Brahma Kumaris Murli Tamil 17 September 2019

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Brahma Kumaris Murli Tamil 17 September 2019

    Brahma Kumaris Murli Tamil 17 September 2019
    Brahma Kumaris Murli Tamil 17 September 2019

    17.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன் 

    இனிமையான குழந்தைகளே! ஈஸ்வரன் சர்வவியாபி அல்ல, அவர் நம்முடைய தந்தை என்பதில் உங்களுக்கு எவ்வளவு நிச்சயம் உள்ளதோ, அதுபோல் மற்றவர்களுக்கும் புரிய வைத்து நிச்சயம் செய்வியுங்கள். பிறகு அவர்களிடம் அபிப்பிராயம் எழுதி வாங்குங்கள். 

    கேள்வி: 


    பாபா தம்முடைய குழந்தைகளுடன் சந்திக்கிறார் என்றால் அவர்களிடம் எந்தவொரு கேள்விக் கேட்கிறார், அதை வேறு யாரும் கேட்க முடியாது? 

    பதில்: 


    குழந்தைகளை சந்திக்கும்போது பாபா கேட்கிறார் - குழந்தாய், இதற்கு முன் நீ எப்போதாவது என்னை சந்தித்திருக்கிறாயா? எந்தக் குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் உடனே சொல்வார்கள் - ஆம் பாபா, நான் 5000 ஆண்டுகளுக்கு முன் சந்தித்திருக்கிறேன். யார் புரிந்து கொள்ளவில்லையோ, அவர்கள் குழம்பிப் போவார்கள். இதுபோன்ற கேள்வி கேட்பதற்கான புத்தி வேறு யாருக்கும் வரவே வராது. பாபா தான் உங்களுக்கு முழுக் கல்பத்தின் இரகசியத்தைச் சொல்லிப் புரிய வைக்கிறார். 

    ஓம் சாந்தி. 


    ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக எல்லையற்ற தந்தை புரிய வைக்கிறார் - இங்கே நீங்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். வீட்டிலிருந்து இந்த சிந்தனையோடு தான் வெளியில் வருகிறீர்கள், அதாவது நாம் சிவபாபாவிடம் செல்கிறோம். அவர் பிரம்மாவின் இரதத்தில் வந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் சொர்க்கத்தில் இருந்தோம். பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்து இப்போது நரகத்தில் விழுந்திருக்கிறோம். வேறு எந்தவொரு சத்சங்கத்திலும் யாருடைய புத்தியிலும் இவ்விஷயங்கள் இருக்காது. நீங்கள் அறிவீர்கள், நாம் சிவபாபாவிடம் செல்கிறோம். அவர் இந்த இரதத்தில் வந்து படிப்பு சொல்லித் தரவும் செய்கிறார். அவர் ஆத்மாக்களாகிய நம்மை உடன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து அவசியம் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கவேண்டும். இதை பாபா புரிய வைத்துள்ளார், அதாவது நான் சர்வவியாபி இல்லை என்று. எங்கும் நிறைந்ததாக 5 விகாரங்கள் தான் உள்ளன. உங்களுக்குள்ளும் கூட 5 விகாரங்கள் உள்ளன. அதனால் நீங்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக ஆகியிருக்கிறீர்கள். இப்போது ஈஸ்வரன் சர்வவியாபி அல்ல என்ற அபிப்பிராயத்தை அவசியம் எழுதி வாங்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கோ உறுதியான நிச்சயம் உள்ளது-ஈஸ்வரன் சர்வவியாபி அல்ல. பாபா மிக மேலான (சுப்ரீம்) தந்தையாக உள்ளார், மிக மேலான ஆசிரியர், குருவாகவும் உள்ளார். எல்லையற்ற சத்கதி அளிப்பவர். அவரே சாந்தி அளிப்பவர். வேறு எந்த (ஓரிடத்திலும்) சத்சங்கம் போன்றவற்றில் இதுபோல் சிந்திப்பதில்லை - என்ன கிடைக்கப் போகிறது? வெறுமனே காதுகளின் இரசனைக்காக - இராமாயணம், கீதா முதலியவற்றைப் போய் கேட்கின்றனர். புத்தியில் அர்த்தம் எதுவும் பதிவது கிடையாது. முன்பு நாம் பரமாத்மா சர்வவியாபி எனச் சொல்லி வந்தோம். இப்போது பாபா புரிய வைக்கிறார்-இது பொய், .மிகவும் நிந்தனையின் விஷயமாகும். ஆக, இந்த அபிப்பிராயம் எழுதி வாங்க வேண்டியதும் அவசியமாகும். தற்போது நீங்கள் யார் மூலமாகத் திறப்புவிழா முதலியன செய்விக்கிறீர்களோ, அவர்கள் எழுதுகிறார்கள், பிரம்மாகுமாரிகள் நல்ல காரியம் செய்கின்றனர், மிக நன்றாகப் புரிய வைக்கின்றனர் என்று. ஈஸ்வரனை அடைவதற்கான வழி சொல்கின்றனர். இதனால் மக்கள் மனதில் நல்ல தாக்கம் ஏற்படுகின்றது. மற்றப்படி இந்த அபிப்பிராயத்தை யாரும் எழுதித் தருவதில்லை, அதாவது உலகம் முழுவதிலும் ஈஸ்வரன் சர்வவியாபி எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, இது பெரிய பிழை என்று. ஈஸ்வரனோ தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கிறார். இந்த ஒன்று முக்கிய விஷயம். இரண்டாவது, அபிப்பிராயம் வேண்டும், அதாவது இந்த ஞானத்தைக் கேட்பதால் நாங்கள் புரிந்து கொள்கிறோம், கீதையின் பகவான் கிருஷ்ணரல்ல என்று. எந்தவொரு மனிதரோ அல்லது தேவதையோ பகவான் எனச் சொல்லப்படுவதில்லை. பகவான் ஒருவரே! அவர் தந்தையாக இருக்கிறார். அந்தத் தந்தையிடமிருந்து தான் சாந்தி மற்றும் சுகத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது. இப்படி-இப்படி அபிப்பிராயம் எழுதி வாங்க வேண்டும். இப்போது நீங்கள் என்ன அபிப்பிராயம் எழுதி வாங்குகிறீர்களோ, அது எந்தவொரு வேலைக்கும் ஆகாது. ஆம், இங்கே நன்றாகக் கற்றுத் தருகிறார்கள் என்று மட்டும் எழுதுகின்றனர். மற்றப்படி முக்கியமாக உங்களுக்கு எந்த விஷயத்தில் வெற்றி கிடைக்க வேண்டுமோ அதை எழுதச் செய்யுங்கள்-அதாவது இந்த பிரம்மாகுமாரிகள் சத்தியத்தையே சொல்கின்றனர், ஈஸ்வரன் சர்வவியாபி இல்லை என்று. அவரோ தந்தையாக இருக்கிறார். அவரே கீதையின் பகவான். தந்தை வந்து பக்தி மார்க்கத்திலிருந்து விடுவித்து ஞானத்தைத் தருகிறார். இந்த அபிப்பிராயமும் அவசியம், அதாவது பதீத-பாவனி தண்ணீரின் கங்கை அல்ல, ஆனால் ஒரே ஒரு தந்தை தான். இப்படி-இப்படி எப்போது அபிப்பிராயம் எழுதுகின்றனரோ, அப்போது தான் உங்களுக்கு வெற்றி ஏற்படும். இப்போது நேரம் உள்ளது. இப்போது நடைபெறும் உங்களுடைய சேவையில் எவ்வளவு செலவு ஏற்படுகிறது. இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறீர்கள். வெளியிலுள்ளவர்களுக்கோ எதுவுமே தெரிவதில்லை. நீங்கள் உங்களுடைய உடல்-மனம்-செல்வத்தின் மூலம் செலவு செய்து தங்களுக்கான இராஜ்யத்தை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். யார் செய்யவில்லையோ, அவர்கள் எதையும் அடையவும் மாட்டார்கள். கல்ப-கல்பமாக நீங்கள் தான் செய்கிறீர்கள். நீங்கள் தான் நிச்சயபுத்தி உள்ளவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபா தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார். கீதையின் ஞானத்தையும் சரியான முறையில் சொல்கிறார். பக்தி மார்க்கத்தில் கீதையைக் கேட்டே வந்திருக்கலாம். ஆனால் அதனால் இராஜ்யத்தை அடையவில்லை. ஈஸ்வரிய வழிமுறையிலிருந்து மாறி அசுர வழிமுறையாக ஆகிவிட்டது. பண்புகள் கெட்டுப் போயப் பதீத்தம் ஆகிவிட்டுள்ளனர். கும்பமேளாவுக்கு எவ்வளவு மனிதர்கள் கோடிக்கணக்கில் செல்கின்றனர்! எங்கெல்லாம் தண்ணீரைப் பார்க்கின்றனரோ, அங்கெல்லாம் செல்கின்றனர். தண்ணீரினால் தான் பாவனமாவோம் என நினைக்கின்றனர். இப்போது தண்ணீரோ எங்கெல்லாமோ நதிகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் யாராவது பாவனமாக முடியுமா என்ன? தண்ணீரில் குளிப்பதால் நாம் பதீத்ததிலிருந்து பாவனமாகி தேவதை ஆகிவிடுவோமா என்ன? இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், யாருமே பாவனமாக முடியாது. இது தவறாகும். ஆக, இந்த மூன்று விஷயங்களைப் பற்றி அபிப்பிராயம் எழுதி வாங்க வேண்டும். இப்போது இதை மட்டும் சொல்கின்றனர்-நிறுவனம் நன்றாக உள்ளது. அதனால் அநேகருக்குள் நிறைந்திருந்த சந்தேகங்கள் - அதாவது பிரம்மாகுமாரிகளிடம் மாயாஜாலம் உள்ளது, அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர் என்ற - இத்தகைய சிந்தனைகள் விலகிவிடும். ஏனென்றால் சப்தம் அதிகமாகப் பரவியிருக்கிறது இல்லையா? வெளிநாடு வரை இந்த சப்தம் சென்றால் - இவருக்கு 16108 இராணிகள் வேண்டும், அதில் 400 கிடைத்துள்ளது. ஏனென்றால் அச்சமயம் சத்சங்கத்தில் 400 பேர் வந்திருந்தனர். அநேகர் விரோதியானார்கள். போராட்டம் முதலியன நடத்தினார்கள். ஆனால் பாபாவுக்கு முன்போ யாருடைய முயற்சியும் பக்காது. அனைவரும் கேட்டார்கள், இந்த மாயா ஜாலமெல்லாம் பிறகு எங்கிருந்து வந்தது? பிறகு அற்புதம் பாருங்கள், பாபாவோ கராச்சியில் இருந்தார். தாமாகவே கூட்டத்தினர் அனைவரும் ஓடி வந்தனர். நம்முடைய வீடுகளில் இருந்து எப்படி ஓடினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்த சிந்தனையும் வரவில்லை, இத்தனைப் பேரும் எங்கே போய் இருப்பார்கள்? பிறகு உடனே பங்களா எடுத்துக் கொண்டார்கள். ஆக, மாயாஜாலத்தின் விஷயமாகிறது இல்லையா? இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர், இவர்கள் மாயாஜாலம் செய்பவர்கள் என்று. பிரம்மாகுமாரிகளிடம் சென்றுவிட்டால் பிறகு திரும்பி வர மாட்டார்கள். இவர்கள் ஆண்-பெண்ணை சகோதர-சகோதரிகளாக ஆக்குகிறார்கள். பிறகு எத்தனையோ பேர் வருவதே இல்லை. இப்போது உங்களுடைய கண்காட்சி முதலியவற்றைப் பார்த்ததும் எந்த விஷயங்கள் அவர்களின் புத்தியில் பதிகிறதோ, அதெல்லாம் தூரத்தில் சென்று விடுகிறது. மற்றப்படி பாபா என்ன அபிப்பிராயம் விரும்புகிறாரோ, அதை யாரும் எழுதுவதில்லை. பாபாவுக்கு அந்த அபிப்பிராயம் வேண்டும். கீதையின் பகவான் கிருஷ்ணரல்ல என்று எழுத வேண்டும். கிருஷ்ண பகவான் வாக்கு என்று தான் முழு உலகமும் புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் கிருஷ்ணரோ முழு 84 பிறவிகளை எடுக்கிறார். சிவபாபா புனர்ஜென்மம் இல்லாதவர். ஆக, இதில் அநேகரின் அபிப்பிராயம் வேண்டும். கீதை கேட்பவர்களோ, ஏராளமான பேர் உள்ளனர். பிறகு பார்ப்பார்கள், இதுவோ செய்தித்தாள்களிலும் வெளிவந்துள்ளது-கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மா சிவன் என்று. அவரே தந்தை, ஆசிரியர், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். சாந்தி மற்றும் சுகத்தின் ஆஸ்தி அவரிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. மற்றபடி இப்போது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், திறப்புவிழா நடத்துகிறீர்கள். மனிதர்களின் சந்தேகங்கள் மட்டும் நீங்கி விடுகின்றன. நல்ல முறையில் புரிய வைக்கப்படுகின்றது. மற்றபடி பாபா எப்படி சொல்கிறாரோ, அப்படி அபிப்பிராயத்தை அவர்கள் எழுத வேண்டும். முக்கியமான அபிப்பிராயம் இது தான். மற்றபடி ஆலோசனை சொல்கின்றனர், இந்த நிறுவனம் மிக நன்றாக உள்ளது என்று. இதனால் என்ன ஆகும்? ஆம், இன்னும் போகப்போக விநாசம் மற்றும் ஸ்தாபனை அருகில் வரும்போது உங்களுக்கு இந்த அபிப்பிராயத்தையும் எழுதுவார்கள். புரிந்துக் கொண்டு எழுதுவார்கள். இப்போது உங்களிடம் வரத் தொடங்கியுள்ளனர் இல்லையா? இப்போது உங்களுக்கு ஒரு தந்தையின் குழந்தைகள் நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள் என்ற ஞானம் கிடைத்துள்ளது. இதை யாருக்கும் புரிய வைப்பதோ மிகவும் சுலபமாகும். ஆத்மாக்கள் அனைவர்க்கும் தந்தை ஒரே ஒரு சுப்ரீம் பாபா ஆவார். அவரிடமிருந்து நிச்சயமாக மிக மேலான எல்லையற்ற பதவியும் கிடைக்கும். இதுபோல் 5000 ஆண்டுகளுக்கு முன் உங்களுக்குக் கிடைத்திருந்தது. அந்த மனிதர்கள் கலியுகத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் எனச் சொல்லிவிடுகின்றனர். நீங்கள் 5000 ஆண்டுகள் எனச் சொல்கிறீர்கள் எவ்வளவு வேறுபாடு! 

    பாபா புரிய வைக்கிறார், 5000 ஆண்டுகளுக்கு முன் உலகில் சாந்தி இருந்தது. இந்த நோக்கம் குறிக்கோள் (இலட்சுமி-நாராயணர்) முன்னால் உள்ளது. இவர்களுடைய இராஜ்யம் இருந்தபோது உலகில் சாந்தி இருந்தது. இந்த இராஜ்யத்தை நாம் மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். முழு உலகிலும் சுகம்-சாந்தி இருந்தது. எந்த ஒரு துக்கத்தின் பெயரும் இல்லாதிருந்தது. இப்போதோ அளவற்ற துக்கம்! நாம் நம்முடைய உடல்-மனம்-செல்வத்தினால் குப்த ரீதியாக இந்த சுகம்-சாந்தியின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பாபாவும் குப்தமாக (மறைமுகமாக) உள்ளார், ஞானமும் குப்தமாக உள்ளது, உங்களுடைய புருஷார்த்தமும் குப்தமாக உள்ளது. அதனால் பாபா பாடல்கள்-கவிதைகள் முதலியவற்றை விரும்புவதில்லை. அது பக்தி மார்க்கமாகும். இங்கோ பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருந்து, போகும்போதும் வரும் போதும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். சிருஷ்டி (உலக)ச் சக்கரத்தையும் புத்தியில் சுற்ற வேண்டும். இப்போது இந்தப் பழைய உலகத்தில் நமக்கு இது கடைசிப் பிறவி. பிறகு நாம் புது உலகில் முதல் பிறவி எடுப்போம். ஆத்மா நிச்சயமாகப் பவித்திரமானதாக வேண்டும். இப்போதோ அனைத்து ஆத்மாக்களும் பதீத்தமாக உள்ளனர். நீங்கள் ஆத்மாவைப் பவித்திரமாக ஆக்குவதற்காக பாபாவிடம் யோகா வைக்கிறீர்கள். பாபா தானே சொல்கிறார் - குழந்தைகளே, தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விடுங்கள். பாபா புது உலகைத் தயார் செய்து கொண்டிருக்கிறார். அவரை நினைவு செய்வீர்களானால் உங்கள் பாவங்கள் நீங்கிவிடும். பாபா உங்களுக்கு உலகத்தின் இராஜபதவி தருகிறார். அப்படிப்பட்ட பாபாவை நீங்கள் எப்படி மறந்து விடுகிறீர்கள்? அவர் சொல்கிறார் - குழந்தைகளே, இந்த கடைசிப் பிறவியில் மட்டுமே பவித்திரமாக ஆகுங்கள். இந்த மரண உலகத்தின் விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது. இந்த விநாசமும் கூட 5000 ஆண்டுகளுக்கு முன் இதுபோலவே நடந்தது. இதுவோ நினைவில் வருகின்றது இல்லையா? உங்களின் இராஜ்யம் இருந்தது அப்போது வேறு எந்த ஒரு தர்மமும் இல்லாதிருந்தது. பாபாவிடம் யாராவது வருவார்களானால் அவர்களிடம் கேட்கிறேன் - முன் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? சிலரோ புரிந்து கொண்டவர்கள் என்றால் உடனே சொல்கிறார்கள், 5000 ஆண்டுகளுக்கு முன் சந்தித்திருக்கிறோம் என்று. யாரேனும் புதியவர்கள் வருகிறார்கள் என்றால் குழம்பி விடுகின்றனர். பாபா புரிந்து கொள்கிறார், பிராமணி அவர்களுக்குப் புரிய வைக்கவில்லை என்று. பிறகு சொல்கிறேன். யோசியுங்கள் என்று சொன்னால் நினைவு வருகிறது. இந்த விஷயத்தை வேறு யாருமோ கேட்க முடியாது. கேட்பதற்கான புத்தியே வராது. இந்த விஷயங்களினால் அவர்கள் என்ன தெரிந்து கொள்வார்கள்? இன்னும் போனால் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்கள் உங்களிடம் அநேகர் வந்து (ஞானம்) கேட்பார்கள். நிச்சயமாக உலகம் மாறப் போகின்றது. சக்கரத்தின் இரகசியமோ புரிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது புது உலகத்திற்குச் செல்ல வேண்டும். இந்தப் பழைய உலகத்தை மறந்துவிடுங்கள். தந்தை புது வீடு கட்டுகிறார் என்றால் புத்தி அதன் பக்கம் சென்று விடுகின்றது. பழைய வீட்டின் மீது பிறகு மோகம் இருப்பதில்லை. இது பிறகு எல்லையற்ற விஷயம். பாபா புது உலகமாகிய சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். அதனால் இப்போது இந்தப் பழைய உலகத்தைப் பார்த்தாலும் பார்க்காமல் இருங்கள். மோகம் புது உலகத்தின் மீது இருக்க வேண்டும். இந்தப் பழைய உலகத்தின் மீது வைராக்கியம். அவர்களோ, ஹடயோகத்தின் மூலம் எல்லைக்குட்பட்ட சந்நியாசம் செய்து காட்டில் போய் அமர்ந்து கொள்கின்றனர். உங்களுடையதோ, முழு பழைய உலகில் இருந்து வைராக்கியம். இதிலோ அளவற்ற துக்கம் உள்ளது. புது சத்யுக உலகத்தில் அளவற்ற சுகம் உள்ளதென்றால் நிச்சயமாக அதனை நினைவு செய்வார்கள். இங்கே அனைவரும் துக்கம் தருபவர்கள். தாய்-தந்தை முதலானோர் அனைவரும் விகாரங்களில் மூழ்கடித்து விடுவார்கள். பாபா சொல்கிறார், காமம் மகாசத்ரு. அதை வெல்வதன் மூலம் தான் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். இந்த இராஜயோகத்தை பாபா கற்றுத் தருகிறார். அதன் மூலம் நாம் இந்தப் பதவியைப் பெறுகிறோம். சொல்லுங்கள், எங்களுக்குக் கனவில் பாபா சொல்கிறார், பாவனமாவீர்களானால் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கும். ஆகவே நான் இப்போது ஒரு பிறவியில் அபவித்திரமாகி எனது இராஜ்யத்தை இழந்துவிட மாட்டேன். இந்த பவித்திரதாவின் விஷயத்தில் தான் சண்டை நடைபெறுகின்றது. திரௌபதியும் கூட அழைத்தார், இந்த துச்சாதனன் என்னை மானபங்கம் செய்கிறான் என்று. இந்த விளையாட்டையும் காட்டுகின்றனர்-திரௌபதிக்குக் கிருஷ்ணர் 21 சேலைகள் கொடுக்கிறார் என்பதாக. இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், எவ்வளவு துர்கதி ஆகிவிட்டுள்ளது! அளவற்ற துக்கங்கள் இல்லையா? சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருந்தது. இப்போது நான் வந்திருக்கிறேன் - அநேக அதர்மங்களின் விநாசம் மற்றும் ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்வதற்காக. உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் தந்து விட்டு நான் வானப்ரஸ்தத்தில் சென்றுவிடுவேன். பிறகு அரைக் கல்பத்திற்கு எனது தேவையே இருக்காது. நீங்கள் ஒருபோதும் நினைவும் செய்ய மாட்டீர்கள். ஆக, பாபா புரிய வைக்கிறார்-உங்களுக்காக அனைவரிடமும் தலைகீழான அதிர்வலைகள் உள்ளனவே, அவை வெளியேறி சரியாகிக் கொண்டிருக்கிறது. மற்றப்படி முக்கிய விஷயம் அபிப்பிராயம் எழுதி வாங்குங்கள் - ஈஸ்வரன் சர்வவியாபி இல்லை என்று. அவரோ வந்து இராஜயோகம் கற்பித்திருக்கிறார். பதீத பாவனரும் பாபா தான். தண்ணீரின் நதிகள் பாவனமாக்க முடியாது. தண்ணீரோ எல்லா இடங்களிலும் உள்ளது. இப்போது எல்லையற்ற தந்தை சொல்கிறார், தன்னை ஆத்மா என உணருங்கள். தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விடுங்கள். ஆத்மா தான் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுத்துக் கொள்கிறது. அவர்கள் பிறகு சொல்லிவிடுகின்றனர், ஆத்மா நிர்லேப் (பாவ புண்ணியம் அதில் ஒட்டாது) என்பதாக. ஆத்மாவே பரமாத்மா என்பதெல்லாம் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். குழந்தைகள் கேட்கின்றனர்- பாபா, எப்படி நினைவு செய்வது என்று. அட, தன்னை ஆத்மா என்றோ உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆத்மா எவ்வளவு சிறிய புள்ளியாக உள்ளது என்றால் அதனுடைய தந்தையும் கூட இவ்வளவு சிறிய அளவில் தான் இருப்பார். அவர் புனர்ஜென்மத்தில் வருவதில்லை. இந்த ஞானம் புத்தியில் உள்ளது. தந்தையின் நினைவு ஏன் வராது? நடமாடும்போதும் சுற்றி வரும்போதும் பாபாவை நினைவு செய்யுங்கள். நல்லது, தந்தையைப் பெரிய உருவமாகவே நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒருவரையே நினைவு செய்யுங்களேன். அப்போது உங்கள் பாவங்கள் நீங்கும். வேறெந்த உபாயமும் கிடையாது. யார் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் சொல்கிறார்கள், பாபா, உங்கள் நினைவினால் நாங்கள் பாவனமாகி, பாவன உலகம், உலகின் மாலிக் (எஜமானன்) ஆகிறோம் என்று சொல்லும்போது நாங்கள் ஏன் நினைவு செய்ய மாட்டோம்? ஒருவர் மற்றவருக்கும் நினைவுப்படுத்த வேண்டும். அப்போது பாவங்கள் நீங்கிவிடும். நல்லது. 

    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே! 

    தாரணைக்கான முக்கிய சாரம்: 


    1) எப்படி பாபா மற்றும் ஞானம் குப்தமாக உள்ளதோ, அதுபோல் புருஷார்த்தமும் குப்தமாக செய்ய வேண்டும். பாடல்-கவிதைகளுக்குப் பதில், பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. அமைதியாக நடக்கும்போதும், சுற்றும்போதும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். 

    2) பழைய உலகம் மாறிக் கொண்டுள்ளது. அதனால் இதிலிருந்து மோகத்தை நீக்கிவிட வேண்டும். இதைப் பார்த்தாலும் பார்க்காமல் இருக்க வேண்டும். புத்தியைப் புது உலகில் ஈடுபடுத்த வேண்டும். 

    வரதானம்: 


    அனைத்து பொருட்கள் மீதுள்ள பற்றுதல்களிலிருந்து விலகி பற்றற்றவராக இயற்கையை வென்றவராக ஆவீர்களாக. 

    ஒரு வேளை ஏதாவது பொருள் கர்ம இந்திரியங்களை சஞ்சலப்படுத்துகிறது, அதாவது பற்றுதனுடைய உணர்வை உருவாக்குகிறது என்றாலும் கூட விலகியவராக ஆக முடியாது. இச்சைகள் தான் பற்றுதல்களின் ரூபம் ஆகும். இச்சை (இச்சா) இல்லை, ஆனால் (அச்சா) நல்லதாகப் படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆக இது கூட சூட்சுமத்தில் பற்றுதல் ஆகும். இதை நுண்ணிய ரூபத்தில் செக் செய்யுங்கள் - இந்தப் பொருள் அதாவது அல்ப கால சுகத்தின் சாதனம் என்னை கவருவது ஒன்றும் இல்லையே? இந்த பொருட்கள் இயற்கையின் சாதனங்கள் ஆகும். இவற்றிலிருந்து விலகியவராக, அதாவது பற்றற்றவராக ஆகும் பொழுதே இயற்கையை வென்றவராக (பிரகிருதி ஜீத்) ஆகி விடுவீர்கள். 

    சுலோகன்: 


    எனது எனது என்ற குழப்பங்களை விடுத்து எல்லைக்கப்பாற்பட்டு இருந்தீர்கள் என்றால் விஷ்வ கல்யாணகாரி (உலகிற்கு நன்மை செய்பவர்) என்று அழைக்கப்படுவீர்கள். 

    ****ஓம்சாந்தி ***

    Brahma Kumaris Murli Tamil 17 September 2019

    No comments

    Say Om Shanti to all BKs