்டனர். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். உலகத்திலோ ஒருவர் மற்றவரை துக்கம் மிக்கவராக ஆக்கியபடி இருக்கின்றனர். இங்கே ஒரு விஷயத்தை காதுகளில் கேட்கிறோம். மிகவும் சகஜமேயாகும். அல்லா மற்றும் ஆஸ்தி, தந்தை மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். மன்மனாபவ என்பதன் அர்த்தமே இதுவாகும். மற்றவை அனைத்தும் விரிவானவையாகும். தந்தை நன்மை செய்பவர் ஆவார். குழந்தைகள் கூட நன்மை செய்பவராக ஆக வேண்டும். குழந்தைகளும் கூட நிரூபித்துக் காட்ட வேண்டும். இன்று நாம் எவ்வளவு பேருக்கு நன்மை செய்தோம். நன்மை செய்வதற்காக சுற்றித் திரிய வேண்டும். தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காகவும் கூட அடிகள் வாங்க வேண்டியிருக்கிறது. நாம் அப்படிப்பட்ட யாத்திரையை கற்பிக்கிறோம், அதன் பின் வேறு யாத்திரைகள் எதுவும் செய்ய வேண்டியிருக்காது, மன்மனாபவ. யாத்திரை செய்பவர்களின் பின்னே சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மிகவும் கூர்மையான புத்தி தேவை. நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. வைரத்திற்குச் சமமாக ஆவதற்கான சாதனம் தந்தையின் நினைவு ஆகும். தந்தையின் நினைவின் மூலம் சோழி அளவு செலவும் இன்றி உலகின் இராஜ்யம் கிடைத்து விடும். ஆகையால் நிரந்தரமாக ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.



    2. இரப்பதை (கேட்பதை) விட இறப்பதே மேல் - தந்தையிடமிருந்து அனைத்துமே கிடைத்து விட்டது ஆகையால் (யாரிடமும்) கேட்கக் கூடாது. நன்மை செய்பவர் ஆகி அனைவருக்கும் உண்மையான வழி காட்ட வேண்டும்.



    வரதானம் :

    துக்கத்தின் உலகத்திலிருந்து விலகி விடக் கூடிய சுகதேவன், சுகத்தின் சொரூபம் ஆகுக.



    நீங்கள் சுகக் கடலின் குழந்தைகள் சுகத்தின் சொரூபம், சுக தேவர்கள் ஆவீர்கள். துக்கம் நிறைந்த உலகை விட்டு விட்டீர்கள், விலகி விட்டீர்கள் எனும்போது சங்கல்பத்திலும் கூட துக்கம் கொடுக்கக் கூடாது, துக்கத்தை எடுக்கக் கூடாது. ஒருவேளை ஒருவருடைய பேச்சு தன்னை வருத்த மூட்டுவதாக உணர்ந்தாலும் கூட இதற்கு துக்கத்தை எடுப்பது என்று தான் கூறப்படும். யாராவது அப்படி கொடுத்தாலும் அதை எடுப்பதும், விடுவதும் உங்களைச் சேர்ந்தது. யாராவது துக்கம் கொடுத்தார்கள் என்றால் நான் என்ன செய்வது என்று கூறாமல் எதை எடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என சோதித்துப் பாருங்கள். எடுப்பதிலும் எச்சரிக்கையுடன் இருந்து விட்டீர்கள் என்றால் சுக சொரூபமாகவும், சுக தேவனாகவும் ஆகி விடுவீர்கள்.



    சுலோகன் :

    ஒரு நிலையில் (ஸ்திதியில்) இருப்பதற்கான ஆதாரம் நினைவு ஆகும், ஆகையால் எப்போதும் குஷியின் நினைவு நிலையாக இருக்கட்டும்.





    ***OM SHANTI***