BK Murli 28 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 28 July 2017 Tamil

    28.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! 21 பிறவிகளுக்கு இராவணனின் சங்கிலியிருந்து விடுபட வேண்டுமெனில் தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், உங்களை அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவிப்பதற்காகவே தந்தை வருகின்றார்.



    கேள்வி:

    அதிக காலம் முயற்சி தேவைப்படுகின்ற அனைத்தையும் விட உயர்ந்த இலட்சியம் எது?



    பதில்:

    கடைசி காலத்தில் ஒரே ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த நினைவும் இருக்கக் கூடாது. இது மிக உயர்ந்த இலட்சியமாகும். ஒருவேளை மற்றவர்களது நினைவு வந்தால் இந்த உலகில் பிறக்க வேண்டியிருக்கும். ஆகையால் அதிக காலம் சிவபாபாவின் நினைவில் இருக்கக் கூடிய பயிற்சி செய்யுங்கள்.



    கேள்வி:

    சில குழந்தைகளின் மனநிலை நாளடைவில் ஏன் ஏற்ற இறக்கமாகி விடுகிறது?



    பதில்:

    ஏனெனில் உறுதியான நம்பிக்கை இல்லை. எப்போது நம்பிக்கையில் குறை வந்து விடுகிறதோ அப்போது அலை போன்று மனநிலையானது ஏற்ற இறக்கமாகி விடுகிறது. சில நேரங்களில் அதிக குஷியிருக்கும், சில நேரங்களில் குஷி மறைந்து விடும்.



    பாட்டு:

    கள்ளங்கபட மற்றவரின் மகிமை தனிப்பட்டது ........



    ஓம்சாந்தி.

    நாம் கள்ளங்கபடமற்றவரின் எதிரில் அமர்ந்திருக்கிறோம், மேலும் பிரம்மாவின் வாயின் மூலம் இந்த எளிய இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அனைத்து வேதங்கள், கிரந்தம், சாஸ்திரம், உபநிடதங்களின் சாரத்தை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இது குழந்தைகளின் புத்தியில் தான் அமர்ந்திருக்கிறது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்று சித்திரங்களிலும் இருக்கிறது. ஆக பிரம்மாவின் மூலம் தான் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறியிருக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு இவை அனைத்தையும் புரிய வைப்பது யார்? பரம்பிதா பரமாத்மா, கள்ளங்கபடமற்ற சிவன். அவர் நிராகாராக இருக்கின்றார், ஆகையால் ஒவ்வொரு விசயத்தையும் பிரம்மாவின் மூலம் புரிய வைக்கின்றார். யாருக்கு புரிய வைக்கின்றாரோ பிறகு அவர் மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றார். ஒருவேளை புரிய வைக்க முடியவில்லையெனில், அவர் சுயம் புரிந்து கொள்ளவில்லை அதாவது புத்தியற்றவர் ஆவார். புத்தியற்றவர்களுக்குத் தான் புரிய வைக்கப்படுகிறது. நீங்கள் புத்தியற்றவர்கள் என்று தந்தை அனைவரையும் கூறுகின்றார். தந்தையாகிய என்னை நீங்கள் அறிவீர்களா? பாரதவாசிகளாகிய நீங்கள் ஆஸ்தி அடைந்திருந்தீர்கள். சத்யுக சுவராஜ்ஜியம் இருந்தது, பிறகு இராவண இராஜ்யம் வந்ததும் நீங்கள் ஆஸ்தியை இழந்து விட்டீர்கள். இராவண இராஜ்யத்தின் காரணத்தினால் நீங்கள் பதீதமாக, புத்தியற்றவர்களாக, ஏழைகளாக ஆகிவிட்டீர்கள். அனைவரும் அசுர வழிப்படி தான் நடக்கின்றனர். கல்பத்திற்கு முன்பு தந்தை நம்மை புத்திசாலிகளாக ஆக்கியிருந்தார் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகியிருந்தோம், இப்போது நாம் மாயாவிற்கு அடிமைகளாக ஆகிவிட்டோம். செல்வத்திற்கு அடிமை கிடையாது, மாயை இராவணனுக்கு அடிமைகளாக ஆகி விட்டோம். 5 விகாரங்கள் என்ற சங்கிலியால் நாம் கட்டப்பட்டு இருக்கிறோம், மேலும் சோகவனத்தில் இருக்கிறோம். உண்மையில் முழு உலகிலும் இராவண இராஜ்யம் நடக்கிறது. முழு உலகமும் குறிப்பாக பாரதவாசிகள் அனைவரும் இராவணனின் சங்கிலியினால் கட்டப்பட்டு இருக்கின்றனர், ஆகையால் எது செய்தாலும் அது தவறாகவே இருக்கிறது. தந்தை வந்து அனைத்து சரியானவற்றைக் கூறுகின்றார், ஆகையால் பரம்பிதா பரமாத்மாவை தர்மம் நிறைந்தவர் என்று கூறலாம். இராவணனை அதர்மமானவர் என்று கூறலாம். அரை கல்பம் தர்மமான இராஜ்யம் நடைபெறுகிறது. அரை கல்பம் அதர்மத்தின் இராஜ்யம் நடைபெறுகிறது. இராவண இராஜ்யம் பொய்யான இராஜ்யம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிவீர்கள். ஞானக் கடலான பரம்பிதா பரமாத்மா சிவன் பிரம்மாவின் மூலம் நமக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். விநாடியில் ஜீவன் முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது. விநாடியில் ஜீவன் முக்தி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் அனைவரும் ஜீவன்பந்தனத்தில் இருக்கின்றனர், குறிப்பாக பாரதம். பாரதவாசிகள் தான் ஒரு விநாடியில் ஜீவன் முக்திக்கான ஆஸ்தி அடைகின்றனர். நாம் இப்போது பகவானுடையவர்களாக ஆகியிருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என்னுடைய குழந்தைகள் என்று சுயம் பகவான் கூறுகின்றார். ஈஸ்வரன் தான் புது உலகை ஸ்தாபனை செய்கின்றார் எனில், அவசியம் பழைய உலகில் தான் வர வேண்டியிருக்கும் என்பதை அறிவீர்கள். பழைய உலகம் பதீதமான, பிரஷ்டாச்சாரியான (அசுத்த) உலகம் என்று கூறப்படுகிறது. எனது ஜீவனுக்கு முக்தி கொடுங்கள், துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்ற அனைவரும் பகவானை அழைக்கின்றனர். துக்கமான இராஜ்யத்தை யார்? எப்போது ஸ்தாபனை செய்கின்றனர்? என்பதை மனிதர்கள் அறியவில்லை. சாஸ்திரங்கள் அதிகம் படித்திருக்கலாம். வித்வான்கள், பண்டிதர்கள் பலர் இருக்கின்றனர், அவர்களுக்கு அதிக கர்வமும் இருக்கிறது. ஆனால் யாராலும் விநாடியில் ஜீவன்முக்தி கொடுக்க முடியாது. நான் ஜீவன்முக்தி கொடுப்பேன் அல்லது அனைவருக்கும் சத்கதி கொடுப்பேன் என்று யாரும் கூறவும் முடியாது. முழு உலகம் குறிப்பாக பாரதத்தில் உள்ள அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறேன். பரம்பிதா பரமாத்மா அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார் என்றும் பாடப்பட்டிருக்கிறது. அனைவரையும் விடுவிக்கக் கூடியவர், துக்கத்திலிருந்து விடுவிக்கின்றார். சுகத்திலிருந்து யாரையாவது விடுவிப்பாரா என்ன? துக்கத்திலிருந்து தந்தை விடுவிக்கின்றார். சரி, சுகத்திலிருந்து விடுவிப்பது யார்? பாரதவாசிகள் சுகமானவர் களாக இருந்தனர் அல்லவா! பிறகு சுகத்திலிருந்து விடுவித்து துக்கத்திற்கு அழைத்து வந்தது யார்? சுகத்திலிருந்து விடுவிக்கக் கூடியவர் இராவணன். இப்போது இராமரின் ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு விடுபட்டு விடுகிறீர்கள். இது தான் ஜீவன்முக்தி அல்லது சத்கதி என்று கூறப்படுகிறது. குழந்தைகளின் புத்தியில் இப்போது அமர்ந்திருக்கிறது. உண்மையில் பாரதம் ஜீவன் முக்தியுடன் இருந்தது, அப்போது சுகதாமமாக இருந்தது. இப்போது பாரதம் சுகதாமமாக இருக்கிறது, ஜீவன்பந்தனத்தில் இருக்கிறது. எல்லையற்ற கேள்வி எழுந்து விடுகிறது. ஆக தந்தை அனைத்து எல்லையற்ற விசயங்களைத் தான் கூறுகின்றார், எல்லைக்குட்பட்ட மனிதர்கள் அறியவேயில்லை. சொர்க்கத்தையும் அறியவில்லை, நரகத்தையும் அறியவில்லை. அவர்கள் இவை அனைத்தும் கற்பனை என்று புரிந்து கொள்கின்றனர். யாரும் ஜீவன்முக்தி அடைந்து விட முடியாது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும், இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. முக்கியமானவர் சிவபாபா. அவரை படைப்பவர், டைரக்டர் என்றும் கூறுகின்றோம். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் பாகம் இருக்கிறது. ஜெகதம்பா, ஜெகத்பிதாவிற்கும் பாகம் இருக்கிறது. தேவி, தேவதைகளுக்கும் பாகம் இருக்கிறது. பிறகு இஸ்லாமியர் கள், பௌத்தர்கள் போன்ற அனைவரும் அவரவர்களுக்கான பாகத்தை நடிக்கின்றனர். அதே பாகத்தை மீண்டும் அனைவரும் நடிக்க வேண்டும். பிறகு நடிக்கும் பாகத்தில் ஒரே ஒரு தர்மம் ஏற்பட்டு விடும். மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கான நேரத்தில் தங்களது பாகத்தை திரும்பவும் நடிப்பார்கள்.



    இந்த நேரத்தில் மீண்டும் பிராமண குலம் ஏற்படுகிறது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் பிராமண குலம் ஸ்தாபனை ஆகிறது. அவர்கள் பிராமண குடும்பத்தினர் என்று கூறப்படுகின்றனர். கிறிஸ்துவின் மூலம் கிறிஸ்துவ குடும்பம் படைக்கப்பட்டது. பரம்பிதா பரமாத்மா பிரம்மாவையும் மற்றும் பிரம்மாவின் மூலம் பிராமண குடும்பத்தையும் படைத்திருக்கிறார் எனில், இவர்கள் அனைவரும் வாய்வழி வம்சத்தினர் ஆவர். விகார வம்சத்தினர்களாக இருக்க முடியாது. நீங்கள் தான் தாய், தந்தை ...... என்று கூறுகின்றனர் அல்லவா! ஆக இவர்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவர். இது தான் தத்தெடுத்தல் ஆகும். முதலில் பிரம்மாவை தத்தெடுக்கின்றார், பிறகு பிரம்மாவின் மூலம் பிராமண, பிராமணிகளாகிய நீங்கள் தத்தெடுக்கப்படுகிறீர்கள். நாம் சிவபாபாவின் பேரன்கள், பிரம்மாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல் குலம் ஒரு பிராமணர்களின் குலமாகும். மிகவும் உயர்ந்த குலமாகும். இப்போது தான் தத்தெடுக்கின்றார். பிறகு ஒருபோதும் இந்த தத்தெடுத்தல் நடைபெறுவது கிடையாது. சந்நியாசிகள் செய்கின்றனர். அவர்கள் தங்களது சீடர்களைத் தத்தெடுக்கின்றனர். நீங்கள் எங்களைப் பின்பற்றுவர்கள் என்று கூற முடியாது, எப்போது வீடு வாசல் விடுத்து காவி உடை அணிந்து கொள்வீர்களோ அப்போது தான் சீடர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். இங்கு நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் உண்மையான, எளிய இதே இராஜயோகத்தை அணைவருக்கும் கூற வேண்டும். ஏதாவது புரிய வைக்க வேண்டும். ஒரு விநாடியில் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து அவசியம் முக்தி, ஜீவன்முக்திக்கான ஆஸ்தி தான் கிடைக்கும். சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை சிவன், அவரை நினைப்பதன் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். லௌகீகத் தந்தையை நினைப்பதால் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடமாட்டீர்கள். வீட்டிலேயே இருங்கள், ஆனால் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். நான் ஆத்மா, சிவபாபாவின் குழந்தை, இதே நம்பிக்கையில் இருக்க வேண்டும்.



    முழு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மனநிலையில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. பாதரஸம் இருக்கிறது அல்லவா! சில நேரங்களில் குஷியின் அளவு அதிகரிக்கிறது. சில நேரங்களில் மறந்து விடுகிறீர்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும், பிறகு வந்து புது சரீரம் எடுப்பீர்கள் என்று தந்தை கூறுகின்றார். நாம் மறுபிறவி எடுத்து வந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாம்பிற்கு மறுபிறவி என்ற விசயம் கிடையாது. அது ஒரு பழைய ஆடையை விடுத்து மற்றொரு புதியதை எடுத்துக் கொள்கிறது. அதே போன்று நீங்களும் மாற்ற வேண்டும். மனிதர்களுக்கு வயதாகி விடும் போது இப்போது செல்ல வேண்டும் என்று கூறுவர். உடனேயே சாட்சாத்காரம் ஏற்படுகிறது. நான் இப்போது குழந்தையாக ஆகப் போகிறேன். நான் இப்போது சரீரத்தை விடுத்து குழந்தையாக ஆவேன், பிறகு சதோ பிரதான சரீரம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். பழைய சரீரம் இற்றுப் போனது என்று கூறப்படுகிறது. உலகமும் முதலில் புதியதாக இருந்தது, பிறகு கலைகள் குறைய ஆரம்பிக்கிறது. ஆகையால் 4 பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. கல்பத்தின் ஆயுள் மிகப் பெரியது,. கல்பத்தில் 84 லட்சம் பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறுகின்றனர். நீங்கள் கல்பத்தை சிறியதாக ஆக்கி விட்டீர்கள். எவ்வளவு துக்கம் இருக்கிறது பாருங்கள்! ஆயுள் லட்சம் ஆண்டுகள் என்று இருப்பதால் 84 லட்சம் பிறவிகள் இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. மாணவர்கள் ஒருபோதும் ஆசிரியரை மறக்க மாட்டார்கள். நாம் ஈஸ்வரிய வகுப்பில் படிப்பதற்காக வந்திருக்கிறோம் என்பதை நீங்களும் அறிவீர்கள். அனைத்து சென்டர்களிலும் இருப்பவர்கள் முரளி கேட்கின்றனர். கற்பிக்கக் கூடியவர் ஒரு ஞானக் கடலானவர் ஆவார். அவர் தான் ஞானக் கடல், பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் என்று கூறப்படுகின்றார். அனைவருக்கும் என்றால் பாரதம் மற்றும் அனைத்து கண்டங்களும் வந்து விடுகிறது. நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள், நீங்கள் ஈஸ்வரனின் மூலம் எந்த அளவிற்கு படிப்பீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். படிப்பும் மிக எளிதானது, இரண்டு வார்த்தை நினைவு செய்ய வேண்டும், அவ்வளவு தான். பரம்பிதா பரமாத்மாவாகிய எல்லையற்ற தந்தையை நினைவு செய்தால் உங்களுக்கு சொர்கத்தில் எல்லையற்ற சுகம் கிடைக்கும் என்று நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் கூற முடியும். ஒரு தந்தையை நினைவு செய்தால் போதும். கடைசி காலத்தில் வேறு யாருடைய நினைவு வந்தால், கடைசி காலத்தில் மனைவியின் நினைவு வந்தால் ....... அந்த நிலையிலேயே பிறப்பு எடுப்பீர்கள். இலட்சியம் மிகவும் உயர்ந்தது என்று தந்தை கூறுகின்றார். எச்சரிக்கையுடன் ஏணியில் ஏற வேண்டும். ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும். சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! இந்த குருக்களையும் தாய்மார்களாகிய உங்கள் மூலம் நான் தான் முன்னேற்ற வேண்டும். மாதா (தாய்மார்கள்) குருவின்றி யாருக்கும் முன்னேற்றம் ஏற்படாது. தாய்மார்கள் தான் நிமித்தமானவர்களாக ஆக்கப்படுகின்றனர். ஜெகதம்பா முக்கியமானவர் ஆவார். அவர் பாருங்கள் எவ்வளவு பிரபாவமானவராக இருக்கின்றார்! பிரம்மாவிற்கு அந்த அளவிற்கு கிடையாது. புஷ்கரில் ஒரு கோயில் இருக்கிறது, அவ்வளவு தான். அங்கு குறிப்பாக ஆண்கள் மட்டுமே செல்கின்றனர். அம்பாவிற்கு அதிக மரியாதை இருக்கிறது. அங்கு இங்கு என்று தேவிகளின் கோயில்கள் அதிக திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குருக்களின் வழிப்படி நடந்து நடந்து அதிக ஏமாற்றம் அடைந்தீர்கள். என்ன நன்மை கிடைத்தது? எதுவும் கிடையாது. கீழிறங்கும் கலை ஏற்பட்டதால் பாரதம் பதீதமாக ஆகியே தீர வேண்டும். திரும்பி யாரும் செல்ல முடியாது. மனிதர்கள் அனைவரும் பதீதமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இற்றுப் போன நிலையில் இருக்கின்றனர். இதில் அனைவரும் வந்து விடுகின்றனர். இந்த உலகில் மனிதர்களுக்கு எவ்வளவு துக்கம் இருக்கிறது! ஒவ்வொரு அடியிலும் துக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



    வெளியில் முற்றிலும் புத்தியற்றவர்களாக இருக்கின்றனர், தந்தையை அறியவேயில்லை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தாயும் நீயே, தந்தையும் நீயே ...... என்று கூறவும் செய்கின்றனர். அவர் அவசியம் சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். யார் இங்கே வாழ்ந்து சென்றிருக்கிறார்களோ, அவர்களை பிறகு மகிமை பாடுகின்றனர். மீண்டும் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். எப்போது சொர்க்கமாக இருந்ததோ அப்போது வேறு யாரும் கிடையாது. இப்போது மற்ற அனைவரும் இருக்கின்றனர், ஆனால் இந்த தர்மம் கிடையாது, அஸ்திவாரம் கிடையாது. எந்த ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்ததோ அது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அரை கல்பத்திற்குப் பிறகு வேறு எந்த தர்மமும் இருக்காது, ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருக்கும். அரை கல்பத்திற்கு சூரியவம்சம், சந்திரவம்சத்தின் சுய இராஜ்யம் இருக்கும். இது உங்களது ஈஸ்வரிய பிறப்புரிமை ஆகும். நாம் நமது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இராஜ்யம் செய்வதற்கு தகுதியானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். அவரே நமக்கு கற்பிக்கின்றார், தகுதியானவர்களாக ஆக்குகின்றார். பக்கா ஆக்குவதற்காகத் தினம் தினம் புரிய வைக்கின்றார். மாயை உங்களை நினைவு செய்ய விடாது, நீங்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் முயற்சி செய்யுங்கள், பாபாவை நினைவு செய்வதற்கு யுத்தம் நடைபெறுகிறது அல்லவா! என்ன செய்ய வேண்டும் என்ற வழியை தந்தை வந்து கூறுகின்றார், நீங்கள் கர்மயோகிகளாகவும் இருக்கிறீர்கள். ஆம், குழந்தைகளும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவர், கொடூரமான நரகம் அல்லவா! துக்கம் கொடுக்கக் கூடிய குழந்தைகள். அங்கு சுகம் கொடுக்கும் குழந்தைகள் இருப்பர். ஏனெனில் சுகதாமம் அல்லவா! அங்கு துக்கம் அல்லது அசுத்தம் ஏற்படுத்தும் பொருட்கள் எதுவும் இருக்காது. இங்கு எவ்வளவு துக்கம் இருக்கிறது! எவ்வளவு அசுத்த வியாதிகளும் உருவாகின்றன! முன்பு எதுவும் கிடையாது. கேன்சர் வியாதியின் பெயரும் கேள்விபட வேயில்லை. சொர்க்கத்தில் யாரும் வியாதியஸ்தர்களாக ஆகவேமாட்டார்கள். எப்போது அசுர இராஜ்யம் ஆரம்ப மாகுமோ அப்போது இந்த அசுத்த வியாதிகள் ஆரம்பமாகின்றன. அவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சொர்க்கத்தில் எவ்வளவு அழகான பசுக்கள் இருக்கும்! கிருஷ்ணரிடத்தில் இப்படிப்பட்ட அழகான பசுக்கள் இருந்தன என்று கூறுகின்றனர். ஆக அவரையும் பசுக்களை மேய்ப்பவராக ஆக்கி விட்டனர். கிருஷ்ணர் பசுக்களை மேய்பவர் அல்ல. சிவபாபா இந்த சைத்தன்ய மனிதப் பசுக்களை மேய்த்தார் என்று நீங்கள் கூறுவீர்கள். ஞான உருண்டையை ஊட்டுகின்றார். ஞான கலசத்தை தாய்மார்களின் மீது வைத்திருக்கின்றார். நான் என்ன கூறுகின்றேனோ அதைக் கேளுங்கள் என்று பாபா கூறுகின்றார். முதல் விசயம் மன்மனாபவ. என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் அழிந்து விடும். இது மிகவும் எளிய வழியாகும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) தந்தையின் ஸ்ரீமத் படி அனைவரையும் இராவணனின் சங்கிலியிருந்து விடுவித்து ஜீவன் முக்திக்கான ஆஸ்தி கொடுக்கும் சேவை செய்ய வேண்டும்.



    2) ஒரே தந்தை கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும். மற்றபடி என்ன கேட்டீர்களோ அதை மறந்து விட வேண்டும். இலட்சியம் உயர்ந்தது, ஆகையால் ஒருவரையொருவர் எச்சரிக்கை செய்து தந்தையின் நினைவை ஏற்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும்.



    வரதானம்:

    ஆர்வம், உற்சாகத்தின் ஆதாரத்தில் சதா பறக்கும் கலையின் அனுபவம் செய்யக் கூடிய தைரியசாலி ஆகுக.



    பறக்கும் கலையின் அனுபவம் செய்வதற்காக தைரியம் மற்றும் ஆர்வம், உற்சாகம் என்ற சிறகு தேவை. எந்த ஒரு காரியத்திற்கும் வெற்றியைப் பலனாக அடைவதற்கு ஆர்வம், உற்சாகம் மிகவும் அவசியமாகும். ஒருவேளை ஆர்வம், உற்சாகம் இல்லையெனில் காரியத்தில் வெற்றி கிடைக்காது. ஏனெனில் ஆர்வம், உற்சாகம் இல்லையெனில் களைப்பு ஏற்படும், மேலும் களைப்படைந்தவர்கள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆகையால் தைரியசாலியாகி ஆர்வம் மற்றும் உற்சாகத்தின் ஆதாரத்தில் பறந்து கொண்டே இருந்தால் இலட்சியதை அடைந்து விடுவீர்கள்.



    சுலோகன்:

    ஆசீர்வாதம் கொடுங்கள் மற்றும் ஆசீர்வாதம் அடையுங்கள் - இது தான் உயர்ந்த முயற்சி ஆகும்.



    ***OM SHANTI***