BK Murli Tamil 26 May 2019

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 26 May 2019


    26.05.2019    காலை முரளி    ஓம்சாந்தி    அவ்யக்த பாப்தாதா ரிவைஸ்    03.12.1984  மதுபன்



    சர்வசக்தி வாய்ந்த ஆசிரியரின் மேன்மையான மாணவர்கள் ஆகுங்கள்



    இன்று சர்வசக்திவான் பாபா தனது நாலா புறமுள்ள சக்தி சேனைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் யார் எப்பொழுதும் சர்வ சக்திகள் என்ற ஆயுதங்கள் தரித்த, மகாவீர, வெற்றியாள, சிறந்த ஆத்மாக்கள்? யார் யார் எப்போதும் இல்லை, ஆனால் நேரத்தில், நேரத்திற்குத் தகுந்தவாறு ஆயுதங்கள் தரித்தவர்களாக ஆகியிருக்கின்றனர்? யார் யார் நேரத்தில் ஆயுதம் தரித்தவர் ஆவதற்கு பிரயத்தனம் செய்கின்றனர், அதனால் சில நேரம் போரிடுகின்றனர் (வார் - WAR ) சில நேரம் தோல்வியடைகின்றனர் (ஹார்), சில நேரம் போர், சில நேரம் தோல்வி என்ற சுழற்சியில் நடந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மூன்று விதமான சேனைகளின் அதிகாரிகளைப் பார்த்தார். ஆனால் வெற்றியாள சிறந்த ஆத்மாக்கள் எப்போதும் ஆரம்பத்திலிருந்தே எவரெடியாக இருக்கின்றனர். நேரத்திற்குத் தகுந்தவாறு ஆயுதம் தரித்தவர் ஆவதில், நேரம் ஆசிரியராகி விடுகிறது. நேரம் என்ற ஆசிரியரின் ஆதாரத்தில் நடக்கக் கூடியவர்கள், சர்வசக்திவான் ஆசிரியரின் படிப்பினைகளின் மூலம் எவரெடி ஆகாத காரணத்தினால் சில நேரம், சமயத்தில் ஏமாற்றமும் அடைந்து விடுகின்றனர். ஏமாற்றம் அடைந்தவுடன் தான் நினைவிற்கு வருகிறது. எனவே சர்வசக்திவான் ஆசிரியரின் மேன்மையான மாணவர்கள் ஆகுங்கள். நேரம் என்ற ஆசிரியரின் மாணவராக அல்ல!



    சில குழந்தைகள் பாப்தாதாவிடம் ஆன்மீக உரையாடலின் போதும் மற்றும் தங்களுக்குள் ஆன்மீக உரையாடலின் போதும், நேரம் வரும் போது எல்லாம் சரி ஆகிவிடும், நேரம் வரும் போது காட்டுவோம், நேரத்தில் செய்து விடுவோம் என்று கூறுகின்றனர். ஆனால் உலகை மாற்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு நிறைந்த (சம்பன்ன), சிறந்த நேரத்தை வரவழைப்பதற்கான காரியம் கிடைத்துள்ளது. பொன்னான காலைப் பொழுதைக் கொண்டு வருவதற்கு நீங்கள் நிமித்தமானவர்கள். நீங்கள் நேரம் என்ற படைப்பின் படைப்பாளர் குழந்தைகள், நேரத்தை அதாவது யுகத்தை மாற்றுபவர்கள்! இரண்டு கால் (நேரம், மரணம்) மீது வெற்றியாளர்கள்! (இந்தியில்) ஒரு கால் என்றால் நேரம். மற்றொன்று கால் (காலன்) அதாவது மரணத்திற்கு வசமானவர் அல்ல, வெற்றியாளர்கள்! அமர் பவ (அழியாதவர் ஆகுக) என்ற வரதான சொரூபம் நீங்கள்! எனவே நேரத்தின் படி செய்பவர்கள் அல்ல, ஆனால் பாபாவின் கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள்! நேரமோ அஞ்ஞானி ஆத்மாக்களுக்குக் கூட ஆசிரியர் ஆகிறது. உங்களது ஆசிரியரோ சக்திவாய்ந்த தந்தை! எந்தவொரு ஏற்பாடும் நேரத்திற்கு முன்பாகத் தான் செய்யப் படுகிறதே தவிர, அந்த நேரத்தில் அல்ல. எவரெடி அனைத்து ஆயுதங்கள் (சக்திசாலி) தரித்த சேனையினர் நீங்கள்! எனவே, சர்வசக்திகள் என்ற ஆயுதங்களைத் தரித்திருக்கின்றோமா? என்று எப்போதும் தன்னை சோதியுங்கள். ஏதேனும் சக்தி அதாவது ஆயுதத்தின் குறைவு இருந்தால் மாயை அந்த பலஹீனம் என்ற விதி மூலமாகவே போர் புரியும். எனவே எதிலும் சோம்பல் உள்ளவர் ஆகக் கூடாது. மற்ற அனைத்தும் சரியாக உள்ளது, சிறிய ஒரு விஷயத்தில் பலஹீனம் உள்ளது, ஆனால் ஒரு பலஹீனம் தான் மாயைக்கு போர் புரிவதற்கான வழியை உருவாக்கி விடும். எப்படி, எங்கு பாபாவின் நினைவு இருக்கிறதோ, அங்கு நான் எப்பொழுதும் உடன் இருப்பேன் என்ற உறுதிமொழியை கொடுத்துள்ளாரோ, அது போல மாயையும், எங்கு பலஹீனம் உள்ளதோ அங்கு நான் இடம் பிடிக்கிறேன் என்று சவால் விடுகிறது. எனவே துளி அளவு பலஹீனம் கூட மாயையின் வம்சத்தையே வரவழைத்து விடும். சர்வ சக்திவானின் குழந்தைகளோ, அனைத்திலும் நிறைந்தவராக வேண்டும். பாபா குழந்தைகளுக்கு ஆஸ்தியின் அதிகாரம் என்னவெல்லாம் கொடுத்துள்ளாரோ, அல்லது ஆசிரியர் வடிவில் இறை படிப்பின் பிராலப்தம் (பலன்) அல்லது டிகிரி கொடுத்துள்ளரோ, அவைகளை என்னவென்று வர்ணனை செய்கிறீர்கள்? அனைத்து குணங்கள் நிறைந்த என்று கூறுகிறீர்களா? அல்லது குணம் நிறைந்தவர் என்று கூறுகிறீர்களா? முழுமையான நிர்விகாரி, 16 கலைகள் நிறைந்தவர் என்று கூறுகிறீர்களே தவிர, 14 கலைகள் என்று கூறுவதில்லை. 100 சதவீதம் முழுமையான சுகம், சாந்தியின் ஆஸ்தி என்று கூறுகிறீர்கள் என்றால் ஆவதும் அவ்வாறு தானே ஆகவேண்டியிருக்கும்? அல்லது ஒன்றும் பாதியாக பலஹீனங்கள் இருந்து கொண்டேயிருக்கும் என்று நினைக்கிறீர்களா? கணக்கு வழக்கும் ஆழமானது. கள்ளம் கபடமற்றவராகவும் (போலநாத்) இருக்கிறார், ஆனாலும் கர்மத்தின் நிலையை அறிந்தவராகவும் இருக்கிறார். கொடுப்பதும் ஒன்றுக்கு பலமடங்காக கொடுக்கப் படுகிறது மற்றும் ஒவ்வொரு துளியளவிற்கும் கணக்கு பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஒன்றும் பாதியாக பலஹீனங்கள் இருந்துவிட்டது என்றால், பிராப்தியிலும், அரை ஜென்மம், ஒரு ஜென்மம் பின்னால் வர வேண்டியிருக்கும். ஸ்ரீகிருஷ்ணருடனோ, விஷ்வ மகாராஜன் முதல் இலட்சுமி நாராயணின் இராயல் ஃபேமிலியிலோ (அரச குடும்பம்), அல்லது நெருங்கிய உறவினராகவோ வரமுடியாது. எவ்வாறு சகாப்தம் என்பது 1/1/1 லிருந்து தொடங்குகிறதோ, அவ்வாறே புதிய உறவுகள், சதோபிரதான புதிய ஆத்மாக்கள், புதிய இயற்கை, புதிய என்றால் மேலிருந்து இறங்கியுள்ள புதிய ஆத்மாக்கள்,. புதிய இராஜ்யம் என்ற இந்த புதுமையான நேரத்தின் சுகத்தை, சதோ பிரதான நம்பர் ஒன் இயற்கையின் சுகத்தை, நம்பர் ஒன் ஆத்மாக்கள் தான் அடைய முடியும்.



    நபர் ஒன் என்றாலே மாயையின் மீது வெற்றி (வின்) அடைந்தவர்கள். எனவே கணக்கு முற்று பெறும்.பாபாவிடமிருந்து வரதானத்தை அல்லது ஆஸ்தியை அடைவதற்காக கூடவே இருப்போம், கூடவே செல்வோம் மற்றும் திரும்ப பிரம்மா பாபாவுடன் இராஜ்யத்தில் வருவோம் என்ற இந்த உறுதிமொழியைத் தான் எடுத்துள்ளீர்கள்! பின்னால் வருவோம் என்று உறுதிமொழி எடுக்கவில்லை. சமம் ஆகியே தீர வேண்டும், உடன் இருக்க வேண்டும். நிறைந்த தன்மை, சமமான தன்மையானது எப்போதும் உடன் இருப்பதற்கான ப்ராலப்தத்திற்கு (பலன்) உரிமையாளர் ஆக்கிவிடுகிறது, எனவே முழுமையாகவும், சமமானவராகவும் ஆகும் தருணத்தை சோம்பல் தன்மையால் இழந்து, கடைசியில் மயக்கம் தெளிந்து வந்தால் என்ன அடைவீர்கள்!



    அதனால் இன்று அனைவரது சர்வசக்திகள் என்ற ஆயுதங்களை சோதனை செய்து கொண்டிருந்தோம். மூன்று வித குழந்தைகளைப் பார்த்ததாக முடிவுகளைக் (ரிசல்ட்) கூறினோம். கடைசி வரை இந்த சோம்பலின் குறும்புத்தனம் மிகக் குறைந்த அளவேனும் இருக்கத்தான் செய்யும், இவ்வளவேனும் பாபா உதவி செய்தே தீருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் இந்த குறும்புத்தனம் கடைசி நேரத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்து விடக்கூடாது. மேலும் நான் இப்படி நினைக்கவே இல்லை என்று குழந்தைகள் குறும்பாக புகார் சொல்லக்கூடாது. எனவே கடைசி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வித விதமான குழப்பங்கள் அதிகரித்தே தீரும். இவைகள் அந்த நேரம் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். இவை அதிக வேகத்துடன் நிறைந்தவர் ஆவதற்கான சமிஞ்ஞைகளாகும். புரிந்ததா!



    தற்சமயம் மதுபனில் மூன்று புறமுள்ள நதிகளின் திருவிழா (மேளா) நடக்கிறது. திருவேணி (மூன்று நதிகளின்) மேளா இருக்கிறது அல்லவா! மூன்று புறங்களிலிருந்து வந்துள்ள, ஈடுபாட்டுடன் வந்தடைந்துள்ள குழந்தைகளின் சிறப்புகளைப் பார்த்து, குழந்தைகளின் அன்பைக் கண்டு பாப்தாதா புன்சிரிக்கிறார். வாயால் பேசும் மொழி தெரியவில்லை என்றாலும் அன்பின் மொழியைத் தெரிந்துள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் அன்பின் மொழியைத் தெரிந்துள்ளவர்கள். மற்றும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்ன தெரிந்துள்ளீர்கள்? பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் சவால் விடுவதில் புத்திசாலிகள். எனவே தெய்வீக இராஜஸ்தானின் சவாலானது, கதறிக்கொண்டிருக்கும் இடங்களில் வெற்றி முழக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. குஜராத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்கின்றனர்? குஜராத்தினர் எப்பொழுதும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றனர். தனது சங்கமயுக நெருங்கிய இடத்தின் (மதுபன்) பாக்கியம் என்ற ஊஞ்சலில் ஊஞ்சல் ஆடுகின்றனர். நாமோ அனைவரையும் விட மிகவும் அருகில் இருக்கின்றோம் என்று குஷியில் ஊஞ்சல் ஆடுகின்றனர். எனவே குஜராத்தை சேர்ந்தவர்கள் வித விதமான ஊஞ்சலில் ஆடுகின்றனர். விதவிதமான குரூப் இருக்கிறது. பலவிதம் இருப்பது அனைவருக்கும் பிடிக்கிறது. பூச்செண்டிலும் கூட விதவிதமான வண்ணங்கள், வடிவங்கள், நறுமணங்கள் உள்ள மலர்கள் தான் பிடிக்கிறது. நல்லது!



    அனைத்து பக்கங்களிலிருந்து வந்துள்ள அனைத்து சக்திசாலி, சதா விழிப்புணர்வுடன் (அலர்ட்) இருக்கக்கூடிய, சதா சர்வசக்திகள் என்ற ஆயுதம் தரித்த, அனைத்து ஆத்மாக்களையும் முழுமையாக நிறைந்தவர் ஆக்குவதற்காக சக்திகளை உதவியாக அளிக்கக்கூடிய, சிறந்த நேரத்தை, சிறந்த யுகத்தைக் கொண்டுவரக்கூடிய, யுகத்தை மாற்றக்கூடியவர் மற்றும் நம்பர் ஒன் ஆகி, நம்பர் ஒன் நிறைந்த இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரி – அப்படிப்பட்ட அனைத்திலும் சிறந்த குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பஞ்சாப் பார்ட்டிகளுடன்:

    எப்போதும் ஒவ்வொரு அடியிலும் நினைவின் சக்தி மூலமாக கோடிமடங்கு சேமித்துக் கொண்டே முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் தானே! ஒவ்வொரு அடியிலும் கோடி நிரம்பியுள்ளது - இதை சோதனை செய்கிறீர்கள் தானே? நினைவினுடைய அடி (நற்ங்ல்) நிறைந்துள்ளது. நினைவின்றி, அடி நிறைவதில்லை, வருமானமும் இல்லை, எனவே ஒவ்வொரு அடியிலும் சேமிக்கக் கூடியவர்கள், சுறுசுறுப்பான குழந்தைகள் தானே! சம்பாதிக்கக் கூடியவர்கள் சுறுசுறுப்பான குழந்தைகள் ஆகின்றனர். ஒருவகையினர் கண்டோம், அருந்தினோம் மற்றும் இழந்தோம் என்று மட்டும் இருப்பவர்கள். அடுத்த வகையினர் வருமானத்தை சேமிக்கக் கூடியவர்கள். நீங்கள் எந்த வகைக் குழந்தைகள்? வெளியுலகில் குழந்தைகள் தனக்காகவும், தந்தைக்காகவும் சம்பாதிக்கின்றனர். இங்கு பாபாவுக்காக எதுவும் வேண்டாம். தனக்காகவே சம்பாதிக்கிறீர்கள். எப்போதும் ஒவ்வொரு அடியிலும் சேமிக்கக் கூடிய, சம்பாதிக்கும் குழந்தைகள், இதை சோதனை செய்யுங்கள். ஏனெனில் நேரம் நெருங்கின்றது. அதனால் எவ்வளவு வருமானம் சேமிப்பாகுமோ, அவ்வளவு ஓய்வாக சிறந்த பலனை அனுபவித்துக் கொண்டே இருப்பீர்கள். எதிர்காலத்தின் பிராப்தியோ இருக்கவே இருக்கிறது. அதனால் இந்த வருமானத்தின் பிராப்தி இப்போது இந்த சங்கமயுகத்திலும் இருக்கும், எதிர்காலத்திலும் இருக்கும். எனவே அனைவரும் சம்பாதிக்கக் கூடியவர்களா அல்லது சம்பாதித்தோம், சாப்பிட்டோம் என்பவர்களா?



    எவ்வாறு தந்தையோ அவ்வாறே குழந்தைகள், எவ்வாறு தந்தை நிறைந்தவரோ, முழுமையானவரோ, அவ்வாறே குழந்தைகளும் எப்போதும் நிறைந்து இருக்கக் கூடியவர்கள், அனைவரும் தைரியசாலிகள் தானே? பயப்படுபவர்கள் இல்லை தானே? பயப்படுவதில்லையா? சிறிதளவேனும் பயம் எண்ணத்தளவிலும் வருகிறதா, இல்லையா? இது எதுவும் புதிதல்ல (நத்திங் நியூ) அல்லவா! எத்தனை தடவை இது நடந்துள்ளது? நிறைய தடவை ரிப்பீட் ஆகியுள்ளது. இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. சக்திகளும் பயமற்றவர்கள் தானே! சக்திகள் எப்போதும் வெற்றியாளர்கள்! எப்போதும் பயமற்றவர்கள்! எப்போது பாபாவின் குடை நிழலின் கீழ் இருக்கிறார்களோ, அப்போது பயமற்றவர்களாகத் தான் இருப்பார்கள்! எப்போது தன்னை தனியானவர் என உணர்கிறீர்களோ, அப்போது தான் பயம் உண்டாகிறது. குடைநிழலுக்குள் பயம் ஏற்படாது. எப்போதும் பயமற்றவர்கள்!. சக்திகளின் வெற்றியானது எப்போதும் புகழ் பாடப் பட்டுள்ளது. அனைவரும் வெற்றியாள சிங்கங்கள் அல்லவா! சிவசக்திகளுக்கு, பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை என்றால் யாருக்குக் கிட்டும்? பாண்டவர்களுக்கும், சக்திகளும் கல்ப கல்பத்தின் வெற்றியாளர்கள். குழந்தைகளிடம் பாபாவுக்கு அன்புள்ளது அல்லவா! பாபாவின் அன்பான குழந்தைகளுக்கு, நினைவில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு எதுவும் நேர முடியாது! நினைவின் பலஹீனம் இருக்கும் என்றால், சிறிதளவு அசைவு (நட்ஹந்ங்) ஏற்படலாம். நினைவின் குடைநிழல் இருக்கிறதென்றால், எதுவுமே (தீங்கு) நேர முடியாது. பாப்தாதா ஏதேனும் சாதனம் மூலம் காப்பாற்றி விடுகிறார். எப்பொழுது பக்த ஆத்மாக்களுக்கே உதவி இருக்கும் போது, குழந்தைகளுக்கு உதவி எப்போதுமே இருக்கிறது.



    2. எப்போதும் தைரியம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகள் மூலம் பறக்கக் கூடியவர்கள் அல்லவா! ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் எப்போதும் தன்னையும் பறக்க வைக்கின்றன, மேலும் பிறரையும் பறக்க வைப்பதற்கான வழியைக் கூறுகின்றன. இந்த இரு இறக்கைகளும் எப்போதும் உடன் இருக்கட்டும். ஒரு இறக்கை தளர்வாக இருந்தாலும் உயரே பறக்க முடியாது. எனவே இந்த இரண்டும் தேவைப் படுகின்றன - தைரியமும், ஊக்கம், உற்சாகமும். தைரியம் என்பது நடக்காததை நடத்திக் காட்டக் கூடியது, தைரியம் கடினமானதை எளிதாக்கக் கூடியது ஆகும், கீழிருந்து உயரே பறக்க வைக்ககூடியது. அதனால் எப்போதும் அது போல் பறக்கக் கூடிய அனுபவமுள்ள ஆத்மாக்கள் தானே! கீழே வருவதனால் என்ன பிராப்தி ஆகியது என்பதையோ பார்த்து விட்டீர்கள்! கீழே விழுந்து கொண்டிருக்கும் நேரம் அல்ல. இப்பொழுது பறக்கும் கலைக்கான நேரம் ஆகும், (ஹைஜம்ப்) உயரம் தாண்டுவதற்கான நேரமும் அல்ல. வினாடியில் எண்ணினோம்! உடனே பறந்தாயிற்று! அப்படிப்பட்ட சக்தி பாபா மூலம் எப்போதும் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.



    3. தன்னை எப்போதும் மாஸ்டர் ஞானசூரியன் என்று நினைக்கிறீர்களா? ஞான சூரியனின் செயல் அனைவரிடமிருந்தும் அஞ்ஞான இருளை அழிப்பதாகும். சூரியன் தனது ஒளியினால் இரவை, பகலாக்கி விடுகிறது. அதுபோல மாஸ்டர் ஞான சூரியன் உலகிலிருந்து இருளை விலக்கக் கூடியவர், அலைந்து கொண்டிருக்கக் கூடிய ஆத்மாக்களுக்கு வழியைக் காட்டக் கூடியவர்கள் தானே! தங்களது இந்த செயல் எப்போதும் நினைவில் இருக்கிறதா? எவ்வாறு லௌகீக தொழிலை மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை. அதுவோ ஒரு பிறவின் அழியக் கூடிய காரியம், அழியக் கூடிய தொழில், நாம் மாஸ்டர் ஞான சூரியன் என்பதோ எப்போதைக்குமான தொழில்! அதனால் எப்போதும் தனது இதைத அழிவற்ற தொழில் அல்லது கடமை என்று உணர்ந்து இருளைப் போக்கி வெளிச்சத்தை கொண்டு வரவேண்டும். இதன் மூலம் தன்னிடமிருந்தும் இருள் நீங்கி வெளிச்சம் உண்டாக்கும், ஏனெனில் வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடியது தானும் பிரகாசமயமாகத்தான் இருக்கும். அதனால் இந்த காரியத்தை எப்போதும் நினைவில் வையுங்கள். நான் மாஸ்டர் ஞான சூரியன் பிரகாசமயமாக இருக்கிறேனா! என்று தினமும் தன்னைத் தானே சோதனை செய்யுங்கள். எவ்வாறு தீயை அணைப்பவர்கள், தான் நெருப்பின் தாக்கத்திற்கு ஆளாவதில்லையோ, அதுபோல எப்போதும் இருளை விலக்கக் கூடியவர்கள், தானே இருளில் :மூழ்குவதில்லை, அதனால் நான் மாஸ்டர் ஞான சூரியன் என்ற போதை அல்லது குஷி எப்போதும் இருக்கட்டும்.



    குமார்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

    1. குமார்களின் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகும், குமார வாழ்க்கையில் பாபாவுடையவர் ஆகிவிட்டீர்கள். அப்படிப்பட்ட தனது சிறந்த அதிர்ஷ்டத்தைக் கண்டு புன்சிரிப்புடன் இருங்கள். மேலும் பிறருக்கும் கூட புன்சிரிப்புடன் இருப்பதற்கான விதியை சொல்லிக் கொண்டே இருங்கள். அனைவரைக் காட்டிலும் பந்தனமற்றவர்கள் குமாரர்களும், குமாரிகளும் ஆவர். குமாரர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதை தனது பாக்கியமாக்கிக் கொள்ள முடியும். தைரியம் உள்ள குமாரர்கள் தானே! பலஹீனமான குமாரர்கள் இல்லையே! எவ்வளவு தான் யாரேனும் தன் பக்கம் கவர்ந்திழுக்க முற்படலாம், ஆனால் மகாவீர் ஆத்மாக்கள் ஒரு பாபாவைத் தவிர எங்குமே கவரப்பட மாட்டார்கள். அவ்வாறு துணிவு உள்ளவர்களை நிறைய வடிவத்தில் மாயா தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும், ஆனால் நம்பிக்கை புத்தியுள்ளவர்களுக்கு வெற்றி. பயப்படுபவர்கள் அல்ல! நல்லது. ஆஹா எனது சிறந்த அதிர்ஷ்டமே! அவ்வளவு தான், இதையே எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போல் யாரும் இருக்க முடியாது என்ற போதை இருக்கட்டும். எங்கு ஈஸ்வரிய போதை இருக்குமோ, அங்கு மாயாவிடமிருந்து விலகியிருப்பீர்கள். சேவையிலோ எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள் தானே! இதுவும் அவசியமாகும். எவ்வளவு சேவையில் பிஸியாக இருப்பீர்களோ, அவ்வளவு சகஜயோகியாக இருப்பீர்கள், ஆனால் நினைவுடன் சேர்ந்த சேவையாக இருந்தால் தான் பாதுகாப்பு, நினைவில்லையெனில் பாதுகாப்பு இல்லை.



    2. குமாரர்கள் எப்போதும் தடைகளற்றவர்கள் தானே? மாயா கவர்ச்சி செய்வதில்லை தானே? குமாரர்களைமாயை தனதாக்கிக் கொள்ள நிறைய முயற்சி செய்கிறது. மாயைக்கு குமாரர்களை மிகவும் பிடிக்கிறது. என்னுடையவர் ஆகிவிட வேண்டும் என்று அது நினைக்கிறது, ஆனால் நீங்கள் அனைவரும் துணிவுள்ளவர்கள் தானே! மாயையின் சீடர்கள் அல்ல, மாயைக்கு சவால் விடுபவர்கள்! அரை கல்பம் மாயையின் சீடர்களாக இருந்து என்ன கிடைத்தது? அனைத்தையும் இழந்தாயிற்று! எனவே இப்போது பிரபுவின் உடைவர்கள் ஆகிவிட்டீர்கள். பிரபுவின் உடைவர் ஆவதென்றாலே சொர்க்கத்தின் உரிமையை அடைவது! அதனால் அனைத்து குமாரர்களும் வெற்றியாளர்கள். பார்க்கலாம்! பக்குவம் அடையாதவராக இருக்கக் கூடாது, மாயைக்கு குமாரர்களிடம் அதிகபட்ச அன்புள்ளது. அதனால் என்னுடையவர் ஆகிவிடவேண்டும் என்று நாலா பக்கமிருந்தும் முயற்சிக்கிறது. ஆனால் நீங்கள் அனைவரும் சங்கல்பம் செய்துவிட்டீர்கள். எப்போது பாபாவினுடையவர் ஆகிவிட்டீர்களோ, அப்போதே கவலையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். எப்போதும் தடைகளற்றவர்கள் ஆகுக, பறக்கும் கலையுடையவர்கள் ஆகுக.



    3. குமாரர்கள் - எப்போதும் சக்தியுள்ளவர்கள். எங்கு சக்தியுள்ளதோ, அங்கு பிராப்தியுள்ளது. எப்போதும் அனைத்து பிராப்தி சொரூபம், ஞானம் நிறைந்தவராக இருக்கும் காரணத்தால், மாயாவின் விதவிதமன வடிவங்களைத் தெரிந்து கொண்டிருப்பவர்கள். ஆகையால் தனது பாக்கியத்தை அதிகரித்துக் கொண்டேயிருங்கள். எப்போதும் ஒரே ஒரு விஷயத்தை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள் - குமாரர்களின் வாழ்க்கை என்றாலே, விடுபட்ட வாழ்க்கை. யார் ஜீவன் முக்தர்களாக இருப்பார்களோ, அவர்கள் சங்கமயுகத்தின் பிராப்தி நிறைந்தவராக இருப்பார். எப்போதும் முன்னேறிக் கொண்டேயிருங்கள் மற்றும் முன்னேற்றிக் கொண்டேயிருங்கள். குமாரர்கள் எப்போதுமே குஷியில் நடனமாட வேண்டும். ஆஹா குமார்களின் வாழ்க்கை! ஆஹா பாக்கியம்! ஆஹா டிராமா! ஆஹா பாபா!.....இந்தப் பாடலையை பாடிக் கொண்டேயிருங்கள். குஷியில் இருந்தீர்கள் எனில் பலஹீனம் வரமுடியாது. சேவை மற்றும் நினைவினால் சக்தியை நிரப்பிக் கொண்டேயிருங்கள். குமார வாழ்க்கை இலகுவான வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் தனது அதிர்ஷ்டத்தை உருவாக்குவது என்பது அனைத்திலும் பெரிய பாக்கியமாகும். எவ்வளவு பந்தனங்களில் கட்டப்படுவதிலிருந்து தப்பித்து விட்டீர்கள்! எப்போதும் தன்னை அவ்வாறு டபுள் லைட் எனப் புரிந்து கொண்டு பறக்கும் கலையில் சென்று கொண்டேயிருங்கள், அப்போது முதல் நம்பரைப் பெற்று விடுவீர்கள். நல்லது.



    வரதானம்:

    கோபமான ஆத்மாக்களுக்கு இரக்கம் என்ற குளிர்ச்சியான நீர் மூலம் குண தானத்தைக் கொடுக்கக் கூடிய வரதானி ஆத்மா ஆகுக.



    உங்கள் முன்பு யாரேனும் கோப நெருப்பில் எரிந்து கொண்டிருக்கக் கூடியவர் வரலாம், உங்களை திட்டலாம், நிந்திக்கலாம், என்றாலும் அப்படிப் பட்ட ஆத்மாக்களுக்கு தனது நல்ல பாவனை, நல்லாசை மூலமாக, உள்ளுணர்வு மூலமாக, மன நிலை மூலமாக, குண தானம் அல்லது சகிப்புத் தன்மையின் சக்தியை வரதானமாகக் கொடுங்கள். கோபமான ஆத்மா பிற வசத்தில் (மாயை) இருக்கிறது. அப்படிப்பட்ட பிற வசத்தில் உள்ள ஆத்மாக்களை இரக்கம் என்ற குளிர்ந்த நீரின் மூலமாக அமைதியாக்கி விடுங்கள். இது வரதானி ஆத்மாக்களாகிய உங்களது கடமையாகும், சைதன்யத்தில் எப்போது உங்களுக்குள் அப்படிப்பட்ட சன்ஸ்காரம் நிரம்புகிறதோ, அப்போதே ஜட சித்திரங்கள் மூலமாக பக்தர்களுக்கு வரதானங்கள் கிடைக்கின்றன.



    சுலோகன்:

    நினைவின் மூலமாக அனைத்து சக்திகளின் பொக்கிஷத்தை அனுபவம் செய்யக் கூடியவரே சக்தி நிறைந்தவர் ஆகின்றார்.

    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs