BK Murli 31 December 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 31 December 2017 Tamil



    31.12.2017           காலை முரளி        ஓம்சாந்தி          அவ்யக்த பாப்தாதா

    ரிவைஸ்           31.12.1982           மதுபன்



    பாப்தாதாவின் அனைத்து ஆன்மீக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்



    இன்று அனைத்து பிராமண ஆத்மாக்களின் மனதின் அன்பிற்குரியவர், இதயத்தின் பாடல், அன்பின் உறவின் கடமையைச் செய்வதற்காக அதிசயமான முறையில் ஆன்மீக ரோஜா மலர்களின் தோட்டத்தில் மற்றும் அல்லா தனனுடைய பூந்தோட்டத்தில் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். பொதுவாகவே அன்பிற்குரியவர் என்று சொன்னாலும் சரி அல்லது நண்பன் என்று சொன்னாலும் சரி, தோட்டத்தில் சந்திப்பை செய்வார்கள். அந்த மாதிரியான தோட்டம் முழுக்கல்பத்திலும் கிடைக்க முடியாது. இன்று நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள் நாங்களும் எங்களது மனதின் அன்பிற்குரியவருடன் புது வருடப் பிறப்பு நாளைக் கொண்டாடுவோம் என்ற இந்த ஒரே ஒரு ஆர்வத்தில் இருக்கிறார்கள், பாப்தாதா இன்று உடல் சொரூபத்தில் எதிரில் அமர்ந்திருக்கும் ஆன்மீக நண்பர்களுடன் மட்டும் சந்திப்பு செய்யவில்லை, ஆனால் பௌதீக சபையை விட ஒளிவடிவ ரூபமுள்ள குழந்தைகளின் மற்றும் மனதின் அன்பிற்குரிய ஆத்மாக்களின் மிகப் பெரிய சபையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆன்மீக நண்பர்கள், உண்மையான நண்பர்கள் வேறு யாருக்காவது இருப்பார்களா? பாப்தாதாவிற்கும், இந்த மாதிரி மற்றும் இத்தனை நண்பர்கள் யாருக்கும் கிடைக்கவும் இல்லை, கிடைக்கவும் மாட்டார்கள் என்று ஆன்மீகப் பெருமிதம் இருக்கிறது, அனைவரின் இதயத்தின் பாடல் தூரத்திலிருந்தும் மற்றும் அருகாமையிலும் கேட்கிறது. எந்தப் பாடல்? ஓ பாபா! என்ற இதே பாபா, பாபா என்ற பாடல் ஒரே ஒரு இசை மற்றும் இரகசியதோடு நாலாபுறங்களிலிருந்து கேட்க முடிகிறது. குழந்தை என்று சொன்னாலும் சரி அல்லது நண்பர்கள் என்று சொன்னாலும் சரி, அனைவருக்கும் ஒரே வார்த்தை தான் நீங்கள் தான் என்னுடையவர் மேலும் இறைவன் நண்பனும் ஒவ்வொருவருக்கும் நீ என்னுடையவன் என்ற இதைத் தான் கூறுகிறார். ஆஹா என்னுடைய நண்பர்களே பாடல் பாடுங்கள் (சகோதரிகள் பிரம்மா பாபாவிற்கு பிடித்த பாடலை பாடினார்கள். நீ தான் என்னுடைய......)



    இந்த வாயினால் பாடும் பாடலையோ கொஞ்ச நேரம் பாட முடியும், ஆனால் மனதின் பாடலோ அழியாது ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்று புது வருட நாளன்று அனேக குழந்தைகளின் மிக நல்ல எண்ணம், அன்பான வார்த்தைகள் பாப்தாதாவிடம் முன்பே வந்து சேர்ந்து விட்டது. இன்றைய தினம் குஷியாக கொண்டாடுவீர்கள் இல்லையா! ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள் கூறுகிறீர்கள். பாப்தாதாவும் அனைத்து மனதிற்குப் பிடித்தமான ஆன்மீக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார்.



    எப்பொழுதும் விதி மூலமாக வளர்ச்சியை அடைந்து கொண்டே இருப்பீர்கள், எப்பொழுதும் அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பி இருப்பீர்கள். எப்பொழுதும் ஃபரிஷ்தாவாகி அனைத்து உடலின் உறவுகளிலிருந்து விலகி, பறந்து கொண்டே இருப்பீர்கள். எப்பொழுதும் கண்களில், இதயத்தில் தந்தையை நிரப்பி ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இந்த முழு ஈடுபாட்டில் மூழ்கி இருப்பீர்கள். எப்பொழுதும் வந்திருக்கும் சோதனைகளை, பிரச்சனைகளை, வீணான எண்ணங்களை தண்ணீரில் கிழித்த கோட்டிற்கு சமமாகக் கடந்து சென்று மதிப்புடன் தேர்ச்சி பெறுப்வர் ஆவீர்கள். அந்த மாதிரி சிரேஷ்ட சுப விருப்பங்களுடன் வாழ்த்துக்கள் கொடுக்கிறோம். ஒவ்வொரு விலைமதிக்க முடியாத இரத்தினத்தின் பாடலை பாடுகின்றோம். இன்றைய நாளில் பாடுவீர்கள், ஆடுவீர்கள் இல்லையா! இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருங்கள், எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்மீக பரிசு கொடுத்துக் கொண்டே இருங்கள். எப்படி பெரிய மனிதர்கள் எங்காவது செல்கிறார்கள் மற்றும் அவர்களிடம் யாராவது வருகிறார் என்றால் வெறும் கையோடு செல்ல மாட்டார்கள். நீங்கள் அனைவரும் மிகப்பெரியவர்கள் தான் இல்லையா! ஒருபொழுதும் எந்த ஒரு பிராமண ஆத்மாவுடன் மற்றும் யாருடனாவது சந்திக்கிறீர்கள் என்றால் ஏதாவது கொடுக்காமல் எப்படி சந்திப்பீர்கள்? ஒவ்வொருவருக்கும் சுபபாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்களின் பரிசைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். விசேஷத் தன்மையை கொடுங்கள், பெறுங்கள், குணத்தைக் கொடுங்கள் மற்றும் பெறுங்கள், அப்படிப்பட்ட காட்கி லிஃப்டை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருங்கள், யாரேனும் எந்த பாவனையுடனோ, விருப்பத்துடனோ வந்திருக்கலாம், ஆனால் நீங்கள் சுபபாவனை என்றா பரிசைக் கொடுங்கள். சுபபாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்களின் பரிசின் கையிருப்பு எப்பொழுதும் நிரம்பியிருக்கட்டும், இருந்தும் எதுவரை தான் சுபபாவனையுடன் பார்ப்பது என்பது எண்ணத்தின் அளவில் கூட உருவாக வேண்டாம். எதற்கும் ஒரு அளவு இருக்கிறதா அல்லது இல்லையா! இந்த எண்ணம் கூட இந்த தங்கப் பரிசின் கையிருப்பு சேமிப்பாகவில்லை என்று நிரூபிக்கிறது.



    நீங்கள் வள்ளல், உருவாக்குபவர், வரமளிக்கும் வள்ளலின் குழந்தைகள், பாக்கிய ரேகையை இழுக்கக்கூடிய பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமார் மற்றும் பிரம்மா குமாரிகள் எனவே எப்பொழுதும் களஞ்சியம் நிரம்பி இருக்கட்டும். இந்த வருடம் யாரையும் காலியாக இருக்க விடாதீர்கள். வெறுங்கையோடு செல்லவும் கூடாது, வெறுங்கையோடு வரவும் கூடாது. அனைவருக்கும் கொடுக்கவும் வேண்டும். அனைவரிடமிருந்து பெறவும் வேண்டும். இது பரிசை வழங்குவதற்கான வருடம், ஒரு நாள் மட்டுமல்ல, ஆனால் முழு வருடமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு விநாடி, கடந்து சென்ற ஒவ்வொரு எண்ணத்திலும் புதுமையை கொண்டு வருபவர்கள் நீங்கள். புதுநாள், புது இரவு என்றோ அனைவரும் கூறுகிறார்கள், ஆனால் சிரேஷ்ட ஆத்மாக்களின் புதிய விநாடி, புதிய எண்ணம் எப்பொழுது இருக்கும் என்றால் வரக்கூடிய புது உலகத்தின் புதுப் பொலிவு உலகத்து ஆத்மாக்களுக்கு கனவு ரூபத்தில் அல்லது காட்சியின் ரூபத்தில் தென்படுமோ, அப்பொழுது தான் இதுவரையிலும் உலகின் ஆத்மாக்களும், விநாஷத்திற்கு பிறகு என்னவாகும்? என்பதை இப்போது வரை உலக ஆத்மாக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர், ஆனால் இந்த வருடம் அனைத்து ஆதார சொரூப ஆத்மாகளின் ஒவ்வொரு விநாடி மற்றும் ஒவ்வொரு எண்ணம் புதியதிலும் புதியதாக, உயர்ந்ததிலும் உயர்ந்ததாக, நல்லதிலும் நல்லதாக இருந்தது என்றால், நாலாபுறங்களிலிருந்து புது உலகின் பொலிவை பார்ப்பதற்கான செய்தி பரவும், மேலும் என்னவாகும் என்பதற்கு பதிலாக இப்படி ஆகும், அந்த மாதிரி அதிசயமான உலகம் விரைவில் வரட்டும், மேலும் விரைவில் உருவாக்க வேண்டும் என்பதில் ஈடுபட்டு விடுவார்கள். எப்படி ஸ்தாபனையின் தொடக்கத்தில் கனவு மற்றும் சாட்சாத்காரத்தின் லீலை விசேஷமாக இருந்தது. அதேபோல் இறுதியிலும் இதே விசித்திர லீலை பிரத்யக்ஷம் செய்வதற்குக் காரணமாகும் நாலாபுறங்களிலிருந்து இதுவே தான், இதுவே தான் என்ற இதே ஓசை ஒலிக்கும், மேலும் இந்த ஓசை அனேகர்களின் பாக்கியத்தை சிரேஷ்டம் ஆக்குவதற்குப் பொறுப்பாகும். ஒன்றிலிருந்து அனேக தீபங்கள் எரிந்து விடும்.



    அப்படியானால் இந்த வருடம் என்ன செய்ய வேண்டும்? உண்மையான தீபாவளியைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும், பழைய விஷயங்களின், பழைய சம்ஸ்காரத்தின் தசரா கொண்டாடுங்கள். ஏனென்றால் தசராவிற்குப் பிறகு தான் தீபாவளி இருக்கும். இன்று மனதின் பிரியமானவர் ஆத்மாக்களுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார். மனதின் உள்ள விஷயங்களை யாரோடு பேசுவார்கள்? நண்பர்களோடு பேசுவார்கள் இல்லையா! நல்லது. வாழ்த்துக்களோ கிடைத்து விட்டது. வாழ்த்துக்களின் கூடவே புது வருடத்திற்கான பரிசையும் எப்பொழுதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை பரிசுகள் வேண்டும்? ஒன்று, ஒன்றில் அதிகம் நிரம்பியிருக்கிறது, மேலும் அனேகமும் ஒன்று, மிக நல்ல பரிசாக ஒன்றோ பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் வைர சாவி கொடுத்திருகிறார், அதன் மூலம் எந்த பொக்கிஷம் விரும்புகிறீர்களோ, அது ஆஜராகி விடும், வைர சாவி எது? ஒரே ஒரு வார்த்தை பாபா இதை விட அழகான சாவி ஏதாவது கிடைக்குமா? சத்யுகத்திலும் இந்த மாதிரி சாவி கிடைக்காது. அனைவரும் இந்த வைர சாவியை பத்திரமாக வைத்திருக்கிறீர்கள் தான் இல்லையா! திருட்டு போய் விடவில்லையே? சாவியைத் தொலைத்தீர்கள் என்றால் அனைத்து பொக்கிஷங்களையும் தொலைத்தீர்கள், எனவே சாவியை எப்பொழுதும் உங்கள் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். சாவி வளையம் (கீ செயின்) இருக்கிறதா? அல்லது தனியாக சாவி மட்டும் இருக்கிறதா? எப்பொழுதும் அனைத்து சம்பந்தங்களினால் நினைவு சொரூபமாகி இருங்கள். அந்த மாதிரி கீ செயினின் பரிசு கிடைத்திருக்கிறது இல்லையா! மிக நல்ல பரிசோ இந்த பரிசு கிடைத் திருக்கிறது இல்லையா! மிக அழகான பரிசோ இந்த சாவி. அதன் கூடவே இந்த வருடத்திற்காக உறுதிமொழி என்ற கங்கணமும் கொடுக்கிறோம். இந்த உறுதிமொழி கங்கணம் எது? ஏற்கனவே கூறியிருந்தோம் இல்லையா! ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு ஆத்மாவின் தொடர்பில் எப்பொழுதும் புதியதிலும் புதியது. அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்தது. கீழே உள்ள விஷயங்களைப் பார்க்காதீர்கள். கீழான நிலையையும் வைத்துக் கொள்ள கூடாது. எப்பொழுதும் உயர்ந்த நிலையிருப்பது, உயர்ந்த தந்தை, உயர்ந்த குழந்தைகள், உயர்ந்த நிலை மேலும் அனைவருக்கும் உயர்ந்ததிலும் உயர்ந்த சேவை செய்ய வேண்டும், இது தான் உறுதி மொழி என்ற கங்கணம்.



    கூடவே அனைத்து குணங்களின் அலங்காரப் பெட்டகம், வகை வகையான செட்டின் அலங்கார பெட்டகம், எந்த நேரம் எந்த அலங்காரம் வேண்டுமோ, அந்த நேரம் அதே செட்டில் அலங்காரம் செய்து எப்போதும் அலங்காரத்துடன் இருக்க வேண்டும். சிலநேரம் சகித்துக் கொள்ளும் சக்தியின் செட் அணியுங்கள். ஆனால் முழு செட்டையும் அணிய வேண்டும். செட்டை மட்டும் அணியாதீர்கள், காதுகள் மூலமாகவும் சகிப்புத் தன்மை இருக்கட்டும், கைகள் மூலமாகவும் சகிப்புத் தன்மையின் அலங்காரம் இருக்க வேண்டும், அந்த மாதிரி அவ்வப்போது விதவிதமான அலங்காரம் செய்து கொண்டு உலகின் எதிரில் ஃபரிஷ்தா ரூபத்தில் மற்றும் தேவதை ரூபத்தில் வெளிப்பட்டு விடுவீர்கள், இந்த திரிமூர்த்தி பரிசை எப்பொழுதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.



    நட்பை வைத்து நடந்து கொள்ளத் தெரியும் இல்லையா! இரட்டை வெளிநாட்டினரோ, நண்பர்களை மிக நன்றாக உருவாக்குகிறார்கள், ஆனால் அழியாத நட்பை வைத்துக் கொள்ளுங்கள், இரட்டை வெளிநாட்டினர் விடுவதிலும் திறமைசாலிகள், உருவாக்குவதிலும் திறமைசாலிகள். இப்பொழுது இருக்கிறது, மேலும் அடுத்த நேரம் இல்லை என்று அப்படியோ செய்ய மாட்டீர்கள் இல்லையா! பாப்தாதா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்து, எப்படி சமிக்ஞை கிடைத்த உடனேயே நான்கு மூலைகளிலிருந்து அறிமுகம் செய்து விட்டார்கள், தந்தையைத் குழந்தைகளை தேடினார், மேலும் குழந்தைகள் அறிந்து கொண்டனர். இந்த விசேஷத்தன்மையைப் பார்த்து பாப்தாதாவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். எனவே எப்பொழுதும் மாயாவை வென்றவராக இருங்கள். நல்லது.



    அந்த மாதிரி தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அழியாத அன்பின் உறவை வைத்து நடந்து கொள்ளக் கூடிய அழியாத நண்பர்களுக்கு, எப்பொழுதும் மலர்களின் தோட்டத்தில் கையோடு கை கோர்த்து துணைவியாகி மெதுவாக நடந்து சுற்றி வரக்கூடிய, எப்பொழுதும் ஈஸ்வரிய பொன்னான பரிசை காரியத்தில் கொண்டு வரக்கூடிய எப்பொழுதும் நிரம்பிய, எப்பொழுதும் மாஸ்டர் வள்ளல், மாஸ்டர் அனைவரின் பாக்கியத்தை உருவாக்கக்கூடிய, நாலாபுறங்களிலும் உள்ள அந்த மாதிரி அன்பிற்குரிய சகயோகிக் குழந்தைகளுக்கு, சாகாரி (பௌதீக உடல்) மற்றும் ஆகாரி (ஓளி வடிவமான உடல்) ரூபமுடைய குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    வெளிநாட்டு டீச்சர்களுடன் சந்திப்பு:

    பொறுப்பிலிருக்கும் ஆசிரியர்களைப் பார்த்து பாப்தாதா மிகவும் மகிழ்ச்சியடைகிறார், எவ்வளவு ஈடுபாட்டுடன், அன்புடன் அவரவர்களின் ஸ்தானத்தில் இருந்து கொண்டே அனைவரும் எப்பொழுதும் சக்தி சொரூப நிலையில் நிலைத்திருந்து அனைத்து சக்திகளின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்பொழுது சாதாரண பெண் மற்றும் குமாரி ரூபம் இல்லை, ஆனால் சர்வ சிரேஷ்ட சேவாதாரி ஆத்மாக்கள். நீங்கள் பாப்தாதாவின் அழகு பெட்டகத்திலிருக்கும் அழகுப் பொருட்கள், உங்கள் அனைவரையும் பார்த்து அனைத்து ஆத்மாக்களும் தந்தையைத் தெரிந்து கொள்கிறார்கள், ஒவ்வொரு பொறுப்பிலிருக்கும் ஆசிரியரின் மேல், உலக மாற்றம் செய்வதற்கான பொறுப்பு இருக்கிறது. நான் எல்லைக்கப்பாற்பட்ட சேவாதாரி என்று தன்னை நினைக்கிறீர்களா? ஒரு பிரதேசத்திற்கு நன்மை செய்பவர் என்றோ நினைக்கவில்லையே? ஒரு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் கூட, நீங்களோ லைட் ஹவுஸ் இல்லையா! நாலாபுறங்களிலும் லைட் (ஒளி) கொடுப்பவர், எனவே சின்னஞ்சிறு பல்பாகி ஒரு இடத்திற்கு மட்டும் வெளிச்சம் கொடுக்கிறீர்களா அல்லது லைட் ஹவுஸ் ஆகி உலகிற்கு வெளிச்சம் கொடுக்கிறீர்களா? நீங்கள் சாதாரண லைட்டா, மிகவும் சக்திசாலியான லைட்டா அல்ல லைட் ஹவுஸா? தைரியமோ மிக நன்றாக வைத்திருக் கிறீர்கள். மிக நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள், வரும் நாட்களிலும் மிக நன்றாக செய்து கொண்டே இருங்கள். டீச்சர்களோ, எப்பொழுதும் மாயவை வென்றவர்கள் தான் இல்லையா? ஒருவேளை டீச்சர்களிடம் மாயா வருகிறது என்றால் மாணவர்களின் நிலைமை என்னாவாகும்? உங்களிடம் ஒரு தடவை மாயா வருகிறது என்றால் அவர்களிடம் 10 தடவை வரும் எனவே டீச்சர்களிடம் மாயா அந்த மாதிரி வரவேண்டாம், நமஸ்காரம் செய்வதற்கு வரட்டும்.



    பொறுப்பிருக்கும் ஆசிரியர்களின் சொரூபம் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்த, மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற இருக்கையில் எப்பொழுதும் அமர்ந்து இருங்கள். டீச்சர்கள் இருக்க வேண்டிய இடமே உயர்ந்த நிலை. சென்டரில் இருக்கவில்லை, ஆனால் உயர்ந்த மேடையில் இருக்கிறீர்கள். உயர்ந்த மேடை என்றால் இதய சிம்மாசனத்தில் மாயா வரமுடியாது, கீழே இறங்கினீர்கள் என்றால், மாயா வரும், பாண்டவர்களும் பாப்தாதாவின் சகயோகி வலது கரம் தான் இல்லையா! கதியை (அமரும் ஸ்தானம்) கவனித்துக் கொள்பவருக்கு வலது கரம் என்று கூறப்படுகிறது. அனைத்து பாண்டவர்களும் வெற்றியடைந்தவர்கள் தான் இல்லையா! இதுவரையிலும் மாயாவுடன் அதிக காலம் விளையாட்டு விளையாடினீர்கள். இப்பொழுது விடை கொடுங்கள். இன்றிலிருந்து நிரந்தரமாக விடை கொடுத்ததின் வாழ்த்துக்களைக் கொண்டாடுங்கள். மிக நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, மேலும் வாய்ப்பை எடுத்துக் கொண்டும் இருக்கிறீர்கள், நல்லது.



    பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

    ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார், சங்கமயுகத்தில் ஒவ்வொரு ஆத்மாவின் பாக்கியம் அவரவர்களுடையது.. மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிரேஷ்ட பாக்கியம் இருக்கிறது, ஏன்? ஏனென்றால் எப்பொழுது சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான தந்தையின் குழந்தை ஆகியிருக்கிறீர்கள் என்றால் சிரேஷ்ட பாக்கியம் ஆகிவிட்டது இல்லையா! இதை விட எந்த தந்தையும் சிரேஷ்டமானவர், இல்லை, இதை விட எந்த பாக்கியமும் சிரேஷ்டமானது, இல்லை, உயர்ந்திலும் உயர்ந்தவர் தந்தை. பாக்கியத்தை உருவாக்குபவர் எனது தந்தை என்ற இதே நினைவு இருக்கிறது தான் இல்லையா! இதை விடப் பெரிய போதை வேறு என்ன இருக்க முடியும்? உலகியல் முறையில் என்னுடைய தந்தை இஞ்சினியர், டாக்டர், நீதிபதி அல்லது பிரதம மந்திரி என்று குழந்தை களுக்கு போதை இருக்கிறது, ஆனால் உங்களுக்கு என்னுடைய தந்தை பாக்கியத்தை உருவாக்குபவர் என்ற போதை இருக்கிறது, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், இதே போதை எப்பொழுதும் இருக்கிறதா அல்லது எப்போதாவது மறந்து விடுகிறதா? பாக்கியத்தை மறந்தீர்கள் என்றால், என்னவாகும்? பிறகு பாக்கியத்தை அடைவதற்கு பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கும், தொலைந்து போன பொருளை அடைவதற்கு கடின முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கிறது. தந்தை வந்து கடின முயற்சி செய்வதிலிருந்து காப்பாற்றியிருக்கிறார், அரைக்கல்பம் கடின உழைப்பு செய்தீர்கள். விவஹாரத்திலும் உழைப்பு, பக்தியில், தர்மத்தின் க்ஷேத்திரத்தில் அனைத்திலும் கடின உழைப்பு தான் செய்தீர்கள், மேலும் இப்பொழுது அனைத்து உழைப்பிலிருந்து விடுபட்டு விட்டீர்கள், இப்பொழுது விவஹாரம் பரமாத்ம காரியத்தின் ஆதாரத்தில் சுலபமாகி விட்டது. நிமித்தமாகி செய்து கொண்டிருக்கிறீர்கள். கருவி என்று புரிந்து செய்பவர்களுக்கு எப்பொழுதுமே எளிதாக அனுபவம் ஆகும். விவஹாரம் அல்ல, ஆனால் ஒரு விளையாட்டு, மாயாவின் புயல் அல்ல, ஆனால் இது நாடகத்தின் அனுசாரம் முன்னேறிச் செல்வதற்கான பரிசு, எனவே உழைப்பது விடுபட்டு விட்டது இல்லையா! புயல் அதாவது பரிசைப் பெறுவதிலோ முயற்சியோ, உழைப்போ இருப்பதில்லை தான் இல்லையா! அந்த மாதிரி கடின உழைப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய, எப்பொழுதும் பாக்கியத்தை உருவாக்குபவர் என்பதன் கூடவே மாஸ்டர் பாக்கியத்தை உருவாக்குபவர் ஆகி இருப்பவர், இவரைத் தான் சிரேஷ்ட ஆத்மா என்று கூறுவது.



    சென் ஆண்டானியா தேசத்தை சேர்ந்தவர்களுடன் சந்திப்பு அனைவரும் தன்னை விசேஷ ஆத்மா என்று நினைக்கிறீர்களா?



    எந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள்? நேரில் சந்திப்பு செய்யும் அளவிற்கான பாக்கியம் உலகத்தில் எத்தனை ஆத்மாக்களுக்கு கிடைக்கும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன வேண்டும்? எப்பொழுதும் தன்னுடைய இதே பாக்கியத்தை நினைவில் வைத்தீர்கள் என்றால் உங்களுடைய பாக்கியத்தின் (ப்ராப்தியின்) குஷியைப் பார்த்து இன்னும் அருகில் வருவார்கள், மேலும் தன்னுடைய பாக்கியத்தை உருவாக்குவார்கள். எப்பொழுதும் குஷியாக இருங்கள். தந்தையின் குழந்தையாக ஆகியிருக்கிறீர்கள் என்றால், ஆஸ்தியாக என்ன கிடைத்தது? குஷி கிடைத்தது இல்லையா! எனவே இந்த ஆஸ்தியை எப்பொழுதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். விட்டுச் செல்லாதீர்கள். குஷியின் பொக்கிஷத்தின் எஜமானன் ஆகி விட்டீர்கள் என்றால், எப்பொழுதுமே குஷியில் பறந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் ட்ரை (முயற்சி) செய்வதற்கான விசயமே இல்லை. ஒருவேளை முயற்சி என்று கூறினால் அழுது கொண்டே இருப்பீர்கள், குழந்தை ஆவதிலும் முயற்சி செய்ய வேண்டியது இருக்கிறதா என்ன? எனவே முயற்சி என்பதும் வேண்டாம், அழுவதும் வேண்டாம், முயற்சி செய்வோம் என்ற வார்த்தையை இங்கே விட்டு விட்டுச் செல்லுங்கள். தந்தை மற்றும் ஆஸ்தி எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கட்டும். இணைந்து இருங்கள். எங்கு தந்தை இருக்கிறாரோ, அங்கு அனைத்து பொக்கிஷங்களும் தானாகவே இருக்கும். தந்தை என்னுடன் இருக்கிறார் என்ற இந்த ஒரு விஷயத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். ஆஸ்தி என்னுடைய பிறப்புரிமை.



    புதுவருடத்திற்கான வாழ்த்துக்கள் (இரவு 12 மணி)

    புது வருடத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் முழு வருடத்திற்காக வாழ்த்துக்கள் உரித்தாகுக, அந்த மாதிரி விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் யாரெல்லாம் தந்தையை தெரிந்து கொண்டார்களோ, மேலும் தந்தையை பிரத்யக்ஷ்ம் செய்வதற்கான பொறுப்பு கிரீடத்தை அணிந்திருக்கிறார்களோ, அந்த மாதிரி நிரந்தர சேவாதாரி, நெருக்கமான, கீரிடம் அணிந்த சிம்மாசனதாரிக் குழந்தைகளுக்கு அவரவர்களின் பெயரோடுசேர்த்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.



    லண்டனில் இருப்பவர்களுக்கு பொறுப்பாளராக இருக்கும் ஜனக் (ஜானகி தாதி) குழந்தை, மேலும் கூடவே ஆதி இரத்தினம் ரஜனி குழந்தை, உடன் முரளி குழந்தை மற்றும் மிக அதிக அன்பிற்குரிய சிறு குழந்தை போன்ற தந்தைக்கு சமமான ஜெயந்தி குழந்தைக்கு, மேலும் கூடவே எந்தெந்த குழந்தைகள் சேவையில் இருக்கிறார்கள், எப்படி பிரிஜ்ராணி தன்னுடைய வெளிப்பாட்டை நன்றாக செய்து கொண்டிருக்கிறார்கள், என்ன சேவை செய்து கொண்டிருக்கிறார்களோ, அதில் ஆன்மீகம் நிரம்பியிருக்கிறது, அந்த மாதிரி அனைத்து குழந்தைகளும் அவரவர்களின் பெயரோடு கூறி வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.



    புது வருடம், புது உலகம், புது உற்சாகம் மற்றும் இந்த வருடத்தில் எப்பொழுதுமே தினசரி உறசவம் என்று புரிந்து உற்சாகம் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதே சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டு இருங்கள். நல்லது.



    அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் இதயப் பூர்வமான, உயிருக்கும் மேலான அன்பு நினைவுகள் உரித்தாகுக.



    வரதானம்:

    வாய்மொழியின் கூடவே உள் உணர்வு மூலமாக ஆன்மீக எண்ண அலைகளைப் பரப்பும் சேவை செய்யக் கூடிய இரட்டை சேவாதாரி ஆகுக,



    எப்படி வாய்மொழி மூலமாக சேவை செய்கிறீர்கள், அதேபோல் வாய்மொழியின் கூடவே உள் உணர்வு மூலமாக சேவை செய்தீர்கள் என்றால் வேகமாக சேவை நடக்கும், ஏனென்றால் கேட்ட வார்த்தையை தேவையான நேரத்தில் மறந்து விடுவார்கள், ஆனால் எண்ண அலைகள் ரூபத்தில் மனம் மற்றும் புத்தியில் முத்திரை இடப் பட்டு விடுகிறது. எனவே இந்த சேவை செய்வதற்காக உள் உணர்வில் யாருக்காகவும் வீணான எண்ண அலைகள், இருக்கக்கூடாது. வீணான எண் அலைகள் ஆன்மீக எண்ன அலைகள் முன்பு ஒரு சுவர் ஆகிவிடுகிறது. எனவே மனம் புத்தியை வீணான எண்ண அலைகளிலிருந்து விடுவித்து வையுங்கள். அப்பொழுதுதான் இரட்டை சேவை செய்ய முடியும்.



    சுலோகன்:

    முறையீடு செய்வதற்குப் பதிலாக நினைவில் இருந்தீர்கள் என்றால் அனைத்து அதிகாரமும் கிடைத்து விடும்.



    ***OM SHANTI***