BK Murli 31 January 2018 Tamil
31.01.2018 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் யாரிடமும் எதையும் யாசிக்க வேண்டிய அவசியமேற்படாத அளவிற்கு உங்களுக்கு சுகத்தை தருவதற்காக பாபா வந்துள்ளார். 5 பூதங்களை மட்டும் வெற்றி கொள்ளுங்கள். அப்போது உலகத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள்.
கேள்வி:
சகஜ மார்க்கமாக இருந்த போதிலும் தாரணை ஆகாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
பதில்:
அவமரியாதைகள் (ஸ்ரீமத்துக்கு விரோதமான நடத்தை, நடவடிக்கைகள்). பாபாவோ அனைத்துக் குழந்தைகள் மீதும் நம்பிக்கை வைக்கிறார் -- குழந்தைகள் பிராமண குலத்தின் பெயரை விளங்கச் செய்வார்கள். பாரதத்தை சொர்க்கமாக்குவதில் உதவியாளர் ஆவார்கள் என்று. ஆனால் குழந்தைகளால் அடிக்கடி அவமரியாதை ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணத்தால் தாரணை ஆவதில்லை. பிறகு பதவி குறைந்து விடுகிறது. அதனால் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத் பெற்றுக் கொண்டே இருங்கள்.
பாடல்:
மிகவும் அதிர்ஷ்டசாலி நான்
ஓம் சாந்தி.
குழந்தைகளை எல்லையற்ற தந்தை ஒரு முறை மட்டுமே சந்திக்கிறார், எல்லையற்ற சுகம் கொடுப்பதற்காக. பிறகு வேறு எந்த ஒரு பொருளையும் கேட்க (யாசிக்க) அவசியமிராது. பக்தி மார்க்கத்திலோ பக்தர்கள் பகவானிடம், தேவதைகளிடம், சாது-சந்நியாசிகளிடம் யாசித்துக் கொண்டே இருக்கின்றனர். எப்போது எல்லையற்ற தந்தை கிடைத்து விடுகிறாரோ, பிறகு அனைத்துமே கிடைத்து விடுகிறது. பாபா சொர்க்கத்தின் எஜமானர் ஆக்கி விடுகிறார். அதைவிட வேறென்ன வேண்டும்? புத்தியினால் காரியமாற்ற வேண்டியுள்ளது. இந்த மனித சிருஷ்டியில் அனைத்தையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியாகிய சூரியவம்சி லட்சுமி-நாராயண பதவி கிடைக்கிறது. இதைவிட வேறு எந்த ஒரு பதவியும் உயர்ந்தது கிடையாது. ஆக, யாசிப்பது நின்று விடுகிறது. லட்சுமி-நாராயணனோடு பிரஜைகளும் கூட இருப்பார்கள். இராஜா-ராணி எப்படியோ அப்படியே பிரஜைகளும் இப்போது சொர்க்கத்தில் இவ்வளவு உயர்ந்த பதவியை யார் கொடுத்தார்? பாபா. எப்போது கொடுத்தார்? சங்கமயுகத்தில். வேறு யாரும் கொடுக்க முடியாது. இந்த டிராமா சக்கரம் பற்றி நல்ல படியாகப் புரிய வைக்க வேண்டும். இப்போது கலியுகம். இதன் பிறகு சத்யுகம் வர வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்? பாபா அமர்ந்து சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். ஒவ்வொரு பொருளும் முதலில் புதியது, பிறகு பழையதாக ஆகிறது. அது போல் சிருஷ்டிக்கும் கூட பல்வேறு நிலைகள் உள்ளன. இப்போது தமோபிரதான, பழைய உலகம். அநேக தர்மங்களில் எத்தனை சண்டைகள்! பாபா சொல்கிறார், அனைத்து சண்டைகளையும் முடித்து வைத்து, ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டியது எனது காரியமாகும். நான் சுயம் தனது அறிமுகம் கொடுப்பதற்காக குழந்தைகளாகிய உங்களுக்கு பிரம்மாவின் சரீரத்தில் அமர்ந்து புரிய வைக்கிறேன். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கோ (சூட்சும சரீரத்தின்) உருவம் உள்ளது. மனிதர்களுக்கும் சாகார (ஸ்தூல சரீரத்தின்) உருவம் உள்ளது. மற்றப்படி உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான பரமாத்மாவுக்கு ஆகார சூட்சும உருவமும் இல்லை, சாகார உருவமும் இல்லை. அவர் நிராகார் எனச் சொல்லப் படுகிறார். எப்படி ஆத்மா நிராகார் என்றால் நிராகார் ஆத்மா சொல்கிறது, என்னுடைய தந்தையும் கூட நிராகார். அந்த ஒருவர் தான் அனைவருக்கும் தந்தை ஆகிறார். மற்ற அனைவருக்கும் சரீரத்தின் பெயர் உள்ளது. லட்சுமி-நாராயணருக்கும் பெயர் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் கூட சூட்சும சரீரத்தின் பெயர் உள்ளது. ஒரே ஒரு நிராகார் பரமாத்மாவுக்கு மட்டும் தான் சிவன் என்ற பெயர் உள்ளது. அவர் சொல்கிறார், நான் பரம ஆத்மா, குழந்தைகளாகிய உங்களையும் கூட எனக்கு சமமாக ஆக்குகிறேன். ஞானக் கடலாகிய என்னிடமிருந்து நீங்களும் முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தை அறிந்து கொள்கிறீர்கள். அன்புக்கடலாகவும் உங்களை ஆக்குகிறேன். தேவதைகள் அன்பின் கடல் இல்லையா? அவர்கள் மீது அனைவரும் எவ்வளவு அன்பு செலுத்துகின்றனர்! முழு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் தான் முக்கியமானது. மற்றப்படி உள்ளது, மூலவதனம், சூட்சுமவதனம், சிருஷ்டியின் சக்கரம் எண்ணப் படுகிறது, அது நான்கு யுகங்களிலும் சுற்றுகிறது. சத்யுகத்தில் 16 கலைகள், பிறகு திரேதாயுகத்தில் 14 கலைகளில் வருகின்றனர். எப்படி-எப்படி பிறவி எடுத்துக் கொண்டே செல்கின்றனரோ, கலைகளும் குறைந்து கொண்டே செல்கின்றன. இப்போதோ தேவி-தேவதா தர்மமே மறைந்து விட்டுள்ளது. நாங்கள் சூரியவம்சி குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லக் கூடிய ஒரு மனிதர் கூட இங்கே கிடையாது. மற்ற அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் தர்மம் பற்றி அறிந்துள்ளனர். இப்போது மீண்டும் பாபா உங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். இச்சமயம் கலியுகம் தூய்மை இல்லாத உலகமாக உள்ளது. நம்மைப் தூய்மையாகவோ பாபா தான் மாற்றுவார். இந்த மரம் (கல்பவிருட்சம்), மற்றும் சிருஷ்டிச் சக்கரம், பார்வையற்றவர்களுக்குக் கண்ணாடி போன்றது. இன்னும் போனால் உங்களிடம் அநேகர் வரத் தொடங்குவார்கள். அவர்களைப் பார்த்து இன்னும் அநேகர் வருவார்கள். ஏதேனும் ஒரு கடையில் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றால் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வருவார்கள் -- இங்கே நிச்சயமாக நல்ல பொருள்கள் கிடைக்கும் என்று. அது புகழ் பெற்றதாக ஆகி விடும். இப்போது நீங்கள் அவ்வளவு பெயர் பெற்றவர்களாக ஆகவில்லை. ஏனென்றால் இது புதிய பொருள். மும்பையில் சின்மயானந்தாவிடம் அநேகர் செல்கின்றனர். அவரைப் பற்றி செய்தித்தாளிலும் வருகிறது. இங்கோ தூய்மையாக இருக்க வேண்டியதிருக்கும் எனக் கேட்டாலே குழம்பிப் போகின்றனர். ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்து கொண்டு தூய்மையாக இருப்பது முடியாது என்கின்றனர். பஞ்சும் நெருப்பும். பெண்ணோ நரகத்தின் வாசல், அவளுடன் வசிப்பதால் நரகத்தில் சென்று விடுகின்றனர். ஆனால் தங்களை நரகத்தின் வாசல் என உணர்வதில்லை. ஆதலால், மனிதர்களுக்குக் கடினமாக உள்ளது. ஆனால் இங்கோ உங்களுக்கு ஊக்கத்தொகை (தூண்டுதல் சக்தி -- ண்ய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்) கிடைக்கிறது -- 5 பூதங்களை வெற்றி கொள்வீர்களானால் சொர்க்கத்தின் எஜமானர் ஆவீர்கள். மும்பையில் ஒரு குழந்தை வந்திருந்தார். அவர் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்திருந்தார் என்றால் அவருடைய வீட்டில் அதிக சண்டை நடந்தது. ஒரு பெண்குழந்தை வகுப்பு நடத்துவதற்காகச் சென்ற போது அவருடைய சகோதரர் சொன்னார், அங்கே சென்றால் கொன்று விடுவேன். அந்தப் பெண்குழந்தை சொன்னது, பரமபிதா பரமாத்மாவின் கட்டளை -- நரகவாசிகளை சொர்க்கவாசி ஆக்குங்கள். ஆகவே நான் என்னுடைய வேலையை நீ சொல்வதால் விட்டுவிட மாட்டேன். நீ என்ன செய்ய வேண்டுமோ, செய். இது போன்ற தைரியசாலிக் குழந்தைகள் குறைவு. பல இடங்களில் மாதாக்களும் கூட விகாரத்திற்காகச் சண்டையிடுகின்றனர். ஆனால் யார் மகாவீரராக உள்ளனரோ, அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அத்தகைய தைரியமான ஆண்களும் உள்ளனர், பெண்களும் உள்ளனர். இல்லறத்தில் இருந்து கொண்டு தூய்மையாக இருப்பது இன்னும் நல்லது தான். அவர்கள் தான் மகாரதி எனச் சொல்லப் படுகின்றனர். சிலர் இந்தப் பிறவியில் பிரம்மச்சாரியாக இருக்கலாம், ஆனால் முந்தைய பிறவிகளின் பாவங்களோ தலை மீது உள்ளன. காமவிகாரம் மட்டுமல்ல, மற்றப் பாவங்களும் அதிகம் நடைபெறுகின்றன. தேக அபிமானம் இருக்குமானால் பாவம் நிச்சயமாக நடைபெறும். எந்த மனிதர்கள் தாங்களே மாமிசம், மதுபானம் முதலியவற்றை உட்கொள்கின்றனரோ, அவர்கள் மற்றவர்களுக்கு சத்கதி எப்படி அளிக்க முடியும். சத்கதி என்றால் சாந்தி மற்றும் சுகத்தில் செல்வது. இங்கே நீங்கள் துக்கத்தில் இருக்கிறீர்கள். தூய்மை இல்லாமல் இருக்கிறீர்கள். அதனால் குரு வேண்டுமென விரும்புகிறீர்கள். சாந்தி இருப்பது நிர்வாணதாமத்தில். சொர்க்கத்தில் உள்ளது சுகம். நரகத்தில் உள்ளது துக்கம். இந்த விசயங்களை பாபா தான் புரிய வைக்கிறார். ஆக, இவருடைய நல்ல குழந்தை ஆகி ஆஸ்தி பெற வேண்டும். இப்போது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். ஆகவே தூய்மையாகவும் அவசியம் ஆகவேண்டும். சாகும் தறுவாயிலும் சொல்கின்றனர் பகவானை நினைவு செய்வீர்களானால் உயரத்தில் சென்று விடுவீர்கள். பிறகு திரும்பி வர மாட்டீர்கள். ஆனால் அப்படி இல்லை. மேலே செல்வதற்கான மந்திரத்தை யார் கொடுப்பார் என்று யாருக்கும் தெரியாது.
பாபா சொல்கிறார், நான் வந்து உங்களை இந்த மாயாவிடம் இருந்து விடுவிக்கிறேன். நீங்களோ எவ்வளவு விடுபடுவதற்காக முயன்றாலும் அந்த அளவு சிக்கிக் கொண்டே போவீர்கள். அதனால் எனது ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். தன்னுடைய அசுர வழிமுறையை நிறுத்தி விடுங்கள். தன்னுடைய வழிப்படி நடந்தால் துர்கதியை அடைவதற்கான முயற்சி செய்கிறீர்கள் என்று ஆகி விடும். கடைசியில் அதோகதியை (மோசமான நிலை) அடைய நேரிடும். அவையனைத்தும் பாபாவுக்கு ஒவ்வொருவரின் நடத்தையினால் தெரிந்து விடும். எப்படி தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்கின்றனர் என்றால் உடனே தெரிந்து விடும் - இவர் நோயில் இருக்கிறார், குளிரைத் தாங்க முடியாது. தாங்களே சொல்கின்றனர், நான் களைத்துப் போனேன். இடுப்பு ஒடிந்து விட்டது. அப்போது இதன் மூலம் புரிந்து கொள்கின்றனர்-- இவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லை. இப்போது இது எல்லையற்ற விசயம். ஸ்ரீமத்தை விட்டுத் தன்னுடைய வழிப்படி நடக்கின்றனர் என்றால் அவர்களின் நடத்தை- நடவடிக்கை மாறி விடுகிறது. பிறகு வாயிலிருந்து இரத்தினத்திற்கு பதில் கல் வெளிவரத் தொடங்குகிறது. ஆக, சேமித்து வைத்த அனைத்தும் நஷ்டமாகி விடுகிறது. தந்தை சொல்வார், இப்படிப்பட்ட குழந்தை யாரும் ஒரு போதும் பிறக்கக் கூடாது. மகாரதிகளையும் கூட மாயா அப்படிப் பிடித்துக் கொள்கிறது, அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமாச்சாரமோ பாபாவிடம் வருகிறது. எழுதுகின்றனர், இன்னார் மிக நன்றாகச் சென்று கொண்டிருந்தார். இப்போது மாயா என்ற பூனை பிடித்துக் கொண்டது. அவர்கள் வருவதில்லை என்றால் அவர்களுக்குத் தங்களின் ஃபோட்டோவை அனுப்பி வையுங்கள் -- பாருங்கள் நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தீர்கள், இப்போது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள், லட்சுமி-நாராயணரை மணந்து கொள்வதற்குத் தகுதி உள்ளவர்களா, சொல்லுங்கள். மாயா அப்படிப் பட்டது, அது நல்லவருக்கு பதில் கெட்டவராக ஆக்கி விடும். கீழே விழுகின்றனர் என்றால் அதிர்ஷ்டத்திற்குக் கோடு போடப் பட்டு விடுகிறது. தேக அபிமானம் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் செல்வந்தன், அப்படி இருக்கிறேன் என்று உடனே தேக அபிமானம் வந்து விடுகிறது. ஆக, எல்லையற்ற தந்தை சொல்வதையும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இதுவும் டிராமா என்று தான் சொல்வார்கள். பிறகு குழந்தைகள் எழுத வேண்டி உள்ளது - இவர்களுக்கு சஞ்சீவி மூலிகையை முகரச் செய்து மூர்ச்சையைத் தெளிய வையுங்கள். முரளி சொல்வீர்களானால் கிரகணம் நீங்கி விடும். நாம் அனைவரும் சிவபாபாவின் சேவையில் இருக்கிறோம். கட்டடம் கட்டுவதும் கூட பாபாவின் சேவையாகும். பாபா குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளார். மகாராஜா பதவி தருகிறார் என்றால் குழந்தைகளும் கூட பாபாவின் சேவைக்கான அக்கறை வைக்க வேண்டும். இறைப்பணி செய்வதோ மிகவும் சுலபம். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே ஏதேனும் நேரம் ஒதுக்கி சேவை செய்ய வேண்டும். யாராவது பார்வையற்றவர்களுக்கு வழி சொல்வர செய்ய வேண்டும். பிறகு யாராவது சிலர் வெளிப்படுவார்கள். நல்லது.
எப்படி சேவையோ அதற்கான பலனை பாபா தருவார். பாபா குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்கிறார் -- அதாவது குழந்தைகள் பிராமண குலத்தின் பெயரை விளங்கச் செய்வார்கள். பாரதத்தை சொர்க்கமாக்குவதில் உதவியாளராக அவசியம் ஆக வேண்டும். பாபாவோ அனைவருக்கும் நன்மை செய்பவர், மன்னிக்கும் கடலாக இருக்கிறார். யாராவது ஓடிப்போய் விட்டுப் பிறகு திரும்பி வந்து விட்டாலும் கூட பாபா சொல்வார் -- நல்லது, மீண்டும் ஞானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஏணிப்படி கொஞ்சம் உயரமானது. மார்க்கம் சுலபமானது. ஆனால் அவமரியாதை செய்கிற காரணத்தால் தாரணை ஆவதில்லை. பதவி குறைந்ததாகக் கிடைத்து விடுகிறது. பிராமணக் குழந்தைகளாகிய உங்களைப் போன்ற மகான் பாக்கியசாலி இச்சமயத்தின் பல கோடிக்கு அதிபதியும் கூட இருக்க மாட்டார். உங்களுடைய ஒவ்வோர் அடியிலும் பல மடங்கு வருமானம். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
இரவு வகுப்பு 17-06-1968
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இங்கே வரும் போது புரிந்து கொள்கின்றனர், நாம் பாபாவிடம் செல்கிறோம். பாபா சொல்வதைக் கேட்கிறோம். தத்தமது சென்டர்களுக்குச் செல்லும் போது அங்கே முன்னிலையில் பாப்தாதா அமர்வதில்லை. சில இடங்களில் சகோதரர்களும் கூட வகுப்பை நடத்துகின்றனர். முரளியோ சுலபமானது. யார் வேண்டுமானாலும் தாரணை செய்து வகுப்பு நடத்த முடியும். பிராமணிகளோ அமர்ந்தே இருக்கின்றனர். பாபா கேட்கிறார், யாராவது முரளி படித்து பிறகு முரளியின் சாரம் சொல்கின்றனரா? யார் முரளியைக் கையில் எடுத்துச் சொல்கின்றனரோ, அவர்கள் கை உயர்த்துங்கள். யார் முரளியைக் கையில் எடுப்பதில்லையோ, ஆனால் முரளியின் சாரத்தை அப்படியே சொல்கின்றனரோ, அவர்களும் கை உயர்த்துங்கள். முரளி கையிலோ இருக்க வேண்டும் இல்லையா? படித்தவர்கள் என்றால் அனைத்தையும் அமர்ந்து சொல்கின்றனர். சிலர் முரளியைப் படித்து சொல்கின்றனர். நம்பர்வாராக இருக்கவே செய்கின்றனர் இல்லையா? மகாரதி, குதிரைப்படை, மற்றும் காலாட்படை. அனைவருமோ மிகச்சரியாகப் படிப்பதில்லை. சிலர் படித்துக் கொண்டும் இருக்கின்றனர். கூடுதலாக ரகசியமும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். எல்லாருமே இது போல் புரிய வைக்க முடியாது. இங்கோ பாபா அமர்ந்துள்ளார். பாபா குழந்தைகளுக்குச் சொல்கிறார், எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகம் இருக்கக் கூடாது. ஒரு தந்தை மட்டுமே அனைத்தையும் சொல்கிறார். அந்தப் பாடசாலைகளிலோ கற்பிப்பவர்கள் அநேகர் இருப்பார்கள்.
தனித்தனியாகக் கற்பிக்கின்றனர். இங்கோ ஒருவர் மட்டுமே கற்பிக்கிறார். ஒரே ஒரு நோக்கம்-குறிக்கோள் உள்ளது. இதில் கேள்வி கேட்பதற்கு எதுவும் இல்லை. காலையில் இங்கே அமர்ந்து குழந்தைகளுக்கு நினைவு யாத்திரையில் உதவி செய்கிறேன். உங்களை மட்டும் நினைவு செய்கிறேன் என்பதில்லை. எல்லையற்ற குழந்தைகள் அனைவரின் நினைவும் உள்ளது. நீங்கள் இந்த நினைவினால் முழு உலகத்தையும் தூய்மையாக்க வேண்டும். நீங்கள் எதில் விரல் கொடுக்கிறீர்கள்? தூய்மையாகவோ முழு உலகத்தையுமே மாற்ற வேண்டியுள்ளது இல்லையா? ஆகவே, பாபா அனைத்துக் குழந்தைகள் மீதும் பார்வை வைக்கிறார். அனைவரும் சாந்தியில் சென்றுவிட வேண்டும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். யாருக்கு யோகம் இருக்கிறதோ, அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். பாபாவோ எல்லையற்றதில் தான் அமர்வார். முழு உலகத்தையும் தூய்மையாக்குவதற்காக நான் வந்துள்ளேன். முழு உலகத்திற்கும் கரண்ட் (சக்தி) கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தூய்மையாகி விடுவார்கள். யாருக்கு யோகா இருக்கிறதோ, அவர்கள் புரிந்து கொள்வார்கள், பாபா இப்போது அமர்ந்து நினைவு யாத்திரையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் உலகத்தில் சாந்தி நிலவும். குழந்தைகளையும் பாபா நினைவு செய்ய வைக்கிறார். அவர்களும் நினைவில் அமர்கின்றனர் என்றால் உதவி கிடைக்கிறது. நல்லபடியாக நினைவு செய்பவர்கள் கொஞ்சம் பேர் தான். உதவி செய்யும் குழந்தைகளும் வேண்டும் இல்லையா? இறைவனின் உதவியாளர்கள். நிச்சயபுத்தியோடு நினைவு செய்வார்கள் இல்லையா? தூய்மையாவதற்கான பாடம் தான் உங்களுடைய முதல் பாடமாகும். அப்போது பாபாவுடன் கூடவே குழந்தைகள் நீங்களும் நிமித்தமாகிறீர்கள் என்று ஆகிறது. ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று தான் பாபாவை அழைக்கின்றனர். இப்போது அவர் தனியாக என்ன செய்வார்? உதவியாளர் வேண்டும் இல்லையா? நீங்கள் அறிவீர்கள், உலகத்தை சாந்தமாக்கி அதன் மீது இராஜ்யம் செய்வோம். அந்த மாதிரி புத்தி இருக்குமானால் நஷா அதிகமாகி இருக்கும். குழந்தைகள் நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்க வேண்டும். நீங்கள் அறிவீர்கள், பாபாவின் ஸ்ரீமத்தினால், நாம் நம்முடைய யோகபலத்தினால் நம்முடைய இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். அந்த நஷா இருக்க வேண்டும். ஸ்தூலமான எந்த ஒரு விஷயமும் கிடையாது. இது ஆன்மிக விஷயம். குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், ஒவ்வொரு கல்பத்திலும் பாபா இந்த ஆன்மிக பலத்தினால் நம்மை உலகத்தின் எஜமானர் ஆக்குகிறார். இதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் – சிவபாபா தான் வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார். உலகத்திற்கு இதுவும் தெரியாது -- பரமபிதா பரமாத்மா புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார், எப்போது, எப்படி என்று எதுவுமே தெரியாது. கீதையிலும் கூட ஆட்டாவில் உப்பை சேர்த்தது போல் தான் உண்மை உள்ளது. மற்ற அனைத்தும் பொய்களே1 பாபா வந்து சத்தியத்தைச் சொல்கிறார். பாரதத்தின் யோகபலமோ பிரசித்தி பெற்றது. பாரதத்தின் இந்த யோகத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக அநேகர் செல்கின்றனர். பாபா சொல்கிறார், ஹடயோகி, இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. ஆனால் இன்றைய உலகிலோ பொய் அதிகம் உள்ளது இல்லையா? உண்மைக்கு முன்னால் போலி அதிகம் உள்ளது. அதனால் உண்மையை அபூர்வமாக யாரோ தான் அறிந்து கொள்ள முடியும். நல்லது. இரவு வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு நமஸ்தே.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கிய சாரம்:
1. ஸ்ரீமத்தை விட்டுவிட்டு ஒரு போதும் மனதின் வழிப்படி நடக்கக் கூடாது. வாயிலிருந்து இரத்தினத்திற்குப் பதிலாக கல்லை வெளிப்படுத்தக் கூடாது.
2. பாபாவின் சேவை பற்றிய அக்கறை வைக்க வேண்டும். நேரம் ஒதுக்கி ஈஸ்வரிய சேவை அவசியம் செய்ய வேண்டும். பார்வையற்றவர்களுக்கு வழி சொல்ல வேண்டும். பாபாவின் சொல்படி நடக்கும் நல்ல குழந்தையாக ஆக வேண்டும்.
வரதானம்:
மனதை சிரேஷ்ட நிலையில் நிலைத்திருக்கச் செய்து முகத்தோற்றத்தை மாற்றும் விளையாட்டை முடித்துவிடக் கூடிய சகஜயோகி ஆகுக.
மனதின் நிலைப்பாடு எப்படி உள்ளதோ, அது முகத்தின் தோற்றத்தின் மூலமாகத் தெரிய வரும். அநேகக் குழந்தைகள் அவ்வப்போது சுமையைத் தூக்கி வைத்துக் கொண்டு பாரமாக ஆகி விடுகின்றனர். சில நேரம் அதிகம் யோசிக்கிற சம்ஸ்காரத்தின் காரணத்தால் தலை சுமை மேலும் அதிகமாகி விடுகிறது. சில நேரம் மனச்சோர்வடைகிற காரணத்தால் தன்னை மிகவும் சிறியவராகப் பார்க்கின்றனர். ஆக, தன்னுடைய அந்த மாதிரி தோற்றத்தை சாட்சியாகிப் பாருங்கள். மேலும் மனதின் சிரேஷ்ட நிலைப்பாட்டில் நிலைத்திருந்து இது போன்ற விதவிதமான தோற்றங்களை மாற்றி விடுங்கள். அப்போது சகஜயோகி எனச் சொல்வார்கள்.
சுலோகன்:
குஷி நிறைந்துள்ள சுரங்கத்தினுடைய அதிகாரி ஆத்மா சதா குஷியாக இருப்பார், மற்றும் குஷியைப் பகிர்ந்தளிப்பார்.
No comments
Say Om Shanti to all BKs