BK Murli 18 January 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 18 January 2018 Tamil

    18.01.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    பிதாஸ்ரீ அவர்களின் புண்ணிய நினைவு நாளில் சொல்வதற்காக

    பாப்தாதாவின் மதுர மகா வாக்கியங்கள்.

     

    இனிமையான குழந்தைகளே! தனது சுபாவத்தை மிகவுமே இனிமையானதாகவும் அமைதியானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், இவர் தேவதை போல இருக்கிறார் என அனைவரும் சொல்லும்படியாக பேச்சு, நடத்தைகள் இருக்க வேண்டும்.

     

    கேள்வி:

    இதயத்தை சுத்தமாக்குவதற்காக எந்த ஆர்வம் இருக்க வேண்டும்?

     

    பதில்:

    இதயத்தை சுத்தமாக்க வேண்டும் என்றால் யோகி ஆகக் கூடிய மற்றும் பிறரை ஆக்கக் கூடிய ஆர்வம் இருக்க வேண்டும். யோகத்தின் நிலையின் மூலம்தான் இதயம் சுத்தமாக ஆகிறது. தேகத்தின் மீது மோகம் இருக்கிறது, தேக அபிமானம் இருக்கிறது என்றால் நம்முடைய நிலை மிகவும் பக்குவமற்றதாக உள்ளது என புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம அபிமானியாய் இருக்கும் குழந்தைகள்தான் உண்மையான வைரமாக ஆகின்றனர், ஆகையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆத்ம அபிமானியாக ஆகக் கூடிய பயிற்சி செய்யுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள்.

     

    ஓம் சாந்தி.

    இப்போது பகவான் நம் முன்னால் அமர்ந்து ஞானத்தின் பாடலை பாடுகிறார் அல்லது நம்மை ஞானத்தின் நடனம் ஆட வைக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். இந்த ஞான நடனத்தின் மூலம் நீங்கள் தேவதைகள் போல எப்போதும் சுகம் மிக்கவர்களாக மற்றும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருப்பீர்கள். பகவானைத்தான் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அல்லது உலகைப் படைப்பவர் என சொல்லப்படுகிறது. பாபா நமக்காக சொர்க்கத்தின் பரிசைக் கொண்டு வந்திருக்கிறார் என ஆத்மா புரிந்து கொள்கிறது. அவர்தான் படைப்பவர் ஆவார். சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குவதற்காக இராஜயோகம் கற்பிக்கிறார். தந்தையை மற்றும் உலகத்தின் எஜமான் என்பதை நினைவு செய்யுங்கள் என சொல்கிறார். தந்தை எல்லைக்கப்பாற்பட்ட எஜமான் எனும்போது கண்டிப்பாக எல்லைக்கப்பாற்பட்ட பெரிய உலகத்தைத்தான் படைப்பார். குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகமுமே வீடாகும் அதாவது நடிப்பை நடிக்கும் இடமாகும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து எல்லைக்கப்பாற்பட்ட உலகம் அல்லது வீட்டை உருவாக்குகிறார், அது சொர்க்கமாகும். ஆக இப்படிப்பட்ட தந்தைக்கு குழந்தைகள் எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும். உலகை படைப்பவரான தந்தை நேரடியாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறார், நான் உங்களை உலகின் எஜமானாக ஆக்க வந்திருக்கிறேன் எனும்போது உங்களுடைய சுபாவம் மிகவும் முதல் தரமாக இருக்க வேண்டும். உங்களுடைய நடத்தையைக் கண்டு அனைவரும் இவர் தேவதை போல இருக்கிறார் என சொல்ல வேண்டும். தேவதைகள் பெயர், புகழ் வாய்ந்தவர்கள் ஆவர். இவருடைய சுபாவம் முற்றிலும் தேவதை போல் உள்ளது, மிகவும் இனிமையான, அமைதியான சுபாவம் உடையவர் என சொல்கின்றனர். ஆக இப்படிப்பட்ட குழந்தைகளைக் கண்டு தந்தையும் குஷியடைகிறார். பாபா சொர்க்கத்தின் எஜமானாக ஆக்க வருகிறார் என்றால் நீங்கள் எப்படிப்பட்ட உதவியாளர்களாக ஆக வேண்டும். சேவையில் தானாக ஈடுபட வேண்டும் - நான் களைத்து விட்டேன், நேரமில்லை என்றிருக்கக் கூடாது. தகுந்த நேரத்தில் அனைத்து காரியங்களையும் செய்வதில் நன்மை இருக்கிறது. யக்ஞ சேவைக்கான பரிசை சிவபாபா கொடுக்கிறார். பாபா குழந்தைகளின் தெய்வீக நடத்தையை பார்த்தால் பலியாகி விடுகிறார்.

     

    இனிமையான குழந்தைகளே, நம்மை படிப்பிப்பவர் யார் என நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இந்த சைதன்யமான பெட்டியில் சைதன்யமான வைரம் அமர்ந்திருக்கிறது, அவரே சத்-சித்-ஆனந்த சொரூபமானவர். சத்திய தந்தை உங்களுக்கு உண்மையிலும் உண்மையான ஸ்ரீமத் கொடுக்கிறார். தந்தையுடையவராக ஆகும்போது ஒவ்வொரு காலடியிலும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் படிக்க வேண்டும், ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். அடிக்கடி இந்த பேட்ஜை பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் தந்தை மற்றும் ஆஸ்தியின் நினைவு வரும். நினைவு செய்தாலே நீங்கள் முழு உலகிற்கும் அமைதியின் தானத்தைக் கொடுத்தது போலாகும். ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிரஜைகளையும் உருவாக்க வேண்டும், வாரிசுகளையும் உருவாக்க வேண்டும். யாரும் முரளியை தவற விடக் கூடாது. பாபா மிகவும் அன்போடு புரிய வைக்கிறார் - இனிமையான குழந்தைகளே தன் மீது இரக்கம் காட்டுங்கள், கட்டளையை மீறாதீர்கள். குழந்தைகள் தகுதியுள்ளவர்களாக ஆகி சொர்க்கத்தின் எஜமானாக ஆக வேண்டும் என்று தந்தையின் உள்ளத்தில் குழந்தைகளை எப்போது சுகம் மிக்கவர்களாக ஆக்குவதற்கான எவ்வளவு முதல் தரமான ஆசை உள்ளது. யார் நறுமணம் வீசும் மலர்களாக இருக்கின்றனரோ அவர்கள் கவர்ந்து ஈர்க்கின்றனர். யார் எப்படி இருக்கின்றனரோ அப்படி வழி காட்டும் ஒளியை (சர்ச் லைட்) எடுப்பதற்காக முயற்சிக்கின்றனர். நறுமணம் வீசும், குணவானாக இருக்கும் குழந்தைகளைப் பார்த்து அன்பில், குஷியில் கண்கள் பனித்து (நனைந்து) விடுகின்றன. ஏதாவது கஷ்டம் ஏற்பட்டது என்றால் பாபா வழிகாட்டும் ஒளியை கொடுக்கிறார்.

     

    இனிமையான குழந்தைகளே, நீங்கள் இந்த பழைய உலகத்தில் எந்த ஆசையும் வைக்கக் கூடாது என பாபா புரிய வைக்கிறார். நாம் சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு உயர்வான ஆசையை மட்டும் இப்போது வைக்க வேண்டும். எங்கும் நின்று விடக் கூடாது. பார்க்கக் கூடாது. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு பக்கமே (குறிக்கோளை) பார்த்துக் கொண்டிருங்கள், அப்போதுதான் அசைக்க முடியாத, உறுதியான நிலை நிரந்தரமாக இருக்கும். இப்போது இந்த உலகம் அழியத்தான் வேண்டும், இதனுடைய நிலை மிகவும் (சீரியஸாக) ஆபத்தில் அழியக்கூடியதாக உள்ளது. இந்த சமயத்தில் அனைத்தையும் விட அதிகமான கோபம் இயற்கைக்கு ஏற்படுகிறது, ஆகையால் அனைத்தையும் அழித்துவிடுகிறது. இந்த இயற்கை இன்னும் அதிகமாக கோபத்தை காட்டப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு பழைய உலகத்தையும் மூழ்கடிக்கப் போகிறது. நில நடுக்கத்தால் வீடுகள் முதலானவை அனைத்தும் விழப் போகின்றன. பல விதமாக மரணங்கள் ஏற்படும். இவை அனைத்தும் நாடகத்தின் திட்டமாக உருவாகியுள்ளன. இதில் யார் மீதும் குறை சொல்ல முடியாது. வினாசம் ஆகத்தான் வேண்டியுள்ளது, ஆகையால் நீங்கள் இதிலிருந்து புத்தியின் தொடர்பை நீக்க வேண்டும். நீங்கள் அனைத்தையும் இன்ஷியூர் (காப்பீடு) செய்து விட்டீர்கள், ஆகையால் உங்களுக்கு எந்த விதமான கவலையும் கிடையாது. உங்களுடைய அனைத்துமே நற்பலனை அடைந்து கொண்டிருக்கின்றன.

     

    ஆஹா சத்குரு ஆஹா ! என இப்போது நீங்கள் சொல்வீர்கள். அவர் (சத்குரு) நமக்கு இந்த வழியை காட்டினார். ஆஹா அதிர்ஷ்டமே ஆஹா! ஆஹா நாடகமே ஆஹா! உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படுகிறது - பாபா உங்களுக்கு நன்றி, எங்களுடைய இரண்டு கைப்பிடி அவலை எடுத்துக் கொண்டு பத்திரமாக எங்களுக்கு எதிர்காலத்தில் நூறு மடங்கு திருப்பிக் கொடுக்கிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு இதில் கூட மிகவும் விசாலமான புத்தி தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு அளவற்ற ஞானச் செல்வத்தின் பொக்கிஷிம் கிடைக்கிறது எனும்போது அபாரமான குஷி இருக்க வேண்டும் அல்லவா. எந்த அளவு இதயம் சுத்தமாக இருக்குமோ அந்த அளவு மற்றவர்களையும் சுத்தமாக்குவோம். யோகத்தின் (நினைவின்) நிலையின் மூலமே இதயம் சுத்தமாகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு யோகி ஆகக்கூடிய மற்றும் ஆக்கக்கூடிய ஆர்வம் இருக்க வேண்டும். தேகத்தின் மீது பற்று இருக்கிறது என்றால், தேக அபிமானம் இருக்கிறது என்றால் நம்முடைய நிலை மிகவும் பக்குவமற்று இருக்கிறது என புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம அபிமானம் உள்ள குழந்தைகள்தான் உண்மையான வைரங்களாக ஆகின்றனர், ஆகையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆத்ம அபிமானியாக ஆகக் கூடிய பயிற்சியை செய்யுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா எனும் வார்த்தை அனைத்தையும் விட மிகவும் இனிமையானதாகும். தந்தை மிகவும் அன்போடு குழந்தைகளை கண்ணிமைகளுக்குள் வைத்து உடன் அழைத்துச் செல்லப் போகிறார். இப்படிப்பட்ட தந்தையின் நினைவின் போதையில் சுக்கு நூறாகி விட வேண்டும் (மூழ்கிப் போக வேண்டும், அனைத்தையும் மறந்து போக வேண்டும்). தந்தையை நினைவு செய்து செய்து குளிர்ந்து போய் விட வேண்டும். எப்படி தந்தை அபகாரம் செய்பவர்களுக்கும் உபகாரம் செய்கிறாரோ அது போல நீங்களும் தந்தையை பின்பற்றுங்கள். சுகம் நிறைந்தவர்களாக ஆகுங்கள்.

     

    குழந்தைகளாகிய நீங்கள் இந்த படிப்பின் மூலம் எவ்வளவு உயர்ந்த வருமானத்தை ஈட்டுகிறீர்கள். நீங்கள் கோடான கோடிகளின் அதிபதி ஆகிறீர்கள். பாபா உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்குகிறார். தந்தை உங்களை அளவற்ற பொக்கிஷிங்களால் துலாபாரம் செய்கிறார், அது 21 பிறவிகளுக்கு உடன் இருக்கும். அங்கே துக்கத்தின் பெயர் கிடையாது. ஒருபோதும் அகால மரணம் ஏற்படாது. மரணத்தைக் கண்டு ஒருபோதும் பயப்பட மாட்டீர்கள். இங்கே எவ்வளவு பயப்படுகின்றனர், அழுகின்றனர். உங்களுக்கு குஷி இருக்கிறது - இந்த பழைய சரீரத்தை விட்டுப் போய் புதிய உலகத்தில் இளவரசனாக ஆகப்போகிறோம். நீங்கள் இந்த பழைய உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கிக் கொண்டே இருங்கள், இந்த தேகத்தையும் மறந்தபடி இருங்கள். ஆத்மாக்களாகிய நாம் சுதந்திரமானவர்கள். ஒரு தந்தையின் நினைவைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. வாழ்ந்தபடியே மரணத்தின் நிலையில் இருப்பது போல இருக்க வேண்டும். இந்த உலகத்திலிருந்து இறந்து விட்டோம். உங்களைப் பொறுத்த வரை இந்த உலகம் இறந்தது போல - என சொல்கின்றனர் அல்லவா. சரீரத்தின் உணர்வை நீக்கியபடி இருங்கள். ஏகாந்தத்தில் (தனிமையில்) அமர்ந்து இந்த பயிற்சியை செய்யுங்கள் - பாபா, இதோ இப்போதே நாங்கள் உங்களின் மடியில் வந்தே வந்து விட்டோம். ஒருவரின் நினைவோடு இந்த சரீரம் முடிந்து போக வேண்டும் - இது ஏகாந்தம் எனப்படுகிறது.

     

    குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நாடகத்தின் இரகசியத்தையும் அறிந்திருக்கிறீர்கள் - தந்தை உங்களுக்கு நிராகார, ஆகார மற்றும் சாகார உலகத்தின் அனைத்து செய்திகளையும் கூறுகிறார். இப்போது நாம் புதிய உலகிற்குச் செல்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம் என ஆத்மா சொல்கிறது. நாம் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு தகுதி வாய்ந்தவர்களாக கண்டிப்பாக ஆவோம். தனக்கும் பிறருக்கும் நன்மை செய்வோம். நல்லது - தந்தை துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் எனும்போது குழந்தைகளும் கூட அனைவருக்கும் சுகத்தைக் கொடுக்க வேண்டும் என தந்தை இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். தந்தைக்கு வலது கரமாக ஆக வேண்டும். அப்படிப்பட்ட குழந்தைகள்தான் தந்தைக்கு அன்பானவர்கள். சுப காரியங்களுக்கு வலது கரத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே அனைத்து விசயங்களிலும் சரியானவர்களாக ஆகுங்கள், ஒரு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் கடைசி நிலைக்குத் தக்க கதி உண்டாகும். இந்த பழைய உலகத்திலிருந்து பற்றுதலை நீக்கி விடுங்கள். இது சுடுகாடாக உள்ளது. வேலை, தொழில், குழந்தைகள் முதலான சிந்தனைகளுடன் இறந்தால் தானாகவே தன்னை அழித்துக் கொள்வீர்கள். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் மிகவும் வளமான வாழ்க்கை முன்னேற்றம் அமையும். தேக அபிமானத்தில் வருவதன் மூலம் அழிவு ஏற்படுகிறது. ஆத்ம அபிமானியாக ஆவதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகிறது. பணத்தின் மீதும் கூட அதிக அளவு ஆசை வைக்கக் கூடாது. அந்தக் கவலையிலேயே சிவபாபாவைக் கூட மறந்து விடுகின்றனர். தனது அனைத்தையும் சமர்ப்பணம் செய்து பிறகு என்னுடைய ஸ்ரீமத்படி எந்த அளவு நடக்கின்றனர் என பாபா பார்க்கிறார். ஆரம்பத்தில் தந்தை (பிரம்மா பாபா) கூட டிரஸ்டியாகி காட்டினார் அல்லவா. அனைத்தையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்து தான் டிரஸ்டியாக ஆகி விட்டார். ஈஸ்வரனுடைய காரியத்தில் மட்டும்தான் ஈடுபடுத்த வேண்டும். தடைகளைக் கண்டு ஒருபோதும் பயப்படக் கூடாது. எந்த அளவு முடியுமோ அந்த அளவு சேவையில் தனது அனைத்தையும் நற்பலனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஈஸ்வர அர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி இருக்க வேண்டும். நல்லது!

     

    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

     

    சிருஷ்டியின் மாற்றத்திற்கான ஆதாரம் - குழுவின் வடிவில் அனைவருடையதும் ஒரு சங்கல்பம் (எண்ணம்). (அவ்யக்த மகா வாக்கியம் - 1975)

     

    குழுவின் ரூபத்தில் அனைத்து பிராமணர்களுக்குள்ளும் இரக்கத்தின் பாவனை, உலக நன்மையின் பாவனை, அனைத்து ஆத்மாக்களையும் துக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடிய சுப விருப்பங்கள் எதுவரை அனைவரின் உள்ளத்திலும் தோன்றவில்லையோ அது வரை உலக மாற்றத்தின் காரியம் நின்றுதான் போய் இருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இப்போது குழுவின் ரூபத்தில் ஒரு சங்கல்பத்தை தனதாக்கிக் கொள்ளுங்கள், அதாவது திடசங்கல்பத்தின் கைவிரலை அனைவரும் ஒன்றாக சேர்த்துக் கொடுங்கள், அப்போது இந்த கலியுகத்தின் மலையை மாற்றம் செய்து தங்கமான உலகத்தை உருவாக்க முடியும்.

     

    ஆக, நம்முடைய இந்த குழு ஒரு சங்கல்பத்தை உடையதாக எது வரை ஆகியுள்ளது என சோதித்துப் பாருங்கள். பிரம்மாவுக்கு சிருஷ்டியைப் படைப்போம் என்ற சங்கல்பம் எழுந்த போது சிருஷ்டி உருவாக்கப்பட்டது என சாஸ்திரங்களில் பாடப்பட்டுள்ளது. இங்கே பிரம்மாவின் தனிப்பட்ட விசயம் கிடையாது, ஆனால் பிரம்மாவுடன் சேர்ந்து அனைத்து பிராமணர்களின் சங்கல்பமும் கூட ஒருமித்து இப்போது நாம் அனைவரும் தயாராக இருக்கிறோம் மற்றும் புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகத்தான் வேண்டும் அல்லது ஆகத்தான் போகிறது என்ற திட சங்கல்பம் பிராமணர்களுக்குள் உண்டாகும் போதுதான் சிருஷ்டியின் மாற்றம் அதாவது புதிய சிருஷ்டியின் படைப்பு நடைமுறையில் தோன்றும். இதிலும் கூட குழுவின் பலம் தேவைப்படுகிறது. ஒருவர் இருவருடையதோ அல்லது எட்டு பேரினுடையதோ அல்ல, ஆனால் முழு குழுவின் ஒருமித்த சங்கல்பம் தேவை. சங்கல்பத்தின் மூலம் சிருஷ்டியை படைப்பது என்பதன் இரகசியம் இந்த விதமானதுதானாகும். அனைவருக்குள்ளும் சங்கல்பம் உருவாகும்போது ஒரு வினாடியில் முடிவுக்கான முரசு ஒலிக்கத் தொடங்கி விடும்.

     

    ஒரு பக்கம் முடிவின் முரசு, மற்றொரு பக்கம் புதிய உலகத்தின் காட்சி இரண்டும் சேர்ந்து ஒன்றாக தென்படும். அங்கேதான் வினாசத்தின் உச்சக்கட்டம் ஏற்படும், மேலும் அங்கேதான் நீர்மயமான இடத்திற்கிடையில் நாலா புறங்களின் வினாசத்தில் ஒரு பாகம் பூமியும் மற்ற மூன்று பாகங்கள் நீர்மயமாகவும் இருக்கும். பல தர்மங்களின் காரணமாக பிற்காலத்தில் உருவாகிய இந்த பல கண்டங்கள் அனைத்தும் முடிந்து போய் விடும். சில தேசங்கள் சுற்றுலா ஸ்தலங்களைப் போல நீருக்கிடையில் ஒரு தீவு போல ஆகி விடும். ஆக ஒரு பக்கம் வினாசத்தின் உச்சக்கட்டத்தின் முரசு ஒலிக்கும், மற்றொரு பக்கம் முதல் இளவரசனின் (ஸ்ரீகிருஷ்ணர்) பிறப்பின் சப்தம் எழும்பும், அவர் ஆலிலை மீது வரமாட்டார். நீர்மயமானதன் பிறகு ஆலிலை வந்தார் என காட்டுகின்றனர் அல்லவா. இதிலும் இரகசியம் உள்ளது. பாரதம் பரிஸ்தான் (தேவதைகளின் இடம்) ஆகும்போது மூன்று பாகங்கள் நீர்மயமாகி விடுவதால் அப்படி நீர்மயமாக காட்டியுள்ளனர். அப்படிப்பட்ட நீர்மயத்திற்கிடையில் முதல் இலையாக இருக்கும் முதல் ஆத்மாவின் பிறப்பின் சப்தம் நாலாபுறமும் பரவும் - முதல் இளவரசர் வெளிப்பட்டு விட்டார், பிறவி எடுத்து விட்டார். ஆக அதுவும் உச்சக்கட்டத்தில் போகும் அதாவது மூன்று பாகங்கள் நீர் மயமாகும் முரசின் ஒலி எழும்பும் மற்றும் ஒரு பாகம் பாரதம் – பரிஸ்தானத்தின் ரூபத்தில் வெளிப்படும். தங்கத்தாலான துவாரகை நீரிலிருந்து வெளிப்பட்டது என காட்டுகின்றனர் – ஆனால் நீரிலிருந்து அல்ல, மூன்று பாகங்கள் நீரில் இருக்கும், அந்த நீருக்கிடையில் தங்க துவாரகை காணப்படும், ஆகையால் தங்க துவாரகை நீரிலிருந்து வெளிப்பட்டது என சொல்கின்றனர். அதே சமயத்தில் முதல் ஆத்மாவின் பிறப்பின் ஜெய கோஷம் எழும்பும். அப்படிப்பட்ட காட்சிகள் எதிரில் வரும்போது பழைய உலகத்தின் மகா வினாசத்தின் முரசொலி மற்றும் புதிய முதல் இளவரசனின் பிறப்பின் முரசொலி ஒன்றாகக் கேட்கும். முரசை ஒலிப்பதற்கு முன் அதனை சூடாக்குகின்றனர், அப்போது அது நன்றாக ஒலி எழுப்பும், அதுபோல இந்த முரசின் ஒலியை எழுப்புவதற்கு முன் யோக அக்னியின் மூலம் சூடேற்ற வேண்டும். அப்போது முரசிலிருந்து ஒலி நன்றாக எழும்பும். இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறீர்கள் அல்லவா. காத்திருப்பவர்களையும் கூட ஏற்பாடு செய்வதில் ஈடுபடுத்துங்கள், அப்போது வெற்றியின் கோஷம் எழும்பும்.

     

    சரீரத்தை நடத்துவதற்கு தெரிந்து விடும்போது இராஜ்யத்தை நடத்துவதும் தெரிந்து போய் விடும். சரீரத்தை நடத்துவது என்றால் இராஜ்யத்தை நடத்துவது ஆகும். ஆக இராஜ்யத்தை நடத்தக் கூடிய சம்ஸ்காரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் அல்லவா. ஞானம் நிறைந்தவர் என சொல்லப்படுகிறார் என்றால் முழு ஞானத்தில் உடல், மனம், பொருள் மற்றும் மக்கள் என அனைத்தும் வந்து விடும். ஒருவேளை இவற்றில் ஒன்றின் குறைபாடு இருந்தாலும் ஞானம் நிறைந்தவர் என சொல்ல மாட்டார்கள். புரிந்ததா? எப்போதும் வெற்றி மூர்த்தி ஆவதற்கான ஆதாரம் கூட ஞானம் நிறைந்திருப்பதாகும். ஞானம் இல்லாவிட்டால் வெற்றி மூர்த்தியாகவும் ஆக முடியாது. சமயத்திற்குத் தகுந்தாற்போல முயற்சியின் வேகமும் தீவிரமாக இருக்க வேண்டும். நேரத்தின் வேகம் அதிகமாகவும், நடப்பவர்களின் வேகம் குறைவாகவும் இருந்தது என்றால் நேரத்திற்கு எப்படி சென்று சேர முடியும்? ஒரு பலம், ஒரு நம்பிக்கை, இது முக்கியமான பாடமாகும். அனைத்து நேரங்களிலும் ஒருவரின் நினைவிலேயே ஒரு சீரான நிலையில் இருக்க வேண்டும். இந்த முயற்சியிலேயே எப்போதும் வெற்றிகரமாக இருந்தீர்கள் என்றால் குறிக்கோளை அடைந்து விடுவீர்கள். யார் இடைவிடாத அன்பில் இருக்கின்றனரோ அவர்களுக்கு சகயோகமும் கூட தானாக பிராப்தி ஆகும்.

     

    முரளி என்பது கைத்தடி போன்றது, இந்த கைத்தடியின் ஆதாரத்தின் மூலம் ஏதாவது குறைபாடு இருந்தாலும் அது நிறைவாகி விடும். இந்த ஆதாரமே தனது வீடு வரை மற்றும் தனது இராஜ்யத்தின் வரை கொண்டு சேர்க்கும், ஆனால் இலட்சியத்தின் படி, விதிப்படி அல்ல, ஈடுபாட்டின் மூலம் அடைவீர்கள். ஆக ஈடுபாட்டுடன் முரளியை படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் அதாவது முரளீதரரின் மீது ஈடுபாடுடன் இருக்க வேண்டும். முரளீதரரின் மீது இருக்கும் அன்பின் அடையாளம் முரளியாகும். எந்த அளவு முரளியின் மீது அன்பு இருக்குமோ அந்த அளவுதான் முரளீதரரின் மீதும் அன்பு இருக்கிறது என புரிந்து கொள்ளுங்கள். உண்மையான பிராமணர்களின் அடையாளத்தை முரளியின் மீதிருக்கும் ஈடுபாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம். முரளியின் மீது ஈடுபாடு இருந்தது என்றால் உண்மையான பிராமணர்கள் என அர்த்தம். முரளியின் மீது ஈடுபாடு குறைவாக உள்ளது என்றால் அரை குறை பிராமணர் என அர்த்தம். நல்லது!

     

    வரதானம் :

    தனது நெற்றியின் நடுவில் எப்போதும் தந்தையின் நினைவை வெளிப்படுத்தக் கூடிய நெற்றிமணி ஆகுக!

     

    யாருடைய நெற்றியில் எப்போதும் தந்தையின் நினைவு இருக்கிறதோ அவர் நெற்றிமணி ஆவார், இதுவே உயர்ந்த நிலை எனப்படுகிறது. தன்னை எப்போதும் இப்படி உயர்ந்த நிலையில் நிலைத்திருக்கக் கூடிய உயர்வான ஆத்மா என புரிந்து கொண்டு முன்னேறியபடி இருங்கள். யார் இந்த உயர்ந்த நிலையில் இருக்கின்றனரோ அவர்கள் கீழே இருக்கக் கூடிய பலவிதமான விசயங்களை சகஜமாக கடந்து போய் விடுவார்கள். பிரச்சினைகள் கீழே தங்கி விடும், தாம் மேலே இருந்து விடுவார்கள். நெற்றிமணியின் இடமே உயரத்தில் இருக்கும் நெற்றியாகும், ஆகையால் கீழே வர வேண்டாம், எப்போதும் மேலே இருங்கள்.

     

    சுலோகன் :

    கவலையற்ற மகாராஜாவின் நிலையின் அனுபவம் செய்ய வேண்டும் என்றால் என்னுடையது என்பதை உன்னுடையது என மாற்றம் செய்து விடுங்கள்.

     

    ***OM SHANTI***