BK Murli 1 February 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 February 2018 Tamil

    01.02.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இது மனிதரிலிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான இறைத் தந்தையின் உலக பல்கலைக் கழகமாகும், இந்த நிச்சயம் உறுதிப்படும்போது நீங்கள் இந்தப் படிப்பை படிக்க முடியும்.



    கேள்வி:

    மனிதரிலிருந்து தேவதையாக ஆவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் இந்த சமயத்தில் எந்த முயற்சியை செய்கிறீர்கள்?



    பதில்:

    கண்களை குற்றப் (தீய) பார்வையிலிருந்து (கிரிமினலிலிருந்து) குற்றமற்றதாக (சகோதரத்துவம்) (சிவில்) ஆக்கும் முயற்சி, கூடவே இனிமையானவர்களாக ஆவதற்கான முயற்சி. சத்யுகத்தில் அனைவரின் கண்களும் (பார்வை) விகாரமற்றதாகத்தான் இருக்கும். அங்கே இந்த முயற்சி நடப்பதில்லை. இங்கே தூய்மையற்ற சரீரத்தில், தூய்மையற்ற உலகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மா சகோதர-சகோதரன் என்பதை நிச்சயப்படுத்தி கண் பார்வையை தூய்மையானதாக ஆக்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்

    .

    கேள்வி:

    பக்தர்களின் எந்த ஒரு விசயத்தினால் எங்கும் நிறைந்தவர் என்ற விசயம் தவறாக ஆகிறது?



    பதில்:

    ஓ பாபா! நீங்கள் வரும்போது நாங்கள் உங்கள் மீது பயாவோம்.... என சொல்லும் போது, வர வேண்டும் என்பதும் அவர் இங்கே இல்லை என்பதையும் உறுதிப் படுத்துகிறது.



    ஓம் சாந்தி.

    தனது ஆத்மாவின் சுயதர்மத்தில் அமர்ந்திருக்கிறீர்களா என தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் கேட்கிறார். ஒரே ஒரு தந்தையைத்தான் சுப்ரீம் ஆத்மா அல்லது பரம ஆத்மா என சொல்கிறோம் என்பதை அறிவீர்கள். கண்டிப்பாக பரமாத்மாவாகவும் இருக்கிறார். பரமபிதாவாக இருக்கிறார் அல்லவா. பரமபிதா என்றால் பரமாத்மா. இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள்தான் புரிந்து கொள்ள முடியும். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட இந்த ஞானத்தை நீங்கள் அனைவரும்தான் கேட்டிருந்தீர்கள். ஆத்மா மிகச் சிறியது, சூட்சும மானதாகும், அதனை இந்தக் கண்களால் பார்க்க முடியாது என நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவைப் பார்த்த மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆம், பார்க்க முடியலாம் - ஆனால் தெய்வீகப் பார்வையின் மூலம் அதுவும் நாடகத்தின் திட்டத்தின் படியே நடக்கும். பக்தி மார்க்கத்தில் கூட இந்தக் கண்களுக்கு காட்சி எதுவும் தெரிவது கிடையாது. திவ்ய திருஷ்டி (தெய்வீகப் பார்வை) கிடைக்கிறது, அதன் மூலம் சைதன்யத்தில் (உணர்வு) பார்க்கின்றனர். திவ்ய திருஷ்டி என்றால் சைதன்யத்தில் பார்ப்பதாகும். ஆத்மாவுக்கு ஞானத்தின் கண்கள் கிடைக்கின்றன. நிறைய பக்தி செய்கின்றனர், அது தீவிரமான பக்தி எனப்படுகிறது என தந்தை புரிய வைத்திருக்கிறார். மீராவுக்கு காட்சி கிடைத்தபோது நடனம் ஆடினார். அந்த சமயத்தில் வைகுண்டம் இருக்க வில்லையல்லவா. மீராவுக்கு (காட்சி கிடைத்து) 500-600 வருடங்கள் ஆகியிருக்கும். எது நடந்து முடிந்திருக்கிறதோ அது திவ்ய திருஷ்டியின் மூலம் பார்க்கப்படுகிறது. அனுமான், கணேசன் (விநாயகர்) முதலானவர்களின் படத்தை மிகவும் பக்தி செய்து, செய்து அதில் லயித்துப் போனது போல் ஆகி விடுகின்றனர். காட்சி கிடைக்கக் கூடும், ஆனால் அதன் மூலம் முக்தி எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முக்தி, ஜீவன் முக்திக்கான பாதை முற்றிலும் தனிப்பட்டதாகும். பாரதத்தில் பக்தி மார்க்கத்தில் அளவற்ற கோவில்கள் இருக்கின்றன. அங்கே சிவலிங்கமும் கூட வைக்கின்றனர். சிலர் சிறியதாக உருவாக்குகின்றனர், சிலர் பெரியதாக உருவாக்குகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படி அந்த பரமாத்மாவும் இருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அளவு ஒன்றுதான். நாம் அனைவரும் சகோதரர்கள், ஆத்மாக்கள் அனைவரும் சகோதரன் - சகோதரனாக இருக்கின்றனர் என சொல்லவும் செய்கின்றனர். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஒருவர் ஆவார். மற்ற அனைவரும் சகோதரன் - சகோதரனாக இருக்கின்றனர், நடிப்பை நடிக்கின்றனர். இவை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். இவை ஞானத்தின் விசயங்களாகும், இதனை ஒரு தந்தைதான் புரிய வைக்கிறார். யாருக்குப் புரிய வைக்கிறாரோ அவர்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். முதன் முதலில் ஒரே ஒரு நிராகார தந்தை புரிய வைக்கிறார். அவரைப் பற்றித்தான் பிறகு எங்கும் நிறைந்தவர், கல், முள் அனைத்திலும் இருக்கிறார் என சொல்லிவிடுகின்றனர். இது சரியில்லை அல்லவா. பாபா தாங்கள் வரும்போது உங்கள் மீது பலியாகி விடுவோம் என ஒரு புறம் சொல்கின்றனர். நீங்கள் எங்கும் நிறைந்தவர் என சொல்வது கிடையாது. நீங்கள் வந்தால் சமர்ப்பணம் ஆகி விடுவோம் என சொல்கின்றனர். எனவே அவர் இங்கே இல்லை என்று அர்த்தமாகிறது அல்லவா. என்னுடையவர் நீங்கள், வேறு யாரும் கிடையாது. ஆக, கண்டிப்பாக அவரை நினைவு செய்ய வேண்டும் அல்லவா. இதனை தந்தைதான் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இது ஆன்மீக ஞானம் எனப்படுகிறது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர் என பாடப் பட்டிருப்பதன் கணக்கையும் புரிய வைத்திருக்கிறார். வெகுகாலமாக ஆத்மாக்களாகிய நீங்கள் பிரிந்திருக்கிறீர்கள். நீங்கள் தந்தையிடம் இராஜயோகம் கற்பதற்காக வந்திருக்கிறீர்கள். தந்தை சேவகனாக இருக்கிறார். பெரிய மனிதர்கள் கையொப்பம் இடும்போது கீழே கீழ்படிந்த சேவகன் என குறிப்பிடுகின்றனர். தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் சேவகனாக இருக்கிறார். குழந்தைகளே நான் உங்களுடைய சேவகன் என சொல்கிறார். பகவானே வாருங்கள், வந்து தூய்மையற்ற எங்களை தூய்மைப்படுத்துங்கள் என நீங்கள் எவ்வளவு ஆவலோடு அழைக்கிறீர்கள். தூய்மையான உலகத்தில்தான் தூய்மையானவர்கள் இருப்பார்கள். இவை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். மற்ற அனைத்தும் காதுக்கு (மட்டுமே) இனிய விசயங்களாகும். இது இறைத் தந்தையின் உலகப் பல்கலைக்கழகம் ஆகும். இலட்சியம், குறிக்கோள் என்ன? நம்பிக்கை இருந்தது என்றால் வக்கீல், சர்ஜனிடம் கற்றுக் கொள்வார்கள். இலட்சியம், குறிக்கோள் பற்றியே தெரியாது என்றால் வர மாட்டார்கள். நாம் மனிதரிலிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணராக ஆகிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இது உண்மையிலும் உண்மையான நரனிலிருந்து நாராயணர் ஆகக் கூடிய கதை. கதை என ஏன் சொல்லப்படுகிறது? ஏனென்றால் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட இந்த ஞானத்தைக் கற்றிருந்தீர்கள். ஆக நடந்து முடிந்ததை கதை என சொல்லிவிடுகின்றனர், இது உண்மையிலும் உண்மையான நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான கல்வியாகும். புதிய உலகத்தில் தேவதைகள், பழைய உலகத்தில் மனிதர்கள் இருக்கின்றனர். தேவதைகளிடம் இருக்கும் தெய்வீக குணங்கள் மனிதர்களிடம் கிடையாது. மனிதர்கள் அவர்களை தேவதை என சொல்கின்றனர், பாடுகின்றனர் - நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர், 16 கலைகளும் நிறைந்தவர், முற்றிலும் விகாரமற்றவர். தம்மைப் பற்றிச் சொல்கின்றனர் – நாங்கள் பாவிகள், கீழான விகாரிகள் (விகாரம் நிறைந்தவர்கள்). தேவதைகள் எப்போது இருந்தனர்? சத்யுகத்தில் இருந்தார்கள் என கண்டிப்பாக சொல்வார்கள். கலியுகத்தில் இருந்தார்கள் என சொல்ல மாட்டார்கள். இன்றைய நாட்களில் மனிதர்கள் தமோபிரதானமாக இருக்கும் காரணத்தால் தந்தையின் பட்டப் பெயர்களையும் கூட தனக்கு வைத்துக் கொண்டு விடுகின்றனர். உண்மையில் உயர்வாக ஆக்கக் கூடிய ஸ்ரீ ஸ்ரீ (உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்) ஒரு தந்தைதான் ஆவார். உயர்வான தேவதைகளின் மகிமை தனிப்பட்டதாகும். இப்போது கலியுகமாக இருக்கிறது. ஒன்று எல்லைக்குட்பட்ட சன்னியாசம், மற்றொன்று எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம் என சன்னியாசிகளைப் பற்றிக் கூட பாபா புரிய வைத்திருக்கிறார். நாங்கள் வீடு வாசல் அனைத்தையும் விட்டு விட்டோம் என அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இன்றைய நாட்களில் பாருங்கள் இலட்சாதிபதிகளாகி அமர்ந்திருக்கின்றனர். சன்னியாசம் என்றால் சுகத்தை தியாகம் செய்வதாகும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம் செய்கிறீர்கள். ஏனென்றால் இந்த பழைய உலகம் முடியப் போகிறது என புரிந்து கொள்கிறீர்கள், ஆகையால் இதன் மீது வைராக்கியம் (பற்று நீங்கி) இருக்கிறது. அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு பின்னர் உள்ளே நுழைந்து வந்திருக்கின்றனர். இப்போது மலைகளின் குகைகளில் வசிப்பதில்லை. குடிசைகளைக் கட்டினாலும் கூட எவ்வளவு செலவு செய்கின்றனர். உண்மையில் குடிசை கட்டுவதற்கு எந்த செலவும் கிடையாது. பெரிய பெரிய மாளிகைகளை கட்டி வசிக்கின்றனர். இன்றைய நாட்களில் அனைவருமே தமோபிரதானமாக இருக்கின்றனர். இப்போது கலியுகமாக இருக்கிறது. சத்யுகத்தின் தேவதைகளின் படங்கள் மட்டும் இல்லை என்றால் சொர்க்கத்தின் பெயர் அடையாளமே மறைந்து போயிருக்கும். இப்போது மனிதரிலிருந்து தேவதையாக ஆக வேண்டும் என உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. அரைக் கல்ப காலம் பக்தி மார்க்கத்தின் கதைகள் இருக்கின்றன. கேட்டு விட்டு ஏணியில் இறங்கியபடி வந்தீர்கள், பிறகு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பின் துல்லியமாக அதே நாடகம் மீண்டும் நடக்கும். பக்தியை விடுங்கள் என யாருக்கும் சொல்லக் கூடாது என பாபாவும் புரிய வைத்திருக்கிறார். ஞானம் வந்து விட்டது என்றால் பிறகு தானாகவே பக்தி விடுபட்டு விடும். நாம் ஆத்மா என புரிந்து கொள்கிறோம். இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து நாம் ஆஸ்தியைப் பெற வேண்டும். முதல் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் அறிமுகம் தேவை. அந்த நிச்சயம் ஏற்பட்டு விட்டது என்றால் எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து புத்தி விலகி விடுகிறது. இல்லற விசயங்களில் இருந்தபடி புத்தியின் தொடர்பு தந்தையுடன் ஈடுபட்டு விடும். சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்தபடி புத்தியில் ஒரு தந்தையின் நினைவு இருக்க வேண்டும் என தந்தை தாமே சொல்கிறார். தேகதாரிகளின் நினைவு இருக்கக் கூடாது. அது ஸ்தூலமான யாத்திரை ஆகும். இது உங்களின் ஆன்மீக யாத்திரை ஆகும், இதில் ஏமாற்றம் அடையக் கூடாது. பக்தி மார்க்கமே இரவு ஆகும். ஏமாற்றம் அடைய வேண்டியிருக்கிறது. இங்கே ஏமாற்றத்தின் விசயமே கிடையாது. நினைவு செய்வதற்காக யாரும் உட்காருவதே இல்லை. பக்தி மார்க்கத்தில் கிருஷ்ணரின் பக்தர்கள் நடந்து சுற்றியபடி கிருஷ்ணரை நினைவு செய்ய முடியாதா என்ன? உள்ளத்தில் அவருடைய நினைவு நிலைத்து விடுகிறது அல்லவா. ஒரு முறை ஏதாவது ஒரு பொருளை பார்த்து விட்டால் அந்தப் பொருள் நினைவில் இருக்கும். ஆக நீங்கள் வீட்டில் அமர்ந்தபடி சிவபாபாவை நினைவு செய்ய முடியாதா? இது புதிய விசயமாகும். கிருஷ்ணரை நினைவு செய்வது பழைய விசயம் ஆகும். சிவபாபாவின் பெயர் உருவம் என்ன? எங்கும் நிறைந்தவர் என்றால் என்ன? யாருக்கும் தெரியாது. யாராவது சொல்ல வேண்டும் அல்லவா. ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை பரமபிதா பரமாத்மா என குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஆத்மாவை பரமாத்மா என சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் ஆத்மா சோல் எனப்படுகிறது. பரலௌகிக தந்தையை அறிந்த மனிதர் ஒருவர் கூட கிடையாது. அந்த தந்தைதான் ஞானக்கடலாக இருப்பவர், மனிதரிலிருந்து தேவதை ஆக்கக் கூடிய ஞானம் அவருக்குள் இருக்கிறது. தினம் தினம் ஆழமான விசயங்களைக் கூறுகிறேன் என தந்தை சொல்கிறார். முக்கியமான விசயம் நினைவினுடையதாகும். நினைவு செய்வதுதான் மறந்து போய் விடுகிறது. தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என பாபா தினம் தோறும் சொல்கிறார். ஆத்மாவாகிய நான் புள்ளியாக இருக்கிறேன். ஜொலிக்கிறது வினோதமான நட்சத்திரம் என சொல்லவும் செய்கின்றனர். ஆத்மா சரீரத்திலிருந்து வெளியேறி விட்டது என்றால் இந்தக் கண்களால் பார்க்க முடியாது. ஆத்மா வெளியேறி விட்டது என சொல்லப்படுகிறது. சென்று வேறொரு சரீரத்தில் பிரவேசமாகியுள்ளது. ஆத்மாவாகிய நாம் எப்படி மறு பிறவி எடுத்து, இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியிருக் கிறோம் என நீங்கள் அறிவீர்கள், முன்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாய் இருந்தீர்கள், உங்களின் இல்லற தர்மம் தூய்மையாய் இருந்தது. இப்போது இரண்டுமே தூய்மையற்றதாய் ஆகியுள்ளன. எப்போது இரண்டுமே தூய்மையாய் இருக்கும் போது அவர்களுக்கு பூஜை செய்கின்றனர். நீங்கள் தூய்மையானவர், நாங்கள் தூய்மையற்றவர்கள். அங்கே இரண்டும் தூய்மை, இங்கே இரண்டுமே தூய்மையற்றவை. ஆக, முதலில் தூய்மையாய் இருந்து பிறகு தூய்மையற்றவர்களாக ஆகினீர்களா அல்லது தூய்மையற்றவர்களாகவே பிறவி எடுத்தீர்களா? முதலில் ஆத்மாக்களாகிய நீங்கள்தான் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள் என தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். பிறகு நீங்களேதான் தூய்மையற்ற பூஜாரிகளாக ஆகியிருக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள். முழு உலகின் வரலாறு புவியியலை நீங்கள் அறிவீர்கள். யார் யார் இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர், எப்படி இராஜ்யம் கிடைத்தது? இந்த வரலாறும் கூட நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள், பிறருக்குத் தெரியாது. நீங்களும் கூட இப்போது தெரிந்து கொள்கிறீர்கள், முன்னர் தெரிந்திருக்கவில்லை, கல்புத்தியாக இருந்தீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடைசியின் ஞானம் இருக்கவில்லை, நாஸ்திகர்களாக (ஆஸ்திக்கு தகுதியற்று) இருந்தீர்கள். இப்போது ஆஸ்திகராக (ஆஸ்திக்கு உரிமையுடையவர்களாக) ஆவதன் மூலம் எவ்வளவு குஷி மிக்கவர்களாக ஆகி விட்டீர்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதே இந்த தேவதை போல ஆவதற்காகும். இந்த சமயத்தில் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும்.நீங்கள் ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதரன்-சகோதரியாக இருக்கிறீர்கள் அல்லவா. கிரிமினல் (தேக அபிமானத்தின் குற்றப்) பார்வை இருக்கக் கூடாது. இந்த சமயத்தில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. கண்கள்தான் அனைத்தையும் விட கிரிமினலாக இருக்கின்றன. அரைக் கல்பம் கிரிமினலாக இருக்கிறது, அரைக் கல்பம் சிவில் - ஆக (தூய்மையாக) இருக்கிறது. சத்யுகத்தில் தேவதைகளின் பார்வை தூய்மையாக இருக்கும், இங்கே தூய்மையற்றதாக இருக்கிறது. இது குறித்து சூர்தாஸின் கதையை அமர்ந்து சொல்கின்றனர். நான் தூய்மையற்ற உலகத்தில், தூய்மையற்ற சரீரத்தில் தான் வர வேண்டியிருக்கிறது என தந்தை சொல்கிறார். யார் தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கின்றனரோ அவர்களைத்தான் தூய்மையாக்க வேண்டும்.



    கிருஷ்ணர் மற்றும் இராதை இருவரும் வேறு வேறு இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என நீங்கள் அறிவீர்கள். இளவரசன், இளவரசியாக இருந்தனர். பின்னர் சுயம்வரம் ஆன பிறகு இலட்சுமி - நாராயணராக ஆகும்போது அவர்களுடைய இராஜ்யம் பாடப்படுகிறது. வருடத்தின் எண்ணிக்கையும் கூட அதிலிருந்து தான் (சகாப்தம்) கணக்கிடப்படுகிறது. சத்யுகத்தின் ஆயுளையே இலட்சக்கணக்கில் சொல்லி விடுகின்றனர். 1250 வருடங்கள் என தந்தை சொல்கிறார். இரவு பகலுக்கான வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. பிரம்மாவின் இரவு அரைக் கல்பம், பிறகு பிரம்மாவின் பகல் அரைக் கல்பம் ஆகும். ஞானத்தின் மூலம் சுகம் இருக்கிறது, பக்தியின் மூலம் துக்கம் இருக்கிறது. இந்த அனைத்து விசயங்களையும் தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். பிறகும் கூட சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே, தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். சுயதர்மத்தில் நிலைத்திருங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள். அவர்தான் தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவர். நினைவு செய்து செய்து நீங்கள் தூய்மையானவர்களாக ஆகி விடுவீர்கள். இறுதிக்காலத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல கதி ஏற்படும். தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் அல்லவா. ஆக, நீங்கள் சொர்க்கத்தின் எஜமானாக இருந்தீர்கள் என நினைவு படுத்துகிறார். இப்போது தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள், ஆகையால், அங்கே செல்ல தகுதியற்றவர்களாக இருக்கிறீர்கள், எனவே தூய்மையடையுங்கள். நான் ஒரே ஒரு முறைதான் வர வேண்டியிருக்கிறது. ஒரு இறைவன். ஒரு உலகம்தான் இருக்கிறது. மனிதர்களின் பல வழிகள் இருக்கின்றன, பல விசயங்கள் இருக்கின்றன, எவ்வளவு நாக்குகளோ அவ்வளவு விசயங்கள். இங்கிருப்பதே ஒரு வழி, அத்வைத வழியாகும். (சிருஷ்டி) மரத்தில் பாருங்கள் எவ்வளவு வழிகள். மரம் எவ்வளவு பெரிதாக ஆகிவிட்டது. அங்கே ஒரு வழி, ஒரு இராஜ்யம் இருந்தது. நாம்தான் உலகின் எஜமானாக இருந்தோம் என நீங்கள் அறிவீர்கள். பாரதம் எவ்வளவு செல்வம் மிகுந்த நாடாக இருந்தது. அங்கே அகால மரணம் ஒரு போதும் ஏற்படுவதில்லை. இங்கே பாருங்கள், அமர்ந்திருந்த படியே போய் விடுகின்றனர். நாலாபுறங்களிலும் மரணம் உள்ளது. அங்கே உங்கள் ஆயுள் அதிகமாக இருந்தது. இப்போது நீங்கள் ஈஸ்வரனுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தி மனிதரிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக நீங்கள் யோகேஸ்வரன், யோகேஸ்வரியாக இருக்கிறீர்கள், பிறகு இராஜ, இராஜேஸ்வரியாக ஆகப் போகிறீர்கள். இப்போது ஞான, ஞானேஸ்வரியாக இருக்கிறீர்கள். மீண்டும் இராஜ, இராஜேஸ்வரியாக எப்படி ஆவது? ஈஸ்வரன் ஆக்கியிருந்தார். இவர்களுக்கு இராஜயோகத்தை யார் கற்பித்தது என இப்போது நீங்கள் அறிவீர்கள். ஈஸ்வரன் கற்பித்தார். அங்கே அவர்களுடைய இராஜ்யம் 21 பிறவிகளுக்கு நடக்கிறது. அவர்கள் ஒரு பிறவி தான புண்ணியம் செய்வதன் மூலம் இராஜாவாக ஆகின்றனர். இறந்து விட்டால் முடிந்தது. அகால மரணம் அனைவருக்குமே வந்து கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் இந்த சட்டம் கிடையாது. அங்கே காலன் சாப்பிட்டு விட்டான் என சொல்வதில்லை. ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுத்துக் கொள்கின்றனர் - பாம்பு சட்டையை மாற்றுவது போல. அங்கே எப்போதும் குஷியே குஷி இருக்கும். கொஞ்சம் கூட துக்கத்தின் விசயமே இருக்காது. நீங்கள் சுகதாமத்தின் எஜமானாக ஆவதற்காக இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. இந்த பழைய உலகத்திலிருந்து எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம் செய்ய வேண்டும். சரீர நிர்வாகத்திற்கான கர்மங்கள் செய்து கொண்டே ஆன்மீக யாத்திரையில் இருக்க வேண்டும்.



    2. முயற்சி செய்து கண்டிப்பாக கண்களை (பார்வை) தூய்மையானதாக (சிவில்) ஆக்க வேண்டும். இலட்சியம், குறிக்கோளை புத்தியில் வைத்து மிக மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும்.



    வரதானம் :

    சுப சங்கல்பத்தின் (எண்ணத்தின்) மந்திரத்தின் மூலம் அமைதியின் சக்தியை பயன் படுத்தக் கூடிய வெற்றி சொரூபம் (விரும்பியதை அடைந்தவர்) ஆகுக.



    அமைதி சக்தியின் விசேஷ இயந்திரம் சுப எண்ணம் ஆகும். இந்த சங்கல்பத்தின் மந்திரத்தின் மூலம் எதை விரும்புகிறீர்களோ அதனை வெற்றி சொரூபத்தில் பார்க்க முடியும், இதற்கான பிரயோகத்தை (உபயோகத்தை) முதலில் தன் மீது செய்யுங்கள். உடலின் வியாதியின் மீது உபயோகித்துப் பாருங்கள், அப்போது அமைதியின் சக்தியின் மூலம் கர்ம பந்தனத்தின் ரூபம், இனிமையான கர்ம சம்மந்தத்தின் ரூபமாக மாறிவிடும். கர்ம போகத்தின் (கர்மங்களின் தீய விளைவுகளை அனுபவிப்பது) கடினமான பந்தனம் அமைதி சக்தியின் மூலம் நீரின் மேல் போட்ட கோடு போல அனுபவம் ஆகும். ஆக உடலின் மீதும், மனதின் மீதும், சம்ஸ்காரங்களின் மீதும் அமைதியின் சக்தியை உபயோகியுங்கள் மற்றும் வெற்றி சொரூபம் ஆகுங்கள்.



    சுலோகன்:

    குலதீபம் ஆகி தனது நினைவின் ஜோதியின் மூலம் பிராமண குலத்தின் பெயரை பிரகாசிக்கச் செய்யுங்கள் (வெளிப்படுத்துங்கள்).



    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs