BK Murli 30 September 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 30 September 2017 Tamil

    30.09.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! தங்களுக்குள் ஒன்று சேர்ந்து இந்தக் கலியுக உலகத்திலிருந்து துக்கத்தின் கூரையை எடுத்து விட வேண்டும். தந்தையை நினைவு செய்வதற்கான புண்ணிய காரியம் செய்ய வேண்டும்.



    கேள்வி:

    ஞானத்தின் அழிவற்ற பிராப்தி கிடைத்திருந்தபோதிலும் கூட சில குழந்தைகளுடைய புண்ணியக் கணக்கு சேமிப்பு ஆகுவதற்குப் பதிலாக ஏன் அழிந்து போகிறது?



    பதில்:-

    1. ஏனெனில், புண்ணிய காரியம் செய்து கொண்டிருக்கும் பொழுதே இடையில் பாவம் செய்துவிடுகின்றனர். ஞானசொரூப ஆத்மா என்று தன்னை கூறிக்கொண்டு தீய தொடர்பில் வந்து ஏதாவது பாவம் செய்தால் அந்த பாவத்தின் காரணத்தினால் செய்த புண்ணியம் அழிந்து போய்விடுகிறது. 2. தந்தையினுடையவர் ஆனபிறகு காமவிகாரத்தின் அடி வாங்கினால், தந்தையின் கையை விட்டுவிட்டால், அவர்கள் முன்பு இருந்ததை விட அதிக பாவ ஆத்மா ஆகிவிடுகிறார்கள். அவர்களை குலத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மிகுந்த கடுமையான தண்டனைக்கு உரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். சத்குருவிற்கு நிந்தனை ஏற்படுத்திய காரணத்தினால் அவர்களுக்கு பதவி கிடைக்காது.



    ஓம்சாந்தி.

    ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுடன் உரையாடல் செய்துகொண்டு இருக்கின்றார். ஒருவர் மட்டுமே நம்முடைய எல்லையற்ற தந்தை ஆவார் என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது, அதைக் குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள். முக்தி, ஜீவன்முக்தியை அடைவதே இலட்சியம் ஆகும். முக்திக்காக நினைவு யாத்திரை அவசியம் ஆகும். மேலும், ஜீவன்முக்திக்காக படைப்பின் முதல், இடை மற்றும் கடை நிலையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இப்பொழுது இரண்டுமே எளிதாகும். சிருஷ்டியினுடைய, 84 பிறவிகளுடைய சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. இது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும். இப்பொழுது நம்முடைய 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைகிறது. இப்பொழுது நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இப்பொழுது யாரும் திரும்பிச் செல்ல முடியாது, ஏனெனில், பாவ ஆத்மாக்களாக உள்ளனர். பாவ ஆத்மாக்கள் முக்தி, ஜீவன்முக்திக்குச் செல்ல முடியாது. இவ்வாறு சிந்தனை செய்ய வேண்டும். யார் செய்வார்களோ அவர்கள் அடைவார்கள் மற்றும் குஷியில் இருப்பார்கள் மற்றும் பிறரையும் குஷியில் ஆழ்த்துவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் வழி காண்பிப்பதற்கான கருணை மற்றும் இரக்கம் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய ஆத்மா சதோபிரதானத்திலிருந்து இப்பொழுது தமோபிரதானம் ஆகிவிட்டது, ஆகையால், வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதைப் புரியவைக்க வேண்டும். ஹே! பதீத பாவனரே என்று அழைக்கவும் செய்கின்றனர். இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். இது கூட சிலருக்கு நல்ல முறையில் நினைவு இருக்கிறது, சிலருக்கு நினைவு இருப்பதில்லை. அடிக்கடி மறந்துபோகிறது. ஆனால், உங்களுக்கு ஒருவேளை சங்கமயுகத்தின் நினைவு இருந்ததென்றால் கூட குஷி எல்லை கடந்து இருக்கும். தந்தை, டீச்சர் நினைவு இருந்தால் கூட குஷி எல்லை கடந்து இருக்கும். சிலருக்கு பெரிய தடை இடையில் வருகிறது, சிலருக்கு கொஞ்சம் வருகிறது. ஆனால், அவசியம் வருகிறது. சிலர் மேலே சென்று பிறகு கீழே வந்துவிடுகின்றனர். சிலருடைய நிலை நன்றாக இருக்கிறது என்றால், உள்ளத்தில் (பாபாவின்) இடம் பிடித்துவிடுகின்றனர். பிறகு, கீழே விழுந்துவிடுகிறார்கள் என்றால், சேமித்த வருமானம் அழிந்துவிடுகிறது. புண்ணிய ஆத்மா ஆவதற்காக உலகத்தில் எவ்வளவு தானம், புண்ணியம் செய்கின்றனர். பிறகு, ஒருவேளை புண்ணியம் செய்யும்பொழுதே பாவ கர்மம் செய்வதில் ஈடுபட்டுவிட்டால் பாவ ஆத்மா ஆகிவிடுகின்றனர். தந்தையை நினைவு செய்வதில் தான் உங்களுடைய புண்ணியம் அடங்கியுள்ளது. நினைவின் மூலம் தான் உங்களுடைய ஆத்மா புண்ணிய ஆத்மா ஆகிறது. எனவே, ஒருவேளை தந்தையையே மறந்துவிட்டால், பிறருடைய தொடர்பில் சென்று மிகுந்த பாவம் செய்வதனால் என்னவெல்லாம் புண்ணியம் செய்திருக்கிறார்களோ அவை அனைத்தும் அழிந்து போய்விடுகிறது. இன்று தானம், புண்ணியம் செய்கின்றனர், சென்டர் திறக்கின்றனர், நாளை பிறகு முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது முன்பைவிட அதிகமாக கீழே விழுந்துவிடுகின்றனர். ஏனெனில், பாவம் செய்கின்றனர் அல்லவா ! எனவே, கணக்கு சேமிப்பு ஆகுவதற்குப் பதிலாக அழிந்து போய்விடுகிறது. முதலில் மிகவும் நன்றாக சேவை செய்தார்கள், கேட்கவே வேண்டாம். பிறகு, ஒரேயடியாக கீழே விடுந்துவிடுகின்றனர். திருமணம் செய்து கொள்கின்றனர். முன்பை விட அதிகமாக கெட்டுப் போய்விடுகின்றனர். பாவம் செய்வதனால் பிறகு, அந்த பாவத்தின் சுமை ஏறிவிடுகிறது. சேமித்தார்கள், கூடவே ஒன்றுமே இல்லை என்கிற மாதிரி இழந்தும் விட்டார்கள். வருமானம் (குறையாமல்) பாதுகாக்கப்பட வேண்டியது அல்லவா ! ஆனால், இந்த விசயங்களைக் கூட புரிந்துகொள்ளக் கூடியவர்களே புரிந்துகொள்வார்கள். பாவம் கூட சில (தவறு) இலேசானதாகவும், சில பெரியதாகவும் இருக்கிறது. காமத்தினுடையது அனைத்தையும் விட கடுமையானது, இரண்டாவது கோபம், பேராசை அதைவிடக் குறைவானது, மோகம் அதை விடக் குறைவானது. வரிசைக்கிரமமாக உள்ளது. காமத்தின் அடி வாங்குவதனால் .இலாபத்திற்குப் பதில் நஷ்டம் ஏற்படுகிறது. ஏனெனில், சத்குருவிற்கு நிந்தனை செய்விப்பதால் உயர் பதவி அடைய முடியாது. அவர்கள் (பாபாவின்) உள்ளத்திலிருந்து இறங்கிவிடுவார்கள். தந்தையினுடையவர் ஆனபிறகு தந்தையை விட்டுவிடுகின்றனர். பிறகு, அதனுடைய வெளிப்பாடு கர்மத்திலும் ஏற்படுகிறது. காரணம் என்ன? இதன்படி (தந்தை சொல்படி) நடக்க முடியவில்லை. அதிகமாக காமத்தின் அடி விழுகிறது. இதுவே முக்கிய எதிரி ஆகும். கோபத்தின் கொடும்பாவி (உருவம்) எரிக்கப்பட்டது என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமத்தின் கொடும்பாவியை உருவாக்குகிறார்கள். இராவணன் இருக்கிறான் அல்லவா? காமத்தின் மீது வெற்றி அடைவதின் மூலம் உலகத்தை வென்றவர்கள் ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். முற்றிலும் தோல்வி அடைந்து அமர்ந்திருக்கிறீர்கள். வெற்றிக்குப் பதிலாக தோல்வி கிடைக்கிறது. ஹே!! பதீத பாவனரே ! வாருங்கள் என்று தந்தையை அழைக்கின்றனர். காமத்தினால் மிகவும் துன்பப்படுகின்றனர். பிறகு, பாபா முகத்தைக் கறுப்பாக்கிவிட்டேன் என்று கூறுகின்றனர். நீங்கள் குலத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்று பாபா கூறிவிடுவார். கோபம் மற்றும் மோகத்திற்காக அவ்வாறு கூறுவதில்லை. காமமே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. ஹே! பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்கின்றனர். தந்தை வந்திருக்கின்றார், ஆனாலும், பதீதம் ஆகிக்கொண்டே இருந்தால் தந்தை என்ன சொல்வார்? சாது, சந்நியாசி போன்ற அனைவரும் ஹே! பதீத பாவனரே! வாருங்கள் என்று அழைக்கின்றனர். எவரும் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ஆம், அவர் வரப்போகிறார், அவர் புது உலகத்தை ஸ்தாபனை செய்வார் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், சமயத்தை மிகவும் நீண்டதாகக் காண்பித்துவிட்டதனால் காரிருளில் (அறியாமை) கீழே விழுந்துவிட்டனர். ஞானம் மற்றும் அஞ்ஞானம் என்று உள்ளது அல்லவா?



    பக்தியில் நீங்கள் யாருடைய பூஜை செய்கிறீர்களோ அவர்களை அறிந்துகொள்ளவில்லை என்றால், அந்த பக்தியினால் என்ன பயன்? என்று தந்தை புரியவைக்கின்றார். அறிந்துகொள்ளாத காரணத்தினால் என்ன செயல் புரிந்தாலும் அது பலனற்றதாக ஆகிவிடுகிறது. தானம், புண்ணியம் செய்வதனால் பலன் கிடைக்கிறது என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால், அது அல்ப காலத்திற்கான, காக்கை எச்சத்திற்குச் சமமான சுகம் ஆகும். இந்த உலகத்தில் என்ன சுகம் கிடைக்கிறதோ அது காக்கை எச்சத்திற்குச் சமமானது என்று சந்நியாசிகள் கூட கூறுகின்றனர். மற்ற அனைத்தும் துக்கமே துக்கமாக உள்ளது. என் ஒருவரை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய அனைத்து துக்கமும் தூரம் சென்றுவிடும் என்று தந்தை கூறுகின்றார். நாம் எவ்வளவு நினைவு செய்கின்றோம்? என்று சிந்தனை செய்யுங்கள். பழைய கணக்கு முடிவடையவும் வேண்டும் மற்றும் புதியது சேமிப்பு ஆகவும் வேண்டும். ஒருவர் எவ்வளவு சேமிக்கின்றனர்? இதில் பணம் போன்றவற்றின் விசயம் கிடையாது. இங்கே இருப்பதோ - பாவத்தை எவ்வாறு அழிப்பது? என்ற விசயமாகும். தூய்மை ஆவதற்கான விசயமே மூல விசயமாகும். பாபாவிற்கு எழுதிக் கொடுத்துவிடுவதனால் ஜென்ம ஜென்மங்களாக செய்த பாவம் அழிந்துவிடும் என்று நினைக்காதீர்கள். பல பிறவிகளின் சுமை அதிகமாக உள்ளது. அவை அனைத்தும் அழிவதில்லை. இந்த ஜென்மத்தில் என்ன செய்திருக்கிறோமோ அது இலேசாகிவிடுகிறது. மற்றபடி, அதிகமாக உழைக்க வேண்டியதாக உள்ளது. எந்தளவு நினைவில் இருப்பீர்களோ அந்தளவு பாவங்களின் சுமை இலேசாகிவிடுகிறது. சில குழந்தைகள் மிகவும் உழைக்கின்றனர், இலட்சக்கணக்கானோருக்கு வழி சொல்லுங்கள். 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரியவைக்கின்றார். பிறவிகளின் கணக்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எவ்வளவு யோக பலம் உள்ளது, நம்முடைய பிறப்பு எப்பொழுது ஏற்படும்? என்பதை சிந்தனை செய்யுங்கள். சத்யுகத்தின் ஆதியில் பிறப்பெடுக்க முடியுமா? யார் அதிக முயற்சி செய்வார்களோ, அவர்களே சத்யுகத்தின் ஆதியில் பிறப்பெடுக்க முடியும். அவர்கள் மறைந்திருக்க முடியாது. அனைவரும் சத்யுகத்திற்கு வந்துவிடுவார்கள் என்று நினைக்காதீர்கள். சிலர் கடைசியில் வந்து சில பிறவிகள் எடுக்கிறார்கள். யார் அதிக வருமானம் செய்கிறார்களோ, அவர்கள் சீக்கிரமாக (சத்யுத்தின் துவக்கத்தில்) வருகிறார்கள். குறைந்த வருமானம் செய்கிறார்கள் எனில், தாமதமாக வருவார்கள். எனவே, தந்தையை அதிகமாக நினைவு செய்ய வேண்டும் மேலும், அது மிகவும் எளிதானதாகும். யார் நல்ல முறையில் நினைவு செய்வார்களோ, அவர்களுக்கு நாம்  சீக்கிரமாக புது உலகத்திற்கு வரப்போகிறோம் என்ற குஷி இருக்கும். இராஜா ஆக வேண்டும் என்றால், பிரஜைகளையும் உருவாக்க வேண்டும் அல்லவா? பிரஜைகளையே உருவாக்கவில்லை என்றால் இராஜா எவ்வாறு ஆவீர்கள்? சிலர் சென்டர் திறக்கின்றனர். அவர்களுக்கு வருமானம் கூட அதிகமாகக் கிடைக்கின்றது. இலாபம் கிடைக்கிறது எனில் 2, 3 சென்டர்கள் கூட திறக்கின்றனர். பாபாவும் சென்டர் திறந்து கொண்டே இருக்கின்றார். யார் செய்கின்றார்களோ அவர்களுடைய கணக்கு அதில் வந்துவிடுகிறது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து துக்கத்தின் கூரையை அகற்றிவிடுகிறீர்கள். அனைவருடைய தோளும் (உதவி) கிடைக்கிறது அல்லவா? எனவே, கணக்கும் அனைவருக்கும் கிடைக்கிறது. எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும். அவர்களுக்கு குஷியும் மிகுதியாகக் கிடைக்கும். எத்தனை பேரை முன்னேற்றினார்கள் என்று பார்க்கப்படுகிறது. சேவை மிகவும் நன்றாகச் செய்து கொண்டே இருக்கின்றனர். மம்மாவின் உதாரணம் கொடுக்கப்படுகின்றது. மம்மா மிகவும் நன்றாக சேவை செய்தார்கள். எனவே, அவர்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்பட்டுவிட்டது! சேவை செய்வதே அனைத்திற்கும் மூல விசயமாகும். நினைவு செய்வதும் கூட சேவை அல்லவா. வழிகாட்டுதல் (டைரக்ஷன்) கிடைத்துக் கொண்டே இருக்கிறது. எவ்வாறு நினைவு செய்ய வேண்டும்? இந்த புள்ளியின் இரகசியத்தைக் கூட பாபா புரியவைத்திருக்கின்றார். போகப்போக மேலும் கூறிக் கொண்டே இருப்பார். நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பாயிண்ட்ஸ் (கருத்து) கிடைத்துக்கொண்டே இருக்கின்றன, மிகவும் கடினமானதும் இல்லை, எளிதானதும் இல்லை. யார் தொடர்ந்து சேவையில் இருக்கிறார்களோ, அவர்கள் உடனே பாயிண்ட்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். யார் சேவை செய்வதில்லையோ, அவர்களுடைய புத்தியில் எதுவுமே தங்குவதில்லை. புள்ளி, புள்ளி என்று கூறிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், எவ்வாறு புள்ளியை நினைவு செய்வது? எவ்வாறு புள்ளியைப் பார்ப்பது? ஆனால், இது மிகவும் எளிய விசயமாகும். எந்த ஒரு புள்ளியையும் எதிரில் வைத்து நினைக்க வேண்டியதில்லை. இது புரிந்து கொள்வதற்கான விசயம் ஆகும். ஆத்மா எவ்வளவு சிறிய புள்ளியாக உள்ளது. ஆத்மாவின் பெயர், ரூபம், தேசம், காலத்தை எவராலும் கூற முடியாது. பரமாத்மாவைப் பற்றிக் கூறும்பொழுது அவருடைய பெயர், ரூபம், தேசம், காலம் என்ன? என்று கேட்கின்றனர். புரிந்துகொள்ளாத மனிதர்கள் ஆத்மாவை அறியவில்லை, பரமாத்மாவையும் அறியவில்லை. இங்கேயும் கூட முழுமையான முறையில் யார் அறிந்திருக்கவில்லையோ, அவர்கள் பாபா என்று மட்டும் கூறிக்கொண்டே இருப்பார்கள். ஞானத்தை எங்கே கற்றுக் கொள்கிறார்கள்! எந்த சேவையும் செய்வதில்லை. சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். எவ்வாறு சந்நியாசிகளிடம் கூட எதுவுமே செய்யாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்களும் இருக்கின்றனர். மற்றபடி சந்நியாசம் தரித்திருப்பது, விகாரத்திலிருந்து விடுபட்டு இருப்பது என்பது கூட குறைந்த விசயம் கிடையாது. சந்நியாசிகளின் தர்மமே தனிப்பட்டது. இந்த ஞானமே குழந்தைகளுக்காகத் தான்.



    நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்று பாபா புரியவைக்கின்றார். நீங்கள் தான் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கிறீர்கள். இந்த விசயங்களைக் கூட மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாது. பக்தி என்பது முற்றிலும் தனிப்பட்டது ஆகும். ஞானம் முற்றிலுமே தனிப்பட்ட விசயம் ஆகும். இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. நாம் முயற்சி செய்து இலட்சுமி, நாராயணர் போல் ஆக வேண்டும் என்றால், ஸ்ரீமத்படி முழுமையாக நடக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உழைப்புச் செய்ய வேண்டியதாக உள்ளது. மற்றபடி இந்த வியாதி முதலியவை இருந்து கொண்டே தான் இருக்கும். இதன் அடையாளம் இறுதி வரை தென்படும். பிறகு, மறைந்துவிடும், பிறகு, எந்த துக்கமும் இருக்காது. துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே, ஹே! விடுவிப்பவரே கருணை காட்டுங்கள் என்று தந்தையிடம் கூறுகின்றனர். பிறகு, அனைவரும் அனைத்து துக்கத்திலிருந்தும் விடுபட்டுவிடுகின்றனர். ஹே! பிரபு, ஹே! ராம் என்று துக்கத்தில் தான் மனிதர்கள் அதிகமாக நினைவு செய்கின்றனர். பகவானை நினைவு செய்யுங்கள் என்று துக்கமான நேரத்தில் அனைவரும் கூறுவார்கள். ஆனால், பகவான் யார் என்பதை எவரும் அறியவில்லை. இறைதந்தையை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் கூறுவார்கள். இறைவனை நினைவு செய்யுங்கள். அவர் நம்முடைய தந்தை என்பதை நீங்கள் நல்ல முறையில் அறிந்திருக்கிறீர்கள். தன்னை ஆத்மா எனப்புரிந்து என்னை நினைவு செய்யுங்கள் என்று பக்தி மார்க்கத்தில் கூறுவார்களா என்ன? இல்லை. எத்தனை விதமான பக்தி உள்ளன. ஞானம் என்பது ஒன்றே ஒன்று மட்டும் தான். பக்தி செய்வதனால் பகவான் கிடைப்பார் என்று நினைக்கின்றனர். பக்தி எப்பொழுதிலிருந்து ஆரம்பமானது? யார் அதிக பக்தி செய்கிறார்கள்? என்பது எவருக்கும் தெரியாது. 40 ஆயிரம் ஆண்டுகள் பக்தி மட்டும் செய்து கொண்டே இருப்பார்களா என்ன? எதுவரை பக்தி செய்வார்கள்? இத்தனை காலம் பக்தி நடைபெறுகிறது, இத்தனை காலம் ஞானம் நடைபெறுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பக்தர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்குப் புரியவைப்பதற்காகவே இத்தனை கண்காட்சி போன்றவை செய்கிறீர்கள். கண்காட்சியில் கூட கோடியில் ஒருவர் உருவாகிறார். போகப்போக மேலும் உருவாகுவார்கள். இங்கே கூட எத்தனை பேர் வருகின்றனர்? தூய்மையாக இருக்கும் உண்மையான பிராமணர்கள் நீங்கள் எத்தனை குறைந்த நபர்களே இருக்கிறீர்கள். யார் ரெகுலராக இருக்கிறீர்களோ, அவர்கள் வரவேண்டும். ஆனால், உண்மையான பிராமணர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்ற கணக்கு கூட போட முடியாது. அனேகர் பொய்யானவர்களாகவும் இருக்கின்றனர். பிராமணர்களின் வேலையே கதை சொல்வதாகும். பாபா கூட கதை சொல்லிக் கொண்டே இருக்கின்றார் அல்லவா? நீங்களும் கூட கதை சொல்ல வேண்டும். தந்தை எவ்வாறு இருக்கின்றாரோ அவ்வாறே குழந்தைகளும் இருக்க வேண்டும். குழந்தைகளுடைய வேலையே கீதை சொல்வதாகும். ஆனால், அனைவரும் எங்கு சொல்கிறார்கள்? ஞானப் புத்தகம் ஒரே ஒரு கீதை மட்டும் தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது அனைத்து சாஸ்திரங்களிலும் தலைசிறந்தது, இதில் அனைத்தும் அடங்கியுள்ளது. கீதையே தாய், தந்தை ஆகும். தந்தை தான் வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கின்றார். சிவபாபாவின் ஜெயந்தி தான் வைரத்திற்குச் சமமானது என்று கூட நீங்கள் எழுத முடியும். மற்ற அனைவருடைய ஜெயந்தியும் சோழிக்குச் சமமானது ஆகும். தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். கலியுக மனிதர்கள் சத்யுக தேவதைகளின் பூஜை செய்கின்றனர். அவர்களை அவ்வாறு ஆக்கவல்லவர் யார்? ஒரு தந்தை. ஆனால், யார் நல்ல முறையில் புரிந்திருக்கிறார்களோ, அவர்களே இதைப் புரியவைக்க முடியும். முறைப்படி எவரும் புரியவைப்பதில்லை.



    நம்முடைய சில குழந்தைகள் ஆக்கப்பூர்வமான செயல்களின் கூடவே அழிவிற்கான செயல்களையும் செய்யக்கூடியவர்களாக உள்ளனர் என்று தந்தை கூறுகின்றார். மகாரதி, குதிரைப்படை, காலாட்படை ஆகிய அனைவரும் உள்ளனர் அல்லவா. எனில், காலாட்படையினர் என்ன செய்வார்கள்? படித்தவர்களுக்கு முன் தலைவணங்கி நிற்பார்கள். மற்றபடி, யார் தலைவணங்கி நிற்கவில்லை, படிக்கவில்லை, கற்பிக்கவில்லையோ அவர்களை என்னவென்று சொல்வது? ஒட்டகப்பறவை. நல்லது.



    இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:-

    1 . தந்தை புள்ளியாக இருக்கின்றார், இந்த விசயத்தை யதார்த்தமாகப் புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். புள்ளி, புள்ளி என்று கூறிக்கொண்டு குழம்பக் கூடாது. சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.



    2. உண்மையான கீதையைக் கேட்க வேண்டும் மற்றும் சொல்ல வேண்டும். உண்மையான பிராமணன் ஆவதற்காக தூய்மையாக இருக்க வேண்டும். படிப்பை அவசியம் தொடர்ந்து ஒழுங்கான முறையில் (ரெகுலராக) படிக்க வேண்டும்.



    வரதானம்:-

    தனது சிரேஷ்ட கர்மம் என்ற கண்ணாடி மூலம் தந்தை பிரம்மாவின் கர்மத்தைக் காண்பிக்கக் கூடிய பாபாவிற்குச் சமமானவர் ஆகுக.



    ஒவ்வொரு பிராமண ஆத்மா மற்றும் சிரேஷ்ட ஆத்மாவும், ஒவ்வொரு கர்மத்திலும் பிரம்மா பாபாவினுடைய கர்மத்தின் கண்ணாடி ஆவீர்கள். பிரம்மா பாபாவின் செயல் உங்களுடைய கர்மம் (செயல்) என்ற கண்ணாடியில் தெரிய வேண்டும். எந்தக் குழந்தைகள் இந்த அளவிற்கு கவனம் கொடுத்து ஒவ்வொரு கர்மமும் செய்கிறார்களோ, அவர்களுடைய பேச்சு, நடத்தை, அமருதல், எழுதல் ஆகிய அனைத்தும் பிரம்மா பாபாவிற்குச் சமமாக இருக்கும். ஒவ்வொரு கர்மம் வரதானம் போன்று இருக்கும், வாயிலிருந்து எப்பொழுதும் வரதானம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். பிறகு, சாதாரண செயல் கூட விசேஷத் தன்மை தென்படும். எனவே, இந்த சான்றிதழைப் பெற்றாலே தந்தைக்குச் சமமானவர்கள் என்று கூற முடியும்.



    சுலோகன்:-

    அவ்யக்த ஸ்திதியின் அனுபவத்தை செய்வதற்காக வெளிநோக்குமுகத்தை விடுத்து உள்நோக்குமுகம் உடையவராக மற்றும் ஏகாந்தவாசியாக ஆகுங்கள். 



    ***OM SHANTI***