BK Murli 24 November 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 24 November 2017 Tamil

    24.11.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்போது உங்களது உள்ளத்தில் குஷி என்ற வாத்தியம் முழங்க வேண்டும், ஏனெனில் கையோடு கை கோர்த்து கூடவே அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார், இப்போது உங்களது சுகமான நாட்கள் வந்தே விட்டது.



    கேள்வி:

    இப்போது புது மரத்திற்கான பதியம் போடப்படுகிறது, ஆகையால் எந்த எச்சரிக்கையுடன் அவசியம் இருக்க வேண்டும்?



    பதில்:

    புது மரத்திற்கு அதிக புயல்கள் வருகின்றன. அந்த அளவிற்கு புயல் வருகிறது அதாவது அனைத்து மலர்கள், பழங்கள் கீழே விழுந்து விடுகின்றன. இங்கும் உங்களது புது மரத்திற்கான பதியம் போடப்படுகிறது, இதையும் மாயை மிக வேகமாக அசைக்கும். பல புயல்கள் வரும். மாயை சந்தேக புத்தியுடையவர்களாக ஆக்கிவிடும். புத்தியில் தந்தையின் நினைவு இல்லையெனில் வாடி விடுவீர்கள், கீழே விழுந்தும் விடுவீர்கள், ஆகையால் பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! மாயையிடமிருந்து தப்பிப்பதற்கு வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொள்ளுங்கள், அதாவது தொழில் போன்றவற்றை செய்யுங்கள், ஆனால் புத்தியினால் தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். இது தான் முயற்சியாகும்.



    பாட்டு:

    ஓம் நமச் சிவாய ......



    ஓம்சாந்தி.

    பாபா வந்து புது உலகை படைக்கின்றார், தூய்மை இல்லாதிருக்கும் நம்மை தூய்மையாக்குகின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் நன்றாக ஏற்பட்டு விட்டது. உலகமே கிடையாது, தந்தை வந்து படைக்கின்றார் என்பது கிடையாது. தூய்மை இல்லாமலிருக்கும் நம்மை வந்து தூய்மையாக்குங்கள் என்று தந்தையை அழைக்கின்றோம். உலகம் இருக்கவே செய்கிறது. மற்றபடி பழையதை புதியதாக மாற்றுகின்றார். இந்த ஞானம் மனிதர்களுக்கானது, மிருகங்களுக்கு கிடையாது. ஏனெனில் மனிதர்கள் படித்து பதவி அடைகின்றனர். இப்போது துக்கம் கொடுக்கும் பொருட்களில் தேகம், தேகத்தின் தர்மங்கள் போன்றவை அனைத்தும் வந்து விடுகிறது - ஆக தந்தை இந்த துக்கம் கொடுக்கும் பொருட்களை சுகம் கொடுக்கக் கூடியதாக மாற்றுகின்றார். அதனால் தான் தந்தை கூறுகின்றார் - நான் துக்கதாமத்தை சுகதாமமாக உருவாக்குகிறேன். நானோ துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவன் ஆவேன். நமது சுகமான நாட்கள் எதிரில் வந்து கொண்டிருக்கிறது என்ற வாத்தியம் உங்களுக்குள் ஒலிக்க வேண்டும். கல்பத்திற்குப் பிறகு தந்தை சந்திக்கின்றார் என்பதை அறிவீர்கள், மேலும் இவ்வாறு யாரும் வேறு யாருக்கும் கூறுவது கிடையாது. பக்தர்களுக்கு சத்கதி செய்வதற்காகவே பகவான் வருகின்றார். தன் கையோடு கை கோர்த்து கூடவே அழைத்துச் செல்கின்றார். சுகதாமத்திற்கு அழைத்துச் சென்று விடுவார் என்று கிடையாது. இந்த நேரத்திற்கான முயற்சியின் படி தானாகவே சென்று பலனை அனுபவிப்பீர்கள். யார் எந்த அளவிற்கு மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு நாடகம் பற்றி நன்கு புரிந்துவிடுகிறது. மனிதர்கள் ஏதாவது நாடகம் பார்த்து விட்டு வருகின்றனர் எனில் சிறிது நாட்கள் வரை மனதில் நிலைத்துவிடும். ஆக உங்களுக்கு இதுவும் உறுதியாகிவிடுகிறது. ஏனெனில் இது எல்லையற்ற நாடகமாகும். சத்யுகத்திலிருந்து இந்த நேரம் வரைக்கான நாடகம் புத்தியில் இருக்கிறது. சென்டருக்கு வருகிறீர்கள் எனில் எச்சரிக்கை கிடைக்கிறது. ஆக இது நினைவிற்கு வந்து விடுகிறது. இங்கும் அமர்ந்திருக்கிறீர்கள் எனில் நினைவு இருக்கிறது. உலகம் எல்லையற்ற நாடகமாகும். ஆனால் விநாடிக்கான காரியமாகும். புரிய வைக்கிறீர்கள் எனில் உடனே நாடகம் புத்தியில் வந்து விடுகிறது. யார்? யார்? வந்து தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனர் என்பதை அறிவீர்கள். மூலவதனத்தை நினைவு செய்வதும் விநாடிக்கான காரியமாகும். இரண்டாம் நம்பர் சூட்சுமவதனம். ஆக இங்கும் எதுவும் பெரிய விசயம் கிடையாது. ஏனெனில் அங்கும் பிரம்மா, விஷ்ணு, சங்கரை மட்டுமே காண்பித்திருக்கின்றனர். அதுவும் புத்தியில் உடனேயே வந்து விடுகிறது. பிறகு ஸ்தூலவதனம். இதில் 4 யுகங்களின் சக்கரம் வந்து விடுகிறது. இது தந்தையின் படைப்பாகும், நீங்கள் சொர்க்கத்தை மட்டுமே நினைவு செய்கிறீர்கள் என்பது கிடையாது. சொர்க்கத்திலிருந்து கலியுகத்தின் கடைசி வரைக்கான ரகசியம் உங்களது புத்தியில் இருக்கிறது. ஆக நீங்கள் மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். இந்த மரம் மற்றும் உருண்டை (சிருஷ்டிச் சக்கரம்) சித்திரம் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டும். யார் வந்தாலும் அவர்களுக்கு அமர்ந்து புரிய வைக்க வேண்டும். கருணையுள்ளம் உடையவர்களாக மற்றும் மகாதானிகளாக ஆக வேண்டும். இது அழிவற்ற ஞான இரத்தினம் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் எதிர் காலத்திற்காக செல்வந்தர்களாக ஆகுங்கள்.



    குழந்தைகளே! இதுவரை நீங்கள் என்ன படித்தீர்களோ அவை அனைத்தையும் மறந்து விடுங்கள் என்ற தந்தை புரிய வைக்கின்றார். மனிதர்கள் இறக்கும் தருவாயில் அனைத்தையும் மறந்து விடுவர் அல்லவா! ஆக இங்கும் நீங்கள் உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுகிறீர்கள். புது உலகிற்காக நான் கூறக்கூடிய விசயங்களை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது நாம் அமரலோகத்திற்குச் செல்கிறோம், மேலும் அமர்நாத் (அழிவில்லாத நாதன்) மூலம் அமரக்கதை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மரணலோகம் எப்போது ஆரம்பம் ஆகிறது? என்று சிலர் கேட்கின்றனர். எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ அப்போது என்று கூறுங்கள். அமரலோகம் எப்போது ஆரம்பமாகிறது? எப்போது இராம இராஜ்யம் ஆரம்பமாகிறதோ! அப்போது எவ்வாறு மரம் பரந்து விரிந்திருக்கிறதோ அதே போன்று பக்தியின் பொருட்களும் விரிவானது. இப்போது புது மரத்திற்கான பதியம் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மரத்திற்கு மாயையின் புயல்கள் பாருங்கள் எவ்வளவு வருகின்றன! புயல் வரும் போது தோட்டத்திற்குச் சென்று பாருங்கள் - எவ்வளவு மலர்கள், பழங்கள் கீழே விழுந்து கிடக்கின்றன! சில தப்பித்துக் கொள்கின்றன. இங்கும் மாயையின் புயல்கள் வரும் போது மற்றும் பாபாவின் நினைவு இல்லாததால் வாடி விடுகின்றனர். சிலர் கீழே விழுந்து விடுகின்றனர். ஹாதிமதாயின் விளையாட்டு இருக்கிறது அல்லவா! ஹாதிம் வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொண்டார். ஒருவேளை புத்தியில் பாபாவின் நினைவு இருந்தால் மாயையின் பாதிப்பு ஏற்படாது. தொழில் போன்றவைகளை செய்யாதீர்கள் என்று பாபா கூறுவது கிடையாது. தொழில் போன்றவைகள் செய்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள் - இதில் தான் உழைப்பு இருக்கிறது. இராஜ்யம் அடைவது என்பது குறைந்த விசயமா என்ன! யாராவது எல்லைக்குட்பட்ட இராஜ்யம் அடைகின்றனர் எனில் அதற்கும் எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டியிருக்கிறது! இங்கு சத்யுகத்தின் இராஜ்யம் அடைகிறீர்கள். அவசியம் உழைப்பு செய்ய வேண்டியிருக்கும். பரமாத்மா ஞானக் கடல் என்று கூறப்படுகின்றார். அனைத்தையும் அறிந்தவர் கிடையாது. அனைத்தையும் அறிந்தவர் என்றால் எண்ண ஓட்டத்தை அறிந்தவர் (தாட் ரீடர்), அதாவது உள்ளுக்குள் இருப்பதை அறிந்தவர். உண்மையில் இதுவும் ஒரு மாயா ஜாலம் ஆகும். இதனால் எந்த பலனும் கிடையாது. ஒருவேளை தலைகீழாக தொங்கினாலும் எந்த பலனும் கிடையாது. இன்றைய நாட்களில் நெருப்பையும் கடக்கின்றனர். ஒரு சந்நியாசி இருந்தார், அவர் நெருப்பை கடந்து சென்றார். சீதை அக்னி பிரவேசம் செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம், ஆக இதுவும் நெருப்பை கடப்பதாகும். இவை அனைத்தும் கட்டுக் கதைகளாகும். சாஸ்திரங்கள் அழிவற்றது என்று அவர்கள் கூறுகின்றனர். எப்போது உருவானது? எந்த தேதியும் கிடையாது. மற்ற தர்மத்தினர்களுக்கு தேதி இருக்கிறது. அதை கொண்டு கணக்கிட முடியும். கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று கூறுகின்றர். ஆனால் சொர்கத்தில் என்ன இருந்தது? என்பதை அறியவில்லை. மரத்தின் இரகசியம் உங்களது புத்தியில் இருக்கிறது. இந்த மரத்திற்கு அஸ்திவாரம் எப்படி போடப்பட்டது? பிறகு எப்படி விருத்தியானது? என்பதை நீங்கள் வர்ணிக்க முடியும். பிளவர் வாஷ் (மலர்களை வைக்கும் பாத்திரம்) உருவாக்கும் போது மேலே மலர்களை வைக்கின்றனர். இங்கும் அப்படித் தான் இருக்கின்றன. முதலில் தேவி தேவதா தர்மத்தின் வேர் இருந்தது. பிறகு இந்த அனைத்து தர்மங்கள் அந்த வேரிலிருந்து உருவாகின. அதாவது அவர்களை மலர் பிரஜைகளாக காண்பிக்கின்றனர். ஒவ்வொரு தர்மமும் வருகின்ற பொழுது மலர்கள் நிறைந்த பூந்தோட்டமாக இருந்தது, சிந்தனை செய்யுங்கள். கீழிறங்கும் கலை பின்னால் ஏற்படுகிறது, அதாவது முதலில் தங்கம், வெள்ளி, தாமிரம் இப்போது இரும்பாக இருக்கிறது. படிப்பு உங்களது புத்தியில் இருக்க வேண்டும். ஞானம் நிறைந்த தந்தை அமர்ந்து மரம் மற்றும் நாடகத்தின் முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். இதன் காரணத்தினால் பரமாத்மா ஞானக் கடல், விதை ரூபமானவர் என்று கூறப்படுகின்றார். இவர் மனித சிருஷ்டியின் விதையானவர், மேலே இருக்கின்றார். அது ஆத்மாக்களின் நிராகார உலகமாகும், அதை பிரம்மாண்டம், பிரம்மலோகம் என்றும் கூறுகின்றனர். அங்கு ஆத்மாக்கள் முட்டை வடிவில் இருக்கின்றன. ஆத்மா பிந்து ரூபத்தின் சாட்சாத்காரமும் செய்கின்றனர். எவ்வாறு மின்மிணுப் பூச்சி ஒன்றாக சேர்ந்து பறக்கின்ற போது ஜொலிப்பு ஏற்படுகிறது, ஆனால் அதன் ஒளி குறைவாக இருக்கும். ஆக ஆத்மாக்களும் ஒன்றாக சேர்ந்து பறக்கும். இந்த சிறிய பிந்துவில் 84 பிறவிகளின் பாகம் நிறைந்திருக்கிறது. பாபா உங்களுக்கு முழு நாடகத்தின் சாட்சாத்காரமும் செய்விக்கின்றார். இந்த நாடகத்தில் ஆத்மா நடிகனாக இருக்கிறது, ஆனால் நடிகர்களுக்கு இந்த நாடகத்தைப் பற்றி தெரியாது. நீங்கள் ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும், மற்றொன்று ஞானத்தை. ஞானம் என்பது விநாடிக்கானது, மிக எளிதானது. ஆனால் ஞானம் எப்போதிலிருந்து ஆரம்பமானது? யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மறந்து விடுகிறது. மாயையின் தடைகளும் ஏற்படுகிறது. சரீர வியாதிகள் வந்து விடுகிறது. முன்பு ஒருபோதும் ஜுரம் வந்திருக்காது, ஞானத்திற்கு வந்த பின்பு ஜுரம் வரும் போது ஞானமார்க்கத்தில் பந்தனங்கள் அழிந்து விட வேண்டும் அல்லவா என்ற சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் பாபா கூறுகின்றார் - இந்த வியாதிகள் இன்னும் அதிகம் வரும், கணக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும்.



    பக்தியில் மனிதர்கள் 9 இரத்தினங்களின் மோதிரத்தை அணிந்து கொள்கின்றனர். நடுவில் மதிப்பான இரத்தினத்தை வைக்கின்றனர். சுற்றிலும் குறைந்த மதிப்புடையவைகளை வைக்கின்றனர். சில இரத்தினங்கள் ஆயிரம் ரூபாயுடையதாக, சில 100 ரூபாயுடையதாக ...... இது வைரம் போன்று விலை மதிக்க முடியாத வாழ்க்கை என்று பாபா கூறுகின்றார். ஆக சூரியவம்சத்தில் பிறப்பு எடுக்க வேண்டும். சத்யுகத்தின் மகாராஜா, மகாராணி மற்றும் திரேதாவின் கடைசி ராஜா, ராணிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்! நாடகத்தின் இந்த கதையை மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். வாருங்கள், வந்தால் நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம் - 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிக நல்ல தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்கள் இந்த பதவியை எப்படி அடைந்தனர்? சத்யுகத்தின் இராஜ்யத்தை அடைந்த லெட்சுமி-நாராயணனின் 84 பிறவிகளின் சரித்திர, பூகோளத்தைக் கூறுங்கள். இப்படியெல்லாம் அவர்களுக்கு தூண்டுதல் கொடுத்து அவர்களை உள்ளுக்குள் அழைத்து வர வேண்டும். விநாடிக்கான கதையாகும். ஆனால் பல மடங்கு சிறப்பானது. நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்ல முடியும். கல்லூரி, பல்கலைக்கழகம், மருத்துவமனைகளுக்கு செல்லுங்கள், சென்று நீங்கள் எவ்வளவு நோயாளிகளாக ஆகிவிட்டீர்கள் என்று கூற வேண்டும். நாம் உங்களுக்கு அந்த மாதிரியான மருந்து கொடுக்கிறோம், அதாவது 21 பிறவிகளுக்கு நோயே வராது. மன்மனாபவ என்று பரமாத்மா கூறியிருக்கின்றார் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாக, செல்வந்தர்களாக ஆகிவிடுவீர்கள். வாருங்கள், நாங்கள் பரம்பிதா பரமாத்மாவின் சரித்திரத்தை கூறுகிறோம். பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறுவதில் எந்த சரித்திரமும் கிடையாது. இப்படியெல்லாம் புரிய வைக்க வேண்டும்.



    நல்லது, இன்று பிரசாத நாளாகும். பாட்டு: பூமியை ஆகாயம் அழைத்து ........ இது பழைய பொய்யான உலகம் என்று கூறப்படுகிறது. இது கொடூரமான நரகம் என்று கூறப்படுகிறது. அன்பான உலகிற்கு வந்தே ஆக வேண்டும் என்ற பாட்டும் நன்றாக இருக்கிறது. சூட்சுமவதனத்திலும் அன்பு இருக்கிறது அல்லவா! பாருங்கள் தியானத்தில் (டிரான்சில்) குஷி குஷியாக செல்கின்றனர். சத்யுகத்தில் சுகம் இருக்கிறது, இங்கு ஒன்றும் கிடையாது. ஆக இந்த உலகின் மீது வைராக்கியம் வர வேண்டும். சந்நியாசிகளுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம். உங்களுடையது எல்லையற்ற வைராக்கியம். நீங்கள் முழு உலகையும் மறக்க வேண்டும். பாபா மும்பைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பாபா மும்பையைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கூறவில்லை, ஆனால் அனைத்து சென்டர்களிலும் உள்ளவர்களுக்கு பாபா வழி கூறுகின்றார். நீங்கள் காலை மற்றும் மாலையில் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் பெரிய பெரிய ஹால் இருக்கவே செய்கிறது, மேலும் பலருக்கு உற்றார், உறவினர்கள் இருக்கவே செய்கின்றனர். நாம் பரம்பிதா பரமாத்மாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும் என்று விளம்பரம் செய்ய வேண்டும். இதன் மூலம் அனைவரும் பரமாத்மாவிடமிருந்து தனது பிறப்புரிமையை அடைய வேண்டும். ஒன்றரை மணி நேரம் காலையிலும், ஒன்றரை மணி நேரம் மாலையிலும் நமக்கு ஹால் தேவை. எந்த குழப்பமும் ஏற்படாது, வாத்தியங்களின் ஓசையும் இருக்காது. யாராவது சரியான வாடகைக்கு கொடுத்தால் நாம் எடுத்துக் கொள்கிறோம். நன்றாக இருக்கிறதா? என்று ஏரியாவையும் பார்க்க வேண்டும், வீட்டையும் பார்க்க வேண்டும். நல்ல மனிதனாக இருந்தால், நல்ல மனிதர்களை அழைத்து வருவார். இவ்வாறு 4-5 இடங்களில் சொற்பொழிவு செய்ய வேண்டும். பெரிய பெரிய நகரங்களில் முதல் மாடி கிடைக்கவில்லையெனில் இரண்டாம் மாடி, முடியாத பட்சத்தில் மூன்றாம் மாடியும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஊர் ஊராக செய்ய வேண்டும். சிறிய கட்டிடமாக இருந்தாலும் பரவாயில்லை. முழு கட்டிடமும் தேவையில்லை. 3 அடி இடம் இருந்தால் போதும். அனைவரும் அவரவர்களது உறவினர்களிடம் பேசினால் யாராவது கொடுத்து விடுவர். ஆக இவ்வாறு சென்டர் திறந்து கொண்டே இருக்க வேண்டும். சிலர் வாடகையும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். சிலர் வாங்குவர், ஒருவேளை ஞான அம்பு பதிந்து விட்டால் அவர்களும் வாங்குவதை நிறுத்தி விடுவர். யார் விசாலபுத்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு தாரணை செய்வார்கள். யாருக்கு விசால புத்தியிருக்கிறதோ அவர்கள் மகாரதி என்று கூறப்படுகின்றனர். அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்டர் திறந்து கொண்டே செல்வார்கள். நாம் நமது இராஜ்யத்தை ஸ்ரீமத் மூலம் குப்தமான முறையில் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எப்படி ஸ்தாபனை ஆகிறது? என்பதை வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. தூய்மையாக இருக்க வேண்டும், அவ்வளவு தான். மாயை துக்கம் கொடுத்திருக்கிறது, அதை விட்டு விடுங்கள் என்ற பாபா கூறியிருக்கின்றார். மாயாவை வென்று உலகை வென்றவர்களாக ஆகுங்கள். மனதை வெல்வதற்கான விசயம் கிடையாது. மனம் அமைதியாக சாந்திதாமத்தில் இருக்கிறது. அங்கு சரீரம் இருந்திருந்தால் அமைதியாக இருக்க முடியாது. ஆக சாந்திதாமம் என்றால் பரந்தாமம். இங்கு புரிய வைக்கப்படுகிறது எனில் சிந்தனையும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அங்கு சென்டருக்கு வந்தீர்கள், கதை கேட்டீர்கள், பிறகு தொழிலில் ஈடுபட்டீர்கள், முடிந்தது. இங்கு சுடச் சுட இருக்கிறது, ஆகையால் குழந்தைகள் புத்துணர்வு அடைவதற்காக வருகிறீர்கள். பாரதம் பரமாத்மாவின் பிறப்பிடம் என்பது உலகத்தினர்களின் புத்தியில் இருப்பது கிடையாது. நாம் சரீரத்தை விட்டு அமரலோகம் செல்வோம் என்று இங்கு கேட்கும் போது உங்களுக்கு போதை ஏற்படுகிறது. இன்னார் இறந்து விட்டார் என்று சத்யுகத்தில் இருக்காது. ஆடை பழையதாக ஆகின்ற போது புதியதை குஷியாக எடுப்பர் அல்லவா! வாத்தியங்கள் முழங்கும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) இந்த எல்லையற்ற உலகின் மீது வைராக்கியம் வைத்து இதை புத்தியினால் மறக்க வேண்டும். அழிவற்ற ஞான இரத்தினங்களை தாரணை செய்து எதிர்காலத்திற்காக செல்வந்தர்களாக ஆக வேண்டும்.



    2) புது உலகிற்காக தந்தை என்ன கூறுகிறாரோ அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். படித்த மற்ற அனைத்தையும் மறந்து விட வேண்டும். இவ்வாறு உயிருடன் இருந்து கொண்டே இறந்து விட வேண்டும்.



    வரதானம்:

    ஏக்ரஸ் ஸ்திதி என்ற ஆசனத்தில் மனம், புத்தியை அமர வைக்கக் கூடிய உண்மையான தபஸ்வி ஆகுக.



    தபஸ்விகள் எப்போதும் ஆசனத்தில் அமர்ந்திருப்பர், அவர்கள் ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து தபஸ்யா செய்வர். தபஸ்வி குழந்தைகளாகிய உங்களது ஆசனம் - ஏக்ரஸ் ஸ்திதி, பரிஸ்தா ஸ்திதியாகும். இந்த சிரேஷ்ட ஸ்திதி என்ற ஆசனத்தில் நிலைத்திருந்து தபஸ்யா செய்யுங்கள். எவ்வாறு ஸ்தூல ஆசனத்தில் சரீரம் அமர்கிறதோ அவ்வாறு சிரேஷ்ட ஸ்திதி என்ற ஆசனத்தில் மனம், புத்தியை அமரச் செய்யுங்கள். மேலும் எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ, எப்போது விரும்புகிறீர்களோ - ஆசனத்தில் அமர்ந்து விடுங்கள். இந்த நேரத்தில் சிரேஷ்ட ஸ்திதி என்ற ஆசனத்தில் அமரக் கூடியவர்களுக்கு எதிர்காலத்தில் இராஜ்ய சிம்மாசனம் கிடைத்து விடும்.



    சுலோகன்:

    மற்றவர்களது கருத்துக்களை தனது கருத்துக்களுடன் இணைத்து அனைவருக்கும் மரியாதை கொடுப்பது தான் மரியாதைக்குரியவர்களாக ஆவதற்கான சாதனம் ஆகும்.



    ***OM SHANTI***