BK Murli 23 November 2017 Tamil
23.11.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இல்லற விசயங்களில் இருந்தபடியே அனைவருடனும் உறவை நன்முறையில் பராமரிக்க வேண்டும், ஒரு முறை எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம் செய்து 21 பிறவிகளின் பலனை உருவாக்க வேண்டும்.
கேள்வி:
நடந்தாலும் சுற்றினாலும் எந்த ஒரு விசயம் நினைவில் இருந்தது என்றால் நீங்கள் ஆன்மீக யாத்திரையில் இருக்கிறீர்கள் எனலாம்?
பதில்:
நடந்து கொண்டிருந்தாலும், சுற்றிவந்தாலும் நாம் நடிகர்கள், நாம் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்ற நினைவு இருக்க வேண்டும், தந்தை இதை நினைவூட்டுகின்றார். குழந்தைகளே, நான் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளேன். இந்த நினைவில் இருப்பதுதான் மத்யாஜீபவ, மன்மனாபவ என்பதாகும். இதுதான் ஆன்மீக யாத்திரை ஆகும், இதனை தந்தை கற்பிக்கிறார்.
கேள்வி:
சத்கதியின் இலட்சணங்கள் எவை?
பதில்:
அனைத்து குணங்களிலும் நிறைந்தவர் . . . 16 கலைகளிலும் நிரம்பியவர் . . . இந்த மகிமைகளே சத்கதியின் இலட்சணங்கள் ஆகும். இவைகள் தந்தையின் மூலம் உங்களுக்கு பயனாகக் கிடைக்கின்றன.
பாடல்:
பொறுமை காப்பாய் மானிடா. . .
ஓம் சாந்தி.
குழந்தைகள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி அறிந்திருக்கின்றனர் - இப்போது பழைய நாடகம் முடிவடைகிறது. துக்கத்தின் நாட்கள் இன்னும் கொஞ்சமே மிகுந்திருக்கின்றன, பிறகு சுகமே சுகம் இருக்கப் போகிறது. எப்போது சுகத்தைப் பற்றி தெரிகின்றதோ அப்போது இது துக்க தாமம் என புரிந்து கொள்ளப்படுகிறது, இரண்டிற்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது. இப்போது சுகத்திற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் அதாவது ஸ்ரீமத்படி நடந்துக் கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு வேண்டு மானாலும் இதனை புரிய வைப்பது சகஜமேயாகும். இப்போது பாபாவிடம் செல்ல வேண்டும். பாபா அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். இல்லற விசயங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல தூய்மையாய் இருக்க வேண்டும். உறவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒரு வேளை உறவை பராமரிக்கவில்லை என்றால் சன்னியாசிகள் போல ஆகி விட்டீர்கள் என்றாகி விடும். யார் உறவை பராமரிக்கவில்லையோ அவர்கள் துறவற மார்க்கத்தினர் அதாவது ஹடயோகத்தினர் என சொல்லப்படுவார்கள். இப்போது பகவான் இராஜயோகம் கற்பிக்கிறார், அதனை நாம் கற்றுக் கொள்கிறோம். பாரதத்தின் தர்ம சாஸ்திரம் கீதை ஆகும். மற்றவர்களுடைய தர்ம சாஸ்திரம் எது என்பதில் நமக்குத் தொடர்பு இல்லை. சன்னியாசிகள் இல்லற மார்க்கத்தினர் அல்ல. அவர்களுடையது ஹடயோகம், வீடு வாசலை விட்டு காட்டிற்குச் சென்று விடுவதாகும். அவர்கள் பிறவி பிறவிகளுக்கும் சன்னியாசம் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இல்லற விசயங்களில் இருந்தபடியே ஒரு முறை சன்னியாசம் செய்கிறீர்கள், பிறகு 21 பிறவிகளுக்கு அதன் பலனைப் பெறுகிறீர்கள். அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சன்னியாசம், உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம் ஆகும். உங்களுடைய இராஜயோகத்திற்கு நிறைய மதிப்பு உள்ளது. பகவான் இராஜயோகம் கற்பித்திருந்தார். உயர்ந்தவரிலும் உயர்ந்தவரே பகவான் எனப்படுகிறார். ஸ்ரீகிருஷ்ணர் பகவானாக இருக்க முடியாது. எல்லைக்கப்பாற்பட்ட தந்தைதான் நிராகார மானவர். எல்லைக்கப்பாற்பட்ட இராஜ்யத்தை அவர்தான் கொடுக்க முடியும். இங்கே இல்லற விசயங்களின் மீது வெறுப்பு ஏற்படுத்தப் படுவதில்லை. இந்த கடைசி பிறவி இல்லற விசயங்களில் இருந்தபடியே தூய்மை யடையுங்கள். பதித பாவனர் என எந்த சன்னியாசியையும் சொல்ல முடியாது. அவர்களும் தூய்மையான உலகை விரும்புகின்றனர். அந்த உலகம் ஒன்றாகும், அதற்காக பதித பாவன (தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும்) தந்தையை அழைக்கின்றனர். அவர்கள் இல்லற விசயங்களிலேயே இருக்காத போது தேவதை களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. தந்தை ஒருபோதும் ஹடயோகம் கற்பிக்க முடியாது. இவை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும்.
இப்போது டில்லியில் உலக மாநாடு நடக்கவுள்ளது. அங்கே இதனை புரிய வைக்க வேண்டும், எழுத்து மூலம் தர வேண்டும். எழுத்தில் இருந்தது என்றால் அனைவரும் புரிந்து கொள்வார்கள். இப்போது நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமண குலத்தவர்கள். அவர்கள் சூத்திர குலத்தவர்கள். நாம் ஆஸ்திகர்கள். அவர்கள் நாஸ்திகர்கள். அவர்கள் ஈஸ்வரனை அறியாதவர்கள். நாம் ஈஸ்வரனுடன் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்துபவர்கள். ஆக முரண்பாடு உள்ளதல்லவா. தந்தைதான் வந்து ஆஸ்திகராக ஆக்குகிறார். தந்தையுடைவர்களாக ஆவதன் மூலம் தந்தையின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. இவையனைத்தும் புரிந்து கொள்ள கடினமான விசயங்களாகும். முதன் முதலாக புத்தியில் பதிய வைக்க வேண்டும் - கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மா. அவர்தான் ஆதி சனாதன தேவி தேவதா இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருந்தார். பாரதத்தின் தேவி தேவதா தர்மமே முக்கியமானதாகும். பாரதவாசிகள் தம்முடைய தர்மத்தை மறந்து விட்டனர். இதுவும் உங்களுக்குத் தெரியும் - பாரதவாசிகள் நாடகத்தின்படி தமது தர்மத்தை மறக்கவே வேண்டியிருக்கும், அப்போதுதானே தந்தை வந்து மீண்டும் ஸ்தாபனை செய்வார். இல்லாவிட்டால் தந்தை வருவது எவ்வாறு? தேவி - தேவதா தர்மம் மறைந்து போய் விடும்போது நான் வருகிறேன் என சொல்கிறார். கண்டிப்பாக மறைந்தும் போக வேண்டியுள்ளது. காளை மாட்டின் ஒரு கால் முறிந்து விட்டது, மற்ற மூன்று கால்களின் ஆதாரத்தில் உலகம் நின்று கொண்டுள்ளது என சொல்கின்றனர். முக்கியமானதே 4 தர்மங்கள் ஆகும். இப்போது தேவதா தர்மத்தின் கால் முறிந்து விட்டுள்ளது அதாவது அந்த தர்மம் மறைந்து விட்டுள்ளது, ஆகையால் ஆலமரத்தின் உதாரணம் கொடுக்கிறார் - அடித்தண்டு காய்ந்து போய் விட்டது, மற்ற இலை கிளைகள் நின்றிருக்கின்றன. ஆக இதிலும் கூட தேவதா தர்மத்தின் அடித்தண்டு இல்லை. மற்ற மடாதிபதிகள் முதலானவர்கள் பலர் இருக்கின்றனர். உங்களின் புத்தியில் இப்போது முழு பிரகாசமும் (தெளிவு ஏற்பட்டு) உள்ளது.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த முழு மரமும் பழையதாகி விட்டது என்ற நடகத்தின் இரகசியத்தை தெரிந்துக் கொண்டு விட்டீர்கள் என தந்தை சொல்கிறார். கலியுகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சத்யுகம் வர வேண்டும், சக்கரம் கண்டிப்பாக மீண்டும் சுற்ற வேண்டும். இப்போது நாடகம் முடிந்து விட்டது, நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை புத்தியில் வைக்க வேண்டும். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது நடந்தாலும் சுற்றினாலும் நினைவில் இருக்க வேண்டும். மன்மனாபவ, மத்யாஜீபவ என்பதன் அர்த்தமும் இதுவேயாகும். எந்த பெரிய சபையில் வேண்டுமானாலும் சொற்பொழிவாற்ற வேண்டும் என்றால் இதனையே புரிய வைக்க வேண்டும் - ஓ குழந்தைகளே, தேகத்துடன் சேர்த்து, தேகத்தின் அனைத்து தர்மங்களையும் தியாகம் செய்து தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் எரிந்து விடும் (நீங்கும்) என பரமபிதா பரமாத்மா மீண்டும் சொல்கிறார். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். இல்லற விசயங்களில் இருந்து கொண்டு தாமரை மலர் போலாகி என்னை நினைவு செய்யுங்கள். தூய்மையாய் இருங்கள், ஞானத்தையும் தாரணை செய்யுங்கள். இப்போது அனைவரும் துர்க்கதியில் இருக்கின்றனர். சத்யுகத்தில் தேவதைகள் சத்கதியில் இருந்தனர். மீண்டும் பாபா வந்து சத்கதி வழங்குகிறார். அனைத்து குணங்களிலும் நிறைந்தவர், 16 கலைகளும் நிரம்பியவர் . . . இது சத்கதியின் இலட்சணம் ஆகும். இந்த இலட்சணங்களை யார் கொடுப்பது? தந்தை. பிறகு அவருடைய இலட்சணங்கள் யாவை? அவர் ஞானக் கடல், அமைதிக் கடல், . . . ஆவார். அவருடைய மகிமைகள் முற்றிலும் தனிப்பட்டவை ஆகும். அனைத்திலுமே அவர் ஒருவர் தான் (சர்வவியாபி) என்பது அல்ல. தந்தை ஒருவர், ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் குழந்தைகள். இப்போது புதிய படைப்பு படைக்கப்படுகிறது. நாம் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவோம். ஆனால் அந்த மனிதர்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. பிராமண (வர்ணம்) குலம் அனைத்திலும் உயர்ந்ததாகும். பாரதத்தின் வர்ணங்கள்தான் பாடப்படுகின்றன. 84 பிறவிகள் எடுப்பதில் இந்த வர்ணங்களில் கடந்து வர வேண்டும். பிராமணர்கள் இருப்பதே சங்கம யுகத்தில் ஆகும். நல்லது, அமைதி மிகவும் நல்லது. அமைதியின் மாலை கழுத்தில் இருக்கிறது. ஒரு இராணியின் கதை இருக்கிறது. இப்போது சாந்திதாமமாகிய நம்முடைய வீட்டின் நினைவு இருக்கிறது. அமைதியான வீட்டிற்குச் செல்வோம் என அனைவருமே விரும்புகின்றனர், ஆனால் வழியை யார் சொல்வது? அமைதிக் கடலான தந்தையைத் தவிர யாரும் சொல்ல முடியாது. தந்தையின் மகிமை நன்றாக உள்ளது. அமைதிக் கடல், ஆனந்தக் கடல். . . மனித சிருஷ்டியின் விதை ரூபம், எவ்வளவு இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. கிருஷ்ணரை சிருஷ்டியின் விதை ரூபம் என சொல்ல முடியாது. தந்தையின் மகிமையே தனியானது. எங்கும் நிறைந்தவர் என சொல்வதால் மகிமை நிரூபணமாவதில்லை. பரமாத்மா அமர்ந்து தமக்கே பூஜை செய்வார் என்பதும் அல்ல. பரமாத்மா எப்போதும் பூஜைக்குரியவர், அவர் ஒரு போதும் பூஜாரியாக ஆவதில்லை. மேலிருந்து வருபவர்கள் அனைவரும் பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரியாக ஆகின்றனர். நிறைய விசயங்கள் உள்ளன. இப்போது பாருங்கள், நிறைய பேர் வருகின்றனர். ஆனால் கோடியில் சிலர் வெளிப்படுகின்றனர், ஏனென்றால் இலட்சியம் மிக உயர்ந்ததாகும். பிரஜைகள் நிறைய பேர் உருவாகியபடி இருப்பார்கள். ஆனால் கோடியில் சிலர் மாலையின் மணியாக ஆகின்றனர். நாரதரின் உதாரணம். . . நீ தனது முகத்தைப் பார், இலட்சுமியை மணமுடிக்கத் தகுதியுள்ளவனாக ஆகியிருக்கிறாயா? ஒரு சிலர் மட்டுமே இராஜாவாக ஆவார்கள். ஒரு இராஜாவுக்கு அளவற்ற பிரஜைகள் உருவாகுவார்கள். உயர்ந்தவராக ஆவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இராஜாக்களிலும் கூட சிலர் பெரிய இராஜாக்கள், சிலர் சிறியவர்கள். பாரதத்தின் இராஜாக்கள் எவ்வளவு பேர் இருக்கின்றனர், எத்தனை இராஜ்யங்கள் நடந்து வருகின்றன. சத்யுகத்திலும் கூட நிறைய இராஜாக்கள், மகாராஜாக்கள் இருக்கின்றனர், மகாராஜாக்களின் இளவரசர்களும் இருப்பார்கள், அவர்களிடம் நிறைய ஆஸ்தி இருக்கும், இராஜாக்களிடம் குறைவான ஆஸ்தி இருக்கும். இப்போது இருப்பது பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் ஆகும். இப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இது இலட்சுமி நாராயணன் ஆவதற்கான ஞானம் ஆகும். அதற்காகத்தான் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இலட்சுமி- நாராயணரின் பதவியை அடைவீர்களா அல்லது இராமன் - சீதையின் பதவியா? என கேட்கிறார். அனைவருமே சொல்கின்றனர் - இலட்சுமி-நாராயணரின் பதவி. தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியை எடுப்போம். அதிசயமான விசயங்கள் ஆகும், வேறு எங்கும் இந்த விசயங்கள் கிடையாது. எந்த சாஸ்திரங்களிலும் கூட இல்லை. இப்போது உங்கள் புத்தியின் பூட்டு திறந்து விட்டது. நடக்கும் போதும் சுற்றும் போதும், தன்னை ஒரு நடிகர் என புரிந்து கொள்ளுங்கள் என தந்தை புரிய வைக்கிறார். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும், இது எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் -இதற்கே மன்மனாபவ, மத்யாஜீபவ என சொல்லப்படுகிறது. தந்தை அடிக்கடி நினைவூட்டுகிறார், குழந்தைகளே உங்களை திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறேன். இது ஆன்மீக யாத்திரை ஆகும். இதனை தந்தையைத் தவிர வேறு யாரும் செய்விக்க முடியாது. பாரதத்தின் மகிமையையும் செய்ய வேண்டும். இந்த பாரதம் புனிதமான பூமியாகும். அனைவரின் துக்கத்தை நீக்கி சுகத்தை வழங்குபவர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளலான தந்தையின் பிறப்பிடமாகும். அதே தந்தைதான் அனைவரையும் விடுவிப்பவரும் ஆவார். இது பெரிதினும் பெரிதான தீர்த்த ஸ்தானமாகும். பாரதவாசிகள் சிவனின் கோவிலுக்கென்னவோ செல்கின்றனர், ஆனாலும் அவர்கள் தந்தையை அறிந்திருக்கவில்லை. காந்தியை அறிவார்கள், அவர் மிக நல்லவர் என புரிந்து கொள்கின்றனர், ஆகையால் சென்று அவர் மீது மலர்களை தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். இலட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். இப்போது இந்த சமத்தில் அவர்களின் இராஜ்யமாக உள்ளது. விரும்பியதை அவர்களால் செய்ய முடியும். இந்த தந்தையோ அமர்ந்து குப்தமாக தர்ம ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். பாரதத்தில் முதலில் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அசுரர்கள் மற்றும் தேவதைகளுக்கிடையில் சண்டை மூண்டது என காட்டுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட விசயம் எதுவும் கிடையாது. இங்கே யுத்த மைதானத்தில் மாயையின் மீது வெற்றி அடையப்படுகிறது. மாயையின் மீது வெற்றியை கண்டிப்பாக சர்வசக்திவான் தந்தைதான் அடைய வைப்பார். கிருஷ்ணரை சர்வசக்திவான் என சொல்வதில்லை. தந்தைதான் இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார் மற்றபடி சண்டை முதலான விசயம் எதுவும் இல்லை. கிருஷ்ணரை சர்வ சக்திவான் என சொல்ல முடியாது. மனிதர்களில் சர்வசக்திவான் கிறிஸ்தவர்கள் என்பதை இனி பார்க்கப் போகிறோம். அவர்கள் அனைவர் மீதும் வெற்றி அடைய வல்லவர்கள். ஆனால் அவர்கள் உலகின் எஜமானாக ஆவது என்பது சட்டத்தில் இல்லை. இந்த இரகசியத்தை நீங்கள்தான் அறிவீர்கள். இந்த சமயத்தில் சர்வசக்திவாய்ந்த இராஜ்யம் கிறிஸ்தவர்களுடையது ஆகும். இல்லாவிட்டால் அவர்களின் ஜனத்தொகை அனைவரை விடவும் குறைவாக இருக்க வேண்டும், ஏனென்றால் இறுதியில் வந்தார்கள், ஆனால் மூன்று தர்மங்களில் இவர்கள் அனைவரை விடவும் தீவிரமானவர்கள். அனைவரையும் தங்கள் கைவசம் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். இதுவும் நாடகமாக உருவாகியுள்ளது. இவர்களிடமிருந்துதான் நமக்கு மீண்டும் இராஜ்யம் கிடைக்க வேண்டியுள்ளது. இரண்டு குரங்குகள் சண்டையிட்டதில் வெண்ணை மூன்றாமவருக்கு கிடைத்தது என்ற கதையும் உள்ளது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர், வெண்ணை பாரதவாசிகளுக்கு கிடைத்து விடுகிறது. கதை சாதாரணமாகத் தெரிகிறது, அர்த்தம் எவ்வளவு பெரியதாக உள்ளது. மனிதர்கள் நடிகர்களாக இருந்தும் நாடகத்தைப் பற்றி அறியவில்லை. எனினும் இந்த ஞானத்தை ஏழைகள் புரிந்து கொள்கின்றனர். செல்வந்தர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. ஏழைப்பங்காளர், பதித பாவனர் என தந்தைதான் பாடப்பட்டுள்ளார். இப்போது நடைமுறையில் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார். பெரிய பெரிய சபைகளில் நீங்கள் புரிய வைக்க வேண்டும். மெல்ல மெல்ல ஆஹா ஆஹா என்பது வெளிப்படும் என புத்தியில் படுகிறது. கடைசியில் வெற்றி முரசு ஒலிக்கவுள்ளது. இப்போது குழந்தைகளின் மீது கிரகாச்சாரம் ஏற்பட்டபடி இருக்கிறது. கோடு தெளிவாக இல்லை. தடைகள் ஏற்பட்டபடி உள்ளன. எவ்வளவு முயற்சி செய்வீர்களோ அவ்வளவு உயர்ந்த பலன் கிடைக்கப் போகிறது. பாண்டவர்களுக்கு 3 அடி நிலம் கிடைக்கவில்லை - இது இப்போதைய பாடல் ஆகும். ஆனால் அவர்கள்தான் மீண்டும் உலகின் எஜமானாக ஆகப் போகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. நடைமுறையில் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள், இதில் வருத்தப்படுவது ஏதும் கிடையாது. கல்பத்திற்கு முன்பும் கூட இப்படி நடந்தது. நாடகத்தின் அமைப்பில் நிலைத்து நிற்க வேண்டும். அசையக் கூடாது. இப்போது நாடகம் முடிவடைகிறது. போகிறோம் சுகதாமத்திற்கு. உயர் பதவி அடையக் வடிய வகையில் படியாக படிப்பை படிக்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. எந்த விசயத்திற்காகவும் வருத்தமடையக் கூடாது. தனது புத்தியின் கோட்டை எப்போதும் தெளிவாக வைக்க வேண்டும். கிரகாச்சாரத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
2. இல்லற விசயங்களில் இருந்து கொண்டே உறவை பராமரிக்க வேண்டு, வெறுப்படையக் கூடாது. தாமரை மலர் போல் இருக்க வேண்டும். ஆஸ்திக்குரியவராகி அனைவரையும் ஆஸ்திக்குரியவர்களாக ஆக்க வேண்டும்.
வரதானம் :
சுயராஜ்யத்துடன் கூடவே எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வை தாரணை செய்யக் கூடிய உண்மையிலும் உண்மையான இராஜரிஷி ஆகுக.
ஒரு புறம் இராஜ்யம் மற்றொரு புறம் ரிஷி அதாவது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியமுள்ளவர். அப்படிப்பட்ட இராஜரிஷிக்கு எதன் மீதும் - தன் மீது, மனிதர்களின் மீது, பொருட்களின் மீது எதிலும் பற்றுதல் இருக்க முடியாது, ஏனென்றால் தன் சுயராஜ்யம் என்றால் மனம், புத்தி, சம்ஸ்காரம் என அனைத்துமே தனது வசத்தில் இருக்கும், மேலும் வைராக்கியம் இருக்கிறது என்றால் பழைய உலகத்தின் மீது எண்ணத்தில் கூட பற்றுதல் ஏற்பட முடியாது ஆகையால் தன்னை இராஜரிஷி என புரிந்து கொள்ளுங்கள் அதாவது இராஜா என்பதுடன் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உள்ளவராக ஆவதாகும்.
சுலோகன் :
அனைத்து ஆதாரங்களும் உடைபடுவதற்குள் ஒரு தந்தையை தனது ஆதாரமாக்கிக் கொள்பவர்களே புத்திசாலிகள்.
மாதேஸ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகா வாக்கியங்கள்
நீயே தாயும் தந்தையும், நாங்கள் உனது பாலகர்கள், உங்களின் தயவால் அளவற்ற சுகம் . . . இப்போது இந்த மகிமை யாரைக் குறித்து பாடப்பட்டுள்ளது? அவசியமாக பரமாத்மாவைக் குறித்த பாடல் ஆகும், ஏனென்றால் பரமாத்மா தாமே தாய், தந்தையின் ரூபத்தில் வந்து இந்த சிருஷ்டிக்கு எல்லையில்லா சுகத்தைக் கொடுக்கிறார். கண்டிப்பாக பரமாத்மா எப்போதோ சுகத்தின் சிருஷ்டியை உருவாக்கியிருப்பார், ஆகவேதான் அவரை தாய் தந்தை என சொல்லி அழைக்கின்றனர். ஆனால் சுகம் என்பது என்ன பொருள் என மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது. இந்த சிருஷ்டியில் எல்லை கடந்த சுகம் இருந்த போது சிருஷ்டியில் அமைதி இருந்தது, ஆனால் இப்போது அந்த சுகம் இல்லை. இப்போது அந்த சுகம் நமக்குத் தேவை என்ற விருப்பம் அவசியமாக தோன்றுகிறது. பிறகு சிலர் செல்வங்கள், பதார்த்தங்களை வேண்டுகின்றனர், சிலர் குழந்தைகள் வேண்டும் என கேட்கின்றனர், ஒரு சிலரோ இப்படியும் வேண்டுகின்றனர் - நான் பதிவிரதையான பெண்ணாக ஆக வேண்டும், எதுவரை என்னுடைய பதி (கணவர்) உயிருடன் இருக்கிறாரோ, நான் விதவையாக ஆகக் கூடாது, ஆக விருப்பங்கள் சுகத்தைக் குறித்ததாகவே இருக்கின்றன அல்லவா. எனவே பரமாத்மாவும் கூட ஏதாவது ஒரு சமயத்தில் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார். ஆக சத்யுகத்தின் சமயம் சிருஷ்டியில் சொர்க்கம் இருக்கும்போது அங்கே எப்போதும் சுகம் இருக்கும், அங்கே பெண் ஒரு போதும் விதவையாக ஆவதில்லை, ஆக அந்த ஆசை சத்யுகத்தில் நிறைவேறுகிறது, அங்கே எல்லையற்ற சுகம் இருக்கும். மற்றபடி இந்த சமயத்தில் கலியுகமாகத்தான் உள்ளது. இந்த சமயத்தில் மனிதர்கள் துக்கமே துக்கம் அனுபவிக்கின்றனர். மற்றபடி மனிதர்கள் அதிகமான துக்கத்தை அனுபவிக்கும்போது, சொல்லி விடுகின்றனர் - பிரபுவை அடைவதற்காக இனிமையாக ஆக்கி அனுபவிக்க வேண்டும். ஆனால் எப்போது சுயம் பரமாத்மா வந்து நம்முடைய அனைத்து கர்மங்களின் கணக்கை முடிக்கிறாரோ அப்போது நாம் சொல்வோம் - நீயே தாயும் தந்தையும். . . நல்லது. ஓம் சாந்தி.