Brahma Kumaris Murli Tamil 20 January 2020
Brahma Kumaris Murli Tamil 20 January 2020 |
20.01.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே!புண்ணிய ஆத்மா ஆகவேண்டுமானால் தனது கணக்கைப்(சார்ட்) பாருங்கள், எந்த ஒருபாவமும் செய்யவில்லையே?உண்மையின் கணக்குசேமிப்பாகியுள்ளதா?
கேள்வி :
அனைத்திலும் பெரிய பாவம் எது?
பதில் :
யார் மீதும் தீய பார்வை வைப்பதுஎன்பது அனைத்திலும் பெரியபாவமாகும். நீங்கள் புண்ணியஆத்மா ஆகக் கூடிய குழந்தைகள்,யார் மீதும் விகாரி திருஷ்டி வைக்கமுடியாது. சோதித்துப் பார்க்கவேண்டும், நாம் எதுவரையோகத்தில் இருக்கிறோம்? எந்தஒரு பாவ காரியமும்செய்யவில்லையே? உயர்ந்த பதவிபெற வேண்டுமானால் எச்சரிக்கையாக இருங்கள் - ஒருசிறிதும் தீய பார்வை என்பதுஇருக்கக் கூடாது. பாபா தரும் ஸ்ரீமத்படி முழுமையாக நடந்து சென்றுகொண்டே இருங்கள்.
பாடல் :
முகத்தைப் பார் மனிதா !
ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை தன்னுடையகுழந்தைகளுக்குச் சொல்கிறார் - குழந்தைகளே தனது கடந்த காலத்தை கொஞ்சம் சோதித்துப்பாருங்கள். இதுவோமனிதர்களுக்குத்தெரிந்திருக்கிறது, அதாவது நாம்வாழ்க்கை முழுவதிலும் எவ்வளவுபாவம், எவ்வளவு புண்ணியம்செய்துள்ளோம் என்று.தினந்தோறும் தங்களின்கணக்கைப் பாருங்கள் - எவ்வளவுபாவங்கள், எவ்வளவுபுண்ணியங்கள்செய்திருக்கிறோம்? யார் மீதும்கோபப் படாமல் இருந்தோமா?ஒவ்வொரு மனிதரும் புரிந்துகொள்ள முடியும் - நாம்வாழ்க்கையில் என்னென்னசெய்துள்ளோம்? எவ்வளவு பாவம்செய்துள்ளோம், எவ்வளவு தான-புண்ணியம் முதலியன செய்துள்ளோம்? என்று மனிதர்கள் யாத்திரை செல்கின்றனர் என்றால்தான-புண்ணியம் செய்கின்றனர்.முயற்சி செய்து பாவம் செய்யாமல்உள்ளனர். ஆக, பாபாகுழந்தைகளிடம் கேட்கிறார் - எவ்வளவு பாவம், எவ்வளவுபுண்ணியம் செய்திருக்கிறீர்கள்?இப்போது குழந்தைகள் நீங்கள்புண்ணிய ஆத்மாக்களாக ஆகவேண்டும். எந்த ஒரு பாவ கர்மமும்செய்யக் கூடாது. பாவங்களும்அநேக விதமாக உள்ளன. யார்மீதாவது தீய பார்வைசெலுத்துகிறோம் என்றால் இதுவும்கூட பாவமாகும். தீய பார்வை என்பது விகாரத்தினுடையதாகும்.அது அனைத்தினும் கெட்டதாகும்.ஒரு போதும் விகார திருஷ்டிசெலுத்தக் கூடாது. அதிகமாகஆண்-பெண்ணுக்கிடையில்விகாரத்தின் திருஷ்டி தான்உள்ளது. குமார்-குமாரிகளுக்கும்கூட எங்காவது விகாரத்தின்திருஷ்டி எழுகின்றது. இப்போதுபாபா சொல்கிறார், இந்தவிகாரத்தின் திருஷ்டி இருக்கக்கூடாது. இல்லையென்றால்உங்களை குரங்கு என்று சொல்லவேண்டும். நாரதரின் உதாரணம்உள்ளது இல்லையா? இலட்சுமியை மணக்க விரும்புவதாக நாரதர்சொன்னார். நீங்களும்சொல்கிறீர்கள் இல்லையா,நாங்களோ இலட்சுமியைமணப்போம் என்று? நாரியிலிருந்து இலட்சுமியாக, நரனிலிருந்து நாராயணனாக ஆவோம் என்று.பாபா சொல்கிறார், தனது மனதைக் கேளுங்கள் - எது வரை நாம்புண்ணியாத்மாவாகஆகியிருக்கிறோம்? எந்த ஒருபாவமும் செய்யாதிருக்கிறோமா?எதுவரை யோகத்தில்இருக்கிறோம்?
குழந்தைகள் நீங்களோ தந்தையைஅறிந்து கொண்டிருக்கிறீர்கள்,அதனால் தான் இங்கேஅமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா?உலக மனிதர்கள் இவர் பாப்தாதாஎன அறிந்து கொள்ளவில்லை.பிராமணக் குழந்தைகளாகியநீங்களோ அறிவீர்கள், பரமபிதாபரமாத்மா பிரம்மாவுக்குள்பிரவேசமாகி நமக்கு அழியாதஞான இரத்தினங்களின்கஜானாவைத் தருகிறார்.மனிதர்களிடம் இருப்பதுஅழியக்கூடிய செல்வம். அதைத்தான் தானம் செய்கின்றனர்.அதுவோ கல்லாகும். இவை ஞானஇரத்தினங்கள். ஞானக்கடலானதந்தையிடம் தான் ஞானஇரத்தினங்கள் உள்ளன. இந்தஒவ்வொரு இரத்தினமும் இலட்சரூபாய் பெறுமானதாகும். இரத்தினவியாபாரி பாபாவிடமிருந்து ஞானரத்தினங்களை தாரணை செய்துபிறகு இந்த இரத்தினங்களைமற்றவர்களுக்கு தானம் செய்யவேண்டும். இதை ஒருவர் எவ்வளவுபெறுகிறாரோ மற்றும் பிறருக்குக்கொடுக்கிறாரோ, அவ்வளவுஉயர்ந்த பதவி பெறுவார். ஆக,பாபா புரிய வைக்கிறார்,உங்களுக்குள்பாருங்கள், நாம்எவ்வளவு பாவம் செய்திருக்கிறோம்என்று. இப்போது எந்த ஒரு பாவமும்செய்யா திருக்கிறோமா? கொஞ்சம்கூட தீய பார்வை இருக்கக் கூடாது.பாபா கொடுக்கும் ஸ்ரீமத் படிமுழுமையாக நடந்து கொண்டேஇருக்க வேண்டும். இந்த கவனம்வேண்டும். மாயாவின் புயல்வரலாம். ஆனால்கர்மேந்திரியங்கள் மூலம் எந்த ஒருபாவ கர்மமும் செய்யக் கூடாது.எந்தப் பக்கமாவது தீய பார்வைபோகுமானால் அதற்கு முன்னால்நின்று கொண்டிருக்கக்கூடாது.உடனே விலகிப் போய்விடவேண்டும். இவருக்குத் தீய பார்வைஉள்ளது என்பது தெரிந்து விடும்.உயர்ந்த பதவி பெறவேண்டுமானால் மிகவும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தீய பார்வை போகுமானால் பிறகுமுடம், நொண்டியாக ஆகவேண்டியிருக்கும். பாபா சொல்லும்ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.தந்தையைக் குழந்தைகள் தான் அறிந்து கொள்ள முடியும். பாபாஎங்காவது செல்கிறார் என்றுவைத்துக் கொள்வோம், அங்குள்ளகுழந்தைகள் தான் அறிந்துகொள்வார்கள், பாப்தாதாவந்துள்ளார் என்று. மற்றமனிதர்கள் அநேகர் பார்க்கின்றனர்என்ற போதிலும் அவர்களுக்குத்தெரியாது. இவர் யார் என்றுயாராவது கேட்கவும் செய்யலாம்.பாப்தாதா எனச் சொல்லுங்கள்.பேட்ஜோ அனைவரிடமும் இருக்கவேண்டும். சொல்லுங்கள், சிவபாபாஎங்களுக்கு இந்த தாதா மூலம்அழியாத ஞான இரத்தினங்களைதானம் செய்கிறார். இது ஆன்மிகஞானமாகும் ஆத்மாக்கள்அனைவரின் தந்தையாகியஆன்மிகத் தந்தை வந்து இந்தஞானத்தைத் தருகிறார்.சிவபகவான் சொல்கிறார்,கீதையில் கிருஷ்ண பகவான்வாக்கு என எழுதப் பட்டிருப்பதுதவறாகும். ஞானக்கடல், பதீதபாவனர் என்பதாக சிவபகவான்தான் சொல்லப்படுகிறார்.ஞானத்தின் மூலம் தான் சத்கதிகிடைக்கின்றது. இவை அழியாதஞான இரத்தினங்கள். சத்கதிஅளிப்பவர் ஒரே ஒரு பாபா தான்.இந்த அனைத்துவாக்கியங்களையும் முழுமையாகநினைவில் வைக்க வேண்டும்.இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாபாவைஅறிவோம், மேலும் பாபாவும் புரிந்துகொண்டுள்ளார், நாம்குழந்தைகளை அறிவோம் என்று.பாபாவோ சொல்வார் இல்லையா - இவர்கள் அனைவரும் என்னுடையகுழந்தைகள் என்று, ஆனால் அவர்களால் அறிந்து கொள்ளமுடியாது. அதிர்ஷ்டத்தில்இருக்குமானால் இனி வரும்காலத்தில் அறிந்து கொள்வார்கள்.இந்த பாபா எங்காவது செல்கிறார்,யாராவது இவர் யார் என்றுகேட்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நிச்சயமாக சுத்தபாவனையுடன் தான் கேட்பார்கள்.பாப்தாதா என்ற வார்த்தையையேசொல்லுங்கள். எல்லையற்ற தந்தைநிராகார். அவர் எதுவரை சாகாரில்வரவில்லையோ, அதுவரைதந்தையிடமிருந்து ஆஸ்தி எப்படிக்கிடைக்கும்? ஆக, சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலம்தத்தெடுத்து ஆஸ்தி தருகிறார்.இவர் பிரஜாபிதா பிரம்மா மற்றும்இவர்கள் பி.கே. படிப்பு சொல்லித் தருபவர் ஞானக்கடல்.அவரிடமிருந்து தான் ஆஸ்திகிடைக்கின்றது. இந்த பிரம்மாவும்படிக்கிறார். இவர் பிராமணரில்இருந்து மீண்டும் தேவதை ஆகப்போகிறவர். இதைப் புரிய வைப்பதுஎவ்வளவு சுலபம்! யாருக்காவது பேட்ஜை வைத்துப் புரிய வைப்பதுநல்லது. சொல்லுங்கள், பாபாசொல்கிறார், என்னை நினைவுசெய்வீர்களானால் உங்களுடையபாவ கர்மங்கள் விநாசமாகி விடும்.பாவனமாகி பிறகு பாவனஉலகத்திற்குச் சென்று விடுவீர்கள்.இவர் பதீத பாவனர் பாபாஇல்லையா? நாம்பாவனமாவதற்கான புருஷார்த்தம்செய்து கொண்டிருக்கிறோம்.விநாசத்திற்கான சமயம்வரும்போது நமது படிப்புமுடிவடைந்து விடும். இதைப் புரியவைப்பது எவ்வளவு சுலபம்!யாராவது எங்காவது வந்தாலோபோனாலோ பேட்ஜ் கூடவே இருக்கவேண்டும். இந்த பேட்ஜுடன் கூடவேஒரு சிறு நோட்டீசும் இருக்கவேண்டும். அதில் பாரதத்தில்தந்தை வந்து மீண்டும் ஆதி சநாதனதேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற அநேகதர்மங்கள் அனைத்தும் இந்தமகாபாரத யுத்தத்தின் மூலம்கல்பத்திற்கு முன் போலவே டிராமாபிளான் அனுசாரம் அழிந்து போகும்.அதுபோன்ற நோட்டீஸ் 2-4 இலட்சம்அச்சடித்து வைக்க வேண்டும்.அப்போது யாருக்குவேண்டுமானாலும் அந்தநோட்டீசைக் கொடுக்க முடியும்.மேலே திரிமூர்த்தி இருக்கவேண்டும். மறு பக்கம்சென்டர்களின் முகவரிகள் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு நாள்முழுவதும் சேவை பற்றிய சிந்தனைநடைபெற்றுக் கொண்டே இருக்கவேண்டும்.
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் - தினந்தோறும் தனது கணக்கை(சார்ட்) உட்கார்ந்துவெளிக்கொண்டு வர வேண்டும்.அதாவது இன்று நாள் முழுவதும்நமது மனநிலை எப்படி இருந்தது? (பிரம்மா)பாபா இதுபோல் அநேக மனிதர்களைப் பார்த்துள்ளார் - அவர்கள் தினமும் இரவில் முழுநாளினுடைய கணக்கை உட்கார்ந்துஎழுதுவார்கள். சோதித்துப்பார்க்கின்றனர் - எந்த ஒரு தீயகாரியமும் செய்யவில்லையே?அனைத்தையும் எழுதுகின்றனர்.புரிந்துள்ளனர், நல்ல வாழ்க்கைவரலாறு எழுதப் பட்டிருக்குமானால்பின்னால் வருபவர்களும் படித்துஅதுபோல் எழுதக் கற்றுக் கொள்வார்கள். அதுபோல்எழுதுபவர்கள் நல்லமனிதர்களாகவே இருப்பார்கள்.விகாரிகளோ அனைவருமே தான்.இங்கோ அந்த விசயம் கிடையாது.நீங்கள் உங்களுடைய கணக்கைதினந்தோறும் பாருங்கள். பிறகுபாபாவிடம் அனுப்பி வைக்கவேண்டும். அப்போது நல்லமுன்னேற்றம் இருக்கும். மேலும்பயமும் இருக்கும். அனைத்தையும் தெளிவாக எழுத வேண்டும் - இன்றுநமக்கு தீய திருஷ்டி சென்றது,இவ்வாறு நடந்தது...... யார் ஒருவர்மற்றவர்க்கு துன்பம்தருகின்றனரோ, பாபா அவர்களைகாஜி (மதத்திற்காகச்சண்டையிடுபவர்) எனச்சொல்கிறார். ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்கள்உங்கள் தலை மீது உள்ளன.இப்போது நீங்கள் நினைவின்பலத்தினால் பாவங்களின்சுமையை இறக்கி வைக்கவேண்டும். அதனால் தினமும்பார்க்க வேண்டும் - நாம் இன்றுஎவ்வளவுக்கு துக்கம் தரும்போர்வீரனாக ஆகியிருக்கிறோம்?யாருக்காவது துக்கம் தருவதுஎன்றால் காஜி ஆவதாகும்.பாவமாக ஆகி விடுகின்றது. பாபாசொல்கிறார், காஜி ஆகி யாருக்கும்துக்கம் கொடுக்காதீர்கள். தன்னைமுழுமையாகச் சோதித்துப்பாருங்கள் - நாம் எவ்வளவு பாவம்,எவ்வளவு புண்ணியம்செய்துள்ளோம்? யாரைசந்தித்தாலும் அனை வருக்கும்இந்த வழியைச் சொல்லத் தான்வேண்டும். அனைவருக்கும் மிகுந்தஅன்போடு சொல்லுங்கள் – பாபாவை நினைவு செய்யவேண்டும், மேலும் பவித்திரமாகவேண்டும். இல்லறவிவகாரங்களில் இருந்துகொண்டே தாமரை மலருக்குச்சமமாகப் பவித்திரமாக ஆகவேண்டும். நீங்கள் சங்கமயுகத்தில்இருக்கிறீர்கள் என்ற போதிலும்இது இராவண இராஜ்யம்இல்லையா? இந்த மாயாவி விஷவைதரணி நதியில் இருந்துகொண்டே தாமரை மலருக்குச் சமமாக பவித்திரமாக ஆகவேண்டும். தாமரை மலர்அதிகமான இலைகள், கொடிகளை(குழந்தை-குட்டிகள்) உடையது என்றபோதிலும் தண்ணீருக்கு மேலேயேஉள்ளது. இல்லறவாசி, அதிகப்பொருட்களை உற்பத்தி செய்வது.இந்த உதாரணம் உங்களுக்காகவும்உள்ளது. விகாரங்களிலிருந்து விலகி விடுபட்டு இருங்கள். இந்தஒரு ஜென்மம் பவித்திரமாகஇருப்பீர்களானால் பிறகு இதுஅவிநாசி ஆகி விடும். உங்களுக்குபாபா அவிநாசி ஞானம் தருகிறார்.மற்ற எல்லாமே கற்கள். அந்தமனிதர்களோ பக்தியின்விசயங்களையே சொல்கின்றனர்.ஞானக்கடல் பதீதபாவனோ ஒருவர்மட்டுமே. ஆகவே அப்படிப்பட்டதந்தையிடம் குழந்தைகளுக்குஎவ்வளவு அன்பு இருக்க வேண்டும்!தந்தைக்குக் குழந்தைகளிடம்,குழந்தைகளுக்குத் தந்தையிடம்அன்பு உள்ளது. மற்றப்படி வேறுயாரிடமும் தொடர்பு கிடையாது. யார்தந்தையின் வழிமுறைப்படிமுழுமையாக நடக்கவில்லையோ,அவர்கள் தான் மாற்றாந்தாய்க்குழந்தைகள் ஆவர். இராவணனின்வழிப்படி நடக்கின்றனர் என்றால்அது இராமரின் வழியல்ல.அரைக்கல்பம் இராவணசம்பிரதாயம். அதனால் இதுபிரஷ்டாச்சாரி (விகாரி) உலகம்எனச் சொல்லப்படுகின்றது.இப்போது நீங்கள் மற்றஅனைத்தையும் விட்டுவிட்டு ஒருதந்தையின் வழிமுறைப்படி நடக்கவேண்டும். பி.கே.யின் அறிவுரைகிடைக்கின்றது என்றாலும் கூடசோதிக்க வேண்டியுள்ளது - இந்தவழி சரியா, தவறா?குழந்தைகளாகிய உங்களுக்குசரியானது மற்றும் தவறானதுபற்றிய புரிதலும் இப்போதுகிடைத்துள்ளது. எப்போதுசரியானவர் வருகிறாரோ,அப்போது தான் சரியானது மற்றும்தவறானது பற்றிச் சொல்வார்.பாபா சொல்கிறார், நீங்கள்அரைக்கல்பமாக இந்த பக்திமார்க்கத்தின் சாஸ்திரங்களைக் கேட்டிருக்கிறீர்கள். இப்போது நான்உங்களுக்கு என்னசொல்கிறேனோ, இது சரியாஅல்லது அது சரியானதா? அவர்கள்சொல்கின்றனர், ஈஸ்வரன்சர்வவியாபி என்று. நான்சொல்கிறேன், நானோஉங்களுடைய தந்தை என்று.இப்போது யார் சொல்வது சரிஎன்பதைத் தீர்மானியுங்கள்.இதுவும் குழந்தைகளுக்குத் தான்புரிய வைக்கப் படுகின்றது இல்லையா? - எப்போதுபிராமணராக ஆகிறீர்களோ,அப்போது புரிந்து கொள்வீர்கள்.இராவண சம்பிரதாயத்தினரோ அநேகர் உள்ளனர். நீங்களோகுறைவானவர்களே இருக்கிறீர்கள்.அதிலும் நம்பர்வார். யாருக்காவதுதீய பார்வை இருக்குமானால்அவர்கள் இராவணசம்பிரதாயத்தினர் எனச் சொல்லப்படுவார்கள். எப்போது முழுசிருஷ்டியும் மாறி தெய்வீகமாகஆகின்றதோ, அப்போது இராமசம்பிரதாயத்தினர் எனபுரிந்துகொள்ளப் படுவார்கள். தனதுமனநிலை மூலம் ஒவ்வொருவரும்புரிந்து கொள்ளவோ முடியும்இல்லையா? முதலிலோ ஞானம்இல்லாதிருந்தது. இப்போது பாபாவழி சொல்லியிருக்கிறார். ஆக,பார்க்க வேண்டும், அவிநாசி ஞானஇரத்தினங்களின் தானம் செய்துகொண்டே இருக்கிறேனா?பக்தர்கள் அழியக்கூடியசெல்வத்தை தானம் செய்கின்றனர்.இப்போது நீங்கள் அழியாத ஞான இரத்தினங்களை தானம் செய்யவேண்டும். அழியக் கூடியதைஅல்ல. அழியக் கூடிய செல்வம்இருந்தால் சேவையில் ஈடுபடுத்திக்கொண்டே செல்லுங்கள்.பதீதர்களுக்கு தானம் செய்வதால்பதீத்தமாகவே ஆகி விடுவீர்கள்.இப்போது நீங்கள் உங்களுடையசெல்வத்தை தானம் செய்தால்இதற்குப் பிரதிபலனாக 21 பிறவிகளுக்கு புது உலகத்தில் கிடைக்கின்றது. இந்த அனைத்துவிசயங்களும் புரிந்து கொள்ளவேண்டியவையாகும். பாபாசேவைக்கான யுக்திகளும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.அனைவர் மீதும் இரக்கம்காட்டுங்கள். பரமபிதா பரமாத்மாபிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கிறார் என்று பாடவும்பட்டுள்ளது. ஆனால் அர்த்தத்தைஅவர்கள் புரிந்து கொள்ளவில்லை.பரமாத்மாவையே சர்வவியாபிஎனச் சொல்லிவிட்டுள்ளனர். ஆக,குழந்தைகளுக்கு சேவைசெய்வதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நன்மைசெய்வீர்களானால் தனக்கும் அதில்நன்மை ஏற்படும். நாளுக்கு நாள்பாபா மிகவும் எளிமையாக ஆக்கிக்கொண்டே செல்கிறார். இந்தத்திரிமூர்த்தியின் சித்திரமோ மிகநல்ல ஒரு பொருள். இதில் சிவபாபாவும் இருக்கிறார், பிறகுபிரஜாபிதா பிரம்மாவும்இருக்கிறார். பிரஜாபிதாபிரம்மாகுமார்-குமாரிகள் மூலம்மீண்டும் பாரதத்தில் 100 சதவிகிதம்பவித்திரதா-சுகம்-சாந்தியின்தெய்வீக சுயராஜ்யத்தைஸ்தாபனை செய்துகொண்டிருக்கிறார். மற்ற அநேகதர்மங்கள் இந்த மகாபாரதயுத்தத்தினால் கல்பத்திற்கு முன்போலவே விநாசமாகி விடும்.இப்படி-இப்படி நோட்டீஸ் அச்சடித்துஅனைவருக்கும் கொடுக்கவேண்டும். பாபா எவ்வளவுசகஜமான வழி சொல்கிறார்!கண்காட்சிகளிலும் நோட்டீஸ்கொடுங்கள். நோட்டீஸ் மூலம் புரியவைப்பது சுலபம். பழையஉலகத்தின் விநாசமோ நடந்தேயாக வேண்டும். புது உலகத்தின்ஸ்தாபனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓர் ஆதிசநாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மற்ற இவைஅனைத்தும் கல்பத்திற்கு முன்போலவே விநாசமாகி விடும். எங்கேவேண்டுமானாலும் செல்லுங்கள்,பாக்கெட்டில் நோட்டீஸ் மற்றும்பேட்ஜ்கள் சதா இருக்க வேண்டும்.விநாடியில் ஜீவன்முக்தி என்பதுபாடப் பட்டுள்ளது. சொல்லுங்கள்,இவர் தந்தை, இவர் தாதா. அந்தத்தந்தையை நினைவு செய்வதன்மூலம் இந்த சத்யுக தேவதா பதவிபெறுவீர்கள். பழைய உலகத்தின்விநாசம், புது உலக ஸ்தாபனை,விஷ்ணுபுரி புது உலகத்தில்மீண்டும் இவர்களின் இராஜ்யம்இருக்கும். எவ்வளவு சுலபம்! தீர்த்தஸ்தலங்கள் முதலானவற்றிற்குமனிதர்கள் செல்கின்றனர்.எவ்வளவு துன்பங்களைஅடைகின்றனர்! ஆரியசமாஜத்தினர் போன்றவர்களும்இரயில் நிறைய செல்கின்றனர்.இது தர்மத்திற்கான அடி எனச்சொல்லப்படுகின்றது.உண்மையில் அதர்மத்தின் அடிஎன்று தான் சொல்ல வேண்டும்.தர்மத்திலோ அடி வாங்குவதற்கானதேவையே கிடையாது. நீங்களோபடிப்பைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். பக்திமார்க்கத்தில் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றனர்!
குழந்தைகள் பாடலையும்கேட்டீர்கள் - முகத்தைப் பார்த்துக்கொள்......... இந்த முகத்தைஉங்களைத் தவிர வேறு யாரும்பார்க்க முடியாது. பகவானையும்நீங்கள் காட்ட முடியும். இவைஞானத்தின் விசயங்கள். நீங்கள்மனிதரில் இருந்து தேவதையாக,பாவாத்மாவில் இருந்துபுண்ணியாத்மாவாக ஆகிறீர்கள்.உலகம் இந்த விசயங்களைமுற்றிலும் எதையும்அறிந்திருக்கவில்லை. இந்தஇலட்சுமி-நாராயணர்சொர்க்கத்தின் மாலிக்காக எப்படிஆனார்கள்? இது யாருக்கும் தெரியாது. குழந்தைகள் நீங்களோ,அனைத்தையும் அறிவீர்கள்.யாருக்காவது புத்தியில்பதியுமானால் துன்பங்கள் விலகிவிடும். நல்லது.
இனிமையிலும் இனிமையானதேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்அன்பு நினைவு மற்றும் காலைவணக்கம். ஆன்மீகக்குழந்தைகளுக்கு ஆன்மீகத்தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) அழியக்கூடிய செல்வம்இருந்தால் அதைப் பயனுள்ளதாகஆக்குவதற்கு அலௌகீகசேவையில் ஈடுபடுத்த வேண்டும்.அவிநாசி செல்வத்தின் தானமும்அவசியம் செய்ய வேண்டும்.
2) தன்னுடைய கணக்கில்(சார்ட்)பார்க்க வேண்டும் - நமதுமனநிலை எப்படி இருந்தது? முழுநாளிலும் எந்த ஒரு தீய செயலும்செய்யாதிருந்தேனா? ஒருவர்மற்றவர்க்கு துக்கம் கொடுக்காமல்இருக்கிறோமா? யார் மீதும் தீயதிருஷ்டி செல்லாமல் இருக்கிறதா?
வரதான்:
ஒவ்வொரு பொக்கிஷத்தையும்பாபாவின் டைரக்ஷன் படி காரியத்தில் ஈடுபடுத்தக் கூடியநேர்மையானவர் ஆகுக.
ஹானஸ்ட் அதாவதுநேர்மையானவர் என்று யாருக்குசொல்லப் படுகிறது என்றால், யார்பாபாவிடமிருந்து அடைந்தபொக்கிங்களை பாபாவின்டைரக்ஷன் இல்லாமல் எந்தவொருகாரியத்திலும்ஈடுபடுத்தாதவருக்குத் தான்.ஒருவேளை நேரம், பேச்சு, செயல்,சுவாசம் அல்லது எண்ணம் பிறர்வழி அல்லது சங்கதோஷத்தில்வீணானதின் பக்கம்இழக்கின்றார்களோ, சுயசிந்தனைக்கு பதிலாக பிறசிந்தனை செய்கிறார்களோ,சுவமானத்திற்கு பதிலாக ஏதேனும் அபிமானத்தில் வருகிறார்களோ,ஸ்ரீமத்திற்கு பதிலாக மன வழியின்ஆதாரத்தில் நடக்கிறார்களோ,அவர்களை நேர்மையானவர் என்றுசொல்ல மாட்டோம். இந்த அனைத்துபொக்கிஷங்களும் உலகநன்மைக்காகக்கிடைத்திருக்கின்றன, எனவேஅதில் ஈடுபடுத்துவது தான்நேர்மையாகும்.
சுலோகன்:
எதிர்ப்பை மாயாவிடம் காட்டுங்கள்,தெய்வீகக் குடும்பத்தாரிடம் அல்ல.
அவ்யக்த நிலையை அனுபவம்செய்வதற்காக விசேஷஹோம்வொர்க்:
ஒவ்வொரு நேரமும் புதுமையைஅனுபவம் செய்து பிறரையும்ஊக்கம் உற்சாகத்தில் கொண்டுவருவது. குஷியில் நடனமாடுவதுமற்றும் பாபாவின் குணங்களின்பாடலைப் பாடுவது. மதுரத்தன்மைஎன்ற இனிப்பினால் தனது வாயைஇனிமையாக்கி, பிறரையும் இனியவார்த்தை, இனிய சம்ஸ்காரம்,இனிய சுபாவம் மூலமாக வாயைஇனிமையாக்குவது.
***ஓம்சாந்தி***
No comments
Say Om Shanti to all BKs