BK Murli 1 November 2017 Tamil
01.11.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத் படி நடந்து புனிதமானவர் (ஹோலி) மற்றும் தூய்மையானவர் ஆகி, தாரணை செய்து பிறகு யுக்தியுடன் சேவை செய்ய வேண்டும். அகங்காரத்தில் வரக் கூடாது. ஆன்மீக கர்வத்தில் இருக்க வேண்டும்.
கேள்வி:
எந்த ஒரு விசயத்தின் காரணத்தால் பாபாவுக்கு இவ்வளவு பெரிய ஞானம் கொடுக்க வேண்டி உள்ளது?
பதில்:
கீதையின் படைப்பாளர் என்று நிராகார் பரமபிதா பரமாத்மா என்று நிரூவிப்பதற்காக பாபா உங்களுக்கு இவ்வளவு பெரிய ஞானம் கொடுக்கிறார். அனைத்திலும் பெரிய தவறு என்பது பதீத-பாவனர் தந்தையின் இடத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டதாகும். இந்த உண்மையான விசயத்தைத் தான் நிரூபிக்க வேண்டும். இதற்காக வித-விதமான யுக்திகளை உருவாக்க வேண்டும். தந்தையின் மகிமை மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் மகிமையைத் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.
பாடல்:
மடிந்தாலும் அது நீ இருக்குமிடத்தில்......
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். உன் வாசலில் உயிரோடு இருந்து கொண்டே இறந்து விடுவதற்காக வந்துள்ளோம் எனச் சொல்கின்றனர். யாருடைய வாசல்? பிறகும் இதே விசயம் வெளிப்படுகிறது, அதாவது ஒருவேளை கீதையின் பகவான் கிருஷ்ணர் எனச் சொன்னால் இந்த அனைத்து விசயங்களும் நடந்திருக்க முடியாது. அவர் சத்யுகத்தின் இளவரசர். கீதையைக் கிருஷ்ணர் கூறவில்லை. கீதையைப் பரமபிதா பரமாத்மாதான் கூறினார். அனைத்திற்குமான ஆதாரம் இந்த விசயத்தின் மீது உள்ளது. ஒரு விசயத்தைப் புரிந்து கொண்டால் பாரதத்தின் இத்தனை சாஸ்திரங்களும் பொய் என்பது உறுதியாகி விடும். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. இவற்றில் கர்மகாண்டம் (மத சடங்குகள்), தீர்த்த யாத்திரை, ஜபம், தபம் முதலியவற்றின் கதைகள் எழுதப்பட்டுள்ளன. பக்தி மார்க்கத்தில் நீங்கள் இவ்வளவு முயற்சி செய்தே வந்திருக்கிறீர்கள். அதுவோ அவசியமில்லை. இதுவோ ஒரு விநாடியின் விசயம். இந்த ஒரு விசயத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் கூட பாபா எவ்வளவு ஞானம் தர வேண்டி உள்ளது! புராதன ஞானம் பகவான் என்ன கொடுத்திருந்தாரோ, அதே ஞானம் தான். இப்போது கூறுவதும் அனைத்து விசயமும் கீதை மீது தான் உள்ளது. பரமபிதா பரமாத்மா தான் வந்து தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனைக்காக சகஜ இராஜயோகம் மற்றும் ஞானத்தைக் கற்றுத் தந்துள்ளார், அது இப்போது மறைந்து போய்விட்டது. மனிதர்கள் நினைக்கின்றனர், கிருஷ்ணர் மறுபடியும் வந்து கீதை சொல்வார் என்று. ஆனால் இப்போது நீங்கள் இதை நன்றாக உறுதிப் படுத்த வேண்டும் -- கீதையைப் பரமபிதா பரமாத்மா, ஞானக்கடலாக இருப்பவர் சொல்லியிருக்கிறார். கிருஷ்ணரின் மகிமை மற்றும் பரமபிதா பரமாத்மாவின் மகிமை வெவ்வேறாகும். கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர். அவர் சகஜ இராஜயோகத்தின் மூலம் இராஜ்ய பாக்கியத்தைப் பெற்றிருந்தார். படிக்கும் போது பெயர்-வடிவம் வேறு, பிறகு எப்போது இராஜ்ய பாக்கியத்தைப் பெற்றாரோ, அப்போது வேறு. முதலில் தூய்மை இழந்திருந்தார். பிறகு தூய்மையானார். இதை உறுதிப் படுத்திச் சொல்ல வேண்டும். பதீத-பாவனர் என்று கிருஷ்ணரை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள். பதீத-பாவனர் ஒரு தந்தை மட்டுமே. இப்போது அதே ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா, கறுப்பாக, அதாவது (ஷ்யாமாக) கரு நீலமாக ஆகி விட்டுள்ளது. இப்போது மீண்டும் பதீத-பாவனர் மூலம் இராஜயோகம் கற்று வருங்காலத்தின் தூய்மையான உலகின் இளவரசராக ஆகிக் கொண்டிருக்கிறார். இதை உறுதிப் படுத்திப் புரிய வைப்பதில் யுக்திகள் வேண்டும். வெளிநாட்டினருக்கு உறுதிப் படுத்திச் சொல்ல வேண்டும். நம்பர் ஒன்னாக இருப்பது கீதை. அனைத்து சாஸ்திரங்களின் தாயான ஸ்ரீமத் பகவத் கீதையாகும். இப்போது அந்த மாதாவுக்கு யார் ஜென்மம் கொடுத்தார்? தந்தை தான் மாதாவைத் தத்தெடுக்கிறார். கிறிஸ்து பைபிளுக்கு ஜென்மம் (எழுதினார்) கொடுத்தார் எனச் சொல்ல மாட்டார்கள். கிறிஸ்து என்ன போதனைகள் செய்தாரோ, அவற்றை பைபிளாக ஆக்கிப் படித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்போது கீதையின் போதனைகளை யார் கொடுத்தார்? அதைப் புத்தகமாக்கிப் படித்துக் கொண்டே இருக்கின்றனர். இது யாருக்கும் தெரியாது, மற்ற அனைவருக்கும் அவர்களின் சாஸ்திரங்கள் பற்றித் தெரியும். இந்த சகஜ இராஜயோகத்தின் கல்வியை யார் கற்றுத் தந்தார்? இதைத் தெளிவு படுத்த வேண்டும். உலகமோ நாளுக்கு நாள் தமோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறது. இந்த அனைத்துச் சிந்தனைகளும் தூய்மையான புத்தியில் தான் பதிய முடியும். யார் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ, அவர்களுக்கு தாரணையும் ஆக முடியாது. ஸ்ரீமத் சொல்லும், நீங்கள் முற்றிலும் புரிய வைக்க முடியாது. பாபா உடனே சொல்லி விடுவார் - கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மா என்பது தான் முக்கிய விசயம். அவர் தான் பதீத-பாவனர். மனிதர்களோ, சர்வவியாபி எனச் சொல்லிவிடுகின்றனர் அல்லது பிரம்ம தத்துவம் எனச் சொல்லிவிடுகின்றனர். எதையும் புரிந்து கொள்ளாமலேயே என்ன தோன்றுகிறதோ, அதைச் சொல்லிவிடுகின்றனர். பெரிய பிழையானது, கீதையில் இருந்து வெளிப்பட்டுள்ளது. கீதையைப் படைத்தவர் கிருஷ்ணர் எனச் சொல்லிவிட்டதால் வந்த தவறு. ஆக, புரிய வைப்பதற்காக யுக்திகள் உருவாக்க வேண்டும். குப்தாஜீக்காகவும் சொல்லியிருந்தார், காசியில் இதைத் தெளிவுபடுத்திப் புரிய வையுங்கள், அதாவது கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல.
இப்போது டில்லியில் மகாநாடு நடைபெறுகிறது. அனைத்து தர்மத்தினரும் அழைக்கப் பட்டுள்ளனர். அமைதிக்காக என்ன உபாயம் செய்வது என்பது பற்றி விவாதிப்பதற்காக. இப்போது சாந்தி ஸ்தாபனை செய்வது இவர்களின் கையிலோ இல்லை. பதீத-பாவனா வாருங்கள் என அழைக்கவும் செய்கின்றனர். பிறகு இந்தப் தூய்மை இல்லாதவர்கள் எப்படி சாந்தியை ஸ்தாபனை செய்ய முடியும்? அழைத்துக் கொண்டே இருக்கும் போது? ஆனால் பதீத-பாவனர் பற்றி அறிந்திருக்கவில்லை. ரகுபதி ராகவ ராஜாராம் எனச் சொல்லிவிடுகின்றனர். அவரோ இல்லை. பொய்யாக அழைத்துக் கொண்டிருக்கின்றனர். எதையும் அறிந்து கொள்ளவில்லை. இப்போது இதை யார் போய்ச் சொல்வது? இதற்கு மிக நல்ல குழந்தைகள் வேண்டும். தங்களை ஞானி எனப் புரிந்து கொண்டுள்ள அப்படிப்பட்ட குழந்தைகள் அநேகர் உள்ளனர். ஆனால் எதுவுமே இல்லை. உதாரணம் உள்ளது – எலிக்கு மஞ்சள் துண்டு கிடைத்ததாம்..... நம்பர்வார் உள்ளனர். இதில் மிகுந்த யுக்தி வேண்டும். அதன் மூலம் தெளிவாக வேண்டும் -- கீதையை பகவான் படைத்துள்ளார். அவர்கள் சொல்லிவிடுகின்றனர், யாராகவும் இருக்கட்டும், எல்லாமே பகவான் தான் என்று. பாபா சொல்கிறார் -- பகவான் வாக்கு, நான் அந்த 84 பிறவி களை முடித்துக் கடைசிப் பிறவியில் இருக்கும் கிருஷ்ணரின் ஆத்மாவைத் தத்தெடுத்து, பிரம்மாவாக ஆக்கி அவர் மூலமாக கீதை ஞானத்தைக் கொடுக்கின்றேன். அந்த பிரம்மா பிறகு இந்த சகஜ இராஜயோகத்தின் மூலம் சத்யுகத்தின் முதல் இளவரசராக ஆகி விடுகிறார். இந்த ஞானம் வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. குழந்தைகளாகிய உங்களிலும் கூட யதார்த்த ரீதியில் இன்னும் அந்த உண்மையான கர்வம் வரவில்லை. இவ்வளவு கண்காட்சி முதலியவற்றை நடத்துகிறீர்கள். இன்னும் அதைத் தெளிவு படுத்தவில்லை. முதலில் இந்தப் பிழையை உறுதிப் படுத்தி நிரூபிக்க வேண்டும், ஸ்ரீமத் பகவத் கீதை அனைத்து சாஸ்திரங்களின் தாய்-தந்தை ஆகும். அதைப் படைத்தவர் யார்? எப்படி கிறிஸ்து பைபிளுக்கு ஜென்மம் கொடுத்தார். அது கிறிஸ்தவ தர்மத்தின் சாஸ்திரம். நல்லது, பைபிளின் தந்தை யார்? கிறிஸ்து. அவரைத் தாய்-தந்தை எனச் சொல்ல மாட்டார்கள். தாயின் விஷயமோ அங்கே கிடையாது. இவரோ இங்கே தாயும் தந்தையுமாக இருக்கிறார். கிறிஸ்தவர்கள் கிருஷ்ணரின் தர்மத்தோடு போட்டியிட்டுள்ளனர். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள். இப்போது கீதையை யார் சொன்னார்? அதனால் எந்த தர்மம் ஸ்தாபனை ஆயிற்று? இதை யாரும் அறிந்திருக்க வில்லை. பதீத-பாவனர் பரமபிதா பரமாத்மா யக்ஞத்தைப் படைத்தார் என்று ஒரு போதும் சொல்வதில்லை. சிருஷ்டிச் சக்கரத்தின் சித்திரத்தில் இருந்து புரிந்து கொள்வார்கள் - நிச்சயமாகப் பரமபிதா பரமாத்மா தான் ஞானம் தந்தார் என்று. இராதை-கிருஷ்ணரோ சத்யுகத்தில் அமர்ந்துள்ளனர். அவர்கள் தங்களாகவே ஞானம் தரவில்லை. ஞானம் கொடுப்பவர் வேறொருவர் வேண்டும். யாரோ தான் அவர்களைப் பாஸ் செய்ய வைத்திருப்பார்கள். இந்த இராஜ்யத்தை அடைய வைக்கிற ஞானம் யார் கொடுத்தார்? அதிர்ஷ்டம் தானாகவே உருவாகிவிடாது. அதிர்ஷ்டத்தை உருவாக்குபவராக தந்தை அல்லது ஆசிரியர் இருப்பார். குருவோ கதி (முக்தி) அளிக்கிறார். ஆனால் கதி-சத்கதியின் அர்த்தத்தையும் கூடப் புரிந்து கொள்ளவில்லை. சத்கதி (ஜீவன்முக்தி) இல்லறவாசிகளுக்குக் கிடைக்கும். கதி என்றால் அனைவரும் தந்தையிடம் (பரந்தாமத்திற்கு) செல்கின்றனர். இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களோ பக்தியின் பெரிய-பெரிய கடைகளைத் திறந்து வைத்துள்ளனர். அனைத்தும் பக்தியினுடையவை. பாபா சொல்கிறார், இந்த வேத சாஸ்திரங்கள் முதலியவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். இந்த ஜபம், தபம் முதலியவற்றைச் செய்வதால் நான் கிடைப்பதில்லை. நானோ குழந்தைகளுக்கு ஞானம் கொடுத்து தூய்மையாக்குகிறேன். முழு சிருஷ்டிக்கும் சத்கதி அளிக்கிறேன். கதியின் வழியாகப் போய் சத்கதியில் முக்தி பிறகு ஜீவன் முக்தி வர வேண்டும். அனைவருமோ சத்யுகத்தில் வர மாட்டார்கள். இந்த டிராமா உருவாக்கப் பட்டதாகும். கல்பத்திற்கு முன் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ, எந்தச் சித்திரங்கள் உருவாக்கப் பட்டிருந்தனவோ, அவை இப்போதும் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மிகப் பெரிய பிழை என்பதை நிரூபித்தால் பிறகு யுக்தியுடன் சித்திரங்களை உருவாக்குவார்கள். மூன்று தர்மங்களின் கால்களில் சிருஷ்டி நின்று கொண்டுள்ளது எனச் சொல்கின்றனர். ஒரு தேவதா தர்மத்தின் கால் உடைந்து விட்டுள்ளது. அதனால் ஆடிக் கொண்டே இருக்கிறது. முதலில் ஒரு கால் சிருஷ்டி மிகவும் முதல்தரமாக நிற்கிறது. ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. அது அத்வைத (ஒரே) இராஜ்யம் எனச் சொல்லப் படுகிறது. பிறகு அந்த ஒரு கால் மறைந்து மூன்று கால்கள் வெளிப்படுகின்றன. அதில் எந்த ஒரு சக்தியும் இருப்பதில்லை. அவர்களுக்குள்ளாகவே சண்டை-சச்சரவு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. தந்தையாகிய பிரபுவைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. அநாதைகளாக ஆகி விட்டுள்ளனர். இதைப் புரிய வைப்பதற்கு மிகவும் யுக்தி வேண்டும். கண்காட்சியிலும் கூட முக்கியமாக இந்த விசயத்தைப் புரிய வைக்க வேண்டும் - அதாவது கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணரல்ல, பரமபிதா பரமாத்மா தான், அவருடைய பிறப்பிடம் பாரதம். கிருஷ்ணர் சாகார் சரீரமுடையவர். அவர் (பரமாத்மா) நிராகார். (அசரீரி) அவரது மகிமை தனிப்பட்டதாகும். இது போல் யுக்தியுடன் கார்ட்டூன் தயார் செய்ய வேண்டும். அதன் மூலம் கீதையைப் பரமாத்மா அருளினார், கிருஷ்ணரை அது போல் ஆக்கினார் என்பது தெளிவாக வேண்டும். பிரம்மாவின் பகல் ஞானம், பிரம்மாவின் இரவு பக்தி எனச் சொல்கின்றனர். இப்போது இரவு. சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவர் யார்? பிரம்மா எங்கிருந்து வந்தார்? சூட்சுமவதனத்திலும் கூட எங்கிருந்து வந்தார்? பிரஜாபிதா பிரம்மாவைப் பரமாத்மா தத்தெடுக்கிறார். பரமபிதா பரமாத்மா தான் முதல்-முதலில் சிருஷ்டியைப் படைக்கிறார். அங்கே பிரம்மாவைக் காட்டுகின்றனர். அங்கே பிரஜாபிதா இருப்பதில்லை. பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வந்தார்? இந்த விசயங்களை யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. கிருஷ்ணரின் கடைசிப் பிறவியில் இவரைப் பரமபிதா பரமாத்மா தமது ரதமாக ஆக்கியிருக்கிறார். இது யாருடைய புத்தியிலும் இல்லை. இது மிகப்பெரிய வகுப்பு. இந்த மாணவன் எப்படி என்று ஆசிரியர் அறிந்துள்ளார். அப்போது தந்தை புரிந்திருக்கமாட்டாரா? இது எல்லையற்ற தந்தையின் எல்லையற்ற வகுப்பு. இங்குள்ள விசயமே தனிப்பட்டதாகும். சாஸ்திரங்களில் பிரளயத்தைக் காட்டி, குழப்பி விட்டுள்ளனர். நீங்கள் அறிவீர்கள், கிருஷ்ணர் கீதை சொல்லவில்லை. அவரோ கீதையின் ஞானம் கேட்டு இராஜ்ய பதவி அடைந்துள்ளார். நீங்கள் தெளிவு படுத்திச் சொல்லவேண்டும் - கீதையின் பகவான் நிராகார் சிவன், அவருடைய குணங்கள் இவை. இந்தத் தவற்றின் காரணத்தால் தான் பாரதம் சோழி போல் ஆகியுள்ளது. இப்போது பரமபிதா பரமாத்மா ஞானக்கலசத்தை மாதாக்கள் மீது வைத்துள்ளார். மாதாக்கள் தான் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கின்றனர். இந்த அனைத்து விசயங்களையும் குறித்து வைத்துப் புரிய வைக்க வேண்டும். பக்தி உண்மையில் இல்லறவாசிகளுக்கானதாகும். இது இல்லற மார்க்கத்தின் சகஜ இராஜயோகம். நான் நிரூபித்துப் படுத்திப் புரிய வைப்பதற்காக வந்துள்ளேன். குழந்தைகள் யுக்தியுடன் காரியமாற்ற வேண்டும். குழந்தைகள் தான் தந்தையை எடுத்துக் காட்ட வேண்டும். சதா மலர்ந்த முகமுள்ள, ஆடாத, உறுதியானவராக, மகிழ்ச்சி நிறைந்தவராக இருக்க வேண்டும். இன்னும் போகப்போக அப்படிப்பட்ட குழந்தைகள் நிச்சயமாக வெளிப்படுவார்கள். 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கச் செய்பவர்கள் தான் பிரம்மாகுமார் குமாரிகள். குமாரிகளின் மகிமை மிகப்பெரியதாகும். மம்மா முக்கியமானவர். அவர் ஞான சூரியன், இவர் குப்த மம்மா (பிரம்மா). இந்த இரகசியத்தை அபூர்வமாகச் சிலர் தான் புரிந்து கொள்கின்றனர். கோவில்களும் அந்த மம்மாவினுடையவை ஆகும். இந்த குப்தமான, வயதான மம்மாவுக்கு (பிரம்மா) எந்தக் கோவிலும் கிடையாது. இந்த மாதா-பிதா இணைந்துள்ளனர். கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசர். கிருஷ்ணருக்குள் பகவான் வர முடியாது. கீதையின் பகவானுடைய மகிமை தனிப்பட்டதாகும். அவர் பதீத-பாவனர், லிபரேட்டர் (விடுவிப்பவர்), கைடு (வழிகாட்டி) ஆவார். ஆக, பரமாத்மாவின் மகிமை முற்றிலும் தனிப்பட்டது. ஒரே மாதிரி இருக்க முடியாது. முக்கிய விசயமே கீதையை யார் சொன்னார் என்பது தான். வேத-சாஸ்திரங்கள் முதலிய அனைத்தும் கீதையின் குழந்தை-குட்டிகள். மற்ற அனைத்தும் பக்தியின் சாதனங்களாகும். ஞான மார்க்கத்தில் அது போல் எதுவும் நடப்பதில்லை. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கிய சாரம்:
1. ஒவ்வொரு காரியத்தையும் மிகவும் யுக்தியுடன் செய்ய வேண்டும். மலர்ந்த முகத்துடன், ஆடாத நிலையில், உறுதியுடன் மற்றும் ஞானத்தின் போதையில் இருந்து பாபாவைக் காட்சிப் படுத்த வேண்டும்.
2. ஞானத்தின் புதிய மற்றும் தனிப்பட்ட விசயங்களை உறுதிப் படுத்தி நிரூபிக்க வேண்டும்.
வரதானம்:
இலக்கை முன்னால் வைத்து பிரம்மா பாபாவைப் பின்பற்றிக் கொண்டே முதல் நம்பர் பெறக்கூடிய தீவிர புருஷார்த்தி ஆகுக.
தீவிர புருஷார்த்தியின் முன்னால் தான் சென்று சேர வேண்டிய இலக்கு சதா இருக்கும். அவர்கள் ஒரு போதும் இங்கே அங்கே பார்க்க மாட்டார்கள். முதல் நம்பரில் வரக்கூடிய ஆத்மாக்கள் வீணானவற்றைப் பார்த்தாலும் பார்க்காதிருப்பார்கள். வீணான பேச்சுகளைக் கேட்டாலும் கேட்காதிருப்பார்கள். அவர்கள் இலக்கை முன்னால் வைத்து பிரம்மா பாபாவைப் பின்பற்றுவார்கள். எப்படி பிரம்மா பாபா தம்மைச் செய்பவர் என உணர்ந்து கர்மம் செய்தார், செய்விப்பவர் எனப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டும் கூட சதா இலேசாக இருந்தார். அது போல் தந்தையைப் பின்பற்றுங்கள்.
சுலோகன்:
எந்த ஒரு விசயம் மனநிலையை கெடுக்கக் கூடியதாக இருக்கிறதோ, அதைக் கேட்டாலும் கேளாதவராக இருங்கள்.
மாதேஸ்வரிஜியின் விலைமதிப்பற்ற மகாவாக்கியங்கள்
1. ஆத்மா, பரமாத்மாவுக்கிடையில் உள்ள வேறுபாடு-- ஆத்மா மற்றும் பரமாத்மா நீண்டகாலமாகத் தனியாக இருந்து விட்டனர். சத்குரு, (பிரம்மா) தரகர் ரூபத்தில் கிடைத்த போது ஆத்மா பரமாத்மாவின் அழகிய சந்திப்பு நிகழ்ந்தது தனது இந்த வார்த்தையால் சொல்லும் போது அதன் யதார்த்த அர்த்தம், ஆத்மா, பரமாத்மா நீண்ட காலமாகப் பிரிந்து இருந்துள்ளனர். நீண்டகாலம் என்பதன் அர்த்தம் அதிக சமயம் முதலில் ஆத்மா, பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து வந்து விட்டது. ஆக, இந்த வார்த்தை உறுதி படுத்துவது என்னவென்றால் ஆத்மா மற்றும் பரமாத்மா வேறு-வேறான இரண்டு பொருள்கள். இரண்டுக்குமிடையில் (வெளிப்படையாகத் தெரியாத) வித்தியாசம் உள்ளது. ஆனால் உலக மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாத காரணத்தால் நான் ஆத்மாவே பரமாத்மா என்று அந்த மாதிரி அர்த்தத்தை வெளிப் படுத்துகின்றனர். ஆனால் ஆத்மாவின் மீது மாயாவின் திரை படிந்துள்ள காரணத்தால் தனது அசல் சொரூபத்தை மறந்து விட்டுள்ளது. எப்போது அந்த மாயாவின் திரை மறைத்து விடுகிறதோ, பிறகு ஆத்மாவே பரமாத்மா என்று ஆகிறது. ஆக, அவர்கள் ஆத்மாவைத் தனிப்பட்ட ஒரு அர்த்தத்தில் சொல்கின்றனர். மற்ற மனிதர்கள் பிறகு இந்த அர்த்தத்தில் சொல்கின்றனர் -- அதாவது நான் ஆத்மாவே தான் பரமாத்மா. ஆனால் ஆத்மா தன்னைத் தான் மறந்து விட்ட காரணத்தால் துக்கத்தில் வந்து விட்டுள்ளது. எப்போது ஆத்மா மீண்டும் தன்னைத் தான் அறிந்து கொண்டு சுத்தமாக ஆகிறதோ, பிறகு ஆத்மா பரமாத்மாவுடன் கலந்து ஒன்றாகி விடும். ஆக, அவர்கள் ஆத்மாவைத் தனித் தனியான இந்த அர்த்தத்தில் சொல்கின்றனர். ஆனால் நீங்கள் அறிவீர்கள், ஆத்மா பரமாத்மா இரண்டும் வெவ்வேறு பொருட்கள். ஆத்மா பரமாத்மாவாக ஆகவும் முடியாது. ஆத்மா பரமாத்மாவுக்குள் கலந்து ஒன்றாக ஆகவும் முடியாது. மேலும் பரமாத்மா மீது திரை படியவும் முடியாது.
2. கர்ம பந்தனம் விட்டுப் போவதால் தான் மனதின் சாந்தி, அதாவது ஜீவன்முக்த் ஸ்திதியை அடைய முடியும். உண்மையில் ஒவ்வொரு மனிதருக்கும் இந்த விருப்பம் அவசியம் உள்ளது -- எனக்கு மனதின் சாந்தி கிடைக்க வேண்டும். அதனால் அநேக முயற்சிகள் செய்தே வந்துள்ளனர். ஆனால் மனதிற்கு இது வரை சாந்தி கிடைக்கவில்லை. இதற்கான யதார்த்த காரணம் என்ன? இப்போது முதலாவதாக இந்த சிந்தனை ஓட்ட வேண்டும் - மனதின் அசாந்திக்கான முதல் ஆதாரம் என்ன? மனதின் அசாந்திக்கான முக்கிய காரணம் -- கர்ம பந்தனத்தில் சிக்குவதாகும். எது வரை மனிதர்கள் இந்த ஐந்து விகாரங்களின் கர்மபந்தனங்களில் இருந்து விடுபடவில்லையோ, அது வரை மனிதர்கள் அசாந்தியில் இருந்து விடுபட முடியாது. எப்போது கர்மபந்தனம் விட்டுப் போகிறதோ, அப்போது மனதின் சாந்தி, அதாவது ஜீவன்முக்த் ஸ்திதியை அடைய முடியும். இப்போது யோசிக்க வேண்டும் -- இந்தக் கர்மபந்தனம் எப்படி விட்டுப் போகும்? மேலும் அதை விடுவிப்பவர் யார்? இதையோ நாம் அறிவோம். அதாவது எந்த ஒரு மனித ஆத்மாவும் எந்த ஒரு மனித ஆத்மாவையும் விடுவிக்க முடியாது. இந்தக் கர்மபந்தனத்தின் கணக்கு-வழக்கைத் துண்டிப்பவர் ஒரு பரமாத்மா மட்டுமே. அவர் தான் வந்து இந்த ஞான யோக பலத்தின் மூலம் கர்மபந்தனத்தில் இருந்து விடுவிக்கிறார். அதனால் தான் பரமாத்மா சுகம் தரும் வள்ளல் எனச் சொல்லப் படுகிறார். எது வரை முதலில் இந்த ஞானம் இல்லையோ,அதாவது நான் ஆத்மா, உண்மையில் நான் யாருடைய குழந்தை, எனது உண்மையான (அசல்) குணம் எது? எப்போது இது புத்தியில் வந்து விடுகிறதோ, அப்போது தான் கர்மபந்தனம் விடுபடும். இப்போது இந்த ஞானம் நமக்குப் பரமாத்மாவின் மூலம் தான் கிடைக்கிறது. அதாவது பரமாத்மா மூலம் தான் கர்மபந்தனங்கள் விட்டுப் போகும். ஓம் சாந்தி.